Jump to content

நயன்தாராவுடன் அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்


Recommended Posts

நயன்தாராவுடன் அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்

நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய பிறந்த நாளை நயன்தாராவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

 
 
201709182051543222_Vignesh-shivan-birthd
 
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் இருவரும் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அவர்கள் மறுக்க வில்லை.
201709182051543222_1_nayanthara1._L_styv

சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ரோம் நகருக்கு சென்று, போப் பிரான்சிஸிடம் ஆசி பெற்றார்.

பின்னர் இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகின. விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கி இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாள். இதை இருவரும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக கடந்த வாரம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.

இந்த புகைப்படங்களை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா ஜோடியாக கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

இது பற்றி நயன்தாரா அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நாங்கள் புன்னகையுடன் பார்த்தோம். எல்லாமே மகிழ்ச்சி. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும். இது மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாள். உங்கள் ரசிகர்கள் உங்களை தொடர்பவர்கள் அனைவருக்கும் இது சிறப்பான நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் கோலாகலமாக பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/09/18205151/1108665/Vignesh-shivan-birthday-celebrate-with-nayanthara.vpf

Link to comment
Share on other sites

என் அன்பானவளுக்கு நன்றி: நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்

 

 
nayanvicky

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் | கோப்புப் படம்

தன் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து 'என் அன்பானவளுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு சமயத்தில் காதல் உருவானது. இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

'தானா சேர்ந்த கூட்டம்' படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த இடைவெளியில், தன் பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாராவுடன் நியூயார்க் நகரத்துக்குச் சென்றார் விக்னேஷ் சிவன். மேலும், இதுவரை நயன்தாரா நடித்த படங்களைப் பற்றி கருத்துச் சொல்லி வந்தவர், அவருடன் புகைப்படங்களைக் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததில்லை.

 

DKBi1udXkAAm_Q-.jpg

 

நியூயார்க்கில் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இப்படியான ஒரு பிறந்தநாள் வரும் என கனவு கூட கண்டதில்லை. கடவுளுக்கு முதலில் நன்றி. இந்த வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் மாற்றிய என் அன்பானவளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

செப்டம்பர் 25-ம் தேதி முதல் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடித்து பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19714054.ece

DKBi1ubXUAAWzN2.jpg

DKBi1ugW0AAHpRI.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக் வெட்டப்பட்டுள்ளது, வாழைப்பழம் எங்க? நாங்க என்ன கேணையனா? வாழைப்பழம் இல்லாமல் எப்படி நயந்தாரா கேக் சாப்பிட்ருப்பார்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயனுடன் பிறந்தநாளை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது --வி.சிவன்

உனக்கு முதல் மகிழ்ச்சி சரி....

இந்தாம்மா உனக்கு எத்தனையாவது?????

4வது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயந்தாரா அடிப்படையில் மிகவும் உதவும் மனப்பாண்மையுள்ளவர் ,தனது உதவியாளரின் தேவை அறிந்து அவர் கேளாமலே உதவியதாக வாசித்துள்ளேன்,நாஙகள் என்னதான் கபவனமாக வாகனமோட்டினாலும் சில மோசமான வாகன ஓட்டிகளால் விபத்து வருவதுண்டு, அதே போல நயந்தாராவின் வாழ்கையில் சில விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் அதற்கு அவர்தான் காரணம் என்று கூற முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.