Jump to content

'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்' - வைரலாகும் 'மெர்சல்' முன்னோட்டம்


Recommended Posts

'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்' - வைரலாகும் 'மெர்சல்' முன்னோட்டம்

 

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் புதிய படம் மெர்சல். அட்லீயின் பிறந்தநாளான இன்று மாலை இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்' - வைரலாகும் 'மெர்சல்' !படத்தின் காப்புரிமைYOUTUBE

தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் முதலில் இதை வெளியிட்டது. யூ டியூபில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது 'மெர்சல்'.

'இளைய தளபதி' என்ற அடைமொழிக்கு பதிலாக 'தளபதி' விஜய் எனும் அடைமொழியுடன் இந்த முன்னோட்டம் துவங்குகிறது.

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

தமிழக அரசியலில் அனல் பறக்கும் சூழ்நிலையில் 'ஆளப்போறான் தமிழன்' எனத் தொடங்கும் பாடலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

மாயஜாலம் செய்யும் வித்தைக்காரனாக ஒரு தோற்றத்திலும் நெற்றியில் திருநீறு பட்டை மற்றும் மீசை தாடியுடன் இன்னொரு தோற்றத்திலும் முன்னோட்டத்தில் வருகிறார் விஜய்.

மெர்சல் திரைப்பட முன்னோட்டம் குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து டிவிட்டர் தளத்தில் இந்திய அளவில் வைரலாகி இருக்கிறது 'மெர்சல்'.

பிற செய்திகள்:

http://www.bbc.com/tamil/arts-and-culture-41351289

Link to comment
Share on other sites

வெளியான 5 நிமிடத்தில் மெர்சல் டீசர் செய்த சாதனை

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் இன்று வெளியான 5 நிமிடத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

201709211846542819_-5-----_SECVPF.gif
 
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மெர்சல். அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக இப்படத்தின் டீசரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அட்லியின் பிறந்தநாளான இன்று செப்டம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
201709211846542819_1_mersalteaser1._L_st

அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 7 நிமிடத்தில் 4 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 5 நிமிடத்தில் எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு வேகமாக பார்வையாளர் பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மற்ற படங்களின் டீசரை கடந்து புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/09/21184648/1109231/-5.vpf

Link to comment
Share on other sites

'மெர்சல்' திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்

 
மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைTWITTER

மெர்சல் படத்தின் முன்னோட்டம் யூ டியூபில் வெளியான ஒரு மணிநேரத்திற்குள் அதிக பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், மெர்சல் பற்றிய 6 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது. இந்தக் கூட்டணியில் ஏற்கனவே உருவான 'தெறி' திரைப்படத்தில் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
  • நடிகர் விஜய்யின் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இது மூன்றாவது முறை. ஏற்கனவே உதயா, அழகிய தமிழ்மகன் என இரண்டு விஜய் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மெர்சல் திரைப்படத்துக்காக விஜய்யும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளனர்.
'மெர்சல்' திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்
  • இயக்குனர் அட்லீக்கு செப்டம்பர் 21 பிறந்தநாள். அதனை முன்னிட்டே மெர்சல் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் அட்லீ. இவர் ஏற்கனவே ராஜா ராணி, தெறி என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். மெர்சல் அவருக்கு மூன்றாவது படம்.
  • மெர்சல் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் அந்த மூன்று கதாநாயகிகள்.
மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGOOGLE
  • விஜய் - வடிவேலு இணை காமெடிகள் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றவை. கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'காவலன்'. அத்திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்திருக்கிறது இந்தக் கூட்டணி.
  • இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாவது படம் குஷி. இத்திரைப்படம் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. விஜய் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கவில்லை. இந்நிலையில் மெர்சல் படத்தில் விஜயுடன் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41351294

 

 

 

'மெர்சல்' பெயரில் விஜய் படத்தை விளம்பர செய்ய இடைக்காலத் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி!

 

 
mersal-15
 
 

 

மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள். அதனையொட்டி மெர்சல் பட டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் டீசர் சாதனை படைத்துள்ளது. உலகளவில் யூடியூபில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மெர்சல் டீசர் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியாக இருந்தார்கள்.

இந்நிலையில் மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் தன்னுடைய மனுவில் கூறியதாவது: ஏ.ஆர். பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் மெர்சலாயிட்டேன் என்கிற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறேன். 2014-ல் இந்தத் தலைப்பைப் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் மெர்சல் என்கிற தலைப்பில் நடிகர் விஜய்யும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் மற்றும் மெர்சலாயிட்டேன் ஆகிய இரு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம் தான். மெர்சல் என்கிற தலைப்பில் படம் வெளிவந்தால் எனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் குறிப்பிடிருந்தார்.

 
 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதையடுத்து, மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை இடைக்காலத் தடையை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகப் பொருட்செலவில் படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்று தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மெர்சல் தலைப்பைப் பயன்படுத்தக்கூடாது என்கிற இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/22/mersal-2777820.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.