Jump to content

உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு தமிழக அரசுக்கு உப்பா, சர்க்கரையா?


Recommended Posts

உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு தமிழக அரசுக்கு உப்பா, சர்க்கரையா?

தலைமைச் செயலகம்.

தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பது அரசியல் வட்டாரத்தில் விடைகாண்பதற்கு கடினமான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

தகுதி நீக்கத்துக்கு உடனடியாகத் தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம் அதே நேரத்தில், அதை சாதகமாக்கிக்கொண்டு தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்துவிடுகிற வாய்ப்பையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு மறுத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் இடங்கள் காலியாகிவிட்டதாக அறிவிக்கவும்

இரண்டு வார காலத்துக்கு விதிக்கப்பட்டத் தடை அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ள அரசு மூச்சுவிடுவதற்கு கிடைத்த வாய்ப்பாக சிலர் கருதுகிறார்கள். வேறு சிலரோ எதிரணி எம்.எல்.ஏ.க்களை நினைத்தபடி நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறார்கள்.

பல லட்சம் கட்டணம் வாங்கும் டில்லி வழக்குரைஞர்களை வைத்து அரசியல் கட்சிகள் நடத்திய சட்டமோதலின் முதல் சுற்று யாருக்கும் உறுதியான, விவாதத்துக்கு அப்பாற்பட்ட முன்னிலையைத் தந்துவிடவில்லைதான். ஆனால், அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியல் எந்த திசையில் பயணிக்கும், மாநில அரசின் ஆயுள் எப்படி இருக்கும் என்று கணிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

ஆதரவாளர்களுடன் உரையாடும் டி.டி.வி. தினகரன்.

தற்காலிக நிம்மதி

இது உண்மையில் தமிழக அரசியலை எப்படி நகர்த்தும் எனக் கேட்டபோது பிபிசிக்குப் பதிலளித்த திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "இது எடப்பாடிப் பழனிச்சாமிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நிம்மதியைத் தந்திருக்கும். ஆனால், இது நிரந்தர நிம்மதி அல்ல," என்றார். இதனால், அரசுக்கு நிரந்தர ஸ்திரத்தன்மையெல்லாம் வந்துவிடாது என்கிறார் அவர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை நீதிமன்றம் எடுத்துக்கொள்வது சரியா என்று கேட்டபோது, சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்குவதற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன என்று கூறிய ராதாகிருஷ்ணன் அதேநேரம் "ஆளுமையும், மனப்போக்கும், சட்ட நிபுணத்துவமும் இருந்தால் சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை மீற முடியும். இதெல்லாம் சபாநாயகர் தனபாலுக்கு இருக்குமா தெரியவில்லை," என்றார்.

முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் அளித்தாலும், சட்டமன்றத்தில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடவில்லை.

இந் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி திமுக உயர்நீதிமன்றத்தை நாடியது.

நீதிமன்ற உத்தரவால் ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் அரசு தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் 18 பேரின் தகுதி நீக்கம், அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்கான ஒரு குறுக்கு வழியை அளித்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இடைத் தேர்தலை எதிர்கொள்வது அரசுக்கு எளிதா?

அது வெற்றி பெற்றிருந்தால்கூட அரசு சில மாதங்களில் ஏற்கெனவே காலியாக இருக்கிற ஆர்.கே. நகரையும் சேர்த்து 19 தொகுதிகளில் இடைத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலை வந்திருக்கும். தற்போதுள்ள நிலையல் இந்த 19 என்ற எண்ணிக்கை அரசின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போதுமானது.

அதிமுக அணித் தலைவர்கள்.

தற்போது நிலவும் பொது மன நிலையில், அதிமுக வாக்குகள் பிளவுபட்டுள்ள சூழலில், இத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தலை எதிர்கொள்வது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால், நீதிமன்றம் 18 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தை திரிசங்கு நிலையில் நிறுத்தியிருக்கிறது. உடனடியாக அவர்கள் தங்கள் பதவியையும் திரும்பப்பெறவும் முடியாது, அதே நேரம் அவர்களது இடத்துக்கான தேர்தலை சந்திக்கும் நெருக்கடியும் அரசுக்கு இருக்காது.

 

இது அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியா இல்லையா என்று மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலனிடம் கருத்துக் கேட்டபோது அவர் "இல்லை" என்றார்.

"நம்பிக்கை வாக்கெடுப்பு கோர நீதிமன்றம் தடைவிதிக்கும் என்பது அரசு எதிர்பார்க்காத ஒன்று. சபாநாயகரின் முடிவில் தலையிடமுடியாது என்று நீதிமன்றம் சொல்லும் என்பதுதான் அவர்கள் நினைத்தது. அதற்கு மாறாக, முதல்முறையாக நீதிமன்றம் இந்த விஷயத்தில் சபாநாயகருக்கும், முதல்வருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது" என்றார் அவர்.

"இந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமில்லாமல் அதிமுக சின்னத்தில் ஜெயித்த அதிமுக சாராத எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஏற்கெனவே அரசுக்கு எதிராக உள்ளனர்; அதிமுக எம்.எல்.ஏ. மதுரை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை விமர்சித்துள்ளார். அவருக்கு மேலும் சில எம்.எல்.ஏ.க்களிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, உடனே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கமுடியாமல் போனது அரசுக்குப் பின்னடைவுதான். இரண்டு மாதத்துக்கு மேல் இந்த அரசு நீடிக்கும் வாய்ப்பு இல்லை," என்று கூறினார்.

அதிமுக பெண்கள்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியான முன்னுதாரணமா என்று அவரிடம் கேட்டபோது, "தவறான நடவடிக்கைகளை எடுக்கும் அரசு, அதை சரிசெய்யாத சபாநாயகர், நடவடிக்கை எடுக்க மறுக்கும் ஆளுநர், இதையெல்லாம் மேலிருந்து ஆட்டிவைக்கும் மத்திய அரசு, இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் ரப்பர் ஸ்டாம்பாக குடியரசுத் தலைவர் என்ற நிலை இருக்கும்போது, நீதிமன்றம் தலையிடுவதைத் தவிர வேறு வழியில்லையே," என்றார் அவர்.

அனுபவமின்மை

அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்தால், அவர்கள் பதவியையே சபாநாயகர் பறித்துவிட்டார். அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றால், தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடியும் அரசுக்கு உடனடியாக இல்லாமல் போகிறது என்பது மற்றொரு கருத்து.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுகவின் தினகரன் தரப்பு நீதிமன்றத்தை நாடியது நிச்சயமாக அவர்கள் முன் இருந்த ஒரே சட்டவாய்ப்புதான்.

ஆனால், அதுதான் அவர்கள் முன் இருந்த ஒரே அரசியல் வாய்ப்பா, வேறெப்படி அவர்கள் செயல்பட்டிருக்க முடியும் என்று கேட்டபோது, அவர்கள் தரப்பில் அரசியல் அனுபவமும் சாதுர்யமும் மிக்க தலைவர்கள் இல்லாதால் அவர்களால் சரியான அரசியல் முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விட்டது. கூட்டம் கூட்டுவதும், மேடையில் பேசுவதும் மட்டும் அரசியல் நடத்தப் போதுமானது அல்ல என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

http://www.bbc.com/tamil/india-41346642

Link to comment
Share on other sites

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு: தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன?- ஓர் அலசல்

Supreme%20Court

சட்டப்பேரவை சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை வரும் அக்டோபர் 2-வது வாரம் முதல் விசாரிக்க உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பெண் எம்.எல்.ஏ தொடுத்த வழக்கில் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு வழக்கை கையிலெடுத்த உச்ச நீதிமன்றம் அக்டோபபர் 2-ம் வாரம் முதல், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழக்கை கையிலெடுத்ததால் தமிழகத்தில் நடக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

இந்தியா முழுதும் மாநில சட்டப்பேரவை தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த வழக்குகள் அவ்வப்போது நீதிமன்ற கதவை தட்டுகின்றன. இதில் வெவ்வேறு வகையான தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

இவற்றில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்குகளே முக்கியத்துவம் பெறுகின்றன. சட்டப்பேரவையில் ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது ஏற்படும் பிரச்சனையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவு சர்ச்சைக்குள்ளாகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உதவும் வகையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நீதிமன்ற கதவை தட்டும் போது நீதிமன்றம் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

நீதித்துறை போன்றே சபாநாயகருக்கும் வானளாவிய அதிகாரம் உள்ளதால் சபாநாயகரின் முடிவில் எந்த அளவுக்கு நீதித்துறை தலையிட முடியும் என்ற குழப்பம் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி ஏற்படுகிறது.

சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளால் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தை அதிகமாக நாடுவது வடகிழக்கு மாநிலங்களாகவே உள்ளன.

தமிழகத்தில் 1988-ம் ஆண்டும், 1994-ம் ஆண்டும் சபாநாயகரின் தீர்ப்பு பிரச்சனையாக மாறியது. அதன் பின்னர் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் விவகாரம் நீதிமன்ற முடிவை நோக்கி சென்றுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் , மறுப்பவர் இரண்டு பக்கமும் உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மோதுகின்றனர்.

சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.

மாநிலத்திற்கு மாநிலம் சபாநாயகர்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு எடியூரப்பா வழக்கில் சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் ஏற்கமறுத்து ரத்து செய்தது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சபாநாயகரின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டன. தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் கர்நாடக அரசின் தீர்ப்பின் அடிப்படையில் அணுக வேண்டும் என சிலரும், உத்தரகாண்ட் தீர்ப்பின் அடிப்படையில் தான் அணுக வேண்டும் என்று சிலரும் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆந்திர எம்.எல்.ஏ ஒருவர், சபாநாயகர் அதிகார வரம்பு குறித்து தொடுத்த வழக்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது.

இந்த வழக்கில் சபாநாயகரின் அதிகாரம் குறித்தும் எந்த அளவுக்கு சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் செல்லலாம் என்பது குறித்தும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.

சபாநாயகர் எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு அவர்களுக்கு பதிலளிக்க கொடுக்கப்படும் கால அவகாசம், அதில் இடைப்பட்ட காலத்தில் முடிவெடுத்தால் விதிமீறல் உள்ளதா போன்ற விவகாரங்களை பற்றி அமர்வு விசாரிக்கும். சபாநாயகர்களின் வானளாவிய அதிகாரங்கள் குறித்தும் கேள்விகள் வைக்கப்பட உள்ளன.

இந்த அமர்வுக்கும் தமிழக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குக்கும் சம்பந்தம் உள்ளதா என கேட்டபோது தகுதி நீக்க வழக்கு தனியாக நடக்கும். இது அரசியல் சாசன அமர்வு விசாரணை மட்டுமே, இதற்கும் தமிழக அரசின் வழக்குக்கும் சம்பந்தமில்லை.

மேலும் உச்ச நீதிமன்ற வழக்கு நடக்கும் காலகட்டத்தில் பழைய முறைகளே நடைமுறையில் இருக்கும். ஆகவே இது தமிழகத்தின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று டெல்லி உச்ச நீதிமன்ற சட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் அமர்வு விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கும் பட்சத்தில் அந்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19735082.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.