Jump to content

அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்!


Recommended Posts

அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்!

 
 

பைரஸி என்ற பேய்க்கு எவ்வளவு முயற்சிகள் செய்து ரிப்பன் கட்டி விட்டாலும், ஆடியோ என்ற தளத்தில் மட்டும் ஏதோ ஒரு வழியில் தலை விரித்து ஆடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் ஒருவித டிஜிட்டல் அலை, இந்தியாவில் ஆடியோ பைரஸியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஹே! ரஹ்மான் புது சாங் வந்துருச்சே! எடுத்துட்டியா? எனக்கு ப்ளூடூத்ல send பண்றியா?”

“ShareIt ஆன் பண்ணு, அனுப்பறேன்!”

குறைந்து வரும் இவ்விதமான உரையாடல்கள், இனி நிரந்தரமாக அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

ஆடியோ பைரஸி

சேகரித்து வைத்த பாடல்கள்

இரண்டு வருடங்களுக்கு முன், ஸ்மார்ட்போன்களில் பாடல்களை மற்றவர்களிடம் கடன் வாங்கிச் சேமித்து வைத்துக் கேட்போம். தரவிறக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஆடியோ ஃபைல்கள் .MP3 (MPEG-1 or MPEG-2 Audio Layer III) வகையைச் சேர்ந்தவை. நல்ல தரமான ஒலியை, குறைவான ஃபைல் அளவில் அளிப்பதால், பல சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் வலைத்தளங்கள் இந்த ஃபார்மட்டை பயன்படுத்தத் தொடங்கின. ஐந்து நிமிட பாடல் ஐந்து MB என அளவை முடிந்த அளவு சுருக்கினாலும், 128kbps தரத்தில் அளிக்க முடிந்தது. ப்ராட்பேண்ட் வைத்திருந்தவர்கள் 320kbps தரம் வரை தயங்காமல் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்தனர். இது ஒருபுறம் என்றால், பல படங்கள் தங்கள் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே அது பல இணையதளங்களில் MP3 வடிவில் வெளியாகி தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் தலைவலியை கொடுத்தது.

ஆடியோ சீடிக்களின் வீழ்ச்சியும், ஆன்லைன் தளங்களின் எழுச்சியும்

ஆடியோ சீடி விற்பனை இதனால் குறைய, iTunes போன்ற வழிகளில் மக்களுக்கு தங்கள் பட ஆடியோக்களை விற்க முன்வந்தனர் தயாரிப்பாளர்கள். இதற்கு, முன்னணி ஆடியோ நிறுவனங்கள் மிகவும் உதவின. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் இதில் கோலோச்சின. இருந்தும் பைரஸியை ஒழிக்க முடியவில்லை. iTunesஇல் வந்த அரை மணி நேரத்தில் டோர்ரென்ட் (Torrent) தளங்களில் வெளிவந்தன. இதைச் சரிக்கட்ட, YouTube தளத்தில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில், அதிகாரப்பூர்வமாக பாடல்களை வெளியிட்டனர். இது பாடல்களையும், படங்களையும் நிறையப் பேருக்கு கொண்டு சேர்த்தது, ஆனால், அதிலும் தடங்கலாக, YouTube வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக மாற்றி மீண்டும் பைரஸியை கொண்டாடும் தளங்களில் அதைப் பதிவேற்றினர்.

ஸ்ட்ரீமிங் செய்யலாம் வாங்க…

Saavn ஆடியோ

எப்படித்தான் இந்த பைரஸியை ஒழிப்பது என்று விடாமல் யோசித்த ஆடியோ நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பவைதான் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் ஆப்ஸ். Apple Music, Saavn, Jio Music, Wynk Music, Hungama, Gaana போன்ற ஆப்ஸ் சுலபமான வழிமுறைகளாலும், தன் துல்லிய ஒலியாலும் இந்தியாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டன. ஸ்ட்ரீமிங்னா, பஃபர் (Buffer) ஆகாமல் ஓடுமா? நம்முடைய இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்றவாறு, தன் ஆடியோவின் தரத்தையும் ஏற்றி, இறக்கித் தங்கு தடையின்றி பாடல்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன இவ்வகை ஆப்கள்.

ஸ்ட்ரீமிங் புரட்சி எப்படி வந்தது?

சொல்லப்போனால், ஓவர்நைட்டில் நிகழ்ந்த மாற்றம்தான் இந்த ஸ்ட்ரீமிங் கலாசாரம். முதலில் எல்லாம், வெறும் 1GB இன்டர்நெட் டேட்டாவை வைத்து ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அப்போதெல்லாம், தெரியாத்தனமாக மொபைல் டேட்டாவில் ஒரு YouTube விடியோவை ஓபன் செய்து விட்டாலே போதும், பதறி விடுவோம். ஆனால், இப்போது மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப் உட்படப் பல சாதனங்களுக்கு இன்டர்நெட்டை அள்ளிக் கொடுக்கிறோம். புதிதாக வந்த ஜியோ நெட்வொர்க் எண்ணற்ற டேட்டா ஆஃபர்களை 4G தரத்தில் அளிக்க, பலர் சும்மாதானே கிடைக்கிறது என்று ஜியோ பக்கம் சாயத் தொடங்கினர். உஷாரான மற்ற முன்னணி நெட்வொர்க்குகளும் போட்டிக்கு, 4G டேட்டாவை குறைந்த விலையில் வழங்கத் தொடங்கின. இப்போது ஒரு நாளைக்கே 1GB கிடைக்கிறது என்றவுடன், அதை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் முழிக்கும் நிலை ஏற்பட்டது. ஸ்ட்ரீமிங் ஆப்களை பற்றிக் கேள்விப்பட்டு, டேட்டா பற்றாக்குறைக்காக அந்தப் பக்கம் போகாதவர்கள் கூட, மெல்ல ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்களை இன்ஸ்டால் செய்து மகிழ்ந்தனர்.

 

Saavn போன்ற ஆப்கள், ஒரு படி மேலே போய், பிரீமியம் அக்கௌன்ட் வாங்கினால், ஆப்லைனில் பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு, இன்டர்நெட் இல்லாதபோது கூட இசையைக் கேட்டு ரசிக்கலாம் என்றவுடன் தயங்கிக் கொண்டிருந்த மீதி கூட்டமும் ஸ்ட்ரீமிங் ஆப்களை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, பெரிய ஆடியோ நிறுவனங்கள் முதல் சிறிய ஆடியோ நிறுவனங்கள் வரை, பெரிய பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் தங்களுக்கு சொந்தமான பாடல்களை முதன்முதலாக  ஸ்ட்ரீமிங் ஆப்களில் வெளியிடத் தொடங்கியுள்ளன. இது ஆப்களுக்கும், படங்களுக்கும் அதன் பாடல்களுக்கும் சிறந்த விளம்பரமாக அமைந்து விட்டன. அது மட்டுமில்லாமல், முதலில் பாடல்களை சட்டவிரோதமாகத் தரவிறக்க தயங்கிய பலரும், தற்போது ஸ்ட்ரீமிங் என்றால் சரி என்று இங்கே வந்து விட்டனர். ஸ்ட்ரீமிங் என்ற இந்த வாகனம், டேட்டாவின் விலை குறைந்ததால், YouTube மீதம் வைத்த ஆடியோ பைரஸியின் அளவை மேலும் குறைக்க தொடங்கியுள்ளது. இந்த வகை ஆப்கள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்பட ஏற்பட, ஆடியோ பைரஸி என்பது இல்லாத ஒன்றாகிவிடும்.

http://www.vikatan.com/news/information-technology/101953-end-of-mp3-the-rise-of-audio-streaming-apps-may-end-piracy.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவல் உள்ளே உள்ளதன்று உரலை இடிக்கும் கதை .பைரசி அதுவும் ஓடியோ இல்லாமல் போகுமாம்  படிக்க சிரிப்பாய் இருக்கு இவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள் என்று புரியவில்லை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.