Jump to content

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜியோவின் மூலம் தற்காலிக அரசியல் விழிப்புணர்வை சிறிது பெற்றுகொண்டவர்கள் பழைய கணிப்பு முறைகள் இங்கு செல்லாதவை ஆக்கிவிடும் இனி வரும் தேர்தல் அங்கு பெரும் குழப்பகரமாக இருக்கும் இதையும் மீறி பிஜேபி வருமாயின் ஒன்றிரண்டு சீட் கிடைக்க வாய்ப்பில்லை வந்தால் வேட்பு இயந்திரம் ஹக்பண்ணபட்டு விட்டது என்று அர்த்தம் .

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

கமலுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள்

இதில் கூலிக்கு வேலை செய்பவர்கள் சுயமா அறிக்கை விடுபவர்கள் என்று இரண்டு வகை உண்டுங்கோ அங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் சீமானைப்போன்றவர்களும் இல்லாவிட்டால் தமிழன் என்று சொல்லி பகிரங்கமாக/ தினாவெட்டாக பேச யாருமில்லை.

இதே சீமான் அன்றே தமிழ்நாட்டுடன்  மட்டும்  தனது அரசியலை வைத்திருந்தால் கமலும் ரஜனியும் காரியக்கூத்து ஆட இடமே  அல்லது இடைவெளியே வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

ஜியோவின் மூலம் தற்காலிக அரசியல் விழிப்புணர்வை சிறிது பெற்றுகொண்டவர்கள் பழைய கணிப்பு முறைகள் இங்கு செல்லாதவை ஆக்கிவிடும் இனி வரும் தேர்தல் அங்கு பெரும் குழப்பகரமாக இருக்கும் இதையும் மீறி பிஜேபி வருமாயின் ஒன்றிரண்டு சீட் கிடைக்க வாய்ப்பில்லை வந்தால் வேட்பு இயந்திரம் ஹக்பண்ணபட்டு விட்டது என்று அர்த்தம் .

ஜியோ... என்றால், என்ன பெருமாள்.
அதனைப்   பற்றி,சுருக்கமாக கூறுங்களேன். பலருக்கும்... பிரயோசனமாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜியோ... என்றால், என்ன பெருமாள்

ஜியோ என்பது அம்பானிகளின் ஒரு மொபைல் நெட்வோர்க் இலவச இணைய இணைப்பு அத்துடன் வரம்பு இல்லா தரவு களும் கடந்த  ஜல்லிகட்டின் வெற்றியை நிர்ணயித்தது என்பதில் மாற்றுகருத்து இல்லை உள்ளம்கையில் உலகம் ஊழல் செய்யும் போலீசார் முதல்கொண்டு அமைச்சுக்கள் வரை இந்த இலவச டேட்டா புகுந்து விளையாடியது சென்னையில் ஒரு போலிஸ் அடித்தால் ராமேஸ்வரத்தில் இருப்பவருக்கு அடுத்த கணம் தெரிகிறது இந்த இலவச இணயத்தால் இங்கும் துரதிஸ்டவசமாக இங்கும் இந்த மாய உலகில் பெரிய அரசியல் தலைகளின் அடியாள்கள் அவர்களின் புகழ் பாடத் தொடங்கி விட்டனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

ஜியோ என்பது அம்பானிகளின் ஒரு மொபைல் நெட்வோர்க் இலவச இணைய இணைப்பு அத்துடன் வரம்பு இல்லா தரவு களும் கடந்த  ஜல்லிகட்டின் வெற்றியை நிர்ணயித்தது என்பதில் மாற்றுகருத்து இல்லை உள்ளம்கையில் உலகம் ஊழல் செய்யும் போலீசார் முதல்கொண்டு அமைச்சுக்கள் வரை இந்த இலவச டேட்டா புகுந்து விளையாடியது சென்னையில் ஒரு போலிஸ் அடித்தால் ராமேஸ்வரத்தில் இருப்பவருக்கு அடுத்த கணம் தெரிகிறது இந்த இலவச இணயத்தால் இங்கும் துரதிஸ்டவசமாக இங்கும் இந்த மாய உலகில் பெரிய அரசியல் தலைகளின் அடியாள்கள் அவர்களின் புகழ் பாடத் தொடங்கி விட்டனர் .

தரவுக்கு... நன்றி  பெருமாள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சீமானனின் ஆதரவு மற்றும் அரசியல் சித்தாந்தந்த  தளத்தை ஆகக்குறைந்தது பலவீனப்படுத்துவதற்கான கிந்திய (ஹிந்தி மயப்படுத்தப்பட்ட தமிழ் நாட்டு மேல் தட்டு வர்க்கத்தோடு சேர்ந்து ) உள்ளக வெளியாக உளவுத்  துறைகளின் ஓர் திட்டமிட்ட காய் நகர்த்தல்.

கமலிற்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஈழத்தமிழர்களின் பூர்விகத்தை பற்றி எள்ளி நகையாடிய கமல் ஏன் ஈழத்தமிழ்களின் நலன் பற்றி, அதுவும் தனது அறிமுக உரையில், குறிப்பிட்டாகவேண்டும்?

ஹிந்தியா உள்ளக வெளியாக உளவுத்  துறைகளின் எதிர்பார்த்திருக்காத துறை மற்றும் தளங்களில் சீமானின் அரசியல் சித்தாந்தம் ஊடுருவி ஆதரவு தளத்தை உருவாகிக்கியுள்ளது.

அதுவும் தமிழகத்தை தமிழரே ஆழ வேண்டும் என்ற வாதம் கிந்தியவிற்கும், ஹிந்தி மயப்படுத்தப்பட்ட தமிழ் நாட்டு மேல் தட்டு வர்க்கத்துக்கும் காய்ச்சிய வச்சிரத்தை ஒரே நேரத்தில் காதுகளிலும் , கண்களிலும், நாசிகளினுள்ளும் ஊட்டுவது போன்றது ஆகும். இது தமிழ்நாட்டு தமிழ்  தேசியத்தை சாதி கடந்து திரட்டி வருவது பி.ஜே.பி, காங்கிரஸ் மற்றும் முக்கியமாக ஹிந்தி மயப்படுத்தப்பட்ட தமிழ் நாட்டு மேல் தட்டு வர்க்கத்திற்கு நீண்ட கால, கேந்திர பாதுகாப்பு நெருக்கடியும் ஆகும்.            

ஆயினும் சீமானின் செயற்பாட்டு ஆளுகைக்கு ஈடு கொடுக்கமுடியுமா என்பது மிகவும் கேள்விக்குறியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் படத்தில் கமலகாசனின் உண்மை முக வசனம் ஒன்று இருக்கின்றது. அதில் அவரின் ஈழத்தமிழ் துவேசம் நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

புன்னகை மன்னன் படத்தில் கமலகாசனின் உண்மை முக வசனம் ஒன்று இருக்கின்றது. அதில் அவரின் ஈழத்தமிழ் துவேசம் நன்றாகவே தெரியும்.

புன்னகை  மன்னன்  படத்துக்கு,  கதை  வசனம்.....  எழுதியர்,  யார்.... என்று தெரியவில்லை.
அந்த... ஒற்றை வரியை...வைத்து, ஆட்களை மதிப்பது சரியல்ல, குமாரசாமி  அண்ணா.
அந்தப் படம் வந்து..... 35 ஆண்டுகளாகி இருக்கும் என நினைக்கின்றேன்.

"பழைய... புண்ணை... நோண்டினால்,  புழு தான்.... மிஞ்சும்."  அண்ணை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

ஆனால் தமிழக தேர்தல் தொகுதி வாரி தேர்தல் என்பதால் வெற்றிக்கு கிட்ட கூட வர முடியவில்லை

 

 

சிறு திருத்தம்...

..,தமிழக தேர்தல் (தொகுதி)  'பண' வாரி தேர்தல் என்பதால் வெற்றிக்கு கிட்ட கூட வர முடியவில்லை...,

அது நின்றாலே போதுமே...

***

சீமான் ஆடடையைப் போட்டது 1.1% வாக்குக்கள்

திமுக வெற்றியை இழந்தது 1% வாக்குகளால்...

*****

மக்கள் நம்பிக்கை இழக்கும் முன்னர், ஆரம்பத்தில் விஜயகாந்த் 10% வரை வாக்குகள் தனித்து எடுத்திருந்தார்.

காலம் எடுக்கலாம். ஆனால் உறுதியாக இருந்தால், தனித்து நின்று காமராஜர் கால காங்கிரசை வீழ்த்திய திமுக போல, வளர முடியும்.

பட்டி, தொட்டி எங்கும் திமுக பிரச்சாரம் செய்தே வென்றது. கருணாநிதி அன்று செய்த அதே கடின உழைப்பினை இன்று சீமான் தருகிறார். 

ஒரு நாள் பலன் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன்

எங்கேயோ  உதைக்குது??

இப்படித்தான்  பலரும்  மக்களின் தலைமீது மிளகாய் அரைக்கிறார்கள்

கட்சியே  தொடங்கவில்லை

முதல்வர் கனவு.....

 

கமல்ஹாசன் குறித்து அன்றைக்கே எச்சரித்த ஐயா மணிவண்ணன்...

 

https://www.facebook.com/ThimiruPidichaTamizhanDa/?hc_ref=ARRF2Tmjk6C_UOTOeFGA8BW6HzdBpVr8AvCkbVQiNiYpEzqZDSTEeji1wiJhrI92UWA&fref=nf#

https://www.facebook.com/ThimiruPidichaTamizhanDa/?hc_ref=ARRF2Tmjk6C_UOTOeFGA8BW6HzdBpVr8AvCkbVQiNiYpEzqZDSTEeji1wiJhrI92UWA&fref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

இந்த விடயங்களை.... 
"விரல்  நுனியில்"  வைத்திருந்து, பதில்  எழுதுவதற்கு..... "நாதமுனி"  திறமான ஆள். :)

நம்மல 'வைச்சு', செய்யல தானே தல:grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் ஒன்றே தமிழக் தேர்தலையும் பார்சல் பிரியாணியும் குவாட்டரும்  இதிலடக்கம்  எவர் வந்தாலும் தமிழனை அடக்க  இந்தியா என்ற நூலுக்கு தெரியும் விட்டுத்தான் பிடிக்கும் இதில் நாமும் வீழ்வோம் ஏனென்றால் திரைப்படங்களிலும் சரி பேச்சுக்களிலும் சரி  வீரப்பேச்சுகளிலும் சரி விழந்து எழுந்தவர்கள் நாம் கமல் மட்டும் எம்மாத்திரம் முதலமைச்சராக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி  மாற்றம் என்பதை தமிழ் நாட்டில் கொண்டுவருவதென்பது  ஒரு தொப்பிக்காக ஒட்டு மொத்த தொப்பிகளையும் குரங்குக்கு எறிந்து விட்டு காத்திருப்பது போல  என்னைப்பொறுத்த வரைக்கும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

புன்னகை  மன்னன்  படத்துக்கு,  கதை  வசனம்.....  எழுதியர்,  யார்.... என்று தெரியவில்லை.
அந்த... ஒற்றை வரியை...வைத்து, ஆட்களை மதிப்பது சரியல்ல, குமாரசாமி  அண்ணா.
அந்தப் படம் வந்து..... 35 ஆண்டுகளாகி இருக்கும் என நினைக்கின்றேன்.

"பழைய... புண்ணை... நோண்டினால்,  புழு தான்.... மிஞ்சும்."  அண்ணை. 

 

சிறித்தம்பி! கமலகாசன் பேசுவது செயல்படுத்த நினைப்பது ஊழல் அரசியல் ஒழிப்பை மட்டும் தான். சர்வதேச அரசியலைபற்றியல்ல. எமது அரசியல் பிரச்சனை உலக மற்றும் ஆசியா கண்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. பலர் கையைவைத்து சூடு தாங்காமல் வெளியேறிய சிக்கல் பிரச்சனை.

தமிழ்நாட்டுக்கு ஊழல் புரட்சிக்கும் பசுமை புரட்சிக்கும் சீமான் போதும். கமல் ரஜனி போன்ற  கவர்ச்சி அரசியல் விளையாட்டு இனியும் எடுபடாது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 

சிறித்தம்பி! கமலகாசன் பேசுவது செயல்படுத்த நினைப்பது ஊழல் அரசியல் ஒழிப்பை மட்டும் தான். சர்வதேச அரசியலைபற்றியல்ல. எமது அரசியல் பிரச்சனை உலக மற்றும் ஆசியா கண்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. பலர் கையைவைத்து சூடு தாங்காமல் வெளியேறிய சிக்கல் பிரச்சனை.

தமிழ்நாட்டுக்கு ஊழல் புரட்சிக்கும் பசுமை புரட்சிக்கும் சீமான் போதும். கமல் ரஜனி போன்ற  கவர்ச்சி அரசியல் விளையாட்டு இனியும் எடுபடாது என நினைக்கின்றேன்.

 

ரஜனியை கொண்டுவர முயன்றது, பாஜக. எதிர்ப்பு.... அவரும் வழக்கம் போல ஜவ்வாக இழுக்கிறார்.

இவரை சைற்றாக வளர்த்துக் கொண்டு வந்தது, இப்போ முழுதாக இறக்கப் பார்கிறது.

அய்யங்கார்.... பிராமணர்களுக்கு சந்தோசம்.

ஆனால் இவர் போனியார் போல தெரியவில்லை.

Link to comment
Share on other sites

On 9/22/2017 at 1:37 PM, நிழலி said:

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் காலம் வரைக்கும் சீமானால் தேர்தலில் கட்டுப் பணத்தை கூட பெற முடியாது.

ஆனால் அண்மை காலங்களில் தமிழக மக்களின் நலன்கள் பலவற்றுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருப்பது நல்ல மாறுதல் (நீட்டுக்கு எதிராக, கதிரமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பாடுகளில் சீமானை காண முடிந்தது)

இந்த மதிரியான விம்பமே சீமான் போன்றவர்களுக்கு இருக்கும் கெடுதல். சீமான் ஈழம் என்று மட்டும் பேசியது 2008, 2009, 2010 ஆண்டுகள்தான். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவித்து பயணிக்கிறார்கள். ஆனால் பொது வெளியில் என்னவோ சீமான் என்றால் ஈழத்தமிழர் பற்றி பேசி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பவர் என்கிற புரிதல்தான் உண்டு.

அண்மையில் ரஞ்சித் விடயத்தில்கூட ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல்கொடுத்தாரா என்றெல்லாம் கேட்டார்கள். அந்த இடங்களுக்கு சென்றது மட்டுமல்லாமல் அவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்கள். ஆனால் ஊடகங்களில் வெளிவராமையால் பொதுவெளியில் தெரிவதில்லை.

இன்று தமிழகத்தில் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. இன்று கூட டிகே எஸ் இளங்கோவன் (திமுக) நாம் தமிழர் கட்சி திமுகவை அழிக்கப் பார்க்கிறது என்று முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வளவு காலமும் எதுக்கு வீண் விளம்பரம் என்று இருந்தார்கள். ஆனால் ட்ரென்ட் மாறுவதை அவர்கள் கணித்தே வருகிறார்கள்.

இப்போது திருமுருகன் காந்தி கூட்டிச் செல்லும் தமிழர் விடியல் கட்சியை முன்னிலைப் படுத்த தொடங்குவார்கள் என நினைக்கிறேன். இதன் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை சிதைக்க முடியும். ஏற்கனவே அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்து நாம் தமிழர் பாணியில் வேலை செய்ய தொடங்கிவிட்டார்கள் (மேடை அமைப்பதில்).

21994192_1923404177985711_50400238031493

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

 

ரஜனியை கொண்டுவர முயன்றது, பாஜக. எதிர்ப்பு.... அவரும் வழக்கம் போல ஜவ்வாக இழுக்கிறார்.

இவரை சைற்றாக வளர்த்துக் கொண்டு வந்தது, இப்போ முழுதாக இறக்கப் பார்கிறது.

அய்யங்கார்.... பிராமணர்களுக்கு சந்தோசம்.

ஆனால் இவர் போனியார் போல தெரியவில்லை.

அதிமுக/திமுக போன்ற இரு சுயநல கட்சிகளிடமிருந்து மக்கள் விடுதலை அடையை நினைக்கும் போது...... இரு கூத்தாடிகளும் வந்து குழப்புவதிலேயே குறியாக நிற்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த மதிரியான விம்பமே சீமான் போன்றவர்களுக்கு இருக்கும் கெடுதல். சீமான் ஈழம் என்று மட்டும் பேசியது 2008, 2009, 2010 ஆண்டுகள்தான். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவித்து பயணிக்கிறார்கள். ஆனால் பொது வெளியில் என்னவோ சீமான் என்றால் ஈழத்தமிழர் பற்றி பேசி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பவர் என்கிற புரிதல்தான் உண்டு.

அண்மையில் ரஞ்சித் விடயத்தில்கூட ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல்கொடுத்தாரா என்றெல்லாம் கேட்டார்கள். அந்த இடங்களுக்கு சென்றது மட்டுமல்லாமல் அவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்கள். ஆனால் ஊடகங்களில் வெளிவராமையால் பொதுவெளியில் தெரிவதில்லை.

இன்று தமிழகத்தில் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. இன்று கூட டிகே எஸ் இளங்கோவன் (திமுக) நாம் தமிழர் கட்சி திமுகவை அழிக்கப் பார்க்கிறது என்று முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வளவு காலமும் எதுக்கு வீண் விளம்பரம் என்று இருந்தார்கள். ஆனால் ட்ரென்ட் மாறுவதை அவர்கள் கணித்தே வருகிறார்கள்.

இப்போது திருமுருகன் காந்தி கூட்டிச் செல்லும் தமிழர் விடியல் கட்சியை முன்னிலைப் படுத்த தொடங்குவார்கள் என நினைக்கிறேன். இதன் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை சிதைக்க முடியும். ஏற்கனவே அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்து நாம் தமிழர் பாணியில் வேலை செய்ய தொடங்கிவிட்டார்கள் (மேடை அமைப்பதில்).

 

திருமுருகன் காந்தியின் மே 18 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

சீமானுக்கு, வெளியில் முகம் காட்டாத, பல பிரபலங்களின் ஆதரவு, ஆலோசனை உண்டு. சகாயம் போன்ற அதிகாரிகள் பின்புல ஆதரவும் உண்டு.

முக்கியமாக இஸ்லாமிய மக்கள் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். .அவர்களிடையே ஆதரவுத் தளம் அதிகரிக்கின்றது 

Link to comment
Share on other sites

13 hours ago, Nathamuni said:

திருமுருகன் காந்தியின் மே 18 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

சீமானுக்கு, வெளியில் முகம் காட்டாத, பல பிரபலங்களின் ஆதரவு, ஆலோசனை உண்டு. சகாயம் போன்ற அதிகாரிகள் பின்புல ஆதரவும் உண்டு.

முக்கியமாக இஸ்லாமிய மக்கள் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். .அவர்களிடையே ஆதரவுத் தளம் அதிகரிக்கின்றது 

திருமுருகன் காந்தி போட்டியிடப்போவதில்லை. அவரது மே 17 என்பது இயக்கம். அது ஒரு கட்சி அல்ல என்பது சரிதான். அவர்கூட தேர்தல் அரசியல் வெற்றி பெறாது என உறுதிபட தெரிவித்து வருகிறார். ஆனால்..... tw_love:

அவருடன் சேர்ந்து பயணிக்கும் மார்ட்டின் டைசன், இளமாறன் போன்றவர்கள் (சேர்ந்தே கைதானவர்கள்) தமிழர் விடியல் கட்சி எனும் பெயரில் ஒரு கட்சியை நடத்துகிறார்கள்.  நான் மேலே இணைத்த படம் கூட அவர்களது மேடைதான். அதில்தான் திருமுருகன் காந்தியும் ஏறி நின்று பேசினார். இந்த டைசனும், இளமாறனும் முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்தவர்கள். சீமான் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துவிட்டார் என்பதற்காக அவரது கொடும்பாவியை எரித்துவிட்டு தனிக்கட்சி கண்டவர்கள். tw_blush: அப்படி வந்தவர்களை திருமுருகன் காந்தி அரவணைப்பது என்பது எதேச்சையான செயலா? :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இசைக்கலைஞன் said:

திருமுருகன் காந்தி போட்டியிடப்போவதில்லை. அவரது மே 17 என்பது இயக்கம். அது ஒரு கட்சி அல்ல என்பது சரிதான். அவர்கூட தேர்தல் அரசியல் வெற்றி பெறாது என உறுதிபட தெரிவித்து வருகிறார். ஆனால்..... tw_love:

அவருடன் சேர்ந்து பயணிக்கும் மார்ட்டின் டைசன், இளமாறன் போன்றவர்கள் (சேர்ந்தே கைதானவர்கள்) தமிழர் விடியல் கட்சி எனும் பெயரில் ஒரு கட்சியை நடத்துகிறார்கள்.  நான் மேலே இணைத்த படம் கூட அவர்களது மேடைதான். அதில்தான் திருமுருகன் காந்தியும் ஏறி நின்று பேசினார். இந்த டைசனும், இளமாறனும் முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்தவர்கள். சீமான் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துவிட்டார் என்பதற்காக அவரது கொடும்பாவியை எரித்துவிட்டு தனிக்கட்சி கண்டவர்கள். tw_blush: அப்படி வந்தவர்களை திருமுருகன் காந்தி அரவணைப்பது என்பது எதேச்சையான செயலா? :love:

சீமானும் அனுபவம் கொண்டவராக பழைய தவறுகளை விடுவதில்லை. தெலுங்கர், கன்னடர் என திட்டுவதில்லை. 

என்ன நோக்கத்துக்காக சீமானை எதிர்த்து வெளியேறினார்களோ அந்த காரணம் இப்போ இல்லை.

அரசியல் என்பது தனிமனித கவர்ச்சி (பில் கிளின்ரன், ரொனி பிளையர், ஜஸ்டின் ரூடியூ, எம்ஜீஆர்) அல்லது தனிமனித பேச்சுவன்மை (கிற்லர், ஓபாமா, கருணாநிதி, அண்ணாதுரை).

பேச்சுவன்மை இருந்தாலும், பேச்சில் 'அறிவார்ந்த விபரம்' இருக்க வேண்டும்.

இதில் இரண்டிலுமே சிறப்பனவர்கள்: பில் கிளின்ரன், ரொனி பிளையர்.

கறுப்பராயினும் அறிவார்ந்த பேச்சுவன்மையால் சிகரம் தொட்டவர் ஒபாமா.

தமிழகத்தில் இன்றைய திகதிக்கு அறிவார்ந்த பேச்சுவன்மைக்கு சீமான் தான்.

வைக்கோ, ஆளுமை தவறுகளால், வழி தடுமாறிவிட்டார்.

சீமான் தரமான ஆலோசனைகள் பெற்று, தன்னை சிறப்பாக முன்றேற்றுகிறார் என தெரிகிறது.

மேலாக கடின உழைப்பும் சேர்கிறது. 

திருமுருகன், சிறையிலடைக்கப்பட்ட கோபத்தில் இருக்கிறார் என புரிகிறது.

பார்ப்போம்.

Link to comment
Share on other sites

On ‎9‎/‎24‎/‎2017 at 8:59 AM, இசைக்கலைஞன் said:

இந்த மதிரியான விம்பமே சீமான் போன்றவர்களுக்கு இருக்கும் கெடுதல். சீமான் ஈழம் என்று மட்டும் பேசியது 2008, 2009, 2010 ஆண்டுகள்தான். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவித்து பயணிக்கிறார்கள். ஆனால் பொது வெளியில் என்னவோ சீமான் என்றால் ஈழத்தமிழர் பற்றி பேசி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பவர் என்கிற புரிதல்தான் உண்டு.

 

இது தொடர்பாக கேள்விகள் இருக்கு

நாம் தமிழர் அமைப்பு புலம்பெயர் நாடுகளில் ஈழ தமிழர்களை பெரும்பான்மையாக உள்வாங்கி அவர்களை குறி வைத்து ஏன் கிளைகளை (உதாரணம் நாம் தமிழர் - கனடா) உருவாக்கினார்கள் இசை? போன வருடத்துக்கும் முதல் வருடம் போட்டி மாவீரர் தினம் வேறு வைத்தார்கள். பல கடைகளில் அவர்களுக்கான உண்டியல் இருந்ததை நானே கண்டுள்ளேன். முக்கியமாக புலிகளின் சொத்துக்களை கனடாவில்  ஆட்டைய போட்டு தம் வியாபாரத்தை பரப்பிய முதலாளிமார்களிற்கும் சீமானுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இவற்றை விட   கலை கலாச்சார விடயங்களுக்காக  கடந்த ஆண்டு  ஐரோப்பியாவில் பல உப அமைப்புகளை கலை உருவாக்க  தொடங்கினார்கள் என்று யாழிலும் செய்தி பார்த்த நினைவு.

Link to comment
Share on other sites

34 minutes ago, நிழலி said:

இது தொடர்பாக கேள்விகள் இருக்கு

நாம் தமிழர் அமைப்பு புலம்பெயர் நாடுகளில் ஈழ தமிழர்களை பெரும்பான்மையாக உள்வாங்கி அவர்களை குறி வைத்து ஏன் கிளைகளை (உதாரணம் நாம் தமிழர் - கனடா) உருவாக்கினார்கள் இசை? போன வருடத்துக்கும் முதல் வருடம் போட்டி மாவீரர் தினம் வேறு வைத்தார்கள். பல கடைகளில் அவர்களுக்கான உண்டியல் இருந்ததை நானே கண்டுள்ளேன். முக்கியமாக புலிகளின் சொத்துக்களை கனடாவில்  ஆட்டைய போட்டு தம் வியாபாரத்தை பரப்பிய முதலாளிமார்களிற்கும் சீமானுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இவற்றை விட   கலை கலாச்சார விடயங்களுக்காக  கடந்த ஆண்டு  ஐரோப்பியாவில் பல உப அமைப்புகளை கலை உருவாக்க  தொடங்கினார்கள் என்று யாழிலும் செய்தி பார்த்த நினைவு.

அவர்களது முதன்மையான கொள்கை தமிழர்களை உலக அளவில் ஒன்றிணைப்பது. அது எமது போராட்டம் நடந்த காலத்திலேயே கொள்கை ரீதியில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் மிகப்பெரிய சனத்திரள் கொண்ட தமிழகம் அதிலிருந்து விடுபட்டுவிட்டது. அதற்கு பல்வேறு காரணிகள். இப்போது தமிழகம் இணைந்த ஒருமுகப்பட்ட ஒரு சக்தியை உருவகப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அதில் பல சிக்கல்கள் உண்டு. ஒருவரை அரவணைத்தால் இன்னொரு தரப்புக்கு அதிருப்தி இருக்கும். மேலும், பல உள்குத்துகளை அறியாதவர்கள் அவர்கள். அதனால் கொள்கை ரீதியில் ஒரு முடிவை எடுத்து வைத்துள்ளார்கள்.

அதாவது தமிழர் குழுமங்கள் உள்ளாக இருக்கும் தகராறுகளை யாரும் தீர்க்கப் போவதில்லை. அதனால் அதில் நேரத்தை செலவிடுவது விரயம். அதை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இணைந்து செல்பவர்களுடன் இணைந்து பயணிப்பதுதான் கால ஓட்டத்திற்கு ஏற்றது. இதன் காரணமாகவே, லைக்கா சுபாஸ்கரனை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை. 

அவர்கள் உண்டியல் பணம் சேர்ப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் இங்கிருந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்பது எனக்கு தெரியாது. நான் எதிலும் இணைந்து பயணிக்கவில்லை.

ஆக மொத்தத்தில், தமிழகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஆட்சி அதிகாரம், அதன் மூலம் இந்தியத்திடம் காட்டக்கூடிய வலிமை இதை நோக்கியே பயணப்படுகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலில் தமிழகத்தில் அதிகாரத்தை மீண்டும் சரியான தமிழ் தலைமை வசம் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கிறார்கள். 

மேலும், கிடைக்கும் நன்கொடைகளை ஒவ்வொரு மாதமும் இளையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

http://www.naamtamilar.org/downloads/Naam-Tamilar-Katchi-Development-Fund-income-expenditure-report-Augest-2017.pdf

Link to comment
Share on other sites

29 minutes ago, இசைக்கலைஞன் said:

 

ஆக மொத்தத்தில், தமிழகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஆட்சி அதிகாரம், அதன் மூலம் இந்தியத்திடம் காட்டக்கூடிய வலிமை இதை நோக்கியே பயணப்படுகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலில் தமிழகத்தில் அதிகாரத்தை மீண்டும் சரியான தமிழ் தலைமை வசம் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கிறார்கள். 

நல்லது, தமிழக தமிழர்களுக்கு நல்ல தலைமை ஒன்று வரவேண்டும் என்பதற்கும் நல்ல தமிழ் தலைமை வேண்டும் என்பதற்கும் இடையில் கடும் வேறுபாடு உண்டு. முதலில் தமிழ் தலைமை என்பது என்பதில் உள்ள தமிழ்  அடையாளம் பற்றி  கேள்விகள் உண்டு. சீமான் தமிழ் என்று அடையாளப்படுத்துவதும் டொனால் ட்ரம் 'அமெரிக்கர்களே முதல்' என்று முழங்குவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை என்பது என்னை போன்றவர்களின் கருத்து. முதலாவது சனநாயகம் இரண்டாவது பாசிசம்.
புலம்பெயர்  நாடுகளில் தேர்தல் அரசியல் மூலம் படிப்படியாக  எம்மவர்கள் அரசியல் அரங்கை நோக்கி நகர்கின்ற இக் கால கட்டத்தில் இப்படியான சீமானின் / ட்ரம்பின் வாதங்களை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியாது


 

Link to comment
Share on other sites

1 minute ago, நிழலி said:

நல்லது, தமிழக தமிழர்களுக்கு நல்ல தலைமை ஒன்று வரவேண்டும் என்பதற்கும் நல்ல தமிழ் தலைமை வேண்டும் என்பதற்கும் இடையில் கடும் வேறுபாடு உண்டு. முதலில் தமிழ் தலைமை என்பது என்பதில் உள்ள தமிழ்  அடையாளம் பற்றி  கேள்விகள் உண்டு. சீமான் தமிழ் என்று அடையாளப்படுத்துவதும் டொனால் ட்ரம் 'அமெரிக்கர்களே முதல்' என்று முழங்குவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை என்பது என்னை போன்றவர்களின் கருத்து. முதலாவது சனநாயகம் இரண்டாவது பாசிசம்.
புலம்பெயர்  நாடுகளில் தேர்தல் அரசியல் மூலம் படிப்படியாக  எம்மவர்கள் அரசியல் அரங்கை நோக்கி நகர்கின்ற இக் கால கட்டத்தில் இப்படியான சீமானின் / ட்ரம்பின் வாதங்களை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியாது
 

இது ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. ஆனால் களத்தின் தன்மைதான் ஒரு தனி நபரினது அல்லது குழுவினது நடவடிக்கைகளை இங்கு தீர்மானிக்கின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் என்பது 18 மைல் தொலைவில் வாழ்ந்த சக தமிழரைக்கூட காப்பதில் தவறி விட்டது என்பதே உண்மை. காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் விளைவு ஒன்றுதான்.

இதற்கு உள்ளிருந்து ஒரு சுய பரிசோதனையில் இறங்குவது அவசியமாகிறது. இந்தியாவின் வருவாயில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையில் (அதாவது இந்தியாவை ஓரளவுக்கு தாங்கிப் பிடிக்கின்ற) ஒரு மாநிலத்து மக்களால் தம் சக இனத்தவரை ஏன் காக்க முடியாமல் போனது? காரணம் எதுவாயினும், கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் வேலைக்கு ஆகவில்லை என்பது உண்மையானது. ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறுவார்கள். நாம் தமிழர் கட்சியின் கூற்று என்பது இத்தனை காலமும் தமிழர் அறம் சார்ந்த ஆட்சி நடக்கவில்லை என்பது. தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளில் தமிழர் தலைமை இல்லை என்பது கண்கூடு. ஆனால் இதுவேதான் காரணமா என்பது விவாதிக்கப்பட வேண்டியதுதான்.

ட்ரம்ப் உதாரணம் இதற்கு சரியானது என்பதாக நான் நினைக்கவில்லை. அமெரிக்காவில் வெள்ளையர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெள்ளையர்கள் லட்சக்கணக்கில் ஸ்பானியர்களாலும், ஆபிரிக்க கறுப்பர்களாலும் கொன்று குவிக்கப்பட்டிருந்தால் ட்ரம்ப் உதாரணம் சரியாக இருந்திருக்கும். ஆட்சித் தலைமை கறுப்பரிடம் போனாலும், அதிகாரம் என்பது அமெரிக்காவில் வெள்ளையர் வசமே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் யார் ஆண்டாலும், அதிகாரம் என்பது இதுவரையிலும் தமிழர் வசம் இருந்ததில்லை (காமராஜர் உட்பட). காமராஜர் உறுதியான தலைவராக இருந்தாலும் தேசியப் பார்வையையே கொண்டிருந்தார். இதனால் மாநிலப் பிரிவினையில் தமிழர் பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்ல காரணமாக இருந்தார்.

இந்தக் கருத்தியலுக்கு (தமிழரை தமிழரே ஆள வேண்டும்) என்பதற்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது. காலப்போக்கில் எப்படி மாறுபட்டு வருகிறது என்பதை கவனியுங்கள்.

தமிழரை தமிழரே ஆளவேண்டும்.. (இது இனவெறி)
தமிழரை தமிழரே ஆள வேண்டும் (சரி.. யாரெல்லாம் தமிழர்)
தமிழரை தமிழரே ஆளவேண்டும் (ஓபிஎஸ், ஈபிஎஸ் எல்லாம் தமிழர்தானே)
தமிழரை தமிழரே ஆள வேண்டும் (நானும் பச்சை தமிலன் - ரஜினி tw_love:)
தமிழரை தமிழரே ஆளவேண்டும் (தமிழ்தேசியம் என்பது திராவிடத்தின் தோள்களில் நின்றுதான் பயணிக்க முடியும் - திருமுருகன் காந்தி)

கவனித்துப் பார்த்தீர்களானால் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பதை இப்போது யாரும் பெரிதாக எதிர்ப்பதில்லை. அது ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. நாங்களும் தமிழர்கள்தான் என பலர் வருகிறார்கள். அதில் கரிகரசிங் ராஜாவும் (எச். ராஜா) அடக்கம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.