Jump to content

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல்


Recommended Posts

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல்

kamal5656.jpg

தாம் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   இந்தியா டுடே  தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது என தெரிவித்துள்ள அவர்   மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடதுசாரியா, வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

என்னைப் பொருத்தவரை கறுப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது.  அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதே போன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேவைக்கு   வழங்கிய  பேட்டியில்   மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

kamal-haasan2.jpg.pagespeed.ic_.Aido8Iiakamal-hassan.jpg

http://globaltamilnews.net/archives/42101

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் இன்னொன்னா..? தாங்காதுப்பா..!

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வடிகட்டின மடையர்கள் என்றே முடிவெடுத்துவிட்டார் போலும்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

மறுபடியும் இன்னொன்னா..? தாங்காதுப்பா..!

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வடிகட்டின மடையர்கள் என்றே முடிவெடுத்துவிட்டார் போலும்..!!

இது தமிழ் ரத்தம் உள்ளவர் ஆக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கஸ்டப்பட்டவர் கடைசி நேரங்களில் எடுத்த படங்களால் கொஞ்சம் சேர்த்து வைத்துள்ளார்.

இருக்கிறதை விடுவதற்கு வழி தேடுகிறார்.

இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களை கணிப்பது கஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலும் சினிமாவும் பிரிக்கமுடியாதது. தமிழக அரசியல் சினிமாவுக்கு அப்பால் நின்று எழக்கூடிய நிலையில் இல்லை அதற்கு தமிழ்நாட்டு மக்களும் தயாரில்லை ஆகவே தமிழக அரசியலில் அறவே சினிமா சம்பந்தம் இல்லாதவர் வெற்றியடைவது சாத்தியமன்று. எப்பயோ சினிமாவின் ஆதிக்கத்தில்தான்தொடரும் அரசியல் மாற்றங்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதனால் கமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் வரவேற்பதில் தவறில்லை. அரசியல் பிரவேசம் கமலுக்கு சாபமாக்கூட அமையலாம். இருப்பினும் அந்த கலைஞனுக்குப் பின்னால் சாதிக்கவேண்டும் என்ற ஒரு பேரவா இருப்பதை உணரமுடிகிறது. இப்போது இருப்பதிலிருந்து பெரிய மாற்றங்கள் நிகழாவிட்டாலும் சின்னச் சின்ன மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் கஸ்டப்பட்டவர் கடைசி நேரங்களில் எடுத்த படங்களால் கொஞ்சம் சேர்த்து வைத்துள்ளார்.

இருக்கிறதை விடுவதற்கு வழி தேடுகிறார்.

இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களை கணிப்பது கஸ்டம்.

என் உணர்வு என்னவோ முரண்டு பிடிக்குது....!

இவர் ஒண்டும் சப்பானியல்ல, சகலகலாவல்லவன்.....!

இப்ப பாசுபதாஸ்திரமாக இருக்கிறார். வில்லாளி  பசுபதியோ பார்த்தனோ யாரோ யாமறியோம்.....!

ம்.....வரும் மலிந்தால்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி கணேசனே வந்தார், ஓடினார்....

எல்லோருக்கும் ஒரு ஆசை.....

அனைவரும் மறந்துவிடுகிறார்கள்.... எம்ஜிஆர்..... ஒரு ஒழுக்கமானவர், வள்ளல் என்ற இமேஜினை பத்திரமாக கட்டி எழுப்பி, அதன் மீது சினிமா புகழை தூவி வென்றார்.

இவர் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர். அய்யங்கார்.... சுஜநலவாதி என்ற முத்திரை உள்ளவர்...

மிகவும் கஷடம்....

Link to comment
Share on other sites

அரசியலில் கமலின் அணுகுமுறை ரஜனி சிவாஜி போல் இருக்குமா என்பது சந்தேகமே! தமிழக அரசியலின் வெற்றிடத்துக்குள் நுளைவதற்கு பதிலாக தமிழகத்துக்கும் மத்திய அரசியலுக்கும் உள்ள வெற்றிடத்தில் நுளைந்து தமிழக அரசியலில் கால்பதிக்கும் அணுகுமுறைபோல் உள்ளது. தமிழக மக்கள் அதிமுக திமுக போன்றகட்சிகளை கடந்த என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை காலம் தான் தீர்மானிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்குள் இடையே இருக்கும் ஒரு விதமான புரிந்துணர்வு போன்ற ஒன்று.....பிராமண குலத்தவரிடையேயும் ஒரு விதமான புரிந்துணர்வு இருந்து கொண்டேயிருக்கும்!

தமிழ் பேசுவதானால் மட்டும் ஒருவனைத் தமிழன் எனவும்...தமிழர்களின் நலன் நோக்கியே ,,,அவர்கள் நடவடிக்கைகள் நகரும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பதைக் காலம் எமக்கு உணர்த்தியுள்ளது!

இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா ஜெயராம் போன்ற அனைவருக்குள்ளும் ஒரு விதமான புரிந்துணர்வு எப்போதுமே இருக்கும்!

எல்லோரும் முள்ளி வாய்க்காலுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்களே ஒழிய...தமிழனுக்காக உண்மையாக அழுதவர்கள் தமிழகத்தின் கீழ்மட்டத் தமிழர்களே!

அவர்களைச் சரியான வகையில் வழி நடத்த...ஒரு தலைவன் தமிழ் நாட்டில் இது வரை இல்லை என்றே நினைக்கிறேன்!

அப்படியான தலைமை ஒன்று உருவாகும் வரைக்கும்....தமிழ் நாட்டுத் தமிழன் ...சந்தையில் இருக்கும் ஒரு வியாபாரப் பொருளாகவே இருப்பான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

என் உணர்வு என்னவோ முரண்டு பிடிக்குது....!

இவர் ஒண்டும் சப்பானியல்ல, சகலகலாவல்லவன்.....!

இப்ப பாசுபதாஸ்திரமாக இருக்கிறார். வில்லாளி  பசுபதியோ பார்த்தனோ யாரோ யாமறியோம்.....!

ம்.....வரும் மலிந்தால்.......!

இவர் வெறும் எம் பி யாக இருக்க பிரியமில்லாதவர்.எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் என்று முரண்டு பண்ணுகிறார்.

Link to comment
Share on other sites

28 minutes ago, புங்கையூரன் said:

முஸ்லிம்களுக்குள் இடையே இருக்கும் ஒரு விதமான புரிந்துணர்வு போன்ற ஒன்று.....பிராமண குலத்தவரிடையேயும் ஒரு விதமான புரிந்துணர்வு இருந்து கொண்டேயிருக்கும்!

தமிழ் பேசுவதானால் மட்டும் ஒருவனைத் தமிழன் எனவும்...தமிழர்களின் நலன் நோக்கியே ,,,அவர்கள் நடவடிக்கைகள் நகரும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பதைக் காலம் எமக்கு உணர்த்தியுள்ளது!

இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா ஜெயராம் போன்ற அனைவருக்குள்ளும் ஒரு விதமான புரிந்துணர்வு எப்போதுமே இருக்கும்!

எல்லோரும் முள்ளி வாய்க்காலுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்களே ஒழிய...தமிழனுக்காக உண்மையாக அழுதவர்கள் தமிழகத்தின் கீழ்மட்டத் தமிழர்களே!

அவர்களைச் சரியான வகையில் வழி நடத்த...ஒரு தலைவன் தமிழ் நாட்டில் இது வரை இல்லை என்றே நினைக்கிறேன்!

அப்படியான தலைமை ஒன்று உருவாகும் வரைக்கும்....தமிழ் நாட்டுத் தமிழன் ...சந்தையில் இருக்கும் ஒரு வியாபாரப் பொருளாகவே இருப்பான்!

 

 

உண்மைதான்.. 

இந்த புரிதல் சாதிவாரியாக வருகின்றாதா அல்லது ஆரிய திராவிடம் என்ற அடிப்படையில் வருகின்றதா என்பதை உணர்வது கஸ்டம் ஆனால் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் இந்திய தேசீயத்துக்கும் அதிகாரத்துக்கும் உரித்துடையவர்கள் நாங்கள் என்ற புரிந்துணர்வு இதில் உண்டு. 

இந்த புரிந்துணர்வு சாதிவாரிக்கட்சியான ப ம க வன்னியர்களுக்கு இடையில் கூட இல்லை. திராவிடம் என்ற அடிப்படையிலும் இல்லை. எதிர்காலத்தில் தமிழ்த்தேசீயம் சார்ந்து ஒருவேளை ஏற்பட வாய்புள்ளது. இருந்தும் பணமுதலைகளே இந்த புரிந்துணர்வையும் தீர்மானிப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாக்கள் எப்பவும் நல்லதை சொல்லித்தான் பாட்டுப்படிச்சு கதையள் விடும்.
அதை நம்பி ஆற்றிலை இறங்கி தமிழினம் தேய்ஞ்சுபோன கதையள் எக்கச்சக்கம்.
வேற்றுவழி அரசியலையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி பிரபலங்கள்..

பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
சகாயம் ஐயா..

சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்...
ரஜினிகாந்த்..

அதிமுக, திமுக சரியில்லை எனில் சீமானை தேர்ந்தெடுப்போம்...
கமல்ஹாசன்....

என் உடலை தம்பி சீமானிடம் கொடுத்து புலிக்கொடி போத்தி அடக்கம் செய்யுங்கள்..
மணிவண்ணன்...

நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
நம்மாழ்வார்...

ஆளபோகிறான் தமிழனென்று தன்படத்திற்கு தலைப்புசெய்தி தந்தார்....
விஜய்....

எல்லாதுறையிலும் தமிழன் சாதிக்கனும்.. தமிழ்நாட்டை தமிழனே ஆளனும்....
ஏஆர் ரகுமான்...

கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
சத்யராஜ்...

அண்ணனைவிட சிறப்பான அரசியல் உரிமை கொள்கைகளை யாராலும் தரமுடியாது....
அமீர்...

சீமான், சகாயம் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்....
மன்சூர் அலிகான்...

சீமானின் சிறந்த அரசியல் தத்துவங்களுக்காக தலைவணங்குகிறேன்....
சேரன்...

உடல்பொருள் ஆவியை தமிழுக்காக தியாகம் செய்ய நினைத்தேன்...
நாம்தமிழர் கட்சிக்கு உழைப்பதே அந்த தியாகத்திற்கு ஈடுஇணை....
பொன்வன்னன்...

தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
சீமானின் பேச்சை பரப்புங்கள்...
பாரதிராஜா..

சீமானே சிறந்த ஆளுமைமிக்க தலைவர்....
ரவிமரியா...

கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
நியூஸ்7தொலைக்காட்சி நிருபர்..

எத்தனை சீமான் வந்தாலும் தமிழர்களை திருத்த முடியாது..
தமிழருவி மணியன்...

ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி என்கிறார் சீமான்.. என்று பாராட்டினார்..
பாண்டே...

காலத்தின் தேவை.. சீமான்
(நாம் தமிழர் கட்சி)

https://www.facebook.com/groups/1593696960948161/permalink/1943761099275077/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

சீமானை பற்றி பிரபலங்கள்..

பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
சகாயம் ஐயா..

சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்...
ரஜினிகாந்த்..

அதிமுக, திமுக சரியில்லை எனில் சீமானை தேர்ந்தெடுப்போம்...
கமல்ஹாசன்....

என் உடலை தம்பி சீமானிடம் கொடுத்து புலிக்கொடி போத்தி அடக்கம் செய்யுங்கள்..
மணிவண்ணன்...

நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
நம்மாழ்வார்...

ஆளபோகிறான் தமிழனென்று தன்படத்திற்கு தலைப்புசெய்தி தந்தார்....
விஜய்....

எல்லாதுறையிலும் தமிழன் சாதிக்கனும்.. தமிழ்நாட்டை தமிழனே ஆளனும்....
ஏஆர் ரகுமான்...

கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
சத்யராஜ்...

அண்ணனைவிட சிறப்பான அரசியல் உரிமை கொள்கைகளை யாராலும் தரமுடியாது....
அமீர்...

சீமான், சகாயம் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்....
மன்சூர் அலிகான்...

சீமானின் சிறந்த அரசியல் தத்துவங்களுக்காக தலைவணங்குகிறேன்....
சேரன்...

உடல்பொருள் ஆவியை தமிழுக்காக தியாகம் செய்ய நினைத்தேன்...
நாம்தமிழர் கட்சிக்கு உழைப்பதே அந்த தியாகத்திற்கு ஈடுஇணை....
பொன்வன்னன்...

தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
சீமானின் பேச்சை பரப்புங்கள்...
பாரதிராஜா..

சீமானே சிறந்த ஆளுமைமிக்க தலைவர்....
ரவிமரியா...

கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
நியூஸ்7தொலைக்காட்சி நிருபர்..

எத்தனை சீமான் வந்தாலும் தமிழர்களை திருத்த முடியாது..
தமிழருவி மணியன்...

ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி என்கிறார் சீமான்.. என்று பாராட்டினார்..
பாண்டே...

காலத்தின் தேவை.. சீமான்
(நாம் தமிழர் கட்சி)

https://www.facebook.com/groups/1593696960948161/permalink/1943761099275077/

 

உண்மையான புலிகளின் கொள்கையில் போராடிய எவரும் சீமானை ஏற்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

முஸ்லிம்களுக்குள் இடையே இருக்கும் ஒரு விதமான புரிந்துணர்வு போன்ற ஒன்று.....பிராமண குலத்தவரிடையேயும் ஒரு விதமான புரிந்துணர்வு இருந்து கொண்டேயிருக்கும்!

தமிழ் பேசுவதானால் மட்டும் ஒருவனைத் தமிழன் எனவும்...தமிழர்களின் நலன் நோக்கியே ,,,அவர்கள் நடவடிக்கைகள் நகரும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பதைக் காலம் எமக்கு உணர்த்தியுள்ளது!

...

இதுதான் யதார்த்தம்..

இந்த புரிந்துணர்வு, தொடர்பாடல், இணக்கம் மிக நுணுக்கமானது.. அதான் ஆழத்தை அறிவது மிககடினம், இடையில் பிற அந்நிய குறுக்கீடுகளை இவர்கள் அனுமதிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

உண்மையான புலிகளின் கொள்கையில் போராடிய எவரும் சீமானை ஏற்கமாட்டார்கள்.

புலிக்கொள்கை: ஆயுதப்போராட்டம். அதனை அவர் செய்தால் வாழ்நாள் முழுவதும் உள்ளே தான்.

புலிகளை வெறுத்த ரெலொ, புளட், கருணா அம்மான் பிரிவினர் சகலருமே சீமானை எதிர்ப்பர்.

சீமானுக்கும் இது தெரியும். அவருக்கு நாம் தேவையோ இல்லையோ, எமக்கு அவரது ஆதரவு தேவை.

பிரபாகரன், பெயர் மற்றும் பதாதையுடன் அவரால் சாதியாக, மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களை எல்லாம் தமிழனாக இணைக்க முடிகிறது என்ற ஒரு விசயத்துச்காகவே எனது ஆதரவு.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் முதல்வராகி ஈழத்தமிழருக்காக பாடுபடுவேன்; நடிகர் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் முதல்வராக வந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்வேன் என்று தெரிவித்ததாக ஸ்ரீலங்கா ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, தமிழகத்தின் முதல்வர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தான் வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கையின் தமிழ் மக்கள் தொடர்பிலும் இதுவரை இல்லாத அளவுக்கு செயற்படுவேன் என்று தெரிவித்ததாக மேற்படி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தின் முதல்வராகி ஈழத்தமிழருக்காக பாடுபடுவேன்; நடிகர் கமல்ஹாசன்!

இது குறித்து இந்திய டுடே தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். அதில் தான் அரசியலில் இறங்கப்போவதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயெலலிதாமீது தனக்கிருந்த மரியாதையின் நிமிர்த்தத்தினால்தான் இதுவரை அரசியலில் இறங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜெயெலலிதாவின் மறைவினால் தமிழகத்தில் ஒரு சரியான அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ஒன்று நிலவுவதாகவும் அதற்காக புதிய தலைமைத்துவம் ஒன்றை தமிழக மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட கமல்ஹாசன் மிக விரைவில் அதற்கான மக்கள் சந்திப்பை நிகழ்த்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இடது சாரியோ வலது சாரியோ மக்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் மக்களுக்கு அவர்களது பிரச்சினைதான் முக்கியமானது எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், தான் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் அந்த மாற்றத்திற்காக தலை வணங்குவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/for-Eelam-Tamils-as-the-Chief-Minister

 

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் முதல்வராக வந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்வேன் என்று தெரிவித்ததாக ஸ்ரீலங்கா ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்காக பாடுபடுவேன் என்று தமிழகத்தில்சொல்லிக்கொண்டு எவரும் அரசியலில் முன்னுக்கு வரமுடியாது கடந்தகாலங்களை அனுபவமாகக்கொண்டு தொடரும் காலத்தை நிர்ணயிக்க தெரிந்திருக்கவேண்டும். முதலில் தமிழகத்தை நன்னெறிப்படுத்தவும் தெளிவை உருவாக்கவும் மட்டுமே முழுமையான ஒரு தமிழக அரசு தேவை. முதலில் தமிழக மக்களுக்கான தலைமைத்தேடல் என்பது மேலே புங்கை ஊரான் கூறிய கருத்திலிருந்து மாற்றமில்லாதது. அண்மைக்கால தமிழக சினிமாவில் நிறையவே விழிப்புணர்வைதூண்டும் கருத்துகளும் காட்சிப்படுத்தல்களும் வலம் வருகின்றன. பிரபலங்களின் திரைப்படங்களில் வியாபாரத்திற்காகவும் விசிலடிப்புகளுக்காகவும்... அதே நேரம் வளர்ந்து வரும் புதிய கலைஞர்களின் தேடல்களிலும் இலக்குகளாகவும் இலட்சிய நெருப்புகளாகவும் உருவகப்பட்டுவருவது கண்கூடு... இன்னும் சிறிது  காலம் செல்லும்.... மெல்ல எழுந்து நடக்கமுயலும் பிள்ளையைபோல சினிமாத்துறை தமிழக நலன்கள் பற்றி பேச முற்படுகிறது... வரவேற்கவேண்டிய விடயம் ஆனால் அவற்றை கபாளீகரம் செய்வபோல்தொலைக்காட்சி சேவைகள் மக்களை மந்தைகளாக்கி ஏப்பவிடுகின்றன.tw_angry:

Link to comment
Share on other sites

8 hours ago, Nathamuni said:

 

பிரபாகரன், பெயர் மற்றும் பதாதையுடன் அவரால் சாதியாக, மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களை எல்லாம் தமிழனாக இணைக்க முடிகிறது என்ற ஒரு விசயத்துச்காகவே எனது ஆதரவு.

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் காலம் வரைக்கும் சீமானால் தேர்தலில் கட்டுப் பணத்தை கூட பெற முடியாது.

ஆனால் அண்மை காலங்களில் தமிழக மக்களின் நலன்கள் பலவற்றுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருப்பது நல்ல மாறுதல் (நீட்டுக்கு எதிராக, கதிரமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பாடுகளில் சீமானை காண முடிந்தது)

Link to comment
Share on other sites

கமலுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள்

தமிழக அரசு மீது நடிகர் கமலஹாசன் விமர்சனம் வைத்தபோதெல்லாம் ஆதரவையோ அல்லது அமைதியான ஏற்பையோ வழங்கிய இணையவாசிகள் முதல்வராக விரும்புவதாக அவர் கூறியதும் கணிசமாக அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். அவரது அரசியல் விருப்பத்தை வரவேற்கும் பதிவுகளும் காணப்பட்டன.

சுவையும், நக்கலும் நிறைந்த பதிவுகளால் அவரது அரசியல் விருப்பம் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டது. நேரடியாகவே முதல்வராகும் விருப்பத்தை வெளியிட்டிருந்தது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது தெரிந்தது.

ஆசை வெட்கமறியாதுபடத்தின் காப்புரிமைFACEBOOK

மேம்போக்காகவும், நகைச்சுவையாகவும் அந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றில் பல வாதங்கள் உள்ளுறையாக இருந்தன. டிவிட்டரில் வெளியான இந்தப் பதிவு தாமே எல்லாமாவுமாக இருக்க விரும்புகிறவராக கமலை விமர்சிக்கிறது.

மெர்சல்படத்தின் காப்புரிமைTWITTER

சமூகப்பணிகள், பிரச்சினைகளை எதிர்த்துப் போராட்டங்கள் ஏதும் செய்யாத கமல் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் பதிவுகள், அவரது சமூகப் பார்வையை கேள்வி கேட்கும் பதிவுகளும் வெளியாயின.

டிராஃபிக் ராமசாமிபடத்தின் காப்புரிமைFACEBOOK

அவரை பாஜக விமர்சிப்பதை அடுத்து அவருக்கு ஆதரவாக வந்தப் பதிவு.

தமிழிசைபடத்தின் காப்புரிமைFACEBOOK

கமல் ஒவ்வொரு தலைவரையும் சந்திக்கும்போதெல்லாம் அவர் அந்தக் கட்சியில் சேர்வார் என்று விமர்சகர்கள் சொல்வதைக் கிண்டலடிக்கும் ஒரு பதிவு.

பொதுவாகக் கிண்டலடிக்கும் பதிவுகள் சில.

மச்சான்படத்தின் காப்புரிமைFACEBOOK முதல்வன்படத்தின் காப்புரிமைFACEBOOK

அவரது வருகை திமுக-வின் வாக்குகளைப் பிரிக்கும் அளவுக்கு வல்லதா என்ற கேள்வியை எழுப்பும் பதிவு ஒன்று.

வாக்குப் பிரிப்புபடத்தின் காப்புரிமைFACEBOOK

அவரது தொலைக்காட்சித் தொடரை வைத்து கமலை விமர்சிக்கும் பதிவு ஒன்று.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @senthilcp

அரசியலோ, ஜாதி, மதமோ எதுவும் இந்த சமுதாயத்தை சீர்கெடுத்துவிட முடியாது: கமல் # பிக்பாஸ் ,மானாட மயிலாட,சீரியல்கள் போதும் அந்த வேலைக்கு

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @senthilcp

 

http://www.bbc.com/tamil/india-41361741

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி காந்தை விட... தமிழ் அடிப்படை உணர்வு உள்ள,  கமலஹாசன்.....  எவ்வளவோ மேல்.

இவரை... அரசியலுக்கு இழுக்க வைத்தவர்,  
போருக்கு தயாராகுங்கள் என்று... முதலில்,  தனது ரசிகர்களுக்கு  அழைப்பு விடுத்த  ரஜனி தான்.
கமல்... அரசியலுக்குள் நுழையப்  போகின்றேன் என்றவுடன், 
ரஜனிகாந்த்....  இருந்த இடம் இல்லாமல் பதுங்கி விட்டார்  என்பதே உண்மை.
அந்த விதத்தில்.... கமலுக்கு நன்றி கூற  வேண்டும்.

பிற் குறிப்பு: நான்.... கமல் ரசிகன் அல்ல. ரஜனிக்கு... வாய்ப்  பூட்டு  போட்ட  காரணத்தால்,  அவரை வரவேற்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் காலம் வரைக்கும் சீமானால் தேர்தலில் கட்டுப் பணத்தை கூட பெற முடியாது.

ஆனால் அண்மை காலங்களில் தமிழக மக்களின் நலன்கள் பலவற்றுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருப்பது நல்ல மாறுதல் (நீட்டுக்கு எதிராக, கதிரமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பாடுகளில் சீமானை காண முடிந்தது)

திமுக கடந்த தேர்தலில் வெல்லமுடியாமல் போனமைக்கு காரணம் வெறும் 2.5 இலட்சம் வாக்குக்கள். பல தொகுதிகளில் 100 முதல் 2000 வரை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பறிபோனது .

கட்டுமரம் அத்துடன் படுத்தவர் தான் இன்னும் எழவில்லை.

சீமான் கடந்த தேர்தலில் எடுத்த வாக்குகள் 4.5 இலட்சம்.

சரியாகப் பார்த்தால், திமுகவின் தோல்வியின் காரணம் சீமான் அவர்களிடம் இருந்து திருடிக் கொண்ட வாக்குகள்.

நாம் தமிழர்கள் இந்த ஒரு வருடத்தில் அபார வளர்ச்சி. இவரது வாக்குகள் 10 இலடசம் வரையாவது கூடும். இவர்கள் குறைந்தது சீமானையாவது சட்டசபைக்கு அனுப்ப முயலக் கூடும்.

மறுபுறத்தே, அதிமுக, திமுக வாக்குகள் மட்டுமே, ரஜனி, கமல் வந்தால் பிரியும்.

EPS, OPS, தினகரன், பாஜக எல்லோருமே தேர்தல் வந்தால் செல்லாக் காசுகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வல்வை சகாறா said:

தமிழக அரசியலும் சினிமாவும் பிரிக்கமுடியாதது. தமிழக அரசியல் சினிமாவுக்கு அப்பால் நின்று எழக்கூடிய நிலையில் இல்லை அதற்கு தமிழ்நாட்டு மக்களும் தயாரில்லை ஆகவே தமிழக அரசியலில் அறவே சினிமா சம்பந்தம் இல்லாதவர் வெற்றியடைவது சாத்தியமன்று. எப்பயோ சினிமாவின் ஆதிக்கத்தில்தான்தொடரும் அரசியல் மாற்றங்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதனால் கமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் வரவேற்பதில் தவறில்லை. அரசியல் பிரவேசம் கமலுக்கு சாபமாக்கூட அமையலாம். இருப்பினும் அந்த கலைஞனுக்குப் பின்னால் சாதிக்கவேண்டும் என்ற ஒரு பேரவா இருப்பதை உணரமுடிகிறது. இப்போது இருப்பதிலிருந்து பெரிய மாற்றங்கள் நிகழாவிட்டாலும் சின்னச் சின்ன மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாட்டு...  நிதர்சன அரசியல் உண்மையை... பிரதிபலிக்கும்,  அருமையான.... கருத்து, வல்வை  சகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

புலிக்கொள்கை: ஆயுதப்போராட்டம். அதனை அவர் செய்தால் வாழ்நாள் முழுவதும் உள்ளே தான்.

புலிகளை வெறுத்த ரெலொ, புளட், கருணா அம்மான் பிரிவினர் சகலருமே சீமானை எதிர்ப்பர்.

சீமானுக்கும் இது தெரியும். அவருக்கு நாம் தேவையோ இல்லையோ, எமக்கு அவரது ஆதரவு தேவை.

பிரபாகரன், பெயர் மற்றும் பதாதையுடன் அவரால் சாதியாக, மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களை எல்லாம் தமிழனாக இணைக்க முடிகிறது என்ற ஒரு விசயத்துச்காகவே எனது ஆதரவு.

இந்த விடயங்களை.... 
"விரல்  நுனியில்"  வைத்திருந்து, பதில்  எழுதுவதற்கு..... "நாதமுனி"  திறமான ஆள். :)

Link to comment
Share on other sites

28 minutes ago, Nathamuni said:

திமுக கடந்த தேர்தலில் வெல்லமுடியாமல் போனமைக்கு காரணம் வெறும் 2.5 இலட்சம் வாக்குக்கள். பல தொகுதிகளில் 100 முதல் 2000 வரை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பறிபோனது .

கட்டுமரம் அத்துடன் படுத்தவர் தான் இன்னும் எழவில்லை.

சீமான் கடந்த தேர்தலில் எடுத்த வாக்குகள் 4.5 இலட்சம்.

சரியாகப் பார்த்தால், திமுகவின் தோல்வியின் காரணம் சீமான் அவர்களிடம் இருந்து திருடிக் கொண்ட வாக்குகள்.

நாம் தமிழர்கள் இந்த ஒரு வருடத்தில் அபார வளர்ச்சி. இவரது வாக்குகள் 10 இலடசம் வரையாவது கூடும். இவர்கள் குறைந்தது சீமானையாவது சட்டசபைக்கு அனுப்ப முயலக் கூடும்.

மறுபுறத்தே, அதிமுக, திமுக வாக்குகள் மட்டுமே, ரஜனி, கமல் வந்தால் பிரியும்.

EPS, OPS, தினகரன், பாஜக எல்லோருமே தேர்தல் வந்தால் செல்லாக் காசுகள். 

 

இன்று இருக்கும் தமிழக அரசியல் நிலையில் எப்ப தேர்தல் வரும் என்று தெரியாது. ஒரு வேளை இரண்டு வருடத்துக்குள் வருமாயின்

1. பெரும் எண்ணிக்கை வித்தியாசத்தில்  தி.மு.க வெல்லும்
2. அதிமுக படு தோல்வி அடையும்
3. சீமான் திராவிடக் கட்சி ஒன்றுடனோ அல்லது பலவற்றுடனோ கூட்டணி அமைக்காவிடின் எந்த தொகுதியிலும் வெல்ல மாட்டார். தொகுதி வாரி தேர்தல் என்பதால் கூட்டணி இல்லாமல் அவரால் வெல்ல முடியாது

மற்றது, தி மு க கூட்டணி  தோற்றது 2.5 இலட்ச வாக்குகளால் அல்ல. 4.4 இலட்ச வாக்குகளால். நாம் தமிழர் கட்சி இதனை விட  அதிகமாக 4.5 இலட்சம் பெற்று இருந்தது. ஆனால் தமிழக தேர்தல் தொகுதி வாரி தேர்தல் என்பதால் வெற்றிக்கு கிட்ட கூட வர முடியவில்லை

பார்க்கவும்: https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Legislative_Assembly_election,_2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.