Jump to content

வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர்


Recommended Posts

வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர்

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். 

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறிச் சென்றமை தொடர்பாக சிறிதரன் வியாழேந்திரனை காரசாரமாக ஏசியதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர்

இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது தாக்க முற்பட்டார் எனவும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் சக உறுப்பினர்கள் இருவரையும் விலக்குப்பிடித்ததாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பில் ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் வாக்களிக்கவில்லை.  இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மேற்படி கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்ப்பதாகவும் எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் கூறினாா்.

இவ்வாறான நிலையில் புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை சம்பந்தன் பாராட்டிப் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/politics/MPs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர்பார்க்கிறம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் எதிர்பார்க்கிறம் 

வியாழேந்திரன்  வளர்கிறார்  என்று அர்த்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

வியாழேந்திரன்  வளர்கிறார்  என்று அர்த்தம்

வளர்ந்தென்ன வளராமல் விட்டால் என்ன நம் மக்களை  திருத்த வேண்டும் கிழக்கை பொறுத்தவரைக்கும் யார் மீதும் இனி நம்ம்பிக்கை இல்லையென்ற கருத்து நிலவுகிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வளர்ந்தென்ன வளராமல் விட்டால் என்ன நம் மக்களை  திருத்த வேண்டும் கிழக்கை பொறுத்தவரைக்கும் யார் மீதும் இனி நம்ம்பிக்கை இல்லையென்ற கருத்து நிலவுகிறது  

நம்பிக்கை வரமட்டும் வாக்கு போடமாற்றேன் என்று அடம்பிடிக்க முடியாது, சமுக நலம் கருதி ஒருத்தருக்கு வாக்கு போடத்தான் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நம்பிக்கை வரமட்டும் வாக்கு போடமாற்றேன் என்று அடம்பிடிக்க முடியாது, சமுக நலம் கருதி ஒருத்தருக்கு வாக்கு போடத்தான் வேண்டும்

நம்பி வாக்கு போட்டால் நாமம் போட்டு விட்டு கதிரைக்கு சென்று அங்கேயும் சண்டை  கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு இன்று கீரைக்கறிக்கு அலைந்து திரிந்த கதை போல் இருக்கு நிலமை  புட்டும் குழலும் சீ புட்டும் தேங்காய் பூவும்மாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனுக்கு தனிப்பட ரொம்பவும் மதிப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கட்ச்சி மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க கட்ச்சித் தலமை இருக்கு. வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். மலையகத்தான் மட்டக்களப்பான் என்றபடி யாழ்பாண அடியாட்கள் வரவேண்டியதில்லை. தமிழரசுக் கட்ச்சி இதுபற்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வியாழேந்திரனுக்கு தனிப்பட ரொம்பவும் மதிப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

சொல்கிறவர்கள் மட்டுமே சொல்வார்கள் மதிப்பு இருக்ககென ஆனால் நாணயத்தில் இரு பக்கங்களிருப்பது போல் எல்லோருக்கும் இருபக்கமும் உண்டு  அதற்கு அவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது   அடிமரத்தில் பிழை இருக்கும் போது கிளைகளை  என்ன செய்ய முடியும் கிழக்கை பொருத்த வரைக்கும் 

 

1 hour ago, poet said:

கட்ச்சி மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க கட்ச்சித் தலமை இருக்கு. வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். மலையகத்தான் மட்டக்களப்பான் என்றபடி யாழ்பாண அடியாட்கள் வரவேண்டியதில்லை. தமிழரசுக் கட்ச்சி இதுபற்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இருக்கலாம் இன்று மகிந்தவுக்கு சிங்கள மக்கள் சார்ப்பில் ஆதரவு பெருகி வரகிறது  ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர் பாராளுமன்றம் செல்வதில்லை  இருந்தாலுமிவர் மீது எந்த கோப மும் இல்லை இவர் நினைத்தால் இன்னும் கிழக்கை நன்கு அபிவிருத்தி பாதையில் எடுத்து செல்லலாம் ஆனால் அவரால் முடியவில்லை  சில நடக்கும் சம்பவங்களுக்களை பார்த்துக்கொண்டு  மொனியாக இருக்கிறார் கிழக்கில் அடுத்து மாகாண சபை உறுப்பினர்கள் உப்புக்கு சப்பாணி  ம்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சொல்கிறவர்கள் மட்டுமே சொல்வார்கள் மதிப்பு இருக்ககென ஆனால் நாணயத்தில் இரு பக்கங்களிருப்பது போல் எல்லோருக்கும் இருபக்கமும் உண்டு  அதற்கு அவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது   அடிமரத்தில் பிழை இருக்கும் போது கிளைகளை  என்ன செய்ய முடியும் கிழக்கை பொருத்த வரைக்கும் 

 

 இருக்கலாம் இன்று மகிந்தவுக்கு சிங்கள மக்கள் சார்ப்பில் ஆதரவு பெருகி வரகிறது  ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர் பாராளுமன்றம் செல்வதில்லை  இருந்தாலுமிவர் மீது எந்த கோப மும் இல்லை இவர் நினைத்தால் இன்னும் கிழக்கை நன்கு அபிவிருத்தி பாதையில் எடுத்து செல்லலாம் ஆனால் அவரால் முடியவில்லை  சில நடக்கும் சம்பவங்களுக்களை பார்த்துக்கொண்டு  மொனியாக இருக்கிறார் கிழக்கில் அடுத்து மாகாண சபை உறுப்பினர்கள் உப்புக்கு சப்பாணி  ம்கும்  

இந்தக்கோபம் 

எனக்கு  எல்லா  மக்கள் பிரதிநிதிகள்  (மாகாணசபை  உட்பட)  மேலும்  உண்டு

எவ்வளவோ   எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம்

நாசமாப்போவார்

முழுக்க  முழுக்க சுயநலவாதிகளாகவும்

செயலற்ற  பிண்டங்களாகவும் ஆகிப்போனார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இந்தக்கோபம் 

எனக்கு  எல்லா  மக்கள் பிரதிநிதிகள்  (மாகாணசபை  உட்பட)  மேலும்  உண்டு

எவ்வளவோ   எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம்

நாசமாப்போவார்

முழுக்க  முழுக்க சுயநலவாதிகளாகவும்

செயலற்ற  பிண்டங்களாகவும் ஆகிப்போனார்கள்

 கையில்   இருந்த சாட்டையை கொடுத்து விட்டு அடி வேண்டுகிறோம் இது யதார்த்தமான உன்மை :104_point_left:

இலங்கைத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் சகோதர மோதல்களும்,ஒற்றுமையின்மையுமே தனிநாடு என்ற தமிழர் 
இலக்கினை அடையமுடியாமல் போனதற்கான முழுக்காரணங்கள் எனச் சொன்னால் அதில் எந்த தவறுகளும் இருக்காது.
ஆனால் இன்றுவரைக்கும் அவற்றைத் தமிழர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனையானது.

எத்தனையோ அழிவுகளைக் கடந்து நிர்க்கதியான போதிலும் பழைய கதைகளைப் பேசி எமக்குள்ளேயே தியாகி எனவும்,துரோகி எனவும் அடிபடுவது மற்றைய இனத்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறது.
தமிழர்களின் ஒற்றுமையின்மையைச் சரியாகப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள ஏனைய இனங்கள் இரண்டும் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளன.
இனிமேலும் அது தொடரும் என்பதும் தமிழ் இனம் மட்டும் இந்த நாட்டில் இன்னும் மோசமான நிலைக்கே செல்லும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

இரண்டு சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் அறிந்த விடயம்.
மற்றையது சில நாட்களுக்கு முன்னர் அறிந்த விடயம்.
எம் இனத்தைப் பற்றி மற்றைய இனத்தவர்கள் எவ்வாறு கணிப்பிட்டு வெற்றி காண்கின்றனர் என்பது இதன் மூலம் புலனாகும்.

சம்பவம்:1
1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டு தெற்கில் இருந்த தமிழர்கள் வடக்கு கிழக்குக்கு அகதிகளாக ஓடிக்கொண்டிருந்த நேரம்...
வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் இணைவதாகவும், பயிற்சி பெற இந்தியா செல்வதாகவும் செய்தி பரவுகிறது.

தகவல்களைப் பெற்றுக்கொண்ட ஒரு அரச அதிகாரி பதட்டமான நிலையில் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் சென்று கூறுகிறார்.
தமிழர்கள் பயிற்சி பெற இந்தியாவுக்குச் செல்கின்றனர்.
இந்தியாவும் அவர்களுக்குச் சார்பாகவுள்ள நிலையில் பங்காளதேஷ் உருவானது போல தமிழர்களுக்கு நாடு உருவாகப் போகிறது. எமது நாடு ஆபத்தில் உள்ளது.
எமது நாடு பிளவடையப் போகிறது.
ஏதாவது நடவடிக்கைகளை இப்போதே எடுத்தாக வேண்டும்.
தமிழ்த் தலைவர்களோடு பேசி உடன்பாட்டுக்கு வரவேண்டும்.
இல்லாவிட்டால் நாடு பிளவடைவதைத் தடுக்க முடியாது என ஆலோசனையும் சொல்கிறார்.

உடனே அசால்ட்டாகச் சிரித்த ஜனாதிபதி ஜே.ஆர் பின்வருமாறு சொன்னாராம்.

அவர்கள் போகட்டும்..
பயிற்சி பெற்று வரட்டும்.
மூன்று வருடங்களில் அவர்கள் அவர்களுக்குள்ளேயே அடிபட்டு பாதிக்கும் மேல் அழிவடைவார்கள்.
பலர் எம்மிடம் வந்து தஞ்சமடைவார்கள்.
அதன் பின்னர் எஞ்சியவர்களை அவர்கள் பக்கமிருந்து வந்தவர்களை வைத்தே அடுத்த மூன்று வருடங்களில் நான் முடித்துவிடுவேன் என்றாராம்.

அவர் சொன்னது நடைபெற்றது.
ஆனால் அதற்கு முப்பது வருடங்களானதும் அவரால் சாத்தியமாகாமல் வேறு ஒருவரால் சாத்தியமானதும் வேறு கதை.

சம்பவம்:2
மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியாக அடிபட்டுக் கொள்ளும் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அண்மையில் சில முக்கியஸ்தர்களால் இரகசியமாக ஒரு இடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டார்களாம்.
அப்போது கலைக்கப்படவுள்ள கிழக்கு மாகாண சபை தொடர்பாக பேசப்பட்டதாம்.
மீண்டும் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற என்ன நடவடிக்கை என்பது பற்றியதாகவே அந்த இணைவுக் கூட்டம் இடம்பெற்றதாம்.
(கிழக்கு மாகாணசபையின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எந்தவிதச் சிந்தனையுமற்று தமிழர் தரப்பு இருப்பது வேறு விடயம்)

அப்போது தமிழர் தரப்பு அனைவரும் ஒன்றிணைவது தொடர்பாக பேசப்படுவதைப் பற்றியும் அவ்வாறு இணையும் பட்சத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது சாத்தியமில்லை எனவும் பேசப்பட்டதாம்.

அதற்கு ஒரு அரசியல்வாதி சொன்னாராம்..
தமிழர்கள் இனிமேல் ஒற்றுமையாக ஓரணியில் நிற்பது சாத்தியமில்லை.
அன்று புலிகள் இருந்தமையால் இவர்களை கண்டிப்பாக இணைத்தார்கள்.
இன்று இவர்கள் இணைய முயற்சித்தாலும் நான்கு பேரை வைத்து மீண்டும் துரோகிகள் என்று பரப்புரை செய்தாலே போதும்.
அதை நமக்கு இலவசமாக நான்காயிரம் பேர் முழு நேரமாக நின்று பிரச்சாரம் பண்ணித் தருவார்கள்.
இப்போது கூட்டமைப்புக்குள் உள்ளவர்களையே துரோகிகள் எனச் சொல்லி ஓரம்கட்டவும் முடியும்.
புலிகள் என்ற பெயரும் துரோகிகள் என்ற வார்த்தையும் இருக்கும் வரை கிழக்கில் நாம் மட்டும்தான் ராஜாக்கள்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..
அடுத்த முதலமைச்சரும் முஸ்லிம்தான்.
இதுதான் நடக்கும் என்று அசால்டாக சொன்னாராம்.

 

 

முகநூலில் படித்தது நன்றி நவநீதன் 

Link to comment
Share on other sites

16 minutes ago, விசுகு said:

இந்தக்கோபம் 

எனக்கு  எல்லா  மக்கள் பிரதிநிதிகள்  (மாகாணசபை  உட்பட)  மேலும்  உண்டு

எவ்வளவோ   எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம்

நாசமாப்போவார்

முழுக்க  முழுக்க சுயநலவாதிகளாகவும்

செயலற்ற  பிண்டங்களாகவும் ஆகிப்போனார்கள்

விக்கி அடுத்த முறை தேர்தலில் நிற்காமல் அரசியலில் இருந்து விலக வேண்டும், ஏன் என்றால் அவர் அரசியலில் இருந்தால் கூத்தமைப்பு கூத்தாடிகள் அவரை உருப்படியாக எதுவும் செய்ய விட போவதில்லை, அதை விட அவர் வெளியில் வந்து ஒரு அரசியல் சாராத Lobby ஒன்றுக்கு தலைமை தாங்க வேண்டும். அப்படியானால் தான் ஏதாவது உருபடியாக நடக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.