Jump to content

Recommended Posts

அதிர்ஷ்டம்

 

‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி  இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத்  தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன்.

ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார்.  ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன்.

3.jpg

‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என் மகனுக்கு திடீர்னு  பிரமோஷன் கிடைச்சது. எனக்கு வேற ஷேர் மார்க்கெட்ல எக்கச்சக்க லாபம். ஆனா, உங்க காரை ரொம்ப அடிமாட்டு விலைக்கு  வாங்கிட்டேன். எங்க வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மி! அதனால அதுக்குரிய நியாயமான விலையை வாங்கிக்கங்க!’’ என்று ஒரு கவரை  நீட்டினார் அவர். கணேசனும் அவன் மனைவியும் அசந்து போய் நின்றார்கள்!       

kungumam.co.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணேசனும் அவன் மனைவியும் மட்டுமல்ல நான்கூட அசந்துபோய் விட்டேன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.