Jump to content

அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம்


Recommended Posts

அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம்

 

தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக – முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.  தெரி­வித்­தார்.

தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம், பொது வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெறக்­கூ­டிய சூழல் இருக்­கு­மா­யின் நாம் அந்­தச் சந்­தர்­பத்தை விட முடி­யாது. நிதா­ன­மாக – பக்­கு­வ­மாக விட­யங்­க­ளைக் கையாள வேண்­டும். வாயைப் பொத்­திக் கொண்டு விட­யங்­களை நகர்த்த வேண்­டும்.

அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வு­டன் பேசி­னேன். தமிழ் மக்­க­ளின் தீர்­வுக்கு பல்­வேறு உறு­தி­களை இந்­தி­யா­வுக்கு நீங்­கள் (மகிந்த) வழங்­கி­னீர்­கள் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னேன். அத­னைச் செய்­ய­வில்லை என்­ப­தை­யும் கூறி­னேன்.
தமிழ் மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பெற்­றுக் கொடுக்க வேண்­டிய பெரும் பொறுப்பு இந்­தி­யா­வுக்கு இருக்­கின்­றது. இந்­தியா எங்­க­ளைக் கைவிட முடி­யாது. கைவி­ட­வும் மாட்­டாது.

13ஆவது திருத்­தச் சட்­டத்­தில் எமக்கு உடன்­பாடு இல்­லை­யா­யி­னும், அதை முற்­றாக நிரா­க­ரிக் முடி­யாது. அது எமக்­கான இறு­தித் தீர்­வும் அல்ல. புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சி­யைக் கைவி­டு­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இணங்­கி­யுள்­ளது. 13ஆவது திருத்­தத்­தி­லி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் நாம் முன்­னேறி வந்­துள்­ளோம். புதிய அர­ச­மைப்­பில் நூறு வீதம் திருப்தி இல்­லை­யா­யி­னும், அதில் எவ்­வ­ளவோ முன்­னேற்­ற­மான விட­யங்­கள் உள்­ளன. தற்­போது நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வது இடைக்­கால அறிக்­கை­தான்.

கூட்­டாட்சி என்று நாம் சொற்­க­ளில் தொங்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. உல­கில் பல நாடு­க­ளில் எந்­தப் பெய­ரும் இல்­லா­மல் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்­டி­ருக்­கின்­றன. நாம் கிடைத்­துள்ள சந்­தர்­பத்தை தவ­ற­வி­டக் கூடாது – என்­றார்.

http://newuthayan.com/story/30112.html

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை விற்க­மாட்­டோம் உரி­மை­க­ளை­யும் அட­கு­வை­யோம்

கூட்­ட­மைப்­பின் தலை­வர் உறுதி

 

“நாம் தமிழ் மக்­களை விற்­க­மாட்­டோம். எமது மக்­க­ளின் உரி­மை­களை அடகு வைக்க மாட்­டோம். மக்­கள் ஏற்­றுக் கொள்­ளும் தீர்­வையே நாம் ஏற்­றுக் கொள்­வோம்”

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

எதிர்­கட்­சித் தலை­வ­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில், தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளின் ஆசி­ரி­யர்­களை இரா.சம்­பந்­தன், நேற்று இரவு சந்­தித்­துப் பேசி­னார். இந்­தச் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மாகாண சபை­கள் தேர்­தலை ஒரே நாளில் நடத்­தும் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் நாம் அதி­ருப்தி வெளி­யிட்­டோம். அரசு எங்­கள் திருத்­தங்­களை ஏற்­றுக் கொண்­டது.
20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றம் வழங்­கிய வியாக்­கி­யா­னத்­தில், ஏன் பொது வாக்­கெ­டுப்­புக்­குச் செல்ல வேண்­டும் என்­ப­தற்கு முழு­மை­யான விளக்­கம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் உயர் நீதி­மன்­றம் சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டு­கின்­றது. கடந்த காலத்­தில் அவ்­வா­றான நிலமை இல்லை.

ஒரு சன­நா­ய­கக் கட்­சிக்­குள் பல்­வேறு கருத்து வேறு­பா­டு­கள் – விமர்­ச­னங்­கள் இருக்­கும். அதே­போன்­று­தான் கூட்­ட­மைப்­பி­னுள்­ளும் இருக்­கின்­றன. நாம் மற்­றை­ய­வர்­க­ளின் விட­யங்­க­ளில் – அவர்­க­ளு­டைய தீர்­மா­னங்­க­ளில் முட்­டுக்­கட்டை போடு­வ­தில்லை. ஆனா­லும் நாம் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­கின்­றோம். ஒவ்­வொரு விட­யத்­தை­யும் நாங்­கள் பகி­ரங்­கப்­ப­டுத்தி எல்­லோ­ருக்­கும் சொல்­லிச் செய்து கொண்­டி­ருக்க முடி­யாது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நிய­மித்த எனது முடிவு சரி­யா­னது. எங்­க­ளுக்­குள் பிரச்­சினை இருக்­க­லாம். அவர் முத­ல­மைச்­ச­ராக இருப்­பது எமக்­குப் பலம். விக்­னேஸ்­வ­ரனை மீண்­டும் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிய­மிப்­பது தொடர்­பில் கட்சி எந்த முடி­வும் இது­வரை எடுக்­க­வில்லை.

நான் விட­யங்­க­ளைச் செய்­ய­வில்லை என்று என்­மீது குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். என்­னால் செய்­யக் கூடி­ய­வற்றை நான் நாளையே செய்து முடிப்­பேன். நான் மற்­ற­வர்­க­ளைக் கொண்டு செய்து முடிக்க வேண்டி இருக்­கின்­றது. இத­னா­லேயே கால­தா­ம­தம் ஏற்­ப­டு­கின்­றது. கேப்­பா­பி­லவு மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு, அரச தலை­வர் நாடு திரும்­பி­ய­தும் நிச்­ச­யம் தீர்­வைப் பெற்­றுக் கொடுப்­பேன்.

நாங்­கள் தமிழ் மக்­களை விற்­க­மாட்­டோம். எமது மக்­க­ளின் உரி­மை­களை அட­கு­வைக்க மாட்­டோம். இது அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும் தெரி­யும். தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் தெரியும் – என்­றார்.

http://newuthayan.com/story/30114.html

 

Link to comment
Share on other sites

''கோத்தபாயவின் 'எலிய' வெற்றி பெறும் என்று நான் நம்பவில்லை''

 

புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு அவ­சியம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆத­ரவை தெரி­விக்க வேண்டும் என அவ­ரிடம் கேட்­டுக்­கொண்டேன் எனவும் மாநா­யக்க தேரர்­களை விரைவில் சந்­தித்து அர­சியல் அமைப்பு குறித்து பேச­வுள்­ள­தா­கவும்  எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் தெரி­வித்தார்.

Local_News.jpg

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று பின்­னி­ரவு இடம்­பெற்ற செய்தி ஆசி­ரி­யர்கள் சந்­திப்பின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இடம்­பெற்ற சந்­திப்பு தொடர்பில் வின­வி­ய­போது  அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

"அவ­ரது இல்­லத்தில் நான் சந்­திப்பை முன்­னெ­டுத்தேன், அதன்­போது அவர் தன்னை சிறையில் தள்­ளு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் என்று கூறினார். அப்­போது ரணில் உங்­க­ளு­டைய நண்பர் தானே என்று நான் கூறினேன். அதன்­போது ரணில் நண்பர் தான். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே எனக்கு எதி­ராக செயற்­ப­டு­கிறார் என்று சுட்­டிக்­காட்­டினார்.

எனினும் இந்த அர­சியல் அமைப்பு விட­யத்தில் அனை­வ­ரதும் ஆத­ரவு எமக்கு வேண்டும். அதற்கு ஆத­ர­வாக இல்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை எதிர்க்­காது  இருந்தால் அது எமக்கு உத­வி­யாக இருக்கும் என்றேன்,இவ்வாறு சிநே­க­பூ­ர்­வ­மாக இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது" 

கேள்வி:- தீர்வு திட்டம் தொடர்பில் மாநா­யக்க தேரர்­களை சந்­திக்க திட்டம் உள்­ளதா? 

பதில்; ஆம், அவ்­வா­றான ஒரு திட்டம் உள்­ளது, ஒரு­மித்த நாட்­டுக்குள் ஒரு அர­சியல் தீர்வு வேண்டும் என கோரு­கின்றோம், அதை ஏன் நீங்கள் ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்­றீர்கள் என்­பதை அவர்­க­ளிடம் கேட்க வேண்டும். பெளத்த மதம் இந்த நாட்டில் பிர­தானம் என்­ப­தற்கு நாம் இணங்­கத்­தயார். ஆனால் ஏனைய மதங்­களும் ஏற்­று­க் கொள்­ளப்­பட வேண்டும்.  பாதகம் ஏற்­ப­டாத வகையில் சில விட­யங்­களை விட்­டுக்­கொ­டுப்­பதில் பாதிப்பு இல்லை. ஒட்­டு­மொத்­த­மாக நாம் தீர்வை நோக்கி சிந்­திக்க வேண்டும். தேசிய ரீதி­யிலும், மாகா­ண­மட்ட அதி­கார பகிர்வு, உள்­ளூ­ராட்சி மட்ட அதி­கா­ர­ங்கள் என மூன்று அடிப்­ப­டையில் அமையும். இந்த அதி­கா­ரங்­களை அந்­தந்த மட்­டத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு மக்­க­ளுக்­கான பூரண சுதந்­திரம் அமைய வேண்டும் என்­ப­தையே நாம் கோரு­கின்றோம். அவ்­வா­றான ஒரு தீர்வு வர­வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் அது தீர்வே அல்ல. 

கேள்வி:- கோத்­தா­பய ராஜபக்ஷவின் புதிய வியூகம் தொடர்பில் எவ்­வாறு சிந்­திக்­கின்­றீர்கள்?

பதில்:- அவ­ரது கூட்­டத்தின் பின்னர் எந்த கருத்தும் வெளி­வ­ர­வில்லை, இந்த கூட்­டங்கள் மஹ­ர­கம பகு­தியில் இடம்­பெற்­றன. மக்கள் அதிகளவில் பங்குபற்றியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் எந்த காரணிகளும் இல்லை. ஆனால் இது குறித்து நாம் ஆராய்ந்த போது இது பெரிய வெற்றியை பெறாது என கூறுகின்றனர். ஆகவே பொறுத் திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.

http://www.virakesari.lk/article/24673

Link to comment
Share on other sites

"வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்"

 

 

"வட­மா­காண முதல்வர் விட­யத்தில் கருத்து முரண்­பா­டுகள் இருந்த போதிலும் அவர் வடக்கின் முதல்­வ­ராக இருப்­பதே எமக்கும் பல­மென்று நினை­கின்றேன்" என எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் நேற்று பின்­னி­ரவு இடம்­பெற்ற செய்தி ஆசி­ரி­யர்கள் சந்­திப்பின் போது தெரி­வித்தார்.  

Local_News.jpg

அவர் மேலும் கூறு­கையில், 

"தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும், நான்கு கட்­சி­களும் இணைந்து செயற்­பட வேண்டும், இதில் ஒரு கட்சி மட்­டுமே எம்மை விமர்­சிக்­கின்­றது, நாம் யாரையும் விமர்­சிக்­க­வில்லை, முட்­டுக்­கட்­டை­யா­கவும் இல்லை, இன்று தமிழ் மக்­களின் விசு­வா­சத்தை பெற்­றுள்ள கட்­சி­யாக உள்ள நிலையில் அதனை  நாம் குழப்­பக்­கூ­டாது, சர்­வ­தேச தரப்பும் தொடர்ந்தும் இந்த கேள்­வியை எழுப்­பு­கின்­றது, இதன்போதும் நாம் ஒற்­று­மை­யாக உள்ளோம் என்றே கூறி வரு­கின்றோம், கருத்து முரண்­பா­டுகள் உள்­ளது உண்­மையே. 

ஆனால் இதுதான் ஜன­நா­ய­க­மாகும், அதை நாம் தடுக்­க­வில்லை, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பை உதா­சீ­னப்­ப­டுத்த விரும்­ப­வில்லை, கூட்­டா­கவே  செயற்­ப­டுவோம், எமது கட்­சிக்குள் உள்ள விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொண்டு அதனை தாங்­கிக்­கொண்டு செயற்­பட நாம் தயா­ராக உள்ளோம்"என தெரிவித்தார். 

கேள்வி:- வட­மா­கா­ண­சபை விட­யத்தில் நீங்கள் எடுத்த முடி­வுகள் சரி­யா­னதா? 

பதில்:- ஆம், அவர் விட­யத்தில் எமது தீர்­மா­னங்கள் சரி­யா­னது. பிரச்­சி­னைகள் இருக்­கலாம் ஆனால் அவரை நாம் தீர்­மா­னித்­தமை சரி­யா­னதே, அவ­ரைப்­போல ஒருவர் வட­மா­காண சபையில் முத­ல­மைச்­ச­ராக இருக்க வேண்­டி­யது அவ­சியம், தனிப்­பட்ட முறையில் அவ­ருக்கும் எமக்கும் இடையில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை, பொது­வான கருத்து முரண்­பா­டு­களே உள்­ளன, இன்னும் தொடர்ந்தும் அவர் முத­லமைச்­ச­ராக இருப்­பது எமக்கும் பல­மென்று நினை­கின்றேன்.

கேள்வி: அடுத்த தேர்­த­லிலும் அவரை முத­லமைச்­ச­ராக நிறுத்­து­வது கூட்­ட­மைப்பின் தீர்­மா­னமா? 

பதில்:- அவ்வாறு எந்த தீர்­மா­னமும் நாம் எடுக்­க­வில்லை. 

கேள்வி: இந்­தியா எமக்கு கொடுக்கும் அழுத்தம் குறை­வ­டைந்­துள்­ளதா?

பதில்:- இருக்­கலாம், அவர்கள் தனிப்­பட்ட ரீதியில் கால்­ப­திக்க முயற்­சித்து வரு­கின்­றனர், சீனா தனித்து இலங்­கைக்குள் செயற்­ப­டு­வது அவர்­க­ளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் இந்தியா அமக்கு தேவை என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக நாம் செயற்படுவோம் பழைய சம்பவங்களை அவர்கள் மறக்கவில்லை. ஆனால் கைவிட மாட்டார்கள் என நம்புகின்றோம்.

http://www.virakesari.lk/article/24674

Link to comment
Share on other sites

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது – சம்பந்தன்!

 

sampanthan-e1354460177963-415x260-415x26

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. எத்தனையோ உலக நாடுகளில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தீர்வு வரலாம்; வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்படவேண்டும். இனிமேல் தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறக்கூடிய சூழல் உருவாகக்கூடுமாயின் நாம் அச்சந்தர்ப்பத்தை நழுவவிடமுடியாது. நிதானமாக -பக்குவமாக வாயைப் பொத்திக்கொண்டு விடயங்களை நகர்த்தவேண்டும்.

அரசயிலமைப்புத் தொடர்பாக மகிந்தவுடன் பேசினேன். தமிழ் மக்களின் தீர்வுக்கு இந்தியாவிடம் பல உறுதிமொழிகளை வழங்கினீர்கள் எனத் தெரிவித்தேன். அதனை நீங்கள் செய்யவில்லையென்பதையும் கூறினேன். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவால் எங்களை கைவிடவும் முடியாது. கைவிடவும் மாட்டாது.

13ஆவது திருத்தச் சட்டத்தில் எமக்கு நம்பிக்கையில்லையாயினும் அதனை முற்றாக நிராகரிக்கமுடியாது. அது எமது இறுதித் தீர்வு இல்லை.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைவிடுவதாக அறிவித்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து நாம் எவ்வளவோ முன்னேறியுள்ளோம். புதிய அரசியலமைப்பில் நூறு வீதம் திருப்தியில்லையாயினும் அதில் எந்தளவோ முன்னேற்றமான விடயங்கள் உண்டு. தற்போது நாடாளுமன்றத்திற்கு வருவது இடைக்கால அறிக்கை மாத்திரமே.

சமஷ்டி என்று நாங்கள் சொற்களில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. உலகில் பல நாடுகளில் எந்தப் பெயரும் இல்லாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் நாம்கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79245

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது வீடு வேலை செய்யுது....பாவி மனுசா....அந்தவயதும் வந்திட்டுது...மெத்தை வீடு கேட்குதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Athavan CH said:

இந்தியாவால் எங்களை கைவிடவும் முடியாது. கைவிடவும் மாட்டாது.

வரதராஜப் பெருமாள் தொடக்கம்....இந்தியா ஒருவரையும் கை விடவில்லை!

எல்லாரையும் கவனித்துக் கொண்டது என்பது உண்மை தான்!

சிங்களத் தலைவர்கள் உட்பட....எல்ல்லாரையும் கவனித்தது என்பது ....உண்மை தான்!

கவனிக்காமல் விட்டது....ஒன்றே ஒன்று தான்..!

அது தான்த மிழ் மக்களுக்கு அழித்த வாக்குறுதிகள்!

Link to comment
Share on other sites

5 hours ago, Athavan CH said:

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது – சம்பந்தன்!

 

sampanthan-e1354460177963-415x260-415x26

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. எத்தனையோ உலக நாடுகளில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தீர்வு வரலாம்; வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்படவேண்டும். இனிமேல் தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறக்கூடிய சூழல் உருவாகக்கூடுமாயின் நாம் அச்சந்தர்ப்பத்தை நழுவவிடமுடியாது. நிதானமாக -பக்குவமாக வாயைப் பொத்திக்கொண்டு விடயங்களை நகர்த்தவேண்டும்.

அரசயிலமைப்புத் தொடர்பாக மகிந்தவுடன் பேசினேன். தமிழ் மக்களின் தீர்வுக்கு இந்தியாவிடம் பல உறுதிமொழிகளை வழங்கினீர்கள் எனத் தெரிவித்தேன். அதனை நீங்கள் செய்யவில்லையென்பதையும் கூறினேன். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவால் எங்களை கைவிடவும் முடியாது. கைவிடவும் மாட்டாது.

13ஆவது திருத்தச் சட்டத்தில் எமக்கு நம்பிக்கையில்லையாயினும் அதனை முற்றாக நிராகரிக்கமுடியாது. அது எமது இறுதித் தீர்வு இல்லை.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைவிடுவதாக அறிவித்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து நாம் எவ்வளவோ முன்னேறியுள்ளோம். புதிய அரசியலமைப்பில் நூறு வீதம் திருப்தியில்லையாயினும் அதில் எந்தளவோ முன்னேற்றமான விடயங்கள் உண்டு. தற்போது நாடாளுமன்றத்திற்கு வருவது இடைக்கால அறிக்கை மாத்திரமே.

சமஷ்டி என்று நாங்கள் சொற்களில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. உலகில் பல நாடுகளில் எந்தப் பெயரும் இல்லாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் நாம்கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79245

 

இப்படியே மண்டையை போடும் வரைக்கும் பினாத்திகொண்டு சந்தர்பப்ப சூழலுக்கேற்ப நிறம்மாறும் ஓணானாக வாழவேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது 'வக்கீல்கள் காலம்' போலிருக்கிறது..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person

 

இந்தத் தீபாவளிக்கும்... தீர்வு வராது போலுள்ளது. :unsure:

Link to comment
Share on other sites

அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்துவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானமும் இல்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 


நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். 


இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக நடத்தப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் தங்களால் எடுக்கப்பட்ட முடிவு சரியானதா? என்பது தொடர்பாக  எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு கூட்டமைப்பின் தலைவரான  இரா.சம்பந்தன் தொடர்ந்து பதிலளிக்கையில்; 


அந்த முடிவு சரியானதுதான். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் . முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகின்றேன். பிரச்சினைகள் இருக்கலாம்.

ஆனால் அவரை ஏன் வடமாகாண சபை முதலமைச்சராக கொண்டுவந்திருந்தோம்? அவரைப் போல ஒரு முதலமைச்சர் வடமாகாணத்திற்கு வரவேண்டும் என்று நாம் உறுதியாக இருந்தோம். சில கருத்து வேறுபாடுகள் எம் மத்தியில் இருக்கலாம்.

எனக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பது எமக்கு பலமென்றே நான் நினைக்கின்றேன். எம்மை சமாளிக்கலாம் என்று எவரும் நினைத்துவிட முடியாது. நான் கதைக்காவிடிலும் வேறுசிலர் கதைக்க வேண்டும் என்றார்.


அவ்வாறெனில் அடுத்த தேர்தலிலும் முதலமைச்சராக விக்னேஸ்வரனை நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்,  அவ்வாறு இல்லை; அப்படியொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். 

http://www.thinakkural.lk/article.php?local/kycxedvdgj2563dbd22ba3bd18357cx9il0df8f385bdac3e9f8be207zostt

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.