Jump to content

அரசாங்கத்தின் அற்ப சொற்ப ஆசைகளுக்கு தமிழ் தலைமைகள் விலைபோய்விட்டன – கபே அமைப்பு குற்றச்சாட்டு!


Recommended Posts

59c3c0a5a864b-IBCTAMIL.jpg

வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன.

இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் எனத் தெரிவித்த கீர்த்தி தென்னக்கோன் தற்போது தமிழர்களின் அரசியல் ஆலோசகராக இருக்கும் சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விலைபோயுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பல மாதங்களாக இழுபறிநிலையிலிருந்த உள்ளூராட்சித் திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியுள்ளது.

எனினும் இத்திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பல அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளபோதிலும் தமிழரசுக் கட்சி ஆதரவாக வாக்களித்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், குறைபாடுகளுடன் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அதிருப்தி வெளியிட்ட அதேவேளை, தமிழ்த் தலைமைகளை சிறிலங்கா அரசாங்கம் விலைகொடுத்து வாங்கிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

“சிறிலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமாக உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமாக அடையாளமிடப்படுகின்றது. இது ஜனநாயக விரோத மற்றும் முறையற்ற சட்டமாகும். குறிப்பாக துரதிஷ்டவசமாக தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைக்கு இடையிலான 60, 40 வீத வித்தியாசம் இறுதி தருணத்தில் சபையில் வாக்கெடுப்பு நடத்தவிருந்த 15 நிமிட சொற்ப நேரத்திலேயே 50க்கு 50ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு கொண்டுவந்தமைக்கான காரணம், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியூதீன் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றவே ஆகும். அவர்களது வாக்குகளற்ற நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போன சூழ்நிலை உருவாகியிருந்தது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு அம்மூவரது கோரிக்கையான 50க்கு 50 என்ற திருத்தம் சட்டமூலத்திற்கு உள்வாங்கப்பட்டது. இந்த திருத்தத்துடன் விகிதாசார தொகுதிவாரியுடன் சேர்த்த பின்னர் நடக்கும் ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நாட்டில் பரந்துவாழும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே கிடைக்காத நன்மையொன்று கிடைக்கும். இந்த சட்டமூலத்திற்கு திருத்தங்கள் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்ற செலுத்தப்பட்ட விலை அதிகமாகும். இதனால் வடக்கு, கிழக்கிலேயே அதிக அநீதி ஏற்படும் என்று கூறுகின்றோம். அரசியல் கட்சிகளுக்கு தத்துவாசிரியர்கள் உள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அன்ரன் பாலசிங்கம் இப்பதவியிலிருந்தார். ஆனால் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தத்துவாசிரியராக இருக்கும் சுமந்திரன், அந்தக் கடமையை சம்பந்தனுக்கு செய்யாமல் ரணிலுக்கே நிறைவேற்றினார். இது இனவாத அறிவிப்பல்ல. இந்த நாட்டில் சட்டத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களும், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சட்டத்தை சரிவர நிறைவேற்றுவோம் என குரல் கொடுத்தவர்கள் நாடாளுமன்றத்தில் இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கீழே கண்களுக்கு எவ்வாறு மண்ணைத்தூவுகிறது என்று ஆலோசனை கூறுபவர்களாக மாறிவிட்டனர்” என்றார்.

http://thuliyam.com/?p=79334

 

Link to comment
Share on other sites

29 minutes ago, Athavan CH said:

 

“சிறிலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமாக உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமாக அடையாளமிடப்படுகின்றது. இது ஜனநாயக விரோத மற்றும் முறையற்ற சட்டமாகும். குறிப்பாக துரதிஷ்டவசமாக தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைக்கு இடையிலான 60, 40 வீத வித்தியாசம் இறுதி தருணத்தில் சபையில் வாக்கெடுப்பு நடத்தவிருந்த 15 நிமிட சொற்ப நேரத்திலேயே 50க்கு 50ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு கொண்டுவந்தமைக்கான காரணம், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியூதீன் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றவே ஆகும். அவர்களது வாக்குகளற்ற நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போன சூழ்நிலை உருவாகியிருந்தது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு அம்மூவரது கோரிக்கையான 50க்கு 50 என்ற திருத்தம் சட்டமூலத்திற்கு உள்வாங்கப்பட்டது. இந்த திருத்தத்துடன் விகிதாசார தொகுதிவாரியுடன் சேர்த்த பின்னர் நடக்கும் ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நாட்டில் பரந்துவாழும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே கிடைக்காத நன்மையொன்று கிடைக்கும்.

http://thuliyam.com/?p=79334

 

எச்சுக்குச்சி மீ.... தொகுதி வாரி 60 வீதத்தில் இருந்து 50 வீதத்துக்கு குறைத்தது / அல்லது விகிதாசார முறை 40 இல் இருந்து 50 இற்கு அதிகரித்தது சிறுபான்மை இனங்களுக்கு நன்மை தானே? அது எப்படி அற்ப சலுகையாகும்? ஆராவது விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

4 hours ago, நிழலி said:

எச்சுக்குச்சி மீ.... தொகுதி வாரி 60 வீதத்தில் இருந்து 50 வீதத்துக்கு குறைத்தது / அல்லது விகிதாசார முறை 40 இல் இருந்து 50 இற்கு அதிகரித்தது சிறுபான்மை இனங்களுக்கு நன்மை தானே? அது எப்படி அற்ப சலுகையாகும்? ஆராவது விளக்க முடியுமா?

தமிழரசுக் கட்சி கண்ணைமூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு – பங்காளிக் கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சி கண்ணைமூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

மாகாணசபையின் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், புளொட் போன்ற அமைப்புக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச்செய்தனர். தமிழரசுக் கட்சி மாத்திரம் ஆதரவாக வாக்களித்தது.

இச்சட்டத்தின்பிரகாரம், மாகாணசபைக்கான தேர்தல்களை 50வீதம் தொகுதி வாரியாகவும், 50 வீதம் விகிதாசார முறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும்.

ஏற்கனவே, 60வீதம் தொகுதி வாரியாகவும் 40வீதம் விகிதாசாரமுறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முஸ்லிம் காங்கிரசும், மலையக் கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதனையடுத்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே தொகுதிவாரியாக 50வீதமும், விகிதாசார ரீதியில் 50 வீதமும் எனக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாற்றம் செய்வதற்கான பேச்சுக்களில் தமிழரசுக் கட்சி கலந்துகொண்டது. ஆனாலும் அரசாங்கம் முன்னர் பரிந்துரைத்த 60க்கு 40 என்ற முறையை ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கியது.

முஸ்லிம் கட்சிகளும், மலையக கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி 50:50 என்ற முறையைக் கொண்டுவந்திருக்காவிட்டால் வட – கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் பெரும் சிக்கலை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி கண்ணை மூடிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்த சட்டமூலத்திற்கு 154 வாக்குகள் ஆதரவாகவும் 43 வாக்குகள் எதிராகவும் பெறப்பட்டன. கூட்டு எதிர்கட்சியும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்துள்ளன.

http://thuliyam.com/?p=79313

 

 

Link to comment
Share on other sites

18 minutes ago, Athavan CH said:

தமிழரசுக் கட்சி கண்ணைமூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு – பங்காளிக் கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சி கண்ணைமூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

மாகாணசபையின் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், புளொட் போன்ற அமைப்புக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச்செய்தனர். தமிழரசுக் கட்சி மாத்திரம் ஆதரவாக வாக்களித்தது.

இச்சட்டத்தின்பிரகாரம், மாகாணசபைக்கான தேர்தல்களை 50வீதம் தொகுதி வாரியாகவும், 50 வீதம் விகிதாசார முறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும்.

ஏற்கனவே, 60வீதம் தொகுதி வாரியாகவும் 40வீதம் விகிதாசாரமுறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முஸ்லிம் காங்கிரசும், மலையக் கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதனையடுத்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே தொகுதிவாரியாக 50வீதமும், விகிதாசார ரீதியில் 50 வீதமும் எனக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாற்றம் செய்வதற்கான பேச்சுக்களில் தமிழரசுக் கட்சி கலந்துகொண்டது. ஆனாலும் அரசாங்கம் முன்னர் பரிந்துரைத்த 60க்கு 40 என்ற முறையை ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கியது.

முஸ்லிம் கட்சிகளும், மலையக கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி 50:50 என்ற முறையைக் கொண்டுவந்திருக்காவிட்டால் வட – கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் பெரும் சிக்கலை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி கண்ணை மூடிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்த சட்டமூலத்திற்கு 154 வாக்குகள் ஆதரவாகவும் 43 வாக்குகள் எதிராகவும் பெறப்பட்டன. கூட்டு எதிர்கட்சியும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்துள்ளன.

http://thuliyam.com/?p=79313

 

 

ஆதவன், என் கேள்வி தமிழரசுக் கட்சி ஆதரித்ததா இல்லையா என்பது தொடர்பானது அல்ல. கபே அமைப்பின் தலைவர் சொல்கின்ற மாதிரி மனோ, ரிஷாட், ரவூப் போன்றவர்கள் பொறுப்பாக இருக்கும் சிறுபான்மை கட்சிகள் அற்ப சலுகைகளுக்காக இணங்கி விட்டனர் எனச் சொல்வது தொடர்பாகவே என் கேள்வி.

இவ் மூவரும் செய்த மாற்றம் சிறுபான்மையினத்தவருக்கான அனுகூலங்களை கொடுக்கும் மாற்றம் என்பதால் இது அற்ப சலுகைகளுக்கானது அல்ல.

த.தே.கூவில் இருக்கும் தமிழரசு தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட இம்  மாற்றத்தினை முன் வைக்காமல் வெறுமனே வெளியேறி இருக்கையில் மேலே சொன்ன மூவரும் சரியாக நடந்து மாற்றத்தை கொண்டு வந்து இருக்கின்றார்கள். தொகுதிவாரி தேர்தலில் திருமலை / மட்டக்கிளப்பு என்பனவற்றின் தமிழ் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிந்தும் சம்பந்தன் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுக்க மிச்ச ஆட்கள் வழக்கம் போல வெறுமனே எதிர்ப்பை மட்டும் பதிவு செய்து விட்டு வெளியேறீ இருக்கினம்

Link to comment
Share on other sites

இதில் எனக்கு உண்மையிலேயே தெளிவில்லை  நிழலி , ஒன்றில் ஆதரித்தவர்கள் அதிலுள்ள சாதகங்களை மக்களுக்கு விளக்கியிருக்க வேண்டும், அல்லது எதிர்த்தவர்கள் பாதகங்களை சொல்லியிருக்க வேண்டும் அப்படி யொன்றும் நிகழ்ந்ததாகத்  தெரியவில்லை, தெளிவாகத் தெரிந்தது ஒன்றே ஒன்றே ஒன்று தான் , எம்மிடையே பிளவுகளும் , விரிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன......

Link to comment
Share on other sites

புலிகளின் போராட்ட காலத்திற்கு முன்பும் புலிகளின் முடிவுக்கு பின்பும் தமிழ் அரசியல் கட்சிகள் போரினவாத அரசியலை அனுசரித்தே பழக்கப்பட்டது. அடிப்படையில் இக் கட்சிகளுக்கு கொள்கை என்பது கிடையாது. தமிழர்களுக்கு தனி நாடுவேண்டுமா இல்லை மாநில சுயாட்சி வேண்டுமா இல்லை எவ்வளவு அதிகாரம் வேண்டும் என்ற எந்த வரையறையும் அற்ற, எந்த இலக்கும் அற்ற ஒரு போக்கே இவர்களது அரசியல். தமிழர்களுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தி அதில் உங்களால் முடிந்தளவு தீர்வை போடுங்கள் என்று கேட்கும் நிலை. தட்டில் ஏதாவது போடச்சொல்லி சிங்களத்திற்கு சொல்லும் படி இந்தியாவை கேட்பது. சிங்களம் அவ்வப்போது தட்டில் போடுவதற்குப் பதிலாக பக்கெட்டில் கொஞசம் போட்டுவிடும். அமிர் தொடங்கி சங்கரி சம்மந்தன் வரை இதே கதைதான். புலிகளின் போராட்ட காலத்தில் இந்தக் கட்சிகளில் பலர் கொள்கை சார்ந்து செயற்பட்டு சிங்களத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இனம் இனத்திற்கான தீர்வு போராட்டம் விடுதலை என்ற எந்த அடிப்படை நம்பிக்கையும் அற்றவர்கள். இவர்கள் அரசியல் எப்போதும் இந்த நம்பிக்கையற்ற தன்மையை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது. பொன்சேகவுடனும் கூட்டணி போடுவார்கள் மகிந்த மைத்திரி ரணில் சந்திரிக்கா என எந்த விதிவிலக்கும் இவர்களுக்கு இல்லை.  எல்லாவற்றுக்குமான முக்கிய காரணம் புலிகளுக்கு பின்னர் தமிழர்களுக்கென்று அரசியல் தளம் என்று எதுவும் இல்லை. தளமற்று செய்யப்படும் அரசியல் எந்த வலுவுமற்ற கோமாளித்தனமகவே அமைகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.