Jump to content

பாகிஸ்தான் எதிர் இலங்கை டெஸ்ட் போட்டி தொடர்


Recommended Posts

கருணாரத்னவின் அபார சதத்தோடு முதல் நாளில் இலங்கை அணி ஆதிக்கம்
Chandimal-3.jpg

கருணாரத்னவின் அபார சதத்தோடு முதல் நாளில் இலங்கை அணி ஆதிக்கம்

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நிறைவில் திமுத் கருணாரத்ன பெற்றுக்கொண்ட அபார சதத்துடன் முதல் நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில் காணப்படுகின்றது.

முதற்தடவையாக இலங்கை அணி பங்கேற்கும் பகலிரவு ஆட்டமான இந்த டெஸ்ட் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதன்படி இரண்டு மாற்றங்களுடன் இலங்கை அணி இப்போட்டியில் களமிறங்கியிருந்தது. அறிமுக வீரர்களான சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு கமகே ஆகிய வீரர்கள் அணியில் உள்வாங்கப்பட லஹிரு திரிமான்ன மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். மறுமுனையில் பாகிஸ்தான் அணி காயமடைந்த ஹசன் அலிக்கு பதிலாக வஹாப் ரியாசை அணிக்கு அழைத்திருந்தது.

தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கெளஷால் சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் அணிக்கு ஒரு உறுதியான அடித்தளம் ஒன்றை அமைக்க முயற்சி எடுத்திருந்தனர். எனினும் இலங்கை அணி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கெளஷால் சில்வா பாகிஸ்தானின் சுழல் வீரர் யாசிர் ஷாஹ்வின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் சர்பராஸ் அஹ்மட் இடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் உறுதியான ஆரம்பம் கைகூடியிருக்கவில்லை. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பறிபோயிருந்த கெளஷால் சில்வா 27 ஓட்டங்களைப் பெற்று இத்தொடரில் மீண்டும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தார்.

சில்வாவை அடுத்து தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் சதீர சமரவிக்ரம களம் நுழைந்து திமுத் கருணாரத்ன உடன் சேர்ந்து ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார். இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் போட்டியின் தேநீர் இடைவேளை வரை அணியை வலுப்படுத்தினர். திமுத் கருணாரத்ன தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக தனது 14 ஆவது அரைச் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார்.

 

இரு அணி வீரர்களுக்கும் இந்த இடைவேளையில் வழங்கப்பட்ட ஓய்வினை அடுத்து போட்டி தொடர்ந்தது. சற்று வேகமாக துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சதீர சமரவிக்ரம போட்டியின் 37ஆவது ஓவரில் பாகிஸ்தானின் மொஹமட் அமீர் வீசிய பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து இலங்கையின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். சதீர சமரவிக்ரமவின் இந்த விக்கெட்டினால் இலங்கையின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் 68 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

ஆட்டமிழக்கும் போது சதீர 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 38 ஓட்டங்களைக் குவித்து நல்லதொரு கன்னி இன்னிங்சை வெளிக்காட்டியிருந்தார்.

சதீரவை தொடர்ந்து மைதானம் விரைந்த குசல் மெண்டிஸ் வெறும் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை திரும்பி முதலாவது டெஸ்ட் போட்டி போன்று இம்முறையும் மோசமான ஆட்டத்தை காண்பித்திருந்தார்.

கௌஷால் சில்வாவின் விக்கெட்டை அடுத்து இரண்டு விக்கெட்டுகள் விரைவாக பறிபோனமையால் ஒரு பதட்டத்தை உணர்ந்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் நிதானமான முறையில் செயற்படத் தொடங்கினர். இதனால் போட்டியின் இராப்போசணம் வரை இலங்கை அணியில் மேலதிக விக்கெட் ஒன்று பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டது.

போட்டியின் இராப்போசணத்தின் பின் தொடர்ந்த ஆட்டத்தில் திமுத் கருணாரத்ன தனது ஏழாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததோடு, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கைக்காக சதம் கடந்த முதல் வீரராகவும் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

நீண்ட இணைப்பாட்டம் ஒன்றாக மாற ஆரம்பித்த இந்த இரண்டு வீரர்களதும் விக்கெட்டுகளை வீழ்த்துவது பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக அமைந்திருந்தது. போட்டியில் தொடர்ந்து எடுக்கப்பட்ட புதிய பந்தில் தினேஷ் சந்திமாலின் விக்கெட்டுக்காக ஒரு ஆட்டமிழப்பை மொஹமட் அப்பாஸ் வீசிய 89 ஆவது ஓவரின் போது பாகிஸ்தான் வீரர்கள் தொலைக்காட்சி நடுவரிடம் கோரியிருந்த போதும் அது நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து போட்டியின் முதல் நாள் முடிவில் சந்திமால் மற்றும் கருணாரத்ன ஆகியோரின் உறுதியான இணைப்பாட்டத்துடன் (118*) தமது முதல் இன்னிங்சுக்காக இலங்கை அணியானது 90 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களுடன் சிறப்பான நிலை ஒன்றை அடைந்தது.

திமுத் கருணாரத்ன 133 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 49 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட யாசிர் ஷாஹ் இரண்டு விக்கெட்டுகளை இன்றைய நாளில் சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 254/3 (90) – திமுத் கருணாரத்ன 133*(281), தினேஷ் சந்திமால் 49*(153), சதீர சமரவிக்ரம 38(35), யாசிர் ஷாஹ் 90/2 (29.3)

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

திமுத்துவின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் வலுவான நிலையில் இலங்கை

 

 

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 482 ஓட்டங்களைப்பெற்று வலுவான நிலையிலுள்ளது.

gagde.jpg

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.

268795.jpg

முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரில் 1-0 என முன்நிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 2 ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தடத் தீர்மானித்தது.

22279504_10159771157020019_6954272660497

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்களைக் குவித்தது.

இப் போட்டி இலங்கை அணிக்கு முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

268805.jpg

இப் போட்டியில் இலங்கை அணிசார்பாக துடுப்பெடுத்தாடிய திமுத்து கருணாரத்ன இரட்டைச் சதம் பெறும் வாய்ப்பை 4 ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் 196 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது வகாப் ரியாஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

268816.jpg

அணித்தலைவர் சந்திமல் 62 ஓட்டங்களையும் டிக்வெல்ல 52 ஓட்டங்களையும் டில்ருவான் பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை இன்றை 2 ஆம் நாள் ஆட்டத்தின் இரவுணவின் பின்னர் அடைந்தது.

268819.jpg

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் யசீர் ஷா 6 விக்கெட்டுகளையும் மொஹமட் அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் இன்றைய 2 ஆம்நாள் ஆட்டத்தின் இரவு உணவு வேளையின் பின்னர் தனது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் ஷான் மஷூட் 15 ஓட்டங்களுடனும் சமி அஸ்லம் 30 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர். நாளை போட்டியில் 3 ஆம் நாளாகும்.

http://www.virakesari.lk/article/25452

Link to comment
Share on other sites

இலங்கை பந்து வீச்சாளர்களால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான்

azhar-696x463.jpg
 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டிய இலங்கை வீரர்கள் பாகிஸ்தானின் முதல் இன்னிங்சை 262 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளனர்.

போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணியானது முதல் இன்னிங்சை வலுவான ஓட்டங்களுடன் (482) நிறைவு செய்த பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த  பாகிஸ்தான் போட்டியின் ஆட்ட நேர முடிவில் உறுதியான ஆரம்பம் ஒன்றை வெளிக்காட்டி 18 ஓவர்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 51 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. மைதானத்தில் சமி அஸ்லம் 30 ஓட்டங்களுடனும் ஷான் மசூத் 15 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

 

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை இலங்கையின் முதல் இன்னிங்சை எட்டும் எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி இலங்கையின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே போட்டியின் 24ஆவது ஓவரில் அதிர்ச்சியூட்டினார். இதனால் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் 61 ஓட்டங்களோடு நிறைவுக்கு வந்ததுடன் முதல் விக்கெட்டாக ஆரம்ப வீரர் ஷான் மசூத் 16 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியிருந்தார்.

இதனையடுத்து போட்டியின் அடுத்த ஓவரில் தில்ருவான் பெரேரா மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சமி அஸ்லமையும் LBW முறையில் வீழ்த்தியிருந்தார். பாகிஸ்தான் இந்த விக்கெட்டுக்காக மூன்றாம் நடுவரின் உதவியை நாடிய போதும் அது அவர்களுக்கு பிரயோஜனம் எதனையும் தரவில்லை. இதனால் சமி அஸ்லம் 39 ஓட்டங்களுடன் தனது இன்னிங்சை முடிக்க வேண்டி ஏற்பட்டது.

அடுத்து பாகிஸ்தானுக்காக துடுப்பாட்டத்தை முன்னெடுக்க வந்த வீரர்களான அசாத் சபீக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஏமாற்றமான  ஆட்டத்தை வெளிக்காட்டி மைதானத்தில் நீண்ட நேரம் நீடிக்காது போயிருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 109 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான தருணத்தில் ஜோடி சேர்ந்த அசார் அலி மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் நிதானமான முறையில் இலங்கை பந்து வீச்சாளர்களை கையாண்டு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினர். மெதுவான முறையில் கட்டியெழுப்பப்பட்ட இவர்களது இணைப்பாட்டம் போட்டியின் தேநீர் இடைவேளை வரையும் நீடித்தது.

தேநீர் இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் உறுதியான முறையில் பாகிஸ்தான் ஓட்டங்களை சேர்த்தது. இதில் அசார் அலி தனது 27 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்து அணியை வலுப்படுத்தியிருந்தார். இலங்கை பந்து வீச்சாளர்களுக்கும் போட்டியின் இந்த இடைவெளியில் விக்கெட் ஒன்றைக் கைப்பற்றுவது சிரமமாக அமைந்திருந்தது.

போட்டியின் இராப்போசண இடைவேளைக்கு முன்னதாக இலங்கை அணிக்கு தேவையாக காணப்பட்டிருந்த பாகிஸ்தானின் விக்கெட்டை போட்டியின் 72ஆவது ஓவரில் ரங்கன ஹேரத் மூன்றாம் நடுவரின் உதவியோடு கைப்பற்றியிருந்தார். இதனால், பாகிஸ்தானின் ஐந்தாம் விக்கெட்டாக அசார் அலி மைதானத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டதுடன் வலுவான இணைப்பாட்டம் ஒன்றும் 71 ஓட்டங்களுடன் முடிவடைந்தது. ஆட்டமிழக்கும் போது அசார் அலி 128 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் இராப்போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் மத்திய வரிசை மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டியது. பாகிஸ்தானின் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும் வெறும் 12 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்து ஏமாற்றியிருந்தார். சர்பராஸ் அஹ்மட்டின் விக்கெட்டை அடுத்து பாகிஸ்தானின் இறுதி நம்பிக்கையாக காணப்பட்ட ஹரிஸ் சொஹைலும் தில்ருவான் பெரேராவினால் போட்டியின் 83ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டார். சொஹைலை அடுத்து பாகிஸ்தானுக்கு பின்வரிசை வீரர்கள் துரித கதி துடுப்பாட்டம் மூலம் சிறிது நேரம் உதவினர். முடிவில் 90.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 262 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஹரிஸ் சொஹைல் 135 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

 

இலங்கை அணியின் பந்து வீச்சில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பான முறையில் செயற்பட்டிருந்தனர். இதில் சுழல் வீரர்களான ரங்கன ஹேரத் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியதுடன், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து 220 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்தது. சவாலான இலக்கு ஒன்றை எதிரணிக்கு வைக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் இந்த இன்னிங்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கெளஷால் சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகிய இருவரும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இரையாகியிருந்தனர். மூன்றாம் இலக்கத்தில் ஆடவந்த சதீர சமரவிக்ரமவும் பிரகாசிக்கவில்லை. இதனையடுத்து சுழல் வீரர் யாசிர் ஷாஹ்வினாலும் இலங்கை அணியின் நான்காம் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதனையடுத்து மைதானம் விரைந்த இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் ஓட்டமேதுமின்றி வெளியேறினார்.

இதனால் தடுமாற்றமான ஆரம்பம் ஒன்றைக் காட்டிய இலங்கை அணி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 14.3 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களுடன் காணப்பட்டு பாகிஸ்தானை விட 254 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது. களத்தில் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களுடன் நிற்கின்றார்.

15 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட இன்றைய நாளில் இலங்கை அணிக்கு இரண்டாம் இன்னிங்சில் அச்சுறுத்திய வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி நல்லதொரு ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்தது இலங்கை ; வெற்றி யாருக்கு ?

 

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 317 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.

pakistan.jpg

பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டுமாயின் தற்போது கைவசம் 10 விக்கெட்டுகளும் இன்றைய நாளைத் தவிர மேலும் ஒரு நாளும் மீதமுள்ள நிலையில் இப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற தொடரை சமப்படுத்துமா அல்லது இலங்கை அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுமா என பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

http://www.virakesari.lk/article/25520

Link to comment
Share on other sites

சபீக், சர்பராஸ் ஆகியோரின் போராட்டத்தால் பாகிஸ்தான் உயிர்ப்பான நிலையில்

 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் (9) நிறைவில் அசாத் சபீக் மற்றும் சர்பராஸ் அஹ்மட் ஆகியோரின் வலுவான இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தான் தமது வெற்றி இலக்கான 317 ஓட்டங்களை அடையும் பயணத்தில் ஒரு சிறந்த நிலையில் காணப்படுகின்றது.

 

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது இரண்டாவது இன்னிங்சில் வஹாப் ரியாஸின் அதிரடிப்பந்து வீச்சினால் இலங்கை அணி 14.3 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களைப்பெற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டிருந்தது. களத்தில் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களுடன் நின்றிருந்தார்.

போட்டியின் நான்காம் நாளில் பாகிஸ்தானை விட 254 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சை இலங்கை ஆரம்பித்தது.

மூன்றாம் நாள் போன்று அல்லாது இன்றைய நாளில் சிறந்ததொரு துடுப்பாட்டத்தை எதிர்பார்த்த இலங்கை அணியை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தனர்.

ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த நிரோஷன் திக்வெல்ல நல்லதொரு ஆரம்பத்தைக் காட்டியிருப்பினும் வஹாப் ரியாஸின் வேகத்துக்கு இரையாகி 21 ஓட்டங்களுடன்  மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார்.  

திக்வெல்லவை அடுத்து தில்ருவான் பெரேரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே யாசிர் ஷாஹ்வினால் LBW முறையில் வீழ்த்தப்பட்டார். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை அணி 60 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து மிகவும் மோசமான நிலைக்கு மாறியது.

இலங்கை அணி மிகவும் இக்கட்டான நிலையில் காணப்பட்ட காரணத்தினால் எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்கும் நோக்கோடு களத்தில் நின்ற குசல் மெண்டி மற்றும் ரங்கன ஹேரத் துரித கதியிலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

35 ஓட்டங்கள் வரையில் நீடித்த இவர்களின் இணைப்பாட்டம் இந்த இன்னிங்சின் 26ஆவது ஓவரை வீசிய ஹரிஸ் சொஹைலின் சுழலினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அணியின் 8ஆவது விக்கெட்டாக ரங்கன ஹேரத் 17 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். ஹரிஸ் சொஹைல் இலங்கையின் இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் அதே ஓவரிலேயே வீழ்த்த முடிவில் இலங்கை அணி 26 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களை 4 பவுண்டரிகள் அடங்கலாக பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில், வஹாப் ரியாஸ் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஹரிஸ் சொஹைல் வெறும் ஒரு ஓட்டத்துக்கு 3 விக்கெட்டுகளையும், யாசிர் ஷாஹ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

 

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 317 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனைப் பெற பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்சை ஷான் மசூத் மற்றும் சமி அஸ்லம் ஆகிய தொடக்க வீரர்களுடன் பாகிஸ்தான் ஆரம்பித்தது.

பாகிஸ்தானின் இரண்டாம் இன்னிங்சின் முதல் ஓவரிலேயே விக்கெட் ஒன்று இலங்கை அணிக்கு சுரங்க லக்மாலின் ஓவரின் மூலம் கிட்டியிருந்தது. எனினும் மூன்றாம் நடுவரின் தலையீட்டினால் அந்த ஆட்டமிழப்பு நிராகரிக்கப்பட்டது.

எனினும் நான்காவது ஓவரில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே  குசல் மெண்டிசின் அருமையான பிடியெடுப்போடு பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இதனால், ஒரு ஓட்டத்துடன் சமி அஸ்லம் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பதற்றமான ஆரம்பத்தைக் காட்டிய பாகிஸ்தான் தொடர்ந்து போட்டியின் தேநீர் இடைவேளை வரை நிதானமாக ஆடி மேலதிக விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தது.

தேநீர் இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அசார் அலியின் விக்கெட்டை நுவன் பிரதீப் கைப்பற்றியிருந்தார். இதனால் அசார் அலியின் இன்னிங்ஸ் 17 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.

மேலும் தில்ருவான் பெரேரா இந்த இடைவெளியில் பாகிஸ்தானுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத் உடன் சேர்த்து முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான ஹரிஸ் சொஹைல் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பிரகாசிக்காத நிலையில் பெரேராவினால் வீழ்த்தப்பட்டிருந்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறியிருந்தது. இதன் போது களத்தில் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் மற்றும் அசாத் சபீக் ஆகிய வீரர்கள் நின்றிருந்தனர்.

இரண்டு வீரர்களும் தமது அணிக்கு ஏற்பட்ட அழுத்தங்களை கருத்திற்கொண்டு பொறுமையான முறையில் ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினர்.  இதன் காரணமாக பாகிஸ்தான் அணி இராப்போசணம் வரை மேலதிக விக்கெட் எதனையும் பறிகொடுக்கவில்லை.

போட்டியின் இராப்போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இரண்டு வீரர்களும் சிறப்பான முறையில் செயற்பட்டு ஆறாம் விக்கெட்டுக்காக 146 ஓட்டங்களை போட்டியின் ஆட்ட நேர நிறைவு வரை பகிர்ந்திருந்தனர். இவர்களது இந்தபோராட்டமான இணைப்பாட்ட உதவியினால் பாகிஸ்தான் அணி போட்டியின் நான்காம் நாள் நிறைவில் 73 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அத்தோடு பாகிஸ்தான் அணிக்கு இன்னும் வெற்றி பெற 119 ஓட்டங்களே தேவையாக உள்ளது.

அரைச்சதங்களை பூர்த்தி செய்தவாறு காணப்படும் அசாத் சபீக் 86 ஓட்டங்களுடனும், சர்பராஸ் அஹ்மட் 57 ஓட்டங்களுடனும் களத்தில் காணப்படுகின்றனர்.

போட்டியின் இறுதி இடைவெளியில் விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற முடியாத இலங்கை அணியின் பந்துவீச்சில் தில்ருவான் பெரேரா முன்னர் சிறப்பாக செயற்பட்டு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 482 (159.2) – திமுத் கருணாரத்ன 196(405), தினேஷ் சந்திமால் 62(195), தில்ருவான் பெரேரா 58(76), நிரோஷன் திக்வெல்ல 52(53), சதீர சமரவிக்ரம 38(35), யாசிர் ஷாஹ் 184/6(55.5), மொஹமட் அப்பாஸ் 100/2(33)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 262 (90.3) – அசார் அலி 59(128), ஹரிஸ் சொஹைல் 56(135), சமி அஸ்லம் 39(71), தில்ருவான் பெரேரா 72/3(26), ரங்கன ஹேரத் 84/3(23), சுரங்க லக்மால் 41/2 (17.3), லஹிரு கமகே 38/2 (15)

இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ் ) – 96 (26) – குசல் மெண்டிஸ் 29(49), நிரோஷன் திக்வெல்ல 21(21), வஹாப் ரியாஸ் 41/1, ஹரிஸ் சொஹைல் 1/3, யாசிர் ஷாஹ் 47/2

பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 198/5 (73) – அசாத் சபீக் 86*(141), சர்பராஸ் அஹ்மட் 57*(113), தில்ருவான் பெரேரா 76/3(21)

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை  வெள்ளையடிப்புச் செய்து இலங்கை சாதனை

 

 

பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-0 என வெள்ளையடிப்புச் செய்த இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில்  சாதனையையும் படைத்துள்ளது.

268839.jpg

பிங் நிறப்பதில் விளையாடிய முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி  வெற்றிபெற்று தனது டெஸ்ட் அந்தஸ்தை நிருபித்தது.

இதுவேளை, டுபாயில் வைத்து பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்து வெற்றிபெற்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

268867.jpg

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் இடம்பெற்றது.

இந்நிலையில் அபுதாபியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்தது.

268868.jpg

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2-0 என பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வெள்ளையடிப்புச் செய்து சாதனை படைத்தது.

268869.jpg

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில்  5 ஆவதும் இறுதியுமான இன்றைய நாளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 5 விக்கெட்டுகள் மீதமிருக்க 119 ஓட்டங்கள் பெறவேண்டிய தேவை இருந்தது.

268876.jpg

இலங்கை அணி, துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் பாகிஸ்தான் அணிகளின் விக்கெட்டுகளை சாய்த்து 68 ஓட்டஙகளால் வெற்றிபெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த்து.

அந்தவகையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்களைப்பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத்து கருணாரத்ன 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

268877.jpg

பந்த வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யஷீர் ஷா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று 218 ஓட்டங்களால் பின்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசார் அலி 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா மற்றும் ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 218 ஓட்டங்களால் முன்னிலைபெற்ற இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களை தாக்குப்பிடிக்கத் தடுமாறிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணிசார்பாக வகாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 317 ஓட்­டங்­கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டி­ய பாகிஸ்தான் அணி இன்றைய 5 ஆம் நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைப்பெற்று 68 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

268878.jpg

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசாத் சௌபீக் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானுக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி டுபாயில் வைத்து பாகிஸ்தானை வெற்றிகொண்டு சாதனையை நிலைநாட்டியது.

 

இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இலங்கை அணியின் திமுத்து கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சந்திமல் தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி சொற்ப காலத்தில் மீள் எழுச்சிபெற்று இலங்கை அணி ரசிகர்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் வலுச்சேர்த்துள்ளது.

http://www.virakesari.lk/article/25559

Link to comment
Share on other sites

 தில்ருவான் பெரேராவின் அதிரடி சுழலினால் டெஸ்ட் தொடர் இலங்கை வசம்
SL vs PAK - 2nd Test - Day 5

தில்ருவான் பெரேராவின் அதிரடி சுழலினால் டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

 
 
  
 

இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியுள்ளதுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 என வைட் வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், இலங்கை அணியினால் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 317 ஓட்டங்களைப் பெற தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த பாகிஸ்தான் அணி 73 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் நான்காம் நாளில் தமது அணியினை உயிர்ப்பாக வைத்திருக்க சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை (146*) வழங்கிய பாகிஸ்தானின் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் 57 ஓட்டங்களுடனும் அசாத் சபீக் 86 ஓட்டங்களுடனும் களத்தில்  ஆட்டமிழக்காது இருந்தனர்.

இப் போட்டியில் வெற்றி பெற மேலதிகமாக 119 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ஆட்டத்தின் தீர்மானமிக்க இறுதி நாளில் தமது இரண்டாம் இன்னிங்சினை தொடர்ந்தது.

பாகிஸ்தான் இன்றைய நாளின் ஆரம்பத்தில் விரைகதியில் ஓட்டங்களை சேர்த்து சவாலான இலக்கினை அடைய முயற்சி செய்திருந்தது. எனினும், போட்டியின் 79ஆவது ஓவரில் தனது சிறப்பான சுழல் மூலம் தில்ருவான் பெரேரா பாகிஸ்தான் அணிக்கு தடுப்பு ஒன்றினை போட்டிருந்தார்.

பெரேராவின் ஓவரில் பெளண்டரி ஒன்றினை எதிர்பார்த்து சர்பராஸ் அஹ்மட்டினால் அடிக்கப்பட்ட பந்து நுவன் பிரதீப்பினால் அழகிய முறையில் பிடியெடுக்கப்பட்டது. இதனால், இன்றைய நாளின் முதல் விக்கெட்டாகவும் பாகிஸ்தானின் ஆறாவது விக்கெட்டாகவும் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஓய்வறை திரும்ப வேண்டி ஏற்பட்டது. சர்பராஸ், ஆட்டமிழக்கும் போது தனது 14ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன் மொத்தமாக 130 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் சர்பராஸ் அஹ்மட்டின் இந்த விக்கெட்டோடு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கெதிராக பாகிஸ்தான் வீரர்கள் ஆறாவது விக்கெட்டுக்காக பதிந்த அதிகூடிய இணைப்பாட்டமும் (173) முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானின் பெரும் நம்பிக்கையாக காணப்பட்ட இந்த இரண்டு வீரர்களினதும் இணைப்பாட்டம் நிறைவுக்கு வர பெரும் அழுத்தங்களுடன் அவ்வணியினர் தொடர்ந்து துடுப்பாட தொடங்கினர். எனினும் பாகிஸ்தான் அணிக்கு களத்தில் நின்ற அசாத் சபீக் தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்து இறுதி நம்பிக்கையாக காணப்பட்டிருந்தார்.

இவ்வாறானதொரு தருணத்தில் இலங்கை அணிக்கு மீண்டும் ஒரு விக்கெட்டினை கைப்பற்றி தில்ருவான் பெரேரா பெறுமதி சேர்த்திருந்தார்.இந்த இன்னிங்சின் 80 ஆவது ஓவரின் பின்னர் எடுக்கப்பட்ட புதிய பந்து மூலம் இம்முறை தில்ருவான் பெரேராவினால் மொஹமட் அமீர் 4 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி அனுப்பட்டிருந்தார். பாகிஸ்தான் இந்த ஆட்டமிழப்புக்கு மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருந்த போதும் அது கைகொடுத்திருக்கவில்லை.

அவரை அடுத்து அசாத் சபீக்குடன் பின்வரிசை துடுப்பாட்ட வீரரான யாசிர் சாஹ் சிறிது நேரம் போராட்டத்தினை வெளிப்படுத்த முயன்றிருந்தார். எனினும், சுழல் வீரர் ரங்கன ஹேரத்தை தாண்டி அவரால் போராட்டத்தை காண்பிக்க முடியாது போனது.

பாகிஸ்தானின் இறுதி நம்பிக்கையாக காணப்பட்ட அசாத் சபீக்கும் சுரங்க லக்மால் மூலம் வீழ்த்தப்பட முடிவில், 90.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பாகிஸ்தான் 248 ஓட்டங்களை மாத்திரம் தம்முடைய இரண்டாம் இன்னிங்சில் பெற்று இலங்கையிடம் தோல்வியினை தழுவியது.

தாம் பங்குபற்றிய முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி மூலம் பாகிஸ்தானின் இரண்டாம் தாயகமாக கருதப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் டெஸ்ட் தொடரொன்றில் பாகிஸ்தானை வீழ்த்திய முதலாவது அணியாக இலங்கை அரிய சாதனை ஒன்றினையும் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் போராட்டத்தினை காட்டியிருந்த அசாத் சபீக் 176 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா மொத்தமாக 98 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, ரங்கன ஹேரத்தும் இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்து தமது அணி பிரபல்யமான வெற்றியொன்றினை அடைய பங்காற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் முதலாம் இன்னிங்சில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது.

இலங்கை அணியனர் தமது ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் பயணத்தில் அடுத்த கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுடன் மோதுகின்றனர். முதல் போட்டி வெள்ளிக்கிழமை (13) இதே மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

ஸ்கோர் விபரம்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.