Jump to content

வட கொரியா மீது தடைகளை விரிவாக்க புதிய ஆணையில் டிரம்ப் கையெழுத்து


Recommended Posts

வட கொரியா மீது தடைகளை விரிவாக்க புதிய ஆணையில் டிரம்ப் கையெழுத்து

வட கொரியாவின் அணு ஆயத திட்டத்திற்கு எதிரான தடைகளை விரிவாக்கும் புதிய ஆணை ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

டிரம்ப் மற்றும் டூன் ஜியே-இன்படத்தின் காப்புரிமைREUTERS

வட கொரியாவோடு வர்த்தகம் மேற்கொண்டு வருகின்ற நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க கருவூல துறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வட கொரியாவோடு வர்த்தகம் மேற்கொள்ளும் சீன வங்கிகளின் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள சீனாவின் சென்டல் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வட கொரியா நடத்திய மிகவும் சமீபத்திய அணு குண்டு சோதனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மாமன்றம் புதிய தடைகளை ஏற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களில் அமெரிக்காவின் இந்த புதிய தடைகள் வந்துள்ளன.

உலக நாடுகள் நிறுத்துவதற்கு அழுத்தங்கள் வழங்கியிருந்தாலும், சமீப வாரங்களில் வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகின்ற அணு ஆயுத மற்றும் பேலிஸ்டிக் சோதனைகளால் பதட்டம் அதிகரித்துள்ளது.

மனித குலத்திற்கு எதிரானதாக அறியப்படும் மிகவும் கொடிய ஆயுதங்களை உருவாக்கும் வட கொரியாவின் முயற்சிகளுக்கு நிதி ஆதரவு வழங்கப்படும் வருவாய் ஆதாரங்களை துண்டிப்பதற்காக இந்த தடை நடவடிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று புதிய செயலாணையை அறிவித்தபோது அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

வட கொரியாவின் ஜவுளி துறை, மீன்பிடித் துறை, தகவல் தொடர்பு துறை மற்றும் தயாரிப்பு துறை ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் இந்த தடை நடவடிக்கையால் இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

வட கொரிய தலைவர்படத்தின் காப்புரிமைAFP

வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு சர்வதேச நிதி அமைப்பை தவறாக பயன்படுத்தி கொள்ள மிக நீண்ட காலமாக வட கொரியா அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"இந்த தடைகள் ஒரேயொரு நாட்டை இலக்கு வைக்கிறது. அந்த நாடு வட கொரியாதான்" என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

"வெளிநாட்டு நிதி சேவை நிறுவனங்கள் அமெரிக்காவோடு அல்லது வட கொரியாவோடு யாரோடு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்வது கண்காணிப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் அவை சேவை வழங்க முடியாது" என்று அமெரிக்க கருவூலக செயலர் ஸ்டீவக் மினுச்சின் பின்னர் செய்தியாளாகளிடம் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக செய்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் பொது பேரவையில் அதிபர் டிரம்ப் ஆற்றிய முதலாவது உரையில், அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளி நாடுகளுக்கும் வட கொரியா அச்சுறுத்தாலாக அமைந்தால், அதனை முற்றிலும் அழித்து விடுவதாக உறுதிபட தெரிவித்தார்.

அத்தகைய உரையை ஆற்றியதற்கு தக்க விலையை டிரம்ப் கொடுக்க வேண்டியிருக்கும் என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சூளுரைத்துள்ளார்.

வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

p05gmbpm.jpg

வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டிரம்பை மனச்சோர்வு அடைந்துள்ளதாக தெரிவித்திருக்கும் கிம் ஜாங்-உன், அமெரிக்க அதிபரின் கருத்துக்கள் தன்னை அச்சுறுத்த அல்லது இந்த நடவடிக்கைகளை நிறுத்த செய்வதற்கு பதிலாக, வலுவூட்டியுள்ளதாகவும், தான் தெரிந்தெடுத்திருக்கும் பாதையே சரியானது, அதையே கடைசி வரை பின்பற்றப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவை மறைமுகமாக தாக்கி பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப், வட கொரிவின் அணு குண்டு சோதனைக்கு எதிராக "ராணுவ வெறியை" காட்ட தொடங்கினால் "பேரழிவு" ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றத்தை எச்சரித்திருக்கிறார்.

வட கொரியா தவறான திசையில் செல்லக்கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அறிவுறுத்தியுள்ளார்.

"வட கொரியா அல்லது தென் கொரியா, எந்த நாடாக இருந்தாலும், கெரிய தீபகற்பத்தில் புதிதாக அணு ஆயுதங்கள் கூடாது" என்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் வாங் யி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் 193 உறுப்பு நாடுகள் ஒன்றுகூடி வருகின்ற ஆண்டு நிகழ்வான அதன் பொது பேரவை கூட்டத்திற்கு மத்தியில் தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.

பிற செய்திகள்

http://www.bbc.com/tamil/global-41356801

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.