Jump to content

“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100


Recommended Posts

‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-25

 
 

எம்.ஜி.ஆர்

 

நிஜத்திலும் நடிகையரின் காவலர் எம்.ஜி.ஆர்

 

‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது. 

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய  சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது. 

உடம்பை பார்த்துக்கொள்

சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர்  எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

திருமணம் செய்துகொள்

ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார். 

தெலுங்கு கத்துக்கலாம்

‘கொக்கு சைவ கொக்கு’ பாட்டில் ரஜினியுடனும் ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா’ என்ற  பாட்டில் விக்ரமுடனும் ஆடிய ஜோதிலட்சுமி ஆடல் பாடல் கலைகளில் கை தேர்ந்தவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவர் பாட்டி தமயந்தியும் அம்மா தனலட்சுமியும் நடிகையராய் இருந்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு இவர்கள் நல்ல பரிச்சயம் ஆனவர்கள்.
 
ஒரு நாள் ஜோதிலட்சுமியின் தாயார் எம்.ஜி.ஆரிடம் பேசும்போது ‘இப்போது தமிழில் ஜோதிக்கு அதிக வாய்ப்பில்லை. தெலுங்கில் அழைப்பு வருகிறது, ஆனால் இவள் நடிக்க மறுக்கிறாள்’ என்று குறைபட்டுக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர் ஜோதிலட்சுமியிடம் ‘ஏன் உனக்குத் தெலுங்கில் நடிச்சா கசக்குதா’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிலட்சுமி ‘இல்லண்ணே தெலுங்கு பாஷை தெரியாது. என்ன பேசுறாங்கன்னே எனக்குப் புரியாது’ என்றார். ‘அதெல்லாம் புரியும் புரியும். போய் நடி அப்படியே தெலுங்கு கத்துக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார். அதன்பிறகு சண்டை காட்சி நிறைந்த படங்களில் ஜோதிலட்சுமி ஒரு ரவுண்ட் வந்தார். ‘நடிகைக்கு ஃபீல்டில் இருந்தால்தான் மதிப்பு. ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டால் யாரும் அவரை தேடப் போவதில்லை’ என்பதால் கிடைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையைக் கேட்டதால் அவர் சாகும்வரை நடித்தார். விவேக்குடன் நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து பேர் வாங்கினார்.

நடிகையும் குடும்பப் பெண்தான்

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மாதந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். நடிகர் சங்க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளரின் கேள்விகளுக்குப் பதில் கூறினர். ஒரு நிருபர் எம்.என்.ராஜத்திடம் ஏன் குடும்பப்பெண்கள் நடிக்க வருவதில்லை என்றார். இதற்கு பதிலளிக்க ராஜம் தடுமாறினார். உடனே எம்.ஜி.ஆர் எழுந்து ‘ஏன் வருவதில்லை. இப்போது ராஜம் வந்திருக்கிறாரே. இவரும் குடும்பப் பெண்தானே. இவருக்கும் குடும்பம் இருக்கிறது. கணவர் குழந்தைகள் இருக்கின்றனர்’ என்றார். 

நடிகை எப்படி இருக்க வேண்டும்?

நடிப்பு என்பது நடிகையருக்கு வாழ்வாதாரம் தரும் ஒரு தொழில் என்பதை எம்.ஜி.ஆர் அடிக்கடி மற்றவர்களுக்கு நினைவுபடுத்தினார். நாடக நடிகையர் நாடகம் முடிந்ததும் மறுநாள் ஊரைச் சுற்றிப் பார்க்க போகக் கூடாது. ஜவுளி எடுக்க வேண்டும் என்றால். வீட்டுக்கு கொண்டுவரச் சொல்லி சேலை துணிமணிகளை எடுக்க வேண்டும். அனாவசியமாக வெளியே போய் ரசிகர்களின் மத்தியில் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததை ஜி.சகுந்தலாவின் பேட்டி வாயிலாக அறிகிறோம்.

வீண் அரட்டை கூடாது 

சினிமாவிலும் தன் செட்டில் இருக்கும் நடிகையரும் பெண்ணின் பெருமை காப்பவராக இருக்கவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாகவும் இருந்தார். பெண்கள் யாரோடும் பேசி சிரித்து அரட்டை அடிப்பது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. நடிக்க வந்தால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நடிகையரிடம் யாரும் கதையளந்தால் அவருக்கு அடி விழும்; நடிகையருக்கும் திட்டு விழும். 

இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க

எம்.ஜி.ஆர்

நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.

குடும்ப உறவை மதித்த எம்.ஜி.ஆர்

நடிகையும் குடும்பப் பெண்தான் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட எம்.ஜி.ஆர் திருமணமான பெண்களுடன் ஜோடி சேர்வதை தவிர்த்தார். ஈ.வி.சரோஜாவின் சொந்தத் தயாரிப்பான கொடுத்து வைத்தவளில் நடித்தபோது காதல் காட்சிகளை மட்டும் ப.நீலகண்டன் இயக்கட்டும். சரோஜாவின் கணவர் இயக்க வேண்டாம். அது சரோஜாவுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று ராமண்ணாவை தவிர்த்துவிட்டார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் திருமண உறவை மதித்தார். 

முழங்காலுக்கு மேல் ஏறிய பாவாடை

சர்வாதிகாரி படப்பிடிப்பில் அஞ்சலிதேவி ஒரு சுற்று சுற்றி கீழே விழும் காட்சியில்  நடித்தபோது எம்.ஜி.ஆர் ரீடேக் எடுக்கும்படி கூறினார். இயக்குனரும் அஞ்சலி தேவியும் ஏன் சரியாகத்தானே இருந்தது என்றனர். எம்.ஜி.ஆர் இயக்குனரிடம் அஞ்சலி சுற்றி வந்து கீழே விழுந்தபோது அவர் பாவாடை முட்டிக்கு மேலேறிவிட்டது என்றார். சட்டென்று அதிர்ந்து போனார் அஞ்சலிதேவி. தனது மானத்தை காப்பாற்றிய எம் ஜி ஆருக்கு நன்றி கூறினார்.

முற்காலத்தில்  உயர் குடிப்பெண்கள் மட்டுமே முட்டியை மறைத்து உடை அணியும் அதிகாரம் பெற்றிருந்தனர். சினிமாவில் கதாநாயகிகளும் முழங்காலை மறைத்து தான் உடை அணிவர்.  எனவே முட்டி தெரிவது ஆபாசம் என்பதால் எம் ஜி ஆரை ஆபத்பாந்தவனாக அஞ்சலி கருதினார். உடனே ரீடேக் எடுக்கப்பட்டது. கதாநாயகியின் நடை உடையில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்பதை எம் ஜி ஆர் விரும்பினார். நடிகை என்றாலும் அவளும் பெண் தானே? அவருக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? என்று எம் ஜி ஆர் கருதியதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறார் அஞ்சலிதேவி.

அவர் குணச்சித்திர நடிகை

பணம் படைத்தவன் படத்திற்காக ‘’கண் போன போக்கிலே கால் போகலாமா’’ என்ற பாட்டுக்கான படப்பிடிப்பு நடந்த போது அந்தப் பாட்டு ஒரு கிளப் டான்ஸ் என்பதால் சௌகார் ஜானகிக்கு கால்கள் தெரியும்படியான குட்டை பாவாடை தரப்பட்டது. செட்டுக்கு வந்த எம் ஜி ஆர் சௌகார் ஜானகியின் உடையை பார்த்துவிட்டு காஸ்டியூமரை அழைத்தார். ‘’அவர் கவர்ச்சி நடிகை அல்ல. குணச்சித்திர நடிகை. அவருக்கு பெண் குழந்தைகள் உண்டு. இந்த டிரஸ் வேண்டாம் உடம்பை மூடியிருக்கும்  உடை கொடுங்கள்’’ என்றார். பின்பு கணுக்கால் வரை தொங்கும் நீண்ட பாவாடையும் மேல் சட்டையும் அணிந்து சௌகார் ஜானகி நடித்தார். பாட்டு இன்றும் எம் ஜி ஆரின் புகழுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

என் மகன் விவரம் தெரிந்தவன்

திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.

திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.

தம்பி மனைவியோடு டூயட்டா?

அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு  விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று  கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே  மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார். [எஸ் எஸ் ஆரோடு ஒரு மோதிரமோ மாலையோ கூட மாற்றிக்கொள்ளாமல் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த விஜயகுமாரி அவர் தன் சினிமா வாய்ப்புகளை கெடுப்பதைக் கண்டு மனம் வெதும்பி பிரிந்துவிட்டார். பின்பு பராசக்தி படத்தை தயாரித்த பெருமாள் முதலியாரை முறையாகத் திருமணம் செய்துகொண்டார்]

வெளியூர்களில் நடிகையர்களுக்கு பாதுகாப்பு

நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.

சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

காஷ்மீரில்

எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே  இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.

மைசூரில் 

கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

எம்.ஜி.ஆர்

ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து  வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட்  நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.

ஜப்பானில் 

வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.

யாராக இருந்தாலும் கண்டித்தார்

நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார். 

நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

ஆயிரம் ரூபாய் பந்தயம்

ஒரு பட தயாரிப்பு நிறுவனம் எம்.ஜி.ஆரை, தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது மூத்த தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் ஒரு தகவலை தெரிவித்தார். ‘இந்த நிறுவனம் அழகான சாகசமான பெண்களைக் காட்டி கதாநாயக நடிகர்களைக் கவிழ்த்துவிடும். உங்களையும் கவிழ்த்துவிட திட்டமிடுவார்கள்’ என்றார். அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர், ‘என்னை யாரும் அப்படிக் கவிழ்க்க முடியாது. எவ்வளவு பந்தயம்’ என்றார். முக்தாவும் ‘ஆயிரம் ரூபாய்’ என்றார். இது நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு மேடையில் முக்தா இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘எம்.ஜி.ஆர் மிகுந்த கட்டுப்பாடு உடையவர் அவரை யாரும் கவிழ்க்க முடியாது’ என்றார். எம்.ஜி.ஆர் உடனே அவரை ஆழமாக பார்த்தார். முக்தா, ‘என்னண்ணே’ என்றார். ‘அந்த ஆயிரம் ரூபாய் எங்கே’ என்றார் எம்.ஜி.ஆர். கூட்டம் வெடித்துச் சிரித்தது. 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109022-mgr-was-in-support-for-his-fellow-women-actors-professionally-and-personally-mgr-series-episode-25.html

Link to comment
Share on other sites

குலேபகாவலி முதல் ஆசைமுகம் வரை... முதியவர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தப் படங்கள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-26

 

எம்.ஜி.ஆர்

 

முதியவர் வேடத்தில் எம்.ஜி.ஆர்

 

நாற்பது வயதுக்கு மேல் கதாநாயகன் வாய்ப்புப் பெற்ற எம்.ஜி.ஆர் புகழ் அடைய தொடங்கிய நாள் முதலே முதியவர் என்று அவருக்கு வேண்டாதவர்களால் அழைக்கப்பட்டார். இதனால் இயற்கையை மீறி அவர் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வயோதிகத்தின் சாயல் தெரியாமல் அவர் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. முகத்தில் சுருக்கம் இல்லாமலும் புறங்கையில் நரம்பு தெரியாமலும் அவர் தன் தோற்றத்தைப் பாதுகாத்து வந்தார்.

நடிப்பு என்றால் என்ன?

ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரிடம் ஒரு நிருபர் ‘நீங்கள் நூறு வயது வரை வாழுங்கள் ஆனால் அதுவரை இப்படித்தான் இளைஞராக நடிப்பீர்களா? உங்கள் வயதுக்கேற்ற கதாபத்திரங்களை ஏற்று நடித்தால் என்ன?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ஒரு கடை இலாபமாக நடக்கும்போது யாராவது வியாபாரத்தை நிறுத்துவார்களா என்றார். தன் படம் வசூலை அள்ளிக்கொட்டும்போது தான் ஏன் இளைஞனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர் கூற விரும்பிய கருத்து. மேலும் அவர் நடிப்பு என்றால் என்ன? இருபது வயதுக்காரர் 80 வயது முதியவராக நடிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அது சிறப்பான நடிப்பு என்றால் அதைப்போல நான் இருபது வயது இளைஞனை போல நடிப்பதும் சிறப்பான நடிப்பு தானே  என்று அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூறினார். 

நடிப்பில் வயது வித்தியாசம் இருப்பது குறித்து விளக்க அப்போது மேலும் ஓர் உதாரணத்தையும் எடுத்துரைத்தார். நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் தன் முதிர்ந்த வயதில் மனோகரா நாடகத்தில் நடிக்கும்போது தர்பாருக்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரை இழுத்து வரும் காட்சியில் இந்தப் பதினாறு வயது பாலகனை என்று தன்னைக் குறிப்பிட்டபடி ஒரு நீண்ட வசனம் பேசுவார். அப்போது அந்நாடகத்தைப் பார்த்த அனைவருக்கும் அவர் வயது 60 என்பது தெரியும். இருந்தும் அந்நாடகம் வெற்றி பெற்றது. ஏன் தெரியுமா? பார்ப்போர் நடிப்பைப் பார்த்து ரசிக்கிறார்களே தவிர நடிப்பவரின் வயதைக் கருதுவதில்லை. அதனால்தான் இன்னும் என் படங்கள் நல்ல வசூலைப் பெறுகின்றன என்றார்.

முதியவர் வேடம் ஏன்?

எம்.ஜி.ஆர்

தமிழ் பாரம்பர்யத்தில் வள்ளி திருமணம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. அதில் முருகனாக நடிப்பவர் வேலன் [இளைஞன்] விருத்தன் [முதியவர்] என்று இரு வேடம் போடுவார். யானையைக் கண்டு அஞ்சி ஓடும் வள்ளியை முதியவர் வேடத்தில் வந்து முருகன் காப்பாற்றி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி சத்தியம் வாங்குவார். எனவே, மாறு வேடங்களில் முதியவர் வேடம் என்பது தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்து ஏற்றுக்கொண்ட ஒரு வேடம் ஆகும். முதியவராக வரும்போது ரசிகர்களிடையே ஒரு ‘சிம்பதி’ கிடைக்கும். எனவே எம்.ஜி.ஆர் பாரம்பர்ய வெற்றி ஃபார்முலாவான முதியவர் வேடத்தை தன் பல படங்களில் பயன்படுத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் தன் படங்களில் ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்ததால் பிற வேடங்களில் நடிக்க வாய்ப்பில்லை. எனவே அவர் போலீஸாக வரும்போதும் அவர்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு தப்பிக்கும் போதும் கதாநாயகியை வேற்றுருவில் வந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் மாறு வேடங்களைத் தெரிவு செய்தார். முதியவர் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் வெவ்வேறு வகையான முதியவர் வேடங்கள். அவற்றை இப்போது விரிவாகக் காண்போம்.

வேடப் பொருத்தம்

முதியவர் வேடத்துக்குரிய நரைத்த தலை, தளர்ந்த உடல், சுருங்கிய கண்கள், ஒளியிழந்த முகம், நடுங்கும் குரல் என மேக்கப், காஸ்டியூம், நடிப்பு என அனைத்திலும் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்தியிருப்பார். குலேபகாவலி, மலைக்கள்ளன், மகாதேவி, பாக்தாத் திருடன், படகோட்டி, தேடி வந்த மாப்பிள்ளை போன்ற சில படங்களில் முதியவராக மாறு வேடமிட்டு வந்து சில முக்கியக் காட்சிகளில் நடித்திருப்பார்.

குலேபகாவலியில் முதியவர் வேடத்தில் வந்து லக்பேஷ்வாக நடிக்கும் டி.ஆர் ராஜகுமாரியை பகடையில் ஜெயிக்கும் ரகசியத்தை அறிந்து அவரை வெல்வார். மலைக்கள்ளன் படத்தில் முதியவராக வந்து பி.பானுமதியைக் காப்பாற்றுவார் பின்னர் அவரை ரகசியமாகச் சந்திக்க இரவில் வந்த போது கூட முதியவரைப் போல நடுங்கும் குரலில் பேசி தன்னை வெளிப்படுத்துவார்

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் சாக்ரட்டீஸ் போன்ற தோற்றத்தில் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவர் பாடிய மனுசன் பொறக்கும்போது பொறந்த புத்தி போகபோக மாறுது என்ற பாடலில் வரும் ‘கணக்குத் தெரியாம சிலது கம்பையும் கொம்பையும் ஆட்டுது. ஆனால் காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக் காட்டுது’ என்ற வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தவை ஆகும். இந்தப் பாட்டு வரிகள் சிலர் தம் செல்வாக்கு நிரந்தரமானது என நினைத்து ஆடும் ஆட்டங்களின் நிலையாமையை விளக்குவதால் அவருக்கு மிகவும் பிடித்தன. அவர் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடம் தெரியாமல் போனதை நேரில் கண்டவர் என்பதால் நிலையாமை தத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார். இந்தப்படம் திமுகவின் முதல் வெற்றி வாய்ப்புக்கு வழிகோலிய படமும் ஆகும்

எம்.ஜி.ஆர்

உதய சூரியன் என்ற பெயரில் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்த எம்.ஜி.ஆர் திமுகவின் முதல் தேர்தல் பிரவேசத்தை முன்னிட்டு சாக்ரட்டீஸ் முதியவர் வேடத்தில் வந்து பாட்டிலேயே பகுத்தறிவு பிரசாரமும் செய்தார். ‘உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் -- அதை ஒப்புக்கொள்ளும் வீரருக்கு முன்னால --  நாம் கத்தி என்ன கதறி என்ன -- ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா’ என்று பாடுவார்.

பாக்தாத் திருடனில் வைஜயந்திமாலாவை ஏலத்தில் வாங்கும் அருவருப்பான முதியவராக வருவார். அவருக்குக் கூரிய ஒட்டு மூக்கும் பெரிய தொந்தியும் இருப்பதால ஆள் அடையாளமே தெரியாது. அவரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் வைஜெயந்திமாலாவின் காலில் சுருக்குப் போட்டு ‘’சூத்திரக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு – உன் பாச்சா ஒன்னும் பலிக்காது இங்கே செல்லு ‘’ என்று அவரை மீண்டும் குகைக்குள்ளே அனுப்பிவிடுவார். இந்த வேஷத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

படகோட்டியில் இரண்டு குப்பத்தையும் ஒற்றுமைப்படுத்த முதியவர் வேஷம் போட்டிருப்பார். சரோஜாதேவியைக் குழந்தே குழந்தே என்று கூப்பிடுவார். அதற்கு அவர் ‘’சதா குழந்தே குழந்தேன்னுட்டு விலைக்கு வாங்குன சனியன் மாதிரி’’ என்று திட்டுவார். ‘’நானொரு குழந்தை நீயொரு குழந்தை – ஒருவர் மடியிலே ஒருவரடி’’ என்ற பாட்டு இந்தத் தாத்தா வேடத்துடன் தொடங்கும் பிறகு அந்த வேடம் கலைந்து மாணிக்கமாக காட்சியளிப்பார்.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவுக்கு இங்கிலீஷ் மியூசிக் கற்றுத்தரும் வாத்தியாராக வருவார். இவரது தோற்றம் தலையில் தொப்பியும் செம்பட்டை தாடியும் வட்டக் கறுப்புக் கண்ணாடியும் பார்க்க சற்று அருவருப்பாக இருக்கும். ஆனால் ஆறுமுகம் இது யாரு முகம் – தாடியை வச்சா வேறு முகம் --  தாடியை எடுத்தா தங்க முகம்’’ என்ற பாட்டு தாத்தா வேடத்துடன் தொடங்கும்.

எம்.ஜி.ஆர்

தாய் சொல்லை தட்டாதே படத்தில் சந்தையில் சுற்றித் திரியும் ஒரு நாடோடி முதியவராக மாறு வேடம் போட்டு வழக்கம் போல குற்றவாளிகளைப் பிடிக்க வருவார். அதில் வேடம் போட்டவர் எம்.ஜி.ஆர் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். உச்சியில் வழுக்கை நரைத்த முடி மீசை தாடி, கிழிந்து ஒட்டுப் போட்ட பழைய நைந்த கோட், தோளில் ஒரு பச்சைக்கிளி கை மடக்கில் உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு, கக்கத்தில் இடுக்கிய ஒரு குடை, கையில் ஒரு தடியோடு தளர்ந்து தடுமாறும் நடை, சில சமயம் அந்தக் குரங்கு சங்கிலியைப் பிடித்த படியும் நடப்பார், கூடவே அந்தக் குரங்கு ஓடி வரும். சந்தையில் பிக்பாக்கெட் அடித்தல்,  பெண்களை, ஃபாலோ செய்தல், அவர்களோடு நடந்து வந்தபடி விசிலடித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாக்கை துருத்தி முறைத்துப் பார்த்து குற்றவாளிகளை அதட்டுவார். கூடவே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைப் படைத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே’’ என்று பாட்டும் பாடுவதாக அக்காட்சி அமைந்திருக்கும். காவல் நிலையத்துக்கு வந்து வேடத்தைக் கலைக்கும்போது எம்.ஜி.ஆர் என்பது தெரிய வரும். முதல் முறை இப்படம் பார்ப்போருக்கு எம்.ஜி.ஆர் என்று தெரியாது. 

ஆசைமுகம் படம் தமிழில் அந்த முதல் ப்லாஸ்டிக் சர்ஜரி பற்றிய படம் ஆகும். எம்.ஜி.ஆர் வஜ்ரவேல் என்ற ராம்தாஸ் தன்னைப் போல முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து தன் வீட்டில் புகுந்துவிட்டதை அறிந்து தன் அப்பாவின் சித்தப்பாவைப் போல ஒரு கோட் சூட் போட்ட வெளிநாட்டு முதியவர் போல மாறு வேடத்துடன் வந்து தன் வீட்டிலேயே தங்குவார். அப்போது ராம்தாசை கேலி செய்து பாடுவதாக ஒரு பாடலை எம்.ஜி.ஆர் பாடுவார் அதுதான் 'எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு' என்ற பாடல். இப்பாடல் காட்சியில் நாகேஷும் சரோஜாதேவியும் மாறு வேடமிட்ட எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவார்கள் ராம்தாசுக்கு இது கோபத்தை ஏற்படுத்தும். இந்த வேடத்தில் எம்.ஜி.ஆர் ஒரு காலை சாய்த்து சாய்த்து ஒரு கைத்தடியை ஆதரவாகக் கொண்டு நடப்பார். இதில் தலைமுடி கறுப்பும் வெளுப்புமாகக் காணப்படும் தாடி இருக்கும் கண்ணில் கூலிங்க் கிளாஸ் போட்டிருப்பார். ஒரு ஸ்டைலான கோட் சூட் போட்ட தாத்தாவாக வெளிநாட்டிலிருந்து வந்தவராகத் தோன்றுவார். இந்த மேக்கப் காஸ்டியூம் அனைத்தும் நவீன காலத்து தாத்தா போல இருக்கும்.

 

எம்.ஜி.ஆர் முதியவர் வேடத்தில் தோற்றம் உடை, குரல் மற்றும் வசனம் நடிப்பு முக பாவனை கை கால் அசைவு என அனைத்திலும் கவனம் செலுத்தியதோடு அந்த வேடத்திலேயே பல படங்களில் சமூக சிந்தனையுள்ள பாட்டும் பாடியிருக்கிறார். மற்ற மாறு வேடங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109279-mgr-as-an-old-man-in-movies-mgr-series-episode-26.html

Link to comment
Share on other sites

செடிக்குச்சி, கோபுடா, சிலம்பு... எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-27

 
 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்

 

’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடமிருந்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் அதைவிட ஒரு படி மேலான மனித நேயத்துடன் தீயவன் அழிக்கப்படாமல் அவனது தீய பண்புகள் மட்டும் அழிக்கப்பட்டு அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆவான். தீயவன் திருத்தப்படுவான், மனமாற்றம் அடைவான், இந்நோக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது.

வாத்தியார் எம்.ஜி.ஆர்

ஆங்கிலேயர் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, வாத்தியார் என்ற சொல் குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்று வீர விளையாட்டுகளைக் கற்றுத் தரும் வாத்தியாரையே குறித்தது. இதற்கென்று ஊர்தோறும் திடல்கள் இருந்தன. இங்கு வந்து ஊர் இளைஞர்கள் வீரப் பயிற்சி பெறுவர். எம்.ஜி.ஆரும் இது போன்ற பயிற்சிகளைக் கோவையிலும் சென்னையிலும் பெற்றிருக்கிறார். கோவையில் சாண்டோ சின்னப்பா தேவர் நம்பியார் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் இந்த வீர பயிற்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் எம்.ஜி.ஆரே முதலிடத்தில் இருப்பார். அங்கு சின்னப்பா தேவர் மாருதி தேகப் பயிற்சி சாலை என்று ஓர் உடற்பயிற்சி கூடம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும் சென்னையில் வட பழனியில் ஓர் இடம் வாங்கி அதில் ஸ்டண்ட் நடிகர்களைப் பயிற்சி பெறும்படி ஊக்கமளித்தார். இன்று அந்த இடம் ஜானகி ராமச்சந்திரா கலாலயம் என்ற பெயரில் ஜே.ஆர்.கே பள்ளிக்கூடமாக உள்ளது.

எம்.ஜி.ஆர்

உளவியல் கருத்து

ஏழை ரசிகர் தன் கொடுமைக்கார முதலாளியை அடித்து உதைக்க வேண்டும் என்ற உள்மன ஆசை எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை காண்பதன் மூலம் நிறைவேறுகிறது. உளவியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் ஒருவர் கனவில் எலி, பூனையைத் துரத்தினால் அவர் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபட அவர் உள்மனம் விரும்புகிறது. எனவே, அவர் கனவில் வலிமை குறைந்த எலி, வலிமையான பூனையைத் துரத்துகிறது. இது அவரது ஒடுக்கப்பட்ட ஆசையின் [oppressed wishes] வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஆசை இருப்பவர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது மன அமைதி பெறுகிறார். ஒடுக்குதலிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுகிறார். இதை [vicarious suffering] என்பர். அதாவது படம் பார்ப்பவர் தன் துக்கத்தையும் ஆற்றாமையையும் படத்தில் வரும் நடிகர்களின் இன்ப துன்பங்களோடு இணைத்து பார்த்து இன்பமோ துன்பமோ அடைவதாகும். 

ரசிகர் வகைகள்

சண்டைக் காட்சிகளை ரசிப்பவரில் இரண்டு வகையினர் உண்டு. ஒருவர் நேரடியாக மனதளவில் சண்டைப் போட்டு மகிழ்வார். இன்னொருவர் அவ்வாறு சண்டையிடாமல் முதல் பிரிவினரை வேடிக்கை பார்த்து மகிழ்வார். முதல் பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவர் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்குள் மனதளவில் கூடு விட்டு கூடு பாய்கிறார். அவரே கெட்டவனை அடித்து உதைக்கும் உணர்வைப் பெற்று அமைதியடைகிறார். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நமக்காகவே எம்.ஜி.ஆர் கெட்டவனை அடித்துத் திருத்துகிறார் என்று நம்பி அமைதி பெறுகின்றனர். இவர்கள் எந்தச் சமூக மாற்றத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது ஒருவர் தானாக வந்து நல்லது செய்ய வேண்டும். அதன் பலனை மட்டும் இவர்கள் அடைய வேண்டும். எம்.ஜி.ஆர் படம் பார்த்துவிட்டு வரும் கூட்டத்தினரில் முதல் வகையினர் வழியில் இருக்கும் தட்டி போர்டுகளை உதைத்து கீழே தட்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்த படி வருவர். இந்த இரண்டாவது பிரிவினர் அவர்களை ஊக்கப்படுத்தி ரசித்துச் சிரித்தபடி நடந்துவருவர். 

சண்டையின் பாரம்பர்யம்

ராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் என நம் பாரம்பர்ய நூல்கள் அனைத்தும் இறுதியில் பெரிய சண்டையின் மூலமாகவே நீதியை,  நன்மையை நிலைநாட்டுகின்றன. அதன் வழியில் திரைப்படத்திலும் பெண், நிலம், பொருள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இடையில் சிறு சிறு சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் இது போன்ற சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆக மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு தன் தேவை அதிகரிக்கும்போது போட்டிகளும் பொறாமையும் பேராசையும் உருவாகி சண்டைகள் வருகின்றன. இது நபர் அளவில் வந்தால் வாய்ச்சண்டை என்றால் தகராறு என்றும் கைகலப்பு ஏற்பட்டால் சண்டை என்றும் நாடு அல்லது சமூகம் என்றளவில் ஏற்படும்போது அதைப் போர் என்றும் அழைக்கிறோம்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சி அமைப்பு

தர்ம யுத்த முறைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படும். 
1.எம்.ஜி.ஆர் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவதோ தன் பலத்தைக் காட்டுவதற்காக யாரையும் முதலில் அடிப்பதோ கிடையாது. 
2. கெட்டவனின் தீய செயலைத் தடுக்கவே அவர் அவனைத்  தாக்குகிறார். 
3. கெட்டவன் தன்னைத் தாக்க வரும்போது தற்காப்புக்காக அவனை அவர் எதிர்க்கிறார். 
4. ஏழை, மூதியவர் பெண்கள் குழந்தைகள் என உடல் பலமற்றவர் , கெட்டவனை எதிர்க்க வலுவற்றவர் அவனின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை அவனிடமிருந்து மீட்க அவனுடன் சண்டைப் போடுகிறார். 

சண்டைப் போடும்போது

எம்.ஜி.ஆர் சண்டையிடும் போது வில்லனை முதுகில் குத்துவதோ அல்லது அவன் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குவதோ கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரின் குத்துவாளை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கிக்கொண்டு சண்டை செய்யும் போது எம்.ஜி.ஆர் அதை நம்பியாரிடமிருந்து தன் நீண்ட வாளால் தட்டிப் பறித்துவிட்டு ‘நீ உன் குத்துவாளை எடுத்துக்கொள் இது என்னுடையது’ என்பார். அதன் பின்பு அச்சண்டை ஒரு பெரிய வாள் ஒரு குத்து வாள் எனச் சம பலத்துடன் தொடரும். படகில் மனோகருடன் எம்.ஜி.ஆர் சண்டையிடும்போது நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை மனோகரின் முதுகில் விடுவார். அப்போது முதுகில் தாக்குகிறாயே நீயெல்லாம் ஓர் ஆண்மகனா என்று நம்பியாரைக் கண்டிப்பார். 

வில்லிகளுடன் சண்டை

எம்.ஜி.ஆர் படங்களில் பெண்கள் வில்லன் கூட்டத்திலிருந்து தொல்லை கொடுத்தாலும் அவர்களுடன் அவர் நேரடியாக மோதுவது இல்லை. மகாபாரதத்தில் சிகண்டி பீஷ்மர் கதையின் சாராம்சமே இதுதானே. பெண்ணை அடிப்பது தவறு என்பதால் நவரத்தினம் படத்தில் குமாரி பத்மினி எம்.ஜி.ஆருடன் மோதும் போது அவர் விலகிக் கொள்வார் குமாரி பத்மினி பொத் பொத்தென்று கீழே விழுந்து அடிபட்டு சோர்வடைவார். பிறகு எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப்போட்டுவிடுவார். அது போல இதயக்கனியில் மெயின் வில்லி ராஜசுலோசனாவிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க பெண் போலீஸ்களைப் பயன்படுத்துவார். எம்.ஜி.ஆர் வில்லியின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோத சிதம்பரம் அருகே உள்ள ஒரு மண் திட்டையில் கப்பல் போல செட் அமைத்து சண்டைக் காட்சிகளை எடுத்தார். அந்த மேடு இன்றும் எம்.ஜி.ஆர் மேடு என்று அழைக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர்

சண்டைக்குப் பின்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் வில்லன் நடிகருடன் சண்டை முடிந்த பிறகு ஓரிரு படங்கள் தவிர மற்றவற்றில் அவர் அவனைக் கொல்வது கிடையாது. அவனை ஊனப்படுத்துவதும் இல்லை. அவன் செயல்பாட்டை மட்டும் முடக்குவார். பல படங்களில் கட்டிப்போட்டு விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுப்பார் அல்லது அந்த நேரத்தில் போலீஸே வந்துவிடும். புத்திமதி கூறுவதாகவும் வில்லன் திருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் சண்டையின் முடிவு அமையும். பல படங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லுக்கேற்ப வில்லன் அவன் செய்த தீய செயல்களுக்கு அவனே பலியாகிவிடுவான்.

வில்லனும் இதர ஸ்டண்ட் நடிகர்களும் 

எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் [88] வில்லனாக நடித்தவர் அசோகன். ஆனால், எம்.ஜி.ஆர் என்றாலே அவரது பரம விரோதி என்று கருதுவது நம்பியாரை மட்டுமே. பி. எஸ் வீரப்பா மஹாதேவி சக்கரவர்த்தி திருமகள் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இவர்களுடன் துணை வில்லனாக ஆர்.எஸ். மனோகர் நடிப்பதுண்டு. இந்த வில்லன்களின் அடியாட்களாக எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் , ராமகிருஷ்ணன், நடராஜன், காமாட்சி, தர்மலிங்கம் போன்றோர் இடம்பெறுவர். இதயக்கனி, அடிமைப்பெண் போன்ற படங்களில் ஜஸ்டினுடன் தனிச் சண்டையும் இருந்தது. ஆனால், அவர் முக்கிய வில்லன் கிடையாது. புத்தூர் நடராஜன் சியாம் சுந்தர் ஆர்.என்.நம்பியார் சங்கர் போன்றோர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பர்.

வாள் சண்டை

வாள் சண்டையில் எம்.ஜி.ஆர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த வாள் வித்தையை மேடை நாடகங்களில் கூட நடித்துக்காட்டினார். பி.யு.சின்னப்பாவைப் போல வாள் சுழற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று அசுரப் பயிற்சி பெற்றார். அவர் நாடக மன்றத்தின் முதல் நாடகமான இடிந்த கோபுரம் நாடக மேடையில் குண்டுக் கருப்பையாவுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. வாள் மட்டும் அல்லாது குறுவாள் அல்லது குத்துவாள். பிச்சுவா போன்றவற்றையும் வைத்து சண்டைப் போடுவதையும் நாம் வாள் சண்டை என்ற பிரிவிலேயே சேர்த்துவிடுவோம்
எம்.ஜி.ஆருக்குச் சமமாக வாள் சண்டைப் போடுவதில் நம்பியார் கெட்டிக்காரர். அரச கட்டளையில் சரோஜா தேவியின் காதல் பரிசுக்காக இவர்களின் சண்டை சுவாரஸ்யமாக இருக்கும். வசனமும் இடம்பெறும். முதலில் எம்.ஜி.ஆர் சிரித்தபடி சண்டைப் போடுவார். தன் கையில் இருந்த மாலையை நம்பியார் பறித்துவிடவும் அதைத் திரும்பப் பெறுவதற்காக பின்பு கோபமாகச் சண்டை போடுவார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும் தெரியுமா என்று நம்பியார் கேட்க மதம் கொண்ட யானையிடம் தோற்று ஓடும் என்று எம்.ஜி.ஆர் பதிலளிக்க ஒரு விவாதத்துடன் தொடங்கிய பிரச்னை இறுதியில் வாள் சண்டையில் முடியும். அதன் பின்பு கடற்கரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் ’’இரு பூங்கொடி சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்பியாருடன் சரிவுப் பாறையிலும் கடல் தண்ணீரிலும் வாள் சண்டை இடுவது இன்றும் ரசிக்கப்படுகின்றது. அதனால்தான் இன்றும் இப்படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச விழாவில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் மகாதேவி, அரசக் கட்டளை போன்ற படங்களில் பி.எஸ். வீரப்பாவுடன் போடும் வாள் சண்டைகளும் சிறப்பாக இருக்கும். 

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் இரண்டு கையாலும் வாள் சுழற்றத் தெரிந்தவர். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கையாலும் வாள் சுழற்றி சண்டைப் போட்டார். மருத நாட்டு இளவரசி முதலான சில படங்களில் எம்.ஜி.ஆர் பத்துப் பேர் வந்து சுற்றி நின்று சண்டைப் போட்டாலும் தன் கை வாளை கொண்டு சுழன்று சுழன்று உட்கார்ந்து எழுந்து குதித்து தாவிச் சண்டைப் போடும் காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதைப் போல கம்புச் சண்டையும் பல பேருடன் மோதுவதாக அமையும்

எம்.ஜி.ஆர் மணிமாறன், கரிகாலன் என இரண்டு வேடங்களில் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் வாள் சண்டையில் ஒருவர் வலது கை பயிற்சி உள்ளவர்; அடுத்தவர் இடது கை பயிற்சி உள்ளவர். இருவரும் மோதும் காட்சியில் டூப் போட்டு எடுத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் முகம் தெரியும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு ஏற்ப இரண்டு கைகளிலும் வாளை மாற்றி அனாயசமாக சண்டையிடுவார். இதே படத்தில் பிச்சுவா சண்டை ஷூட்டிங் நடக்கும்போது வந்த தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் இவர் நிஜ பிச்சுவா வைத்து சண்டைப் போடுவதை பார்த்து வியந்தனர். 

ஒரு படத்தில் நம்பியார் வீசிய கத்தி எம்.ஜி.ஆரின் கண் புருவத்தை வெட்டிவிட்டது. அதன் தழும்பு கடைசி வரை மாறவில்லை. புருவம் வரையப்படாத அவர் படங்களில் இந்தத் தழும்பைக் காணலாம். எம்.ஜி.ஆர் வால் வீசிய வேகத்தில் எதிரே சண்டையிட்ட ஸ்டன்ட்  நடிகரின் வாள் நுனி உடைந்து பறந்தது. அதை எம்.ஜி.ஆர் தன் கையால் லாகவமாகப் பிடித்து ‘இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள்’ என்றார்.

மீனவநண்பன் படத்தில் வாள் சண்டையில் வெற்றி பெற்றவருக்கே தன் மகள் லதா சொந்தம் என்று வி.ஆர்.ராமசாமி சொன்னதால் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைப் போடுவார்கள். இது காலத்துக்கும் கதைக்கும் பொருந்தவில்லை என்றாலும் சண்டை ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெல்பாட்டம்ஸ் போட்டு நடித்திருப்பார். மற்ற காட்சிகளில் கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கி கட்டி வருவார். இந்தப் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு மூச்சு வாங்குவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதறகாக அவர் ஒரு பக்கமாகப் போய் சில நிமிடங்கள் யாருடனும் பேசாமல் நிற்பார் என்று ஸ்ரீதர் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒரு கையில் பெரிய வாள் மறு கையில் சிறு குத்துவாள் வைத்து சண்டைப் போடுவதாகவும் காட்சிகள் உண்டு. அடிமைப்பெண் படத்தில் அப்பா எம்.ஜி.ஆர் சூரக்காட்டின் தலைவனான அசோகனுடன் வலை கட்டி அதில் சண்டையிடும் காட்சியில் அசோகனுக்கு ஒரு காள் ஊனம் என்பதால் எம்.ஜி.ஆரும் ஒரு காலை மடித்துக்கட்டி அவருடன் மோதுவார். இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி. எதிரி தனக்குச் சம பலம் உள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர நம்மை விட குறைந்த பலம் உள்ளவனுடன் மோதுவது ஆண்மை ஆகாது அது வீரம் எனப் போற்றப்பட மாட்டாது என்பதால் சவால் விட்டு ஒற்றைக் காலுடன் மோதினார். இதில் அசோகனுக்கு டூப் போட்டவர் சங்கர். 

எம்.ஜி.ஆர் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் நாள் நெருங்கிவிட்டதால் அவசரம் அவசரமாக மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது. அதில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சியில் நடித்த கடைசி ஆள் இந்த சங்கர். இவர் நம்பியாருக்கு டூப் போட்டு இருந்தார்.

சண்டைக் கருவிகள்

 வாள் சண்டை என்பது அரச குடும்பம் மற்றும் படை வீரர்களுக்கு உரியது. அது தவிர சாமன்ய மக்களுக்குத் தெரிந்த கிராமங்களில் அதிகமாகப் புழங்குகின்ற சிலம்பம், சுருள் வாள், செடிக் குச்சி, மான் கொம்பு போன்ற கருவிகளைக் கொண்டும் சண்டைக் காட்சிகளை எம்.ஜி.ஆர் தன் படங்களில் வைத்தார். 

சிலம்பு

எம்.ஜி.ஆர்

சிலம்பாட்டம் பல படங்களில் இடம்பெற்றாலும் பெரிய இடத்துப் பெண் படத்தில் வரும் சிலம்புச் சண்டை மறக்க முடியாதது. மயக்க மருந்து கலந்த சோடாவைக் குடித்ததால் எம்.ஜி.ஆர் போட்டியில் தோற்றுப் போய் ஊரை விட்டே வெளியேறிவிடுவார். தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணையும் இப்போட்டியின் தோல்வியால் இழந்துவிடுவார். ஆனால், ரிக்‌ஷாக்காரன் படத்தில் சுற்றி நின்று தன்னைத் தாக்கும் மூன்று பேருடன் ரிக்‌ஷா சீட்டில் உட்கார்ந்தபடியே கையில் சிலம்பு வைத்து எம்.ஜி.ஆர் சண்டைப் போட்டு மஞ்சுளாவைக் காப்பற்றுவார். இக்காட்சியில் சர்க்கஸில் வருவது போல ரிக்‌ஷாவை வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வரும்படி அமைத்திருந்தனர். தாயைக் காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர் கம்பு சுற்றி வெற்றி பெற்றதைப் பாராட்டும் எம்.ஆர்.ராதா தன் கந்த விலாஸ் டீக்கடையில் வந்து ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வார்.

எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டல் பாட்டில் எம்.ஜி.ஆர் சவுக்கை சுழற்றியபடி படிக்கட்டுகளில் ஓடி ஆடிப் பாடும் காட்சிகளில் அவர் சிலம்பு சுற்றுவதில் பின்பற்றும் காலடி வைப்பு முறைகளையே பயன்படுத்தியிருப்பார். 

செடிக்குச்சி

செடிக்குச்சி என்பது சிலம்புக் குச்சியைப் போலவே அளவில் சிறியது. எம்.ஜி.ஆர் ஒருவருக்கே திரையுலகில் இந்தச் செடிக்குச்சி சுற்றத் தெரியும். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய பைப்புகளை வைத்து செடிக்குச்சி விளையாட்டை நிகழ்த்துவார். திரையரங்கில் இந்தக் காட்சியை நம் ரசிகர்கள் ரசித்தது போல அமெரிக்க மாணவர்களும் ரசித்தனர். 

கோபுடா

கோபுடா என்பது கையில் மாட்டும் ஒரு முள் கவசம் அகும். அரசிளங்குமரி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர கருதிய எம்.ஜி.ஆர் இந்தக் கோபுடா சண்டையை வைத்தார். இதில் கெட்டிக்காரரான சின்னப்பா தேவரை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அரை மணி நேரத்தில் சமாதானமாகி செட்டுக்கு அழைத்து வந்தார். ஆக்ரோஷமான இந்தக் கோபுடா சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மான் கொம்பு

மான் கொம்பு சண்டையை உழைக்கும் கரங்கள் படத்தில் சங்கர் அருமையாக வடிவமைத்திருப்பார். கால் சவடு [ஸ்டெப்] வைத்து எம்.ஜி.ஆர் இந்தச் சண்டையைப் போடும்போது ஒரு நேர்த்தியான கலை வடிவத்தைக் காணலாம். 

மல்யுத்தம் 

எம்.ஜி.ஆர் பளு தூக்கும் போட்டியில் நம்பியார் சின்னப்பா தேவர் தோற்கடித்து விடுவார். மல் யுத்தம் குஸ்தி போன்றவற்றையும் முறைப்படி கற்றிருந்தார். காஞ்சித் தலைவன் படத்தில் அவர் மல்யுத்தத்தில் வல்லவனான மாமல்லன் நரசிம்ம பல்லவன் வேடத்தில் நடித்ததால் ஒரு தனி மல்யுத்தக் காட்சி வைக்க திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் காவல் துறையில் பணியாற்றிய பஜ்ஜையா என்பவர் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தார். நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டிருந்தார். அவரை அழைத்து காட்சியை விளக்கி நடிக்கவைத்தனர். எம்.ஜி.ஆரை அவர் சரியாக மதிப்பிடாததால் சொன்ன படி கேட்காமல் நடித்துவந்தார். மறுநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் அவரை தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டார். பஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆர் காலைப் பிடித்து அழுதுவிட்டார். இதுவரை யாரும் அவரை அப்படித் தூக்கி எறிந்ததில்லை அது ஒரு மல்யுத்த வீரனுக்குப் பெருத்த அவமானம். எம்.ஜி.ஆருக்கு மல்யுத்தம் தெரியும் என்பதை நம்பாமல் அலட்சியமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார். 

காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஆர்.எஸ்.மனோகரும் மல்யுத்தம் செய்வர். ஆர்.எஸ்.மனோகர் மல்யுத்தம் கற்றவர். பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் மல்யுத்தக் காட்சிகள் இடம்பெறும். அன்பே வா  படத்தில் வரும் சிட்டிங் புல் கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது ஃபைட் சீனில் நடிக்க ஆசை. இவர் அன்பே வா படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருடன் மோதினார். அவரையும் எம்.ஜி.ஆர் அப்படத்தில் தோளுக்கு மேலே தூக்கி வைத்திருந்து கீழே போடுவார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109508-stunt-techniques-used-by-mgr-mgr-series-episode-27.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-28

 
 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உதவிய சண்டைக் காட்சிகள் 

 
 

எம்.ஜி.ஆர் தன் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக சம வலிமையுள்ள வில்லன், அவனது அடியாட்களாக வரும்  ஸ்டன்ட் பார்ட்டி, சண்டைக் கருவிகள், சண்டையின் தீவிரத்தை அதிகரிக்கும் மழை, பாறை, மின்சாரம், பெண்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் சண்டைக்கு இடையே மாட்டிக்கொள்ளும் கதாநாயகி, குழந்தைகள் போன்ற எமோஷனல் விஷயங்கள் என ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமாக அமைப்பார். இவற்றுடன் புலி சிங்கம் பாம்பு போன்றவையும் இவரது சண்டைக் காட்சிகளில் இடம்பெறுவதுண்டு. 

குலேபகாவலியில் புலியோடு மோதும் சண்டை

1955ம் ஆண்டில் பொங்கல் அன்று கேவா கலரில் வெளிவந்து வெற்றி விழா கொண்டாடிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தொடர்ந்து ஜூலை 24இல் வெளிவந்த வெற்றிப் படம் குலேபகாவலி. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஆர்.ஆர் பிக்சர்சின் ராமண்ணா. இவர் டி.ஆர் ராஜகுமாரியின் தம்பி. இப்படத்தில் எம்.ஜி.ஆர் குலேபகாவலி என்ற மலரைத் தேடி வருவார். அந்த மலர்ச்செடிக்கு ஒரு புலி பாதுகாப்பாக இருக்கும். அந்த மலரைப் பெற எம்.ஜி.ஆர் புலியுடன் சண்டை போட்டுக் கொல்ல வேண்டும். அந்தக்காலத்தில் புலிக்குட்டி கோவிந்தன் என்பவர் புலி,பாம்பு,சிறுத்தை இவற்றை வளர்த்து படப்பிடிப்புக்குத் தருவார். அவரே சண்டைக்காட்சியில்  டூப்பாகவும் நடிப்பார். ஆறடி பள்ளம் வெட்டி அதற்குள் கூண்டு அமைத்து புலியை வெளியே வர விடாமல் வைத்து சண்டைக் காட்சியைப் படமெடுக்க திட்டமிட்டனர். 

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ஷூட்டிங்குக்கு வந்தார். வெளியே கிரேனில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இருந்தனர். கோவிந்தன், புலியைக் கூண்டை விட்டு வெளியே வா என்று அழைத்ததும் புலி விருட்டென்று வெளியே வந்து ஆறடி பள்ளத்தை தாவி மேலே ஸ்டுடியோவுக்குள் புகுந்து விட்டது. கோவிந்தன் ஐயோ ஐயோ என் புலி புலி என்று ஓடுகிறார். கிரேன் சட்டென்று மேலே போனது. அதனால் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் உயரே இருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் எங்கும் ஓடவில்லை, பதற்றப்படவில்லை. தன் கையில் துப்பாக்கியுடன் கேமராவின் ஸ்டாண்ட் அருகே புலியைக் குறி பார்த்தபடி நிற்கிறார். அந்த ராஜ உடைக்குள் எங்கே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தாரோ?. ஆனால், சமயம் வந்ததும் சட்டென்று துப்பாகியால் குறி பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டார். இதுதான் எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தி, துணிச்சல், நிதானம். பிறகு மறுநாள் முதல் ஒரு வாரம் வரை சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் படங்களில் சிங்கம்

வேட்டைக்காரன் படத்தில் சிங்கம் ஒரு கதாபாத்திரமாகவே வரும். ஒரு காட்சியில் சிங்கம் வலியுடன் படுத்திருக்கும். அப்போது எம்.ஜி.ஆர் அதன் காலில் குத்தியிருந்த முள்ளை எடுத்துவிடுவார். அது பிறிதொரு சமயம் நன்றிக்கடனுக்காக எம்.ஜி.ஆரின் மகனை சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றும். Androcles and the Lion  கதை நினைவுக்கு வருகிறதா..! 

ராமாவரம் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட  சிங்கம்

அடிமைப்பெண் படத்தின் சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர் இரண்டு சிங்கங்களை வாங்கிவந்தார். அதில் ராஜா என்ற ஆண் சிங்கத்தை மட்டும் சண்டைக்காகப் பழக்கினார். சிங்கத்தை வைத்துக்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றார். அதற்கு நல்ல சாப்பாடு போட்டார். சிங்கத்தை சர்க்கஸில் பார்த்துக்கொண்டவர், ’சர்க்கஸில் கூட நாங்க இப்படி சாப்பாடு போட்டதில்லை’ என்றார். அவ்வளவு கவனிப்பு.  தினமும் எம்.ஜி.ஆர் சிங்கத்திடம் போய் அதற்கு உணவளிப்பார்.

அடிமைப்பெண் ஷூட்டிங்கில் 

சிங்கத்துக்குச்  சண்டைக் காட்சியில் நடிக்க மயக்க மருந்து கொடுத்த போதும் அது உர் உர் என்று உறுமிக்கொண்டே இருந்தது அதனால செட்டில் இருந்தவர்கள் பயந்தபடியே இருந்தனர். முதல் நாள் சிங்கம் எம்.ஜி.ஆரை சட்டென்று அறைந்துவிட்டது. அங்கிருந்த ஒருவர் ஐயோ அண்ணனை சிங்கம் அடிச்சுடுச்சு என்று கத்தியதும் எம்.ஜி.ஆர் அவரை ஒரு அறைவிட்டார். ஏன் பீதியைக் கிளப்புகிறாய் என்று அதட்டினார். அதன்பின்பு அங்கிருந்த வசனகர்த்தா சொர்ணம் முதற்கொண்டு சண்டைக்காட்சிக்குத் தேவையில்லாதவர்களை வெளியேற்றினார். பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. காலையில் அடி கொடுத்தவருக்கு மாலையில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு கொடுத்து இனி அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு எங்கேயும் கத்தக் கூடாது என்று அறிவுரை கூறினார். 

எம்.ஜி.ஆர்

அடிமைப்பெண் படத்துக்குத் தொடர்ந்து பத்து நாள்கள் சிங்கத்துடனான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. சிங்கம் எம்.ஜி.ஆரின் தோள் மீது முன்னங்கால் இரண்டையும் போட்டு நிற்கும்போது அதன் முழு எடையைத் தாங்கக்கூடிய வலிமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது.  சிங்கத்துடன் உருளும்போது அதன் முழு எடையை எம்ஜி ஆர் தாங்கிகொண்டு உருண்டார். எம்.ஜி.ஆரின் உடல்வலிமையும் மனதுத்துணிவும் அந்தக் சண்டைக் காட்சியை வெற்றி பெறச் செய்தது. அந்தக் காட்சியில் ஜெயலலிதா, பண்டரிபாய் போன்ற பெண்களும் இடம்பெற்றது, படப்பிடிப்பை மிகவும் ரிஸ்க் உடையதாக்கியது.

எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதே சிங்கம்

அடிமைப்பெண் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தச் சிங்கம் சர்க்கஸுக்குத் திருப்பித் தரப்பட்டது. சிங்கம் அங்கே இறந்ததும் அதன் உடலை  எம்.ஜி.ஆர் பம்பாய்க்கு அனுப்பி பாடம் செய்து வாங்கினார் . இப்போது அது எம்.ஜி.ஆர்  நினைவில்லத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் கம்பீரமாக நிற்கிறது.. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்தச் சிங்கத்தின் அருகே நின்று படம் எடுத்துக்கொள்கின்றனர்.

கதைக்கு ஏற்ற சண்டைக் காட்சி வடிவமைப்பு

படத்தில் எம்.ஜி.ஆர் என்ன தொழில் செய்கின்றாரோ அதற்கேற்ப சண்டைக் காட்சி அமைக்கப்படுவதும் உண்டு, கதை நடக்கும் இடத்துக்கேற்ப சண்டைக்காட்சிகள் அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
விவசாயி படத்தில் கடைசிக் காட்சியில் அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்கள் மீது நம்பியார் முகமூடி அணிந்து பூச்சி மருந்து அடித்ததால் எம்.ஜி.ஆர் அவருடன் சண்டையிடுவார். இந்த முகமூடிச் சண்டை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
மாட்டுக்காரவேலன் படத்தில் எம்.ஜி.ஆர் தன் குடிசைக்குள் தோசை சுட்டுக்கொண்டிருப்பார். அப்போது வெளியே அசோகனின் ஆட்கள் வந்து அவரை சண்டைக்கு இழுக்கும்போது எம்.ஜி.ஆர் மாட்டுக்குக் கழுத்தில் அணிவிக்கும் சலங்கை கோத்த கழுத்துப்பட்டியை வைத்து சண்டை போடுவார். அதன் வீச்சால் எதிரிகளின் முகத்தில் விழும் கீறல்கள் ஆங்கில எழுத்துகளைப் போல தோன்றும். இதுவும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து பார்க்கும் காட்சி ஆகும்.

உரிமைக்குரல் படத்தில் நம்பியாரின் ஆட்கள் எம்.ஜி.ஆரின் ரேக்ளா வண்டி வரக் கூடாது என்பதற்காக அவர் வரும் பாலத்துக்கு தீ வைத்து விடுவர். ஆனால், எம்.ஜி.ஆர் சரியாக டைமிங் பார்த்து ரேக்ளாவுடன் அந்தப் பாலத்தை கடந்துவிடுவர். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் டூப் போடாமல் செய்திருப்பார். அவர் படம் முழுக்க ரேக்ளாவில் வருவதால் ரேக்ளாவைச் சண்டைக்காட்சியிலும் சேர்த்திருப்பார்.

ரிக்‌ஷாக்காரன் படத்தில் ரிக்‌ஷாவில் இருந்தபடியே எதிரிகளைக் கம்பு சுற்றி விரட்டியடிப்பார். படகோட்டியில் எம்.ஜி.ஆர் வயதான தாத்தாவாக மாறு வேடத்தில் வந்து தன் படகில் இருந்தபடி அடுத்த படகில் இருந்த அசோகனின் கம்பை அடித்துத் தூக்கி கடலில் எறிவார். கலங்கரை விளக்கம் படம் மாமல்லன் ஒரு கதாபாத்திரமாகவும் அவன் எழுப்பிய மகாபலிபுரமே கதைக்களமாகவும் கொண்டிருந்ததால் அந்த மலைப் பாறைகளில் சண்டைக் காட்சிளை அமைத்திருப்பார். 

கடைசி சண்டையில் இயற்கையோடு போராட்டம்

எம்.ஜி.ஆர்

படத்தின் கடைசி சண்டைக்காட்சி வரும் போது வாழ்வா சாவா போராட்டம் போல தோன்றும். இதில் எம்.ஜி.ஆர் வென்றால் அது நீதியின் வெற்றி வில்லன் வென்றால் அது அநீதியின் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் எம்.ஜி.ஆர் சில இயற்கை சீற்றங்களையும் இரக்க உணர்வுகளையும்  இடம்பெறச் செய்வார். இயற்கை சீற்றம், படம் பார்க்கும் ஆண்களை கவர்வதற்கான உத்திமுறை ஆகும். 

அடுத்ததாக வெள்ளமும் நெருப்பும் சூழ்ந்து ஆபத்தை விளைவிக்கும் சண்டைக் காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும்  எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்வார். இரக்க உணர்வை மிகுவிக்கும் இச்சூழ்நிலையில் இயற்கையோடு போராடும் நிலையும் எம்.ஜி.ஆருக்கு ஏற்படும். இது பெண் ரசிகைகளை கவர்வதற்கான உத்திமுறை ஆகும். இவற்றிற்கு இரண்டு மூன்று உதாரணங்களை மட்டும் இங்குக் காண்போம்.

நாடோடி மன்னன் படத்தில் கடைசி காட்சிகளில் கழுகுக்குகை சிதைந்து வெள்ளமாக நீர் வெளியேறும். அந்த வெள்ளத்தில் மன்னன் மார்த்தாண்டனைக் காப்பாற்றும் முயற்சியில் நாடோடி போராடுவதை பார்க்கும் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்திருப்பர். 

என் கடமை படத்தின் கடைசிக் காட்சியில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சிக்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் மேலே மேலே ஏறி அவர்களை மூழ்கடிக்கும். மேலும் கடைசியில் எம்.ஜி.ஆரின் ஷூவும் மாட்டிக்கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு டென்ஷனை அதிகப்படுத்தும். தண்ணீரின் மட்டம் உயர்வதும் சரோஜாதேவி மயங்கிக் கிடப்பதும் படம் பார்க்கும் ஆண்களையும் பெண்களையும் டென்ஷனோடு படம் பார்க்க வைக்கும்.

அரசகட்டளை படத்தில் சரோஜாதேவியைக் காப்பாற்றும் முயற்சியில் எம்.ஜி.ஆர் மணல் மேடாகிவரும் வெற்றி மண்டபத்தை விட்டு வெளியேற முயல்வார். அப்போது ஒவ்வொரு வாயில் வழியாக வெளியேற முயலும் போது அங்கு பாதியில் மணல் கொட்டி வழியை அடைத்துவிடும். அடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடியும்போது படம் பார்க்கும் பெண்கள் பரிதவித்துப் போவார்கள். நாடோடி மன்னனில் அம்பு பட்டு இறந்து கிடக்கும் மானை காட்டி பானுமதியின் மறைவை குறிப்பாக உணர்த்தியது போல அரச கட்டளையில் நரம்பு அறுந்த வீணையை காட்டி சரோஜாதேவியின் மறைவை உணர்த்துவார்கள் எம்.ஜி.ஆரின் ஜோடி அவரது அத்தை மகள் ஜெயலலிதாதான் என்பதை உணர்த்த அவர் கனவில் பாடிய ஒரு டூயட் பாட்டைக் காட்டுவார்கள். உரிமைக்குரல் படத்திலும் என் அண்ணன் படத்திலும் கடைசி சண்டைக் காட்சிகளில் நெருப்பு முக்கிய இடத்தை பெறும். 

கடைசிக் காட்சியில் விரட்டுதல் [சேசிங்]

ஆங்கிலப் படங்களில் கார் சேஸிங், பைக் சேஸிங் என்பன ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுவன. அது போல தமிழ்ப் படத்தில் வைக்க இயலாவிட்டாலும் தேவையும் இல்லை என்பதாலும் எம்.ஜி.ஆர் தனது படங்களில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் சில சேஸிங் காட்சிகளை வைத்திருப்பார். 

என் அண்ணன் படத்தில் தன் குதிரை வண்டியைக் கொண்டு காரை விரட்டிச் சென்று பிடிப்பார். தாயின் மடியில் படத்தில் இருவரும் சகோதர முறை என்று தெரிந்தவுடன் ஜீப்பில் படு வேகமாக மலை உயர்த்துக்குப் போய் விழுந்து செத்துப்போக எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் முயல்வர். அப்போது சகோதரர்கள் கிடையாது என்பதைச் சொல்ல நாகேஷ் இன்னொரு வண்டியில் படுவேகமாக இவர்களைத் துரத்தி வருவார். மீனவ நண்பன் படத்தில் கடைசியில் மின்சாரப் படகில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வருவர். இதில் பொம்மை படகுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஸ்டுடியோவுக்குள் வைத்து அதிக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.

எம்.ஜி.ஆர்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் ஸ்கேட்டிங் செய்தபடியே பலருடன் வாள் சண்டை போடுவார். அடுத்து விஷ ஊசியுடன் ஒருவர் தாக்க வரும்போது அவருடனும் மோதுவார். இந்தக் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக முதலில் நீச்சல் குளத்திலும் பிறகு தன் வீட்டு மொட்டை மாடியிலும் எம்.ஜி.ஆர் 55ஆவது வயதில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். பறக்கும் பாவை படத்தில் நடிக்கும் போது பார் விளையாட்டு பயின்றார். டூப் இல்லாமல் அவர் டிரபீஸ் விளையாடியிருப்பதை காணலாம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டையும், பாட்டும் மாறி மாறி வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

இன்றைக்கும் சிறு நகரங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் படம் போட்டால் போதும் என்கின்றனர். அதுவும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போட்டால் வசூல் அள்ளி விடலாம் என்று நம்பும் அளவுக்கு இப்படம் இலாபம் தருகிறது.

நடிகைகளின் சண்டைக்காட்சி

எம்.ஜி.ஆர் படத்தில் பெண்களுக்கு முக்கிய ரோல் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருவதுண்டு. அது சரியல்ல. கதைக்கு ஏற்ப அவர் முக்கியப் பங்கை வழங்கியுள்ளார். அதிமுக ஆரம்பித்த பின்பு எம்.ஜி.ஆர் படத்தில் லதாவின் விழிப்புஉணர்வு வசனங்களும் காட்சிகளும் ஏராளமாக இடம்பிடித்தன. அதற்கு முன்பு சாவித்திரி மகாதேவி படத்திலும் பி பானுமதி ராஜா தேசிங்குப் படத்திலும் வாள் சண்டை போட்டு தங்களைக் காத்துக்கொள்ள முனைவார்கள். மருத நாட்டு இளவரசியிலும் அடிமைப்பெண்ணிலும் எம்.ஜி.ஆருக்கே கதாநாயகிகள்தான் சண்டை சொல்லிகொடுப்பர். முகராசி படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குச் சிலம்பு சுற்ற கற்றுக்கொடுப்பார். இதுவும் பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையைக் கற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே எம்.ஜி.ஆர் இக்காட்சியை அமைத்திருப்பார்.

சண்டைக்காட்சிகளில் பாட்டும் ஆட்டமும்

தமிழ் பாரம்பர்யத்தில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு போன்ற வீர விளையாட்டுகளை ஆட்டம் பாட்டம் என்றே அழைக்கின்றனர்.  அவற்றிற்கென்று தனி தாளக்கட்டில் பாடல்களும் உள்ளன. அதனை பின்பற்றி எம்.ஜி.ஆர் தன் படங்களில் சில சண்டை காட்சிகளில்  ஆடல்பாடலையும் புகுத்தியுள்ளார். 

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று’ என்ற பாடல் காட்சி சிறுவர்கள் சண்டைப் பயிற்சி பெறுவதை காட்டும். இதில் எம்.ஜி.ஆர் கையில் இரண்டு வாள்களை ஏந்திய வீசி அபிநயித்தபடி பாட்டுப் பாடிக்கொண்டு வருவார். அப்போது மிகவும் லாகவமாக இரண்டு பக்கமும் வரிசையாக வந்து எட்டு போடும் சிறுவர்கள் மீது படாமல் ஆடிவருவார்.  ஒரு சிறுவனுடன் மிகவும் மென்மையாக தன் வாளால் அவன் வாளை தட்டிச் சண்டையிடுவார். அவரது வாளின் அசைவில் காணப்படும் மென்மை அவரது நடிப்புக்கு ஓர் உதாரணம் ஆகும்.

எம்.ஜி.ஆர்

அரச கட்டளை படத்தில் சரோஜாதேவியை ஆட விடாமல் தடுப்போரை விரட்டி அடிக்கச் சண்டையிடும் காட்சியில் ‘ஆடி வா ஆடி வா ஆடி வா --ஆடப்பிறந்தவளே ஆடி வா - புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா -- ஆடி வா ஆடி வா ஆடி வா’ என்று பாடவும் செய்வார்.

தெய்வத்தாய் படத்தில் தன்னைச் சிறைப்பிடித்திருக்கும் மூவரை விட்டு தப்பியோடுவதற்கு பார்க்கும் ஒத்திகையாகப் பாட்டோடு கலந்த ஒரு சண்டைக் காட்சி இடம்பெறும் . ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் –அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் --உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்’ என்று பாடியபடி சண்டையிடுவார். பாட்டு முடியும் தருவாயில் வெளியேறிவிடுவார்.

கலைஞரின் எங்கள் தங்கம் படத்தில் திமுகவின் கட்சி நிகழ்வுகளை விளக்கும் ‘நான் செத்து பொழச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா’ என்ற பாடல் காட்சியில் சண்டைக் காட்சியும் இணைந்திருக்கும். பாட்டு முடியும்போது அனைவரையும் அடித்து போட்டிருப்பார்.

சண்டை காட்சியில் நகைச்சுவை 

சண்டை காட்சியில் காமெடி நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் இருந்தால் நகைச்சுவையும் சேர்ந்திருக்கும். இது போன்ற காட்சிகள் கதையின் பிரச்னை தீவிரமடையாத வேளையில் அதாவது படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இதுபோன்ற நகைச்சுவை காட்சி முதல் சண்டைக் காட்சியில் இருக்கும். 

காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் ஓங்கி ஒரு பீரோவை குத்துவார் பீரோ உடைந்துவிடும் உள்ளே போன தன் கை வெளியே வந்ததும் அந்தக் கையில்கட்டியிருக்கும் கை கடிகாரத்தை காதில் வைத்து ஓடுதா என்று பார்ப்பார். சண்டையின் தீவிரத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்கள் இந்தக் காட்சியைக் கண்டதும் சிரித்துவிடுவர். எதிரியை மடக்கி துப்பாக்கியைப் பறித்து திரும்பவும் அவரிடமே எறிந்துவிடும் காட்சிகளில் எம்.ஜி.ஆர் துப்பாக்கியின் குண்டுகளை எடுத்துவிட்டு சத்தமில்லாமல் எதிரியின் வீரத்தைச் செல்லா காசாக்கும் போது ரசிகர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.

தொடர்ந்து 24 மணி நேர படப்பிடிப்பு

 

சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார் என்பதை இதுவரை கண்டோம். இதனை மேலும் வலியுறுத்த ஒரு முத்தாய்ப்பு சான்று. பணத்தோட்டம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. மறுநாள் காலை வரை நடந்தது. இரவும் பகலும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைத்து இந்தக் காட்சியை நடித்து முடித்தார். இந்தக் காட்சியை நீங்கள் படத்தில் பார்த்து அதன் மதிப்பை புரிந்துகொள்ளுங்கள். அவரது பட வெற்றியில் அவர் காட்டும் அக்கறைக்கு இது ஒரு சோறு பதம் ஆகும். 
 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109733-have-you-seen-these-adventurous-part2-stunts-of-mgr-mgr-series-episode-28.html

Link to comment
Share on other sites

ஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29

 
 

எம்.ஜி.ஆர்

 

மதம், மொழி, இன வேறுபாடுகள் அற்றவர் எம்.ஜி.ஆர்

 

பாரத ரத்னா விருது இந்திய இலங்கையின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டதால்  நம் நாட்டின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வடக்கே டில்லி பம்பாய் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் அ.தி.மு.க கட்சி செயல்பட்டதால் எம்.ஜி.ஆர் தேசியக் கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார். இந்த அந்தஸ்துக்குரிய அஸ்திவாரம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களால் 1953 முதல் அமைக்கப்பட்டது. பாரதப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்த போது அவர் அந்தமான் தீவில் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை திறந்துவைத்தார். இன்றும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய  நினைவுகள் பசுமையாக உள்ளன. வெளிநாடுகளில் குறிப்பாக ஃபிரான்ஸ், சிங்கப்பூர் மலேசியா போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வருடந்தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்டிராவின் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் இதயக்கனி இதழுக்கு விளம்பரமும் நூற்றாண்டு விழா வாழ்த்தும் அனுப்புகிறார். 

நாடெங்கும் கட்சிஅலுவலகமாக மாறிய ரசிகர் மன்றம்

அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியை விரும்பவில்லை. அவற்றை ஒடுக்கிவிடுவார் என்ற தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் தனது அண்ணா தி.மு.கவை அனைத்திந்திய அண்ணா தி மு க என்ற பெயரில் தேசியக் கட்சியாக மாற்றினார். இதற்காக மற்ற மாநிலங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சட்டமன்றத்தில் அந்த மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை மற்ற மாநிலங்களில் இயங்கி வந்த எம்.ஜி.ஆர்  ரசிகர்மன்றங்கள் ஆகும்.

எம்.ஜி.ஆர்

மற்ற மாநிலங்களுக்குச் செய்த உதவிகள்

எம்.ஜி.ஆர் நடித்து வந்த காலத்திலும் அரசியலுக்கு வந்த பிறகும் பிறருக்கு உதவுவதில் அவர் நம்மவர்,வேற்றவர் என்று வேறுபாடு கண்டதில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் எந்த மொழி பேசும் மக்களாக இருந்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கியதே இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர் செய்த உதவிகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வந்த போது உடனே எம்.ஜி.ஆர் போர் நிதியாக ரூ. 75,000 தருவதாக அறிவித்து முதல் தவணையாக காமராஜரிடம் 25,000க்கான காசோலையை தந்தார். அதற்கு பாரத பிரதமர் நேருஜி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதமும் அனுப்பினார். 

ஒரிசாவுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் சென்னையில் ஒரு இந்தி படத்தைப் போட்டு அதன் வசூலை அனுப்ப சிலர் முயன்ற போது அதற்கான அழைப்பு எம்.ஜி.ஆருக்கு வந்தது. அந்தப் படத்தின் வசூல் தொகைக்குச் சமமான அளவு தொகையை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் வழங்கினார்.

ராஜஸ்தானுக்கு அவர் அடிமைப்பெண் படப்பிடிப்புக்குச் சென்றபோது அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கு ஐம்பதாயிரம் நிதி உதவி அளித்தார். மறுநாள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக இச்செய்தியே இடம்பெற்றது. 

கர்நாடகாவில் ஒரு விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் சென்றிருந்த போது அங்கு பார்வையற்றோருக்கும் பேசும் திறனற்றோருக்குமாக ஐம்பதாயிரம் ரூபாய் உதவியளித்தார். எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவருக்குப் பேசும் திறன் குறைந்தபோது அவர் அந்தக் கஷ்டத்தை உணர்ந்து தன் ராமாவரம் தோட்டத்தில் இக்குறைபாடு உடைய சிறுவர்களுக்குப் பள்ளி அமைக்கும்படி தன் உயிலில் எழுதிவைத்திருந்தார் என்று நம்மில் பலர் கருதுகிறார்கள். ஆனால், அவர நன்றாகப் பேசி வந்த காலத்திலேயே அவருக்கு மாற்று திறனாளிகள் மீது அன்பும் அக்கறையும் இருந்தது. அவர், அவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் அவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நிறைய உதவியிருக்கிறார்.

கொல்கத்தாவுக்குப் பணம் படைத்தவன் படப்பிடிப்புக்குச் சென்றிருந்த போதும் அவர் அங்கு கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அச்சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதி அளித்தார். பின்பு அவர் முதல்வரான பிறகு அங்கு சென்றிருந்த போது அவரை அங்குள்ள ஆளுநர் மாளிகையில் தங்கச் செய்தனர். ஆனால், அங்கிருந்த கெடுபிடிகளைப் பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வரும் பொது மக்களுக்கு இந்த இடம் வசதிப்படாது என்று சொல்லிவிட்டு ஓர் ஓட்டலில் வந்து தங்கினார். அங்கு எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த தமிழர்களின் கையில் அவர் தனிச்செயலர் ரூபாய் நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர் போயிருந்தபோது ஒரு பெண் அங்கு வந்து எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டார். எம்.ஜி.ஆர் அவர் கேட்டதுக்கும் அதிகமான டாலர் நோட்டுக்களை அவருக்குக் கொடுத்து உதவினார். 

முதல்வரான பிறகும் வெளி மாநிலங்களுடன் இணக்கமான உறவு

தமிழ்நாடு தன் விவசாயத்தின் தண்ணீர் தேவைக்காக கேரளா மற்றும் கர்நாடகத்தை எதிர்பார்த்து இருப்பதால் எம்.ஜி.ஆர் இம்மாநில முதல்வர்களுடன் இணக்கமாகப் பேசி தன் மாநிலத் தேவையை நிறைவேற்றினார். கோர்ட் வழக்கு என்று தானும் அலையவில்லை பிறரையும் சிரமப்படுத்தவில்லை. குடிநீர் தேவையையும் இவ்வாறு அன்போடு கேட்டு பெற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது கேரளாவில் ஏ.கே அந்தோணி, இ.கே நயினார் மற்றும் கருணாகரன் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். ஒரு முறை எம்.ஜி.ஆர் அங்கு ஒரு கூட்டத்தில் பேசிய போது அவர் தமிழில் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரை மலையாளத்தில் பேசும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார் அவருக்கு ஓரளவு மலையாளம் பேச தெரிந்திருந்தும் கேரளாவில் இரண்டு வார்த்தை கூட பேச மறுத்துவிட்டார். ’’நான் விவரம் தெரிந்து பேசிய மொழி தமிழ்; படித்த மொழி தமிழ்; என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் நாடு தமிழ்நாடு; எனவே நான் தமிழில்தான் பேசுவேன். விருப்பம் இல்லாதவர்கள் எழுந்துபோய்விடுங்கள்’’ என்றார். அவ்வாறு அவர் மலையாளம் பேச மறுத்தும் அவரால் அம்மாநிலத்துடன் இணக்கமான உறவு வைத்திருக்க முடிந்தது.

கேரளாவில் பிறந்த தன் உறவினர் இருவரும் தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்ததனால் அங்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார்  பிறந்த ஊரான வைக்கத்தில் இருவரும் சேர்ந்து நிற்பது போல ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. ஜானகி அம்மையாரின் சகோதரன் நாராயணன் என்பவர் இச்சிலையை நிறுவி அன்றைய முதல்வரைக் கொண்டு திறப்பு விழா நடத்தினார்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் என்ற எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் ராமகிருஷ்ண ஹெக்டேயும் ஆந்திராவில் என்.டி.ராமாராவும் (புதுச்சேரியில் 1974-ல் ராமசாமி என்பவரும் கூட சிலகாலம் முதல்வராக இருந்தார்) இருந்ததை பத்திரிகைகள் குறிப்பிட்டுக் காட்டி தென்னிந்தியாவில் ‘ராம’ ராஜ்யம் நடப்பதாக எழுதின.  

கர்நாடகாவில் குண்டு ராவ் முதலமைச்சராக இருந்தபோது ஒரு நாள் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்குச் சென்றார். அங்கு காலை உணவு சாப்பிட்டார். தண்ணீர் குடிக்காமல் இருந்தார். குண்டு ராவ் தன் பெயர் எம் குண்டு ராவ் என்பதை சுருக்கி எம்.ஜி.ஆர் என்று தன்னை நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எம்.ஜி.ஆர் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தார். அவரது தாயார் எம்.ஜி.ஆரிடம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்கவில்லை. தண்ணீர் குடிக்க வேண்டாமா? குடியுங்கள் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் என் மக்கள் தண்ணீர் இல்லாமல் அங்கு வாடுகிறார்கள் உங்கள் மகன் எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கிறாரே என்றார். அம்மா தன் மகனைப் பார்த்தார். அவரது கருணைப் பார்வை எம்.ஜி.ஆரின் கோரிக்கையை நிறைவேற்றியது. குண்டுராவ் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அண்டை மாநிலங்களுக்கு இடையே தாய் பிள்ளை போல பேசித்தான் தண்ணீர் பெற வேண்டுமே அல்லாது வம்பு வழக்கு என்று போனால் தீர்ப்பு கிடைக்கலாம் ஆனால் அது தீர்வு ஆகாது என்பதை எம்.ஜி.ஆர் நன்கு உணர்ந்திருந்தார்.

சென்னைக்குத் தெலுங்கு கங்கை திட்டம் 

சென்னையில் மக்கள் தொகை பெருகிய அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க இயலவில்லை. அதனால்தான் இன்று மழை பெய்தவுடன் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதற்கு ஒரு தீர்வாக எம்.ஜி.ஆர் தலைநகரை மாநிலத்துக்கு நடுவில் உள்ள திருச்சிக்கு மாற்றலாம் என்றார். அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது. 

சென்னை மக்கள் குடிநீரின்றி தவித்தபோது எம்.ஜி.ஆர் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் பேசி தெலுங்கு கங்கை திட்டத்தைக்கொண்டு வந்து தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்து தாகத்தை தணித்தது. இது தென்னிந்தியாவின் முதல் நதி நீர் இணைப்பு திட்டம் எனலாம். திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்காமல் தன்னாலான ஒரு முயற்சியை செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்

இந்தியப் போராட்ட வீரர் பால கங்காதர திலகருக்கு ஒரு சிலை எழுப்ப வேண்டும் என்று அவரது பேரன் தெரிந்தவர்களிடம் நிதி திரட்டினார். அப்போது அவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சியைச் சந்தித்தார். ம.பொ.சி அவர்கள் அவரை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அழைத்துவந்தார். எம்.ஜி.ஆர் தன் சொந்தப்பணம் ஐம்பதாயிரத்தை வழங்கினார். அரசாங்கப் பணத்தை தருவதாக இருந்தால் அந்தக் கோப்பு பலரிடம் போய் கையெழுத்து பெற்று வர வேண்டும். அதற்குக் கால தாமதம் ஆகும் அதனால் நல்ல காரியத்துக்கு நானே தருகிறேன் என்றார். 

தென்னிந்தியாவின் முப்பெரும் ஹீரோக்கள் 

தென்னிந்தியத் திரையுலகில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் கர்நாடகத்தில் ராஜ்குமார் மற்றும் ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோர் பிரபலமான ஹீரோக்களாக இருந்தனர். அவர்களுக்குள் நல்ல நட்பும் உறவும் இருந்தது. எம்.ஜி.ஆர் ஆந்திராவின் மக்களால் தேவுடா என்றழைக்கப்பட்ட என்.டி.ராமாராவிடம் மிகுந்த அன்புடன் இருந்தார்.  என். டி. ஆர். அரசியலுக்கு வரும் முடிவை எடுத்ததும் எம்.ஜி.ஆரிடம் வந்து வாழ்த்துப் பெற்றார். தன் கட்சிக்குத் தெலுங்கு ராஜ்யம் என்று பெயர் வைக்கப் போவதாகச் சொன்னதும் எம்.ஜி.ஆர் ராஜ்யம் வேண்டாம் தேசம் என்று வையுங்கள் என திருத்திக் கொடுத்தார். என்.டி.ஆரும் சம்மதித்தார். தெலுங்கு தேசம் உதயமாயிற்று. எம்.ஜி.ஆர் இறந்ததும் என்.டி.ஆர் என் மூத்த அண்ணன் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதார். எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் செய்யப்படும்வரை உடன் இருந்தார்.  

கர்நாடகத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ராஜ்குமார் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ராஜ்குமார் படத்தின் பாட்டுக்கள் ஒளிபரப்பாகும்போது அதை எம்.ஜி.ஆர் மிகவும் ரசித்துப் பார்ப்பாராம். அவர் பேச இயலாத நாள்களிலும் கூட ராஜ்குமார் பாட்டு ஒளிபரப்பனால் நம்ம ராஜ்குமார் என்று தன் நெஞ்சைத் தொட்டுக்காட்டி மகிழ்ச்சியடைவாராம். 

எம்.ஜி.ஆரின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள்

மொழி எல்லைகளைக் கடந்து நின்ற எம்.ஜி.ஆர் மத எல்லைகளையும் கடந்து நின்றார். அவர் திமுகவில் இருந்த வரை இந்துச் சமயப் பழக்க வழக்கங்களை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. அண்ணா அவர்கள் சொன்ன ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்ற கொள்கையைப் பின்பற்றினார். அதுபோல கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களைத் தன் படங்களில் காட்டினாலும் அவற்றின் கொள்கைகளைப் பெரிதாக ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. 

எம்.ஜி.ஆர்கிறிஸ்தவ மதமும் மக்களும்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம் படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும். ரிக்‌ஷாக்காரன் படத்தில் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப் பிடித்து நிற்கும் காட்சி வரும்.

எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும்  அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு. பரமபிதா என்ற பெயரில் அவரை இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை சவுக்கால் அடித்து அவர் தலையில் முள்கிரீடம் வைத்து அழுத்துவதை ரசிகர்கள் காணப் பொறுக்க மாட்டார்கள். திரையைக் கிழித்து விடுவர் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது. போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும் படம் கேரளாவில் பலர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி கொளுத்துகிறார்களா’ என்று சிரித்தாராம்.

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும்போது அந்த வீட்டில் திருவள்ளுவர் பாரதியார் அறிஞர் அண்ணா ஆகியோர் படங்களோடு இயேசு கிறிஸ்து படத்தையும் மாட்டியிருப்பார். இதனால் கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட் கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவர் தனிக் கட்சி ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். 

எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நோவா அவரைப் பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும் சம்மதித்தார். அப்போது நோவா அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர் உடனே செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆர் காலத்தில்தான் சிறை கைதிகளின் அறைகளுக்குக் கழிப்பறை வசதி கிடைத்தது. அதுவரை அறையில் வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள் இரவில் சிறுநீர் மலம் கழித்தனர். மறுநாள் அதை கொண்டு போய் கொட்டிவிட்டு சுத்தம் செய்து கொண்டு வந்து வைத்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில் ஒரு மணி வரை உயிரோடு இருந்ததாக சில செய்திகள் வந்த போது கிறிஸ்தவர்கள் பலர் அவர் கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே கருதினர். எம்.ஜி.ஆர் மீதிருந்த நன்மதிப்பு காரணமாக அவர் கிறிஸ்தவர் அதிகமாக வாழும் சாத்தான் குளம் தொகுதியில் நீலமேகம் என்ற இந்துவை நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர். 

இஸ்லாமியர்களைக் கவர்ந்த  எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருக்கு 1953-ல் முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்தவர் ஒரு இஸ்லாமியர் என்பதை அறிகிறோம். அந்தக்காலத்தில் மாதம் 150 ரூபாய் சம்பாதிக்கும் ரசிகர் கூட ரசிகர் மன்ற உறுப்பினர் கட்டணமான ஐந்து ரூபாயைச் செலுத்த தவறுவதில்லை. ஆனால், மற்ற ரசிகர் மன்றத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் வைத்தால் கூட ரசிகர்கள் செலுத்துவதில்லை. எனவே  25 பைசா என்று குறைத்துவைத்தனர்.

மலைக்கள்ளன் படம் தொட்டு சிரித்து வாழ வேண்டும் படம் வரை எம்.ஜி.ஆர் பல படங்களில் நல்ல இஸ்லாமியர் வேடம் ஏற்று நடித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் அலிபாபாவாகவும் பாக்தாத் திருடன் படத்தில் ஆபுவாகவும் ராஜா தேசிங்கில் தேசிங்கின் தந்தைக்கு முதல்மனைவிக்குப் பிறந்த இஸ்லாமிய சகோதரனாகவும் நடித்திருந்தார்.

மலைக்கள்ளன் படத்தில் மலைக்கள்ளன் போடும் மாறு வேடமாக அப்துல் ரகீம் என்ற முஸ்லிம் வேடத்தில் வந்து பல நல்ல செயல்களைச் செய்வார். சிரித்து வாழவேண்டும் அப்துல்ரகுமான் என்ற எம்.ஜி.ஆர் ஒரு சூதாட்ட கிளப் நடத்தி வருவார். பின் இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர் அதை அழித்ததும் ஆட்டோ ஓட்டுவார். இருவரும் நண்பராகிவிடுவர். கதாநாயகி லதாவுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளிப்பார். இது ஒரு தை கதாபாத்திரம்.

ராஜா தேசிங்கு படத்தில் அண்ணனாக வரும் எம்.ஜி.ஆரை தம்பி எம்.ஜி.ஆர் கொன்றுவிடுவார். என் வாளால் உன் ரத்தம் சிந்தக் கூடாது என்று முஸ்லிம் எம்.ஜி.ஆர் சொல்லி போரை தடுக்க நினைப்பார். ஆனால் தேசிங்கு எம்.ஜி.ஆர் தன் சொந்த அண்ணன் என்பது தெரியாததால் என் வாளால் நீ சாக வேண்டும் என்று கூறி குத்திவிடுவார். இதிலும் இஸ்லாமிய சகோதரர் கதாபாத்திரம் மிகவும் நல்லவராகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. 

எம்.ஜி.ஆர்

குலேபகாவலியில் ஹாசனாக வரும் எம்.ஜி.ஆர் படத்தின் தொடக்கத்தில் அல்லாவை தொழும் காட்சி இடம்பெறும். அப்போது ஒரு பாடலும் ஒலிக்கும். அது போல ராஜா தேசிங்கில் ஆதி கடவுள் ஒன்றேதான் அதை மாற்ற முடியாது எனத் தொடங்கும் பாட்டை பாடியபடி முஸ்லிம் எம்.ஜி.ஆர் அறிமுகமாவார். உடனே அது எப்படி எல்லாக் கடவுளும் ஒன்றாகும் எனக் கேட்டு அவருடன் இருந்த  இளைஞர்கள் எம்.ஜி.ஆருடன் சண்டை போடுவதாக அக்காட்சி தொடரும்.

எம்.ஜி.ஆர் இஸ்லாமிய கடவுளை தொழும் காட்சிகளில் நடித்ததால் அவருக்கு இஸ்லாமியர் ஆதரவும் கிடைத்தது. ஒளிவிளக்கு படத்தில் தீக்காயம் பட்டு உயிருக்குப் போராடும் எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி அனைத்து மதத்தினரும் கடவுளை வணங்கும் காட்சியில் இஸ்லாமிய வழிபாடு அதிகமாகக் காட்டப்பட்டு பாங்கு சொல்லும் சத்தமும் சேர்க்கப்பட்டிருக்கும். மற்ற மதத்தினர் நடத்திய வழிபாடுகளின் சத்தம் கேட்காதபடி பின்னணி இசை வந்துவிடும்.

எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியைத் தொடங்கிய பிறகு எடுக்கப்பட்ட படங்களில் பொதுமக்களைக் காட்டும் காட்சிகளில் இந்துவுக்குக் குடுமி ஐயரும் கிறிஸ்தவத்துக்கு பாதிரியாரும் இஸ்லாமுக்குத் தொப்பி அணிந்த முஸ்லிமும் காட்டப்பட்டனர். மூவரும் வந்து கைகோத்து ஆதரவு அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. உரிமைக்குரல், இதயக்கனி போன்ற படங்களில் பாட்டுக்களிலும் இஸ்லாமியருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

 

எம்.ஜி.ஆர் மீது இஸ்லாமியர் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை முழுமையாக நம்பினர். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். இஸ்லாமியர் அதிகம் வாழும் வாணியம்பாடி என்ற தொகுதியில் இஸ்லாமியரையே நிறுத்த வேண்டும் என்ற கருத்தை உடைத்து எம்.ஜி.ஆர் இஸ்லாமியர் அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றார். அவருக்கிருந்த இஸ்லாமியரின் ஆதரவு அந்தத் தேர்தலில் அவர் இஸ்லாமியர் அல்லாத ஒருவரை நிறுத்திய போதும் வெற்றியைப் பெற்று தந்தது.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/110102-mgrs-deeds-to-other-state-people-mgr-series-episode-29.html

Link to comment
Share on other sites

முன்சீஃப் கர்ணம் முறையை ஒழித்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 இறுதி அத்தியாயம்

 
 

எம்.ஜி.ஆர்

அரசியலிலும் மக்கள் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர்

 
 

நாளை போடப்போறேன் சட்டம் – பொதுவில் 
நன்மை புரிந்திடும் திட்டம் 
நாடு நலம் பெறும் திட்டம் 

என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.

எம்.ஜி.ஆர்

உலகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் 

எம்.ஜி.ஆர் சினிமாவில் தனது ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள பாடுபட்டதைப்போலவே  முதல்வர் பொறுப்பேற்றதும் அதை தக்கவைக்க பல சவால்களைச் சந்தித்தார். அவரது ஆட்சிக்காலம் அவருக்கு மலர் பாதையாக அமையவில்லை. மாறாக பெரும் போராட்டக்களமாக அமைந்தது. மக்களின் முழு நம்பிக்கையை அவர் பெற்றிருந்ததால் அவர் அதிலும் வெற்றிபெற்றார். அவர் முதல்வரான காலகட்டத்தில் சர்வதேசப் பொருளாதாரத்தில் பல கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டன. LPG எனப்படும் Liberalization, Privatization, Globalization அதாவது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் தீவிரமாக இந்தியாவில் வேரூன்ற தொடங்கின. இந்நிலையில் அவர் பல மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசுடன் போராடினார். ஏழை மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற சோசலிச கொள்கை வலுவிழக்க தொடங்கிய காலகட்டம் அது.  பொதுவுடைமை கொள்கை சிதறடிக்கப்பட்ட காலம். மக்கள் அவரவர் சொந்த முயற்சியில் தேவையானவற்றை பெற வேண்டுமே தவிர அரசை எதற்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கொள்கை பிரசாரம் தொடங்கியது. இந்நிலையில் 1977இல் முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தன் படங்களில் ‘’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-- இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்’’ என்று பாடியது பொய்யாகிவிடக் கூடாது என்று சிந்தனையில் மிகவும் கவனமாகத் தான் சினிமாவில் நடித்துக்காட்டிய படி மக்கள் மீது அக்கறை கொண்டவராக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தினார்.  

எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் அணைக்கட்டுகள் மேம்பாலங்கள் போன்றவற்றை உருவாக்காவிட்டாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்னை இல்லாமல் இருக்கும்படி கவனித்துக்கொண்டார். பெண்களும் பிள்ளைகளும் பாதுகாப்பாக உணர்ந்தனர். பசிக்கொடுமையால் சிறுவர்கள் சிறுமிகள் தவறான பாதையில் போகும் சூழ்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொண்டார். சத்துணவு முறையான கல்வி வழங்கப்பட்டதால் அவர்கள் வளர்ந்ததும் வேலை வாய்ப்பு பெற்றனர். நடுத்தரக் குடும்பங்களில் இரு பிரிவுகள் தோன்றியது, திமுக ஆட்சியில் வேலையில்லா போராட்டம் கடுமையாக இருந்தது. எம்.ஜி.ஆர் காலத்தில் அந்நிலை குறையத் தொடங்கியது. பெண்களுக்கும் வேலை கிடைத்தது. சத்துணவு திட்டத்திற்காக அவர் ஒரே நாளில் பத்தாயிரம் பெண்களுக்கு வேலை அளித்தார். இது இந்தியாவில் இதுவரை நடந்திராத சாதனையாகும். கல்லூரிகளில் வேலை வாய்ப்புக் கல்வி அறிமுகமானதால் இளைஞர்களிடையே நம்பிக்கை தோன்றியது. 

‘தொழிலாளி’யாக எம்.ஜி.ஆரின் நலத் திட்டங்கள்

ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்‌ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார். 

மீனவ நண்பனாக எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்கள்

எம்.ஜி.ஆர்

படகோட்டியாக வந்து ‘’தரை மேல் பிறக்க வைத்தான் –எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்; கரை மேல் இருக்க வைத்தான் –பெண்களை, கண்ணீரில் குளிக்க வைத்தான்’’ என்று சோக கீதம் இசைத்த எம்.ஜி.ஆர் தன்னை மீனவ நண்பனாக நிலை நிறுத்தும் முயற்சியில் அவர்களுக்கென சிறப்பு வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் கடற்கரையில் குப்பங்களின் குடிசைகளில் வாழ்ந்து வந்த இவர்களின் நிலை விரைவில் மாறியது.

‘ஒளி விளக்கு’’ அளித்த எம்.ஜி.ஆர்

இருளை அகற்றி எம்.ஜி.ஆர் நம் வாழ்வில் ஒளி விளக்கேற்றுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களை அவர் ஏமாற்றாமல் வீட்டுக்கொரு விளக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். குடிசைகளுக்கு இலவச மின்சாரமும் அளித்து அந்த விளக்கை ஒளிரச் செய்தார். இதனால் ஏழை குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே  இரவில் படித்தனர். வீட்டில் மின்சார விளக்கு இல்லாத போது  ஊர் மந்தையில் உள்ள  பொது விளக்கில் சிறுவர்கள் படிப்பதுண்டு. ஆனால் அங்கேயும் தாழ்த்தப்பட்டோர் சென்று படிக்க இயலாது. கிராமங்களில் அதிகாரம் படைத்தோராக உயர் சாதியினர் இருந்ததால் ஏழை தலித் குழந்தைகள் படிக்க விளக்கின்றி சிரமப்பட்டனர். எனவே, இவர்கள் வீட்டில் காடா விளக்கில் படித்து வந்தனர்.

‘நாடோடி’ எம்.ஜி.ஆரின் சாதிக்கொடுமைக்கு எதிரான திட்டம்

நாடோடி படத்தில் எம்.ஜி.ஆர் தாழ்த்தப்பட்டவரின் மகன் என்பதால் அவரை எடுத்து வளர்த்தவரின் சொத்து ஏராளமாக அவருக்கு இருந்தும் அவருக்குச் சாதிக்கொடுமை பற்றி பிரசாரக் கூட்டங்களில் பேசி வரும் ஒரு தமிழாசிரியரே பெண் கொடுக்க மறுத்துவிடுவார். தாயின் மடியில் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு இதே கதைதான். பணக்காரரான அவரைப் பார்த்து எம்.ஆர்.ராதா என்ன சாதியோ என்ன குலமோ என்று ஏளனமாகப் பேசுவார். எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் கிராமங்களில் முன்சீஃப் கர்னம் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்பதால் அவர்களில் பலர் தாழ்த்தப்பட்டோரிடம் பாரபட்சமாக நடக்கின்றனர் என்பதை அறிந்து அந்தப் பதவிகளை ஒழித்தார். அரசுத் தேர்வு மூலமாக கிராம நல அதிகாரி [வி.ஏ.ஓ] பொறுப்புக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகம் செய்தார். இப்போது தாழ்த்தப்பட்டவர்களும் கிராம நிர்வாக அதிகாரியாகப் பொறுபேற்றனர். 

விவசாயி எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்கள்

எம்.ஜி.ஆர் தான் நடித்த விவசாயி, ஒரு தாய் மக்கள் படங்களில் நவீன விவசாய முறைகள் மற்றும் கூட்டுப்பண்ணை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி உணர்த்தியிருப்பார். அவர் முதல்வரானதும் 325 கோடிக்கான விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். பாசனத்துக்காக 3.31 இலட்சம் பம்பு செட்களுக்கு மின் இணைப்பு வழங்கினார். பேரிடர் காலங்களில் விவசாயிகள்  நஷ்டமடையக் கூடாது என்பதற்காகப் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தார்,

எம்.ஜி.ஆர்

ஊருக்கு உழைப்பவனின் விதவை கரிசனம் 

ஊருக்கு உழைப்பவன் படத்தில் குமாரி பத்மினி இளம்விதவையாக நடிப்பார். எம்.ஜி.ஆர் மீது ஆசைப்படுவார். எம்.ஜி.ஆர் இணங்காததும் ஒரு போலிச் சாமியாரிடம் தன்னை இழந்துவிடுவார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அந்தச் சாமியாரை அடித்து உதைத்து திருத்தி குமாரி பத்மினிக்குத் திருமணம் செய்துவைப்பார். இது சினிமா கதை. நிஜத்திலும் எம்.ஜி.ஆர் விதவை பெண்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். விதவைகளை மறுமணம் செய்வோருக்கு ரூ 5,300 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் ஆயிரக்கணக்கான விதவைகள் பலனடைந்தனர்.

ஒருமுறை ஒருவர் எம்.ஜி.ஆரிடம் வந்து விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே என்று வேண்டினார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்றார். எம்.ஜி.ஆரின் இந்த பதில் ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியலை அவர் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதையும் விதவை பெண்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று அவர் கருதியதையும் புலப்படுத்துகிறது. இந்த வாரத்தில் ராணுவத்தில் பணியாற்றி இறந்து போனவர்களின் மனைவிமார் தன் கணவரின் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற போதிலும் மறு மணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டம் வந்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்திலேயே இந்தச் சலுகையை விதவை பெண்களுக்கு வழங்கிவிட்டார்.

சைக்கிளில் டபுள்ஸ் போகவும் எம்.ஜி.ஆர் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதன்பிறகு சைக்கிளில் கணவனும் மனைவியுமாக சினிமாவுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் போக ஆரம்பித்தனர். இது சிறிய உத்தரவு என்றாலும் பெரியளவில் மக்கள் மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதை மறுக்க இயலாது.

எம்.ஜி.ஆரின் தமிழ்ப் பற்றும் பணியும்

ஐந்து வயது முதல் தமிழ்நாட்டில் வாழ்ந்த எம்.ஜி.ஆருக்குத் தாய்மொழி வேறாயினும் தமிழே தன் மொழியாகி விட்டது. திமுக கட்சியில் அவர் இணைந்திருந்ததும் அவருக்குத் தமிழின் மீது அதிக பற்று உண்டாகக் காரணமாயிற்று. அவரது முதல் சொந்தப் படமான நாடோடி மன்னன் ‘’செந்தமிழே வணக்கம் --  திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கும். இப்பாடல் இன்று மதிமுக கட்சியினரின் இறை வணக்கப் பாடலாக உள்ளது. 

எம்.ஜி.ஆர்

கலைஞர் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் தங்கம் படத்தில் ‘என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்பார். அவருக்கு இயற்கையாகவே தமிழ் மொழியின் மீது பற்றும் ஆர்வமும்  இருந்ததால் அவர் தானும் பல தமிழ் நூல்களை வாசித்து தன் தமிழறிவை வளர்த்துக்கொண்டார். படித்த தமிழறிஞர்களிடமும் பலவற்றை கேட்டறிந்தார், அவர் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கி.ஆ.பெ. விசுவநாதம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் பன்மொழிப்புலவர் தேவநேயப்பாவாணர் போன்ற தமிழறிஞர்களை கௌரவித்து மணிமண்டபங்கள் எழுப்பினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் இறந்து ஒரு மாதத்துக்குள் அவருக்குச் சிலை வைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு சிலை பணிகள் துரிதமாக நடந்தன. தெ பொ மீ அவர்களின் தமையனார் சதாவதானி தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலரின் பதி பக்தி மேடை நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். அது திரைப்படமாக இருந்த சமயத்திலும் எம்.ஜி.ஆர் அதில் நடிப்பதாக இருந்தது. ஆக அவர்கள் குடும்பத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நீண்ட நாள் தொடர்பு சிலை தொடர்பான பணிகளை விரைவுபடுத்தியது. எம்.ஜி.ஆர் தன் பதவிக் காலத்தில் தமிழ்த்தொண்டு செய்த பெருமக்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 2% ஒதுக்கீடு வழங்கினார். 

1981இல் தன் தொகுதியான மதுரை மேற்கில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். அதன் தொடக்க விழாவில் சிறிய பெரிய என அனைத்துக் கட்சித் தலைவர்களும் சிறப்புரையாற்றி அந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்தார். அப்போது பொதுமக்களும் இம்மாநாட்டில் பங்கேற்று மகிழும் வகையில் அவர்கள் கண்டும் கேட்டும் ரசிக்க முத்தமிழ் அரங்கங்களையும் மாபெரும் பொருட்காட்சி ஒன்றையும் நடத்தினார். பல்கலைக்கழகத்தில் கருத்தரங்குகளில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி விவாதங்கள் நடத்தினர். 
மதுரை மேற்கில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜனவரி ஒன்று முதல் பத்து நாள்கள் வரை தமிழகத்து மக்கள் இலட்சக் கணக்கானோர் தமிழில் தலை சிறந்த பேச்சாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் நடத்திய கவியரங்கம், பட்டி மன்றம், நாட்டிய நாடகம், இன்னிசை கச்சேரி போன்றவற்றை கண்டும் கேட்டும் ரசித்தனர்.

எம்.ஜி.ஆர் வேறு எந்த ஆட்சியிலும் வேறு எந்த முதல்வரும் தமிழுக்குச் செய்யாத ஒன்றை தம் ஆட்சியில் செய்தார். அதுதான் தஞ்சையில் தமிழுக்கென்று ஆயிரம் ஏக்கர் பரப்பில் தமிழாராய்ச்சிக்கென்று அவர் தொடங்கிய தமிழ்ப் பலகலைக்கழகம் ஆகும். ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த முதல்வர்கள் அவரது நோக்கத்தை பாழ்படுத்திவிட்டனர். இப்பல்கலை உலகத்தரத்துக்கு உயர்ந்திருக்க வேண்டிய ஓர் அமைப்பாகும். 

மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் சிறப்புற நடத்தினார். அவர் ஆட்சிக்காலத்தில் இன்னும் பல வகையில் அவர் தமிழுக்கும் தமிழ்ப் பெரியோருக்கும் உதவினார்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பியிருந்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் தன் படத்தில் குழந்தை ரசிகர்களுக்காக தனிக் காட்சிகளும் பாடல்களும் காமெடியன் செய்யும் சில வேடிக்கை சண்டைகளும் வைத்திருப்பார். தனது தத்துவப்பாடல்களை அவற்றின் பல்லவியை இரண்டு வயது நிரம்பிய குழந்தை பாடும்படியாக எளிமையாக எழுத வேண்டும் என்பார். என் அண்ணனுக்கு ஒன்பது குழந்தைகளைக் கொடுத்த இறைவன் எனக்கு ஒரு குழந்தை கூட கொடுக்கவில்லையே என்று வசன கர்த்தா அரூர் தாசிடம் கவலைப்பட்ட எம்.ஜி.ஆர் சிறு குழந்தைகள் தன் வீட்டில் வந்து விளையாடுவதை பெரிதும் விரும்பினார். குழந்தைகள் நல்ல பண்புடனும் பழக்க வழக்கத்துடனும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான் முதல்வரானதும் குழந்தைகளுக்காக நல்ல பல திட்டங்களை அறிமுகம் செய்தார்.

ஆட்சியிலும் சோறு போட்ட எம்.ஜி.ஆர் 

ஏழு வயதில் சாப்பாட்டுக்கு வழியின்றி நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்த எம்.ஜி.ஆர் அந்த நிலைமை தமிழகக் குழந்தைகளுக்கு வரக் கூடாது என்று விரும்பினார். காமராஜரை தன் தலைவராகவும் அண்ணாவை தன் வழிகாட்டியாகவும் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் காமராஜர் கொண்டுவந்த பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவுத் திட்டமாக அறிவித்தார். காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டத்தில் குழம்பு,கறிகாய் போன்றவை கிடையாது. அது பசிக்கான உணவு மட்டுமே. ஆனால் ஆரம்பம் முதல் தன் வாழ்வில் உடல் நலம் உடல் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டி வந்த எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் அவர்களின் உடல்நலனைக் காக்கும் சத்துகள் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இத்திட்டத்தில் சோறு, பருப்பு, காய்கறி, கீரை ஆகிய அனைத்தும் கலந்து சமவிகித உணவாக வழங்கப்பட்டது. 

எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பிறந்த நான்கு மாதக் குழந்தை முதல் பதினேழு வயது மாணவர்கள் வரைக்குமாகச் சேர்த்து திட்டமிடப்பட்டது. நான்கு மாதக் குழந்தைக்குச் சத்துணவு மாவு உருண்டை காலை பதினோரு மணிக்கு வழங்கப்படும் அதை தாய்மார் வந்து வாங்கி குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சத்துமாவு பாக்கெட்டுகளைத் தாய்மாரிடம் வீட்டுக்குச் சத்துணவு ஆயாமார் கொடுத்துவிடுகின்றனர். காமராஜர் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கிய இத்திட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலணி மற்றும் சீருடை என எம்.ஜி.ஆர் குழந்தைகள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்டுப் போயிருந்தபோது அதிகாரிகள் காலம் தாழ்த்தினர் உடனே கோபப்பட்டு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவிட்டார். இவர்கள் கொடுக்காவிட்டால் நாம் வீட்டுக்கு ஒரு ரூபாய் என வசூலித்து இத்திட்டத்தைக் கொண்டுவருவோம் என்றார். அதன்பிறகு அவரைச் சமாதானப்படுத்தி பிரதமரின் உதவியாளர் எம்.ஜி.ஆரை அழைத்து நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்தத் துணிச்சல் எம்.ஜி.ஆர் கூடப் பிறந்தது ஆகும். அவர்  தான் செய்ய நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செய்து வெற்றி பெறுவார். 

தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறிய போது அரசு அதிகாரிகள் அரசிடம் அவ்வளவு நிதி இல்லை என்றனர். உடனே எம்.ஜி.ஆர் கோபத்துடன் உங்கள் நிதியே தேவையில்லை என் மக்களிடம் நிதி பெற்று நான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்றார். உடனே சத்துணவு நிதி ஒன்றை அறிவித்தார். நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவின. அவரை வளர்த்துவிட்ட திரையுலகினர் முதலில் உதவ முன்வந்தனர். பின்பு தொழிலதிபர்கள் வந்தனர். பலர் தம் ஒரு நாள் சம்பளத்தை ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து உதவினர். இது உலகுக்கே ஒரு முன்னோடி திட்டமாக உருவாயிற்று. 

கல்வித் திட்டம் 

சர்வதேசப் பொருளாதாரக் கொள்கை காரணமாக தனியார்மயமாக்கல் விரைந்து வந்ததால் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக் கல்வி வழங்குவதற்கான வாய்ப்பும் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைந்தது. தன்னிடம் வந்து வேலூர் மாவட்ட மாணவர்களுக்குப் படிக்க கல்லூரிகள் இல்லை. அரசு ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அவரது அமைச்சர் விசுவநாதன் கேட்டார் உடனே எம்.ஜி.ஆர் நீங்களே ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள். இந்த அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி அகாடமி. எம்.ஜி.ஆர் ஆதரவுடன் பல அதிமுக கட்சியினர் பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கல்லூரிகளையும் சுயநிதி கல்லூரிகளையும் தொடங்கி நடத்தினர். இவற்றில் எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீட்டைப் கேட்டுப் பெற்றார். மற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டம் இயற்றினார். ஏழை மாணவர்கள் இலவசத் தொழிற்கல்வி பெற்றனர். இவை இன்று சர்வதேச தரத்துடன் பல்கலைக்கழகங்களாக வெளிநாட்டு மாணவர்களும் வெளி மாநில மாணவர்களும் படிக்கும் கலாலயமாக திகழ்கின்றன]. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது தொழில் பயிற்சி அல்லது வேலை வாய்ப்புள்ள தொழிற்படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தனர். எம்.ஜி.ஆரின் குழந்தை நலத்திட்டம் அவரது ஆட்சியில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்

நிறைவு

எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் சொல்லிய விஷயங்களும் அவர் ஆட்சியில் அவர் அறிமுகம் செய்த திட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்ததனால் இன்றளவும் அவரை மக்கள் மறக்கவில்லை. அவரது ஒரிஜினல் முகமும் ஒப்பனை முகமும் அதிக வித்தியாசமின்றி ஒரே மாதிரி இருக்கும்படி அவர் ஆரம்பத்தில் கவனித்துக்கொண்டார். இது காலப்போக்கில் அவருக்கு மாபெரும் புகழையும் வெற்றியையும் தரும் அம்சமாக மாறிவிட்டது. இந்த ஒற்றுமை தொடக்கத்தில் அவர் மக்கள் மத்தியில் புகழ் பெற உதவியது;  இந்தப் புகழே அவர் முதல்வரானதும் சினிமாவில் சொன்னபடி மாற்றங்களைக் கொண்டுவரவும் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஊக்கமளித்தது. 

 

எம்.ஜி.ஆர் தன் திரையுலகப் பயணம் முடிந்ததும் ஆன்மிக வாழ்வில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்த வேளையில் அவர் செய்து வரும் உதவிகளால் மகிழ்ந்திருந்த மக்கள் அவரை அரசியலுக்குள் கொண்டுவந்தனர். இது புலிவால் பிடித்த கதையாகிவிட்டது. அவராக உதவிகள் செய்த காலம் மாறி அவர் கண்டிப்பாக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும் அவர் வகித்த முதல்வர் பதவியால் ஏற்பட்டது. அவர் மக்கள் மீது கொண்டிருந்த மாறாத அன்பினால் இந்தக் கட்டாயத்துக்குப் பணிந்தார். இந்த அன்பு ஆணிவேராக இருந்ததால் அவருடைய உழைப்பும் அறிவும் திட்டமிடலும் அவரை வெற்றித் திருமகனாக உயர்த்தியது.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/110418-mgr-series-last-episode.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.