Jump to content

'சர்வதேச கண்காணிப்புகுறித்து அச்சமில்லை': ரோஹிங்யா விவகாரத்தில் மௌனம் கலைத்தார் ஆங் சான்!


Recommended Posts

'சர்வதேச கண்காணிப்புகுறித்து அச்சமில்லை': ரோஹிங்யா விவகாரத்தில் மௌனம் கலைத்தார் ஆங் சான்!

 
 

மியான்மரில், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை விவகாரத்தில், ''சர்வதேச கண்காணிப்புகுறித்து அச்சமில்லை'' என்று அந்நாட்டுத் தலைவர்  ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார்.

ரோஹிங்யா

மியான்மரில், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அங்கிருந்து தப்பித்துவரும் பல ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துவருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.

ஆனால், இந்தச் சம்பவம்குறித்து அந்த நாட்டுத் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கி, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியநிலையில், ஐ.நா சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதையும் அவர் தவிர்த்தார்.

ஆங் சான் சூ கி


இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்போது, முதல்முறையாக வாய் திறந்துள்ளார் ஆங் சான். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர், "வன்முறை குறைந்த பிறகு, தற்போது ரோஹிங்யாக்கள் வெளியேறவில்லை. மியான்மர் குடியரிமை சரிபார்ப்புக்கு அனைத்து சமூக மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மியான்மரில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சமாளிக்க, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்குறித்து உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும். 

அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் கண்டிக்கதக்கவை. ஆனால், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்று தருவதற்கு முன்பு, அதற்கான ஆதாரத்தைத் திரட்டவேண்டியது அவசியம். அந்தப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகளின் கண்காணிப்புகுறித்து அச்சமில்லை" என்று கூறியுள்ளார்.

 

ஆனால், ஆங் சான் தன்னுடைய உரையில் ராணுவத்தை நேரடியாகக் கண்டிக்கவில்லை.

http://www.vikatan.com/news/world/102699-myanmar-does-not-fear-international-scrutiny-over-rohingya-crisis-says-aung-san-suu-kyi.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் செய்யிற வேலை....

இலங்கைல ஒரு மகிந்த எண்டால் இங்க இந்த மனிசி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவா சுருக்கமா சொல்வாரது  (சர்வதேச விசாரணை பற்ரியது) 
நானும் ரவுடி 
நீயும் ரவுடி 

யார் யாரை விசாரிக்கிறது? 

Link to comment
Share on other sites

ஆங் சாங் சூச்சியின் பேச்சு: உலக தலைவர்கள் விமர்சனம்

ஆங் சாங் சுசீயின் பேச்சு உலக தலைவர்கள் விமர்சனம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூச்சி, ரக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளையும், ரோஹிஞ்சா அகதிகள் பிரச்சனையையும் கையாளும் விதம் குறித்து, அதிகப்படியான சர்வதேச அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார்.

செவ்வாயன்று ஆற்றிய ஓர் உரையில், மியான்மரின் தலைவர், உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனாலும், ராணுவத்தின் மீது எந்த பழியும் கூறவோ, இன சுத்திகரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தோ பேசவில்லை.

அவரின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக, பல தலைவர்களும், தூதர்களும் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு லட்சம் ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர்.

கடந்த மாதம் ரக்கைன் மாநிலத்தில் உள்ள காவல் சாவடிகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலே அண்மை காலத்தில் உள்ள அமைதியின்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு புதிதாக உருவெடுத்துள்ள ரோஹிஞ்சா குழுவான அர்சா எனப்படும் அரக்கன் ரொகிஞ்சா சால்வேஷன் ஆர்மி தான் காரணம் என கூறப்பட்டது.

ஒரு தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறையால் அதிகளவில் மக்கள் கொல்லப்பட்டனர். ரோஹிஞ்சாக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு, அவர்களின் கிராமங்கள் தீக்கிறையாக்கப்பட்டன என பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

ரோஹிஞ்சா சிறுபான்மை மக்கள், வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று மியான்மர் அரசு கூறுகிறது. அவர்களை பெங்காலி முஸ்லிம்கள் என்று அது குறிப்பிடுகிறது.

இந்த விவகாரம் குறித்த நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சூச்சி கூறுகையில்:

  • கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி முதல் எந்த மோதலோ அல்லது, வெளியேற்றும் நடவடிக்கையோ இல்லை.
  • பெரும்பான்மையான முஸ்லிம்கள் இங்கு தங்கவே முடிவெடுத்துள்ளனர், இதுவே தற்போதைய சூழல், அவ்வளவு தீவிரமானது இல்லை என்பதை காட்டுகிறது.
  • ரக்கைன் மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு அண்மை ஆண்டுகளில் பல முயற்சிகளை எடுத்துள்ளது.
  • சரிபார்ப்பு செயல்முறை முடிந்த பின்பு அனைத்து அகதிகளும் தங்கள் இடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும்.

பர்மிய ராணுவம், ரக்கைன் மாநிலத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களின் அடித்தளத்தை நீக்கும் வகையிலேயே செயல்படுவதாக கூறுவதோடு, பொதுமக்களை குறிவைப்பதாக வரும் குற்றசாட்டை மீண்டும் மீண்டும் மறுக்கிறது. சாட்சியங்கள், அகதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இதை மறுக்கினறனர்.

ஆங் சாங் சூசியுடன், தொலைபேசியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், சரிபார்ப்பிற்கு பின்பு அகதிகள் நாடு திரும்பலாம் என்று சூசி கூறியுள்ளதை வரவேற்பதாக கூறியுள்ளார்.

ஆனால், மனிதாபிமான உதவிகளை எளிதாக்குமாறு அவர் வலியுறுத்தியதாகவும், அதிக பிரச்சனைகளை உருவாக்கிவரும் ,மனித உரிமை அத்துமீறல்கள் குறித்த குற்றசாட்டுகள் குறித்து பேசுமாறும் கேட்டுகொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

பிரன்ச் அதிபர் இமானுவேல் மாக்கரூன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐ.நா சபை கூட்டத்தில் பேசிய ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், "ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அங்கு, இன சுத்திகரிப்பு மூலமாக நீதியின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் கூறுகையில், அவர் ஒரு பாதுகாப்பு கவுன்சில் மூலம் மனிதாபிமான உதவிகள் கிடைக்கிறதா என்பதை கவனிக்கவும், வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவும் உள்ளதாக கூறினார்.

ஐ.நா சபை பொதுசெயலாளரான ஆண்டோனியோ குட்டெரிஷும், "ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" மற்றும், "பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருக்கும் ரோஹிஞ்சாக்களின் குறைகளை தீர்ப்பது குறித்த பேச்சை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

துருக்கி அதிபர், ரஸிப் தயிப் ஏர்துவான், சர்வதேச சமூகத்தை இந்த நெருக்கடி குறித்து பேச அழைத்துள்ளதோடு, "மியான்மரில் நடக்கும் சோகத்தை நிறுத்தாவிட்டால், மனித இனம், வரலாற்றில் அடுத்த மிக கடுமையான கரையின் அவமானத்தில் வாழவேண்டி இருக்கும்" என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பியன் யூனியனின் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முன்பு எல்லைகளுக்கு அப்பால் இருந்த பாதிக்கப்பட்ட இடங்களை, சர்வதேச தூதர்கள் பார்ப்பதற்கு ஆங் சாங் சூசி அழைப்பு விடுத்துள்ளது என்பது "ஒருபடி முன்னேற்றம் " ஆகும் என்கிறார்.

மேலும் கூறிய அவர், "மியான்மர் அரசு எந்த ஜனநாயகத்திற்காக கடுமையாக போராடுகிறதோ, அது, இனம், சமூகம் , மதம் ஆகிய எல்லைகளை கடந்து, மியான்மரின் அனைத்து மக்களுக்கும் செயல்படும்" என்பதை நிரூபிக்கும் தேவை மியான்மர் தலைமைக்கு உள்ளது என்றார்.

மியான்மர் ராணுவத்துக்கு

இங்கிலாந்து பயிற்சி நிறுத்தம்

இங்கிலாந்து பிரதமர் தெரீ மேவும், ரக்கேன் மாநிலத்தில் நடக்கும்ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். வன்முறைகள் நடக்கின்றன என்கிற பேச்சுக்கள் உள்ளதால், மியான்மர் ராணுவத்திற்கு பயிற்சி வகுப்புகள் அளிப்பதை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

ஆங் சாங் சூசியின் பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், அவரின் பேச்சு, "பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும், உண்மையற்றதாகவும் கலந்து இருந்தது" என்றுள்ளதோடு, ராணுவ அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல், ஆங் சாங் சூசி, "மணலில் தலையை புதைத்துள்ளார்" என குற்றம்சாட்டியுள்ளது.

பல ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரத்தில் இருந்த மியான்மரை, அதில் இருந்து வெளிகொண்டுவர போராடியதற்காக, 1990 ஆம் ஆண்டு, ஆங் சாங் சூசி , அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அவர் இன்னும் மியான்மரில் மிகவும் பிரபலமானவராகவே உள்ளார்.

http://www.bbc.com/tamil/global-41340854

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.