Jump to content

இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள்


Recommended Posts

இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள்

ftbl1-696x464.jpg Source - Getty Images
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் இம்மாதம் 16, 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இவ்வாரம் நடைபெற்ற அதிகமான போட்டிகளில் பங்குபற்றிய அணிகள் போட்டியின் இறுதித்  தருவாயிலேயே தமது வெற்றியை உறுதி செய்ததை காணக்கூடியதாக இருந்தது.  நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எது எவ்வாறாயினும் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தமது ஆதரவாளர்களுக்கு சிறந்த விளையாட்டை காட்டத் தவறவில்லை.

இவ்வாரம் 16 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஓரு போட்டி மாத்திரமே வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. ஈபூரா முனிஸிபல் அரங்கத்தில் (Ibura Municipal Stadium) நடைபெற்ற ஏய்பர் (Eibar) கால்பந்து கழகத்திற்கும், லெகனஸ் கால்பந்து கழகத்திற்குமான போட்டியில் ஏய்பர் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் சவாலானதொரு வெற்றியை பெற்றது. இரு அணிகளும் சமமான ஆதிக்கத்தையே போட்டியின் இறுதிவரை தமது எதிரணிக்கு வழங்கினர். போட்டியின் முதல் பாதி எவ்வித கோலும் பெறாத நிலையில் முடிவடைந்தபோது, இரண்டாம் பாதியின் 53 ஆவது நிமிடத்தில் ஏய்பர் அணியின் பின்கள வீரர் அலெஜேன்ட்ரோ கெல்வெஸ் (Alejandro Galvez), தமது அணியின் சக வீரரான டகாஸீ இனுய் (Takasi Inui) மூலம் லெகனஸ் அணியின் பெனால்டி எல்லையினுள் உள்ளனுப்பப்பட்ட பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். இந்த கோலின் மூலம் ஏய்பர் அணி தனது சொந்ந மைதானத்தில் கடுமையானதொரு போட்டியின் பின்னர் வெற்றியை பெற்றனர்.

அதே தினம் நடைபெற்ற றியல் பெடிஸ் (Real Betis) மற்றும் டிபோர்டிவோ கழகங்கள் மோதிய போட்டியில் றியல் பெடிஸ் அணி வெற்றி பெற்றது மற்றுமன்றி, சிறந்த பந்து பரமாற்றங்களிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. றியல் பெடிஸ் அணிக்காக ஜக்குயீன் ஸன்செஸ் (JoaQuin Sanchez) 14 ஆவது மற்றும் 76 ஆவது நிமிடங்களில் இரு கோல்களும், டிபோர்டிவோ அணிக்காக அவ்வணியின மத்திய கள வீரரான பெப்ரீகோ கார்டாபியா (Febrico Cartabia) மூலம் ஒரு கோலும் பெறப்பட்டது.

 

அதனை தொடர்ந்து நடந்த லெவன்டே (Levante) மற்றும் வெலன்சியா (Valencia) அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. இவ்விரு அணிகளும் நடப்பு சம்பியன் றியல் மட்றிடுடன் மோதிய போட்டிகளையும் வெற்றி தோல்வியின்றியே நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் நடந்த மற்றுமொரு விறுவிறுப்பான போட்டியாக பார்சிலோனா அணி கெடாபெய் (Getafe) அணியுடன், கெடாபெய் அணியின் மைதானமான கோலிசிம் ஆல்பேன்ரோ பெரெஸ் அரங்கத்தில் (Colisium Alfonso Perez) மோதிய போட்டியை குறிப்பிடலாம். போட்டியை விறுவிறுப்பாக ஆரம்பித்த பார்சிலோன அணிக்கு, போட்டியின் 39 ஆவது நிமிடத்தில் காகு ஸிகாஸ்கி (Gagu shikaski) மூலம் கெடாபெய் அணிக்கு அதிரடியாக பெறப்பட்ட கோலின் மூலம் இப்போட்டி சற்று கடுமையானதொரு போட்டியாக மாறியது. அதனைத் தொடர்ந்து போட்டியை சமநிலைப்படுத்த பார்சிலோனா அணி வீரர்கள் பாரிய முயற்சி எடுத்தும், அம்முயற்சிகள் கொடபெய் அணியின் கோல்காப்பாளர் மற்றும் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

எனினும் போட்டியின் 60 ஆவது நிமிடத்தில் கெடாபெய் அணியின் பெனால்டி எல்லைக்கு அருகில் விடப்பட்ட தவறை சிறந்த முறையில் பயன்படுத்திய பார்சிலோனா அணியின் மத்திய கள வீரர் ஸர்ஜீயொ ரொப்பேடொ (Sergio Roberto) தான் பெற்ற பந்தை தரை வழியாக பெனால்டி எல்லையில் இருந்த மாற்று வீரராக களமிறங்கிய டெனிஸ் ஸீவாரெஸிடம் (Denis Suarez) வழங்கினார். பந்தை பெற்ற டெனிஸ் ஸீவாரேஸ் கோலின் இடது பக்கத்தின் வழியாக பந்தை கோல் கம்பத்தினுள் உட்செலுத்தி போட்டியை சமப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் போட்டியை வெற்றி பெற கடும் முயற்சி எடுத்தனர். போட்டியின் 84 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்சி மூலம் பெனால்டி எல்லையின் வலதுபக்க மூலைக்கு வழங்கப்பட்ட பந்தை பெற்ற மாற்று வீரர் போலீனோ (Paulinho) கெடாபெய் அணியின் பின்கள வீரர்களை சிறந்த முறையில் கடந்து, பந்தை கோலின் இடதுபக்க மூலையினால் வேகமாக உதைந்து கோலாக்கினார். கடைசி தருணத்தில் பெறப்பட்ட இந்த கோலின் மூலம் பார்சிலோனா அணி இப்போட்டியில் வெற்றியீட்டியது. அத்துடன் இப்போட்டியில் பார்சிலேனா அணிக்காக கோல்களை பெற்ற இருவரும் மாற்று வீரர்களாக களமிறக்கப்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

17 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. அட்லடிகோ மட்றிட் அணியின், வன்டா மெட்ரொபோலினோ அரங்கில் (Wanda Metropolina Stadium) நடைபெற்ற அட்லடிகோ மட்றிட் மற்றும் மலாகா அணிகள் மோதிய போட்டியில் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட கோலின் மூலம், அட்லடிகோ மட்றிட் அணி வெற்றி பெற்றது. தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அட்லடிகோ மட்றிட் அணியால் 60 நிமிடங்கள் கடந்த பின்னரே கோலைப் பெற முடிந்தது. இரு அணிகளுக்கும் சிறந்த பல

 

வாய்ப்புக்கள் கிட்டியபோதும் அவை முறையாக பயன்படுத்தப்படவில்லை. போட்டியின் இறுதிவரை அதிகளவு ஆதிக்கம் செலுத்திய அட்லடிகோ மட்றிட் அணிக்கு 60 ஆவது நிமிடத்தில் மலாகா அணியின் பின்களத்தின் வலதுபக்க மூலையிலிருந்து ஏஞ்சல் குரேஹா (Angel Correa) மூலம் வழங்கப்பட்ட பந்தை, அன்டோனியோ கிரிஸ்மன் (Antonie Grizzeman) கோலின் வலதுபக்க மூலையால் கோலினுள் உட்செலுத்தி கோலாக்கினார். இந்த கோலின் மூலம் அட்.மட்றிட் அணி பாரிய போராட்டத்தின் பின் வெற்றியை தனதாக்கியது.

அதனை தொடர்ந்து அதே தினம் நடைபெற்ற ஜீரோனா மற்றும் செவில்லா அணிகள் மோதிய போட்டியில் போட்டியின் 61 ஆவது நிமிடத்தில் லுயிஸ் மூயிரீயல் (Luis Muriel) மூலம் பெறப்பட்ட கோலால் செவில்லா அணி வெற்றி பெற்றது. ஜீரோனா கழகத்தின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், போட்டியின் கடைசி தருணத்தில் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பையும் சிறந்த முறையில் பயன்படுத்த தவறியது ஜீரோனா கழகம்.

மேலும் லஸ் பல்மஸ் (Las Palmas ) மற்றும் அத்.பில்பாகு (Ath. Bilbao) அணிகள் மோதிய போட்டியில் லஸ் பல்மஸ் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்திலும், அலவெஸ் மற்றும் விலரல் அணிகள் மோதிய போட்டியில், விலரல் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் அன்றைய தினம் வெற்றி பெற்றன.

றியல் மட்றிட் அணியின் முக்கிய வீரர்களான பென்ஸமா, ரோனால்டோ, டொனி குருஸ் மற்றும் மார்ஸலோ ஆகிய வீரர்கள் விளையாடாத நிலையில், எதிரணியின் அரங்கில் நடைபெற்ற போட்டியில் றியல் மட்றிட் அணி வெற்றி பெற்றது. 18 ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் றியல மட்றிட் மற்றும் றியல் சொசிடட் (Real Sociedad) அணிகள் அனோஎடா அரங்கில் (Anoeta Stadium) பலப்பரீட்சை நடாத்தின. றியல் மட்றிட் அணிக்காக போயா மயூரல் (Borja Mayoral) போட்டியின் 19 ஆவது நிமிடத்திலும், கரெத் பேல் (Gareth Bale) மூலம் போட்டியின் போட்டியின் 61 ஆவது நிமிடத்திலும் அத்துடன் றியல் சொசிடட் அணி வீரரான கெவின் ரொட்ரிகஸ் (Kevin Rodriguez) மூலம் போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் ஒரு ஒன் கோலும் (Own Goal) பெறப்பட்டது.

அதேவேளை றியல் சொசிடட் அணிக்காக கெவின் ரொட்ரிகஸ் ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார். போட்டியில் கவர்ச்சியான கோலாக கரெத் பேல் மூலம் பெறப்பட்ட கோல் அமைந்தது. காரணம் யாதெனில் ஈஸ்கோ (Isco) மூலம் மத்திய களத்திலிருந்து றியல் சொசிடட் அணியின் பின்களத்திற்குள் வழங்கப்பட்ட பந்தை கரெத் பேல், றியல் மட்றிட் அணியின் மத்திய களத்தின் பின் எல்லையிலிருந்து மிகவேகமாக சென்று, றியல் சொசிடட் அணி

 

வீரர்களையும் தாண்டி சிறந்த முறையில் பந்தை பெற்று கோலினுள் உட்செலுத்தினார். றியல் சொசிடட் அணி இப்போட்டியில் தோல்வியுற்றாலும், றியல் மட்றிட் அணிக்கு தனது சொந்த மைதானத்தில் சவால் கொடுத்த போட்டியாகவே அமைந்திருந்தது.

மேலும் 19 ஆம் திகதி இஸ்பான்யல் மற்றும் ஸெல்டாவிகோ அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியானது இஸ்பான்யல் கழகத்தின் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேற்கூறப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியல் பின்வருமாறு,

நிலை அணி போட்டி

கள்

வெற்றி சமநிலை தோல்

வி

பெ.  கோல்கள் எ. பெ.
கோல்கள்
புள்ளி

கள்

1 பார்சிலோனா 4 4 0 0 11 1 12
2 செவில்லா 4 3 1 0 6 1 10
3 றியல் சொசிடட் 4 3 0 1 11 7 9
4 றியல் மட்றிட 4 2 2 0 9 4 8
5 அட்.மட்றிட 4 2 2 0 8 3 8
6 அத். பில்பாகு 4 2 1 1 3 1 7
7 விலரல் 4 2 0 2 6 5 6
8 லெவன்டே 4 1 3 0 5 4 6
9 வெலன்சியா 4 1 3 0 4 3 6
10 லெகனஸ் 4 2 0 2 3 3 6
11 லஸ் பல்மாஸ் 4 2 0 2 5 7 6
12 றியல் பெடிஸ் 4 2 0 2 5 7 6
13 ஏய்பர் 4 2 0 2 2 4 6
14 கேடாவேய் 4 1 1 2 3 4 4
15 ஜீரோனா 4 1 1 2 3 5 4
16 செல்டாவிகோ 3 1 0 2 4 5 3

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.