Jump to content

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்! சபாநாயகர் அதிரடி நடவடிக்கை


Recommended Posts

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்! சபாநாயகர் அதிரடி நடவடிக்கை

 
 

TTV_MLAs_11179.jpg

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்திருந்தனர். அவர்களில் ஜக்கையன் தவிர, 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் விரிவான செய்தி.

http://www.vikatan.com/news/tamilnadu/102569-18-mlas-supporting-ttv-dinakaran-is-disqualified-by-speaker.html

Link to comment
Share on other sites

இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்: 

தங்க தமிழ்ச்செல்வன் - ஆண்டிபட்டி தொகுதி 

ஆர்.முருகன்  - அரூர் 

மாரியப்பன் கென்னடி - மானாமதுரை 

கதிர்காமு - பெரியகுளம் 

ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம் 

பழனியப்பன் - பாப்பிரெட்டி பட்டி 

செந்தில் பாலாஜி - அரவக்குறிச்சி 

எஸ். முத்தையா - பரமக்குடி 

வெற்றிவேல் - பெரம்பூர் 

என்.ஜி.பார்த்திபன் - சோளிங்கர் 

கோதண்டபாணி - திருப்போரூர் 

ஏழுமலை - பூந்தமல்லி 

ரெங்கசாமி - தஞ்சாவூர் 

தங்கதுரை - நிலக்கோட்டை 

ஆர்.பாலசுப்பிரமணி - ஆம்பூர் 

எஸ்.ஜி.சுப்ரமணியன் - சாத்தூர் 

ஆர்.சுந்தரராஜ் - ஒட்டப்பிடாரம் 

கே.உமா மகேஸ்வரி - விளாத்திகுளம் 

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? வெற்றிவேல் அதிரடி அறிவிப்பு

 
 

vettivel_MLA_1a_11511.jpg

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, வெற்றிவேல் மற்றும் புகழேந்தி அறிவித்துள்ளனர்.

சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஜக்கையன் உள்பட 19 பேர் போர்க்கொடி தூக்கியதோடு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். இதைத் தொடர்ந்து, 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படியும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, 19 பேரும் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கம் திருப்தியில்லை என்று கூறிய சபாநாயகர் தனபால், மீண்டும் விளக்கம் அளிக்கும்படி 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸுக்கு அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ஜக்கையன் மட்டும் சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதல்வர் பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், ஜக்கையனைத் தவிர்த்து தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம்செய்து சபாநாயகர் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதுகுறித்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எங்களைத் தகுதிநீக்கம் செய்துள்ளனர். தகுதி நீக்கத்துக்குக் காரணம் கூற சபாநாயகருக்கு உரிமையில்லை. அரசுக் கொறடாவின் உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும். எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். நீதிமன்றத்துக்குச் சென்றால், எங்கள் தரப்புக்கு நியாயம் கிடைக்கும்" என்று கூறினார்.

 

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், நிர்பந்தம் காரணமாகவே தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்துள்ளனர். சட்டத்துக்கு விரோதமான செயலை சபாநாயகர் எடுத்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம்" என்று தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/102574-ttv-dinakaran-support-mla-vetrivels-next-move-after-dismissal.html

Link to comment
Share on other sites

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செல்லுமா? என்ன சொல்கிறார் சேடப்பட்டி முத்தையா

 
 

sedapatti muthiah

ஆளும்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமா என்பதுகுறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா பதில் அளித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆளும்கட்சியைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித் தனியாக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, "கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்று 18 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு முதலில், 18 பேரும் விளக்கம் அளித்தனர். பின்னர் விளக்கம் திருப்தியில்லை என்று கூறி சபாநாயகர் தனபால், மீண்டும் 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு 18 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்செய்யப்பட்டது குறித்து, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறுகையில், 10-வது அட்டவணையின்படி ஏ பிரிவின் கீழ் கட்சித் தாவியதாகக் கூறி 18 எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். 6-வது விதியின் உட்பிரிவு 5-ன் கீழ், கட்சியை விட்டு வெளியேறியதற்கான ஆவணம் எங்கே? அனுமதி பெறாமல் ஆளுநரிடம் கடிதம் அளித்ததால் விதிமீறல் எனக் கொறடா கூறியிருந்தார். ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தை ஆதாரமாக இணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்குள்  தனி அணியாகச் செயல்பட்டால் மட்டுமே கொறடாவால் நடவடிக்கை எடுக்க முடியும். அதுவும் அரசுக் கொறடாவின் உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும். 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லாது. சட்டவரம்புக்கு உட்படாத நடவடிக்கையை சபாநாயகர் செய்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்றுகூட நீதிமன்றம் செல்லலாம்" என்று கூறினார்

http://www.vikatan.com/news/tamilnadu/102588-former-tn-assembly-speaker-sedapatti-muthiah-explains-about-mlas-disqualifications.html

 

 

Link to comment
Share on other sites

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்! தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்

 
 

tamilisai-_thirunavu-_duraimuragan-_thir

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதுகுறித்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் திரும்பப் பெற்றத்தைத் தொடர்ந்து, அவர்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் இன்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களை மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர்களையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் கூறுகையில், "சட்டப்பேரவைக்கு உண்டான பாரம்பர்யத்தை சபாநாயகர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். ஒருதலைபட்சமாகச் செயல்படும் சபாநாயகர், எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நியாயமாக வழிநடத்துவார்? எடப்பாடி பழனிசாமியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். சபாநாயகர் மீது வைத்திருந்த நம்பிக்கை சரிந்துவிட்டது" என்று குற்றம் சாட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைப் பொறுத்தவரை நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, "தீவிர ஆலோசனைக்குப் பிறகே, சபாநாயகர் சட்டப்படி முடிவெடுத்திருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், "சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறினால் மட்டுமே தகுதி நீக்க உத்தரவு செல்லும். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சபாநாயகரை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். கட்சித்தாவல் நடவடிக்கை என்றால், 18 பேர் எந்தக் கட்சிக்குத் தாவினர். தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ள நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசைக் காப்பாற்றிக்கொள்ள செய்யப்பட்ட தந்திர நடவடிக்கை" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/102581-political-leaders-comment-on-admk-mlas-dismissal.html

Link to comment
Share on other sites

தகுதி நீக்கத்தால் கதறி அழுத மூன்று எம்.எல்.ஏ-க்கள்!

 
 

TTV_MLAs_1_14087.jpg

தகுதி நீக்கம் அறிவிப்பைக் கேட்டு பெண் எம்.எல்.ஏ உள்பட மூன்று எம்.எல்.ஏ-க்கள் கதறி அழுததாகத் தகவல் வெளியாகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தினகரனை ஆதரித்த 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருபான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார்.

அடுத்து, 7 எம்.பி-க்கள், அ.தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ நடிகர் கருணாஸ் மற்றும் இரண்டு பேர் என 10 பேருடன் தினகரன், ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்தித்தார். இதற்கிடையில், சட்டசபைக்குள் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்ததாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்குச் சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டதோடு, சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க செப்டம்பர் 20-ம் தேதி வரை தடையும் விதிக்கப்பட்டது. இதனால், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்களில் 19 பேரில் ஜக்கையன் எம்.எல்.ஏ-மட்டும் மனம் மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தார். சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கும் பதிலளித்தார். இதனால், ஜக்கையனைத் தவிர 18 எம்.எல்.ஏ-க்கள் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பைக் கேட்ட கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கண்கலங்கியுள்ளனர். மேலும், ஒரு பெண் எம்.எல்.ஏ-வும் கண்கலங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மூன்று பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இதுகுறித்து எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "தகுதி நீக்கம் அறிவிப்பு வெளியானதும், போனில் எம்.எல்.ஏ-வுடன் பேசினேன். அப்போது, அவரது குரல் உடைந்திருந்தது. எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிட்டபோது செலவழித்த தொகை, அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சோகமாகவே எம்.எல்.ஏ பேசினார். ஒருகட்டத்தில் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அமைதியான அந்தச் சமயத்தில் கதறி அழும் சத்தம் மட்டுமே கேட்டது" என்றார்.

 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/102603-admk-mlas-worried-after-the-dismissal-order-from-tn-assembly-speaker.html

Link to comment
Share on other sites

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்: கொந்தளித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ

 

’டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு எதிரான ஜனநாயக படுகொலை’ என்று ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

thamimun
 

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க இரண்டு அணியாகச் செயல்படும் நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர், 'இதுபோலதான் நடவடிக்கை வரும் என்று சொல்லியிருந்தார். அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவுக்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த 18 எம்.எல்.ஏ-க்களும் வேறு கட்சிகளுக்குச் செல்லவில்லை, அ.தி.மு.க-வின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராகச் செயல்பட்டார்கள்.

இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்டம்பர் 20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும். மத்திய அரசையும் ஆளுநரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. நிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம். கூடா நட்புகேடாய் முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/102607-thamimun-ansari-slams-tamilnadu-government.html

Link to comment
Share on other sites

‘தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்!’ - எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரனின் ஆறுதல் #VikatanExclusive

 
 

தினகரன்

தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்.எல்.ஏ-க்களிடம் போனில் பேசிய தினகரன், 'தைரியமாக இருங்கள்.. நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தினகரனை ஆதரித்த 22 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள், இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்குத் தகவல் தெரிந்ததும், சில எம்.எல்.ஏ-க்கள் சோகத்தில் மூழ்கினர். சொகுசு விடுதியில் இல்லாத எம்.எல்.ஏ-க்கள், தங்களுடைய ஆதரவாளர்களிடம் மனவருத்தத்தைப் பகிர்ந்துகொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படாத  எம்.எல்.ஏ-க்களும் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தினகரனை ஆதரித்த ஜக்கையன் எம்.எல்.ஏ., மனம் மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

தகுதிநீக்க அறிவிப்பு வெளியானதும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், ‘இந்தத் தகுதி நீக்கம் செல்லாது’ என்று ஆவேசமாகக் கூறினார். அடுத்து, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் சபாநாயகரின் நடவடிக்கைக்குத் தடை பெற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம்குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். தகுதிநீக்கத்துக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் தினகரன் போனில் பேசியுள்ளார். அப்போது அவர், 'தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்' என்று எம்.எல்.ஏ-க்களுக்கு ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியானது.  

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், “எங்களைத் தகுதிநீக்கம் செய்த தகவல் கிடைத்ததும் தினகரன் போனில் தொடர்புகொண்டார். எங்களிடம் ஆறுதலாக அவர் பேசினார். திருச்சி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு சசிகலாவைச் சந்தித்துவிட்டு, அடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். நிச்சயம், சபாநாயகரின் தகுதிநீக்க நடவடிக்கைக்குத் தடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தினகரனுடன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

இதற்கிடையில், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடகவிலிருந்து இன்று இரவு புறப்படுகிறோம். திருச்சியில், தினகரனை நேரில் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம்வந்துவிட்டது. சட்டசபையில் நாங்கள் இருந்தால், அவரால் நிச்சயம் பெருபான்மையை நிரூபிக்க முடியாது என்று கருதியே, எங்களைத் தகுதி நீக்கம் செய்துள்ளார். தைரியமிருந்தால், எங்களைத் தகுதிநீக்கம் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் செயல்பட்டுள்ளார். கட்சித்தாவியதாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும், இந்த ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத்தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால், அரசியல் காழ்பு உணர்ச்சியால் நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம். நீதிமன்றத்தில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்” என்றனர். 

தொடர்ந்து, தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்துள்ளார் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்குகுறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வழக்கில், செப்டம்பர் 20-ம் தேதி வரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடத் தடை உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றமோ அல்லது ஆளுநர் தரப்பிலோ உத்தரவிடப்பட்டால், அதைச் சமாளிக்கவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் என்று சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கும் நடவடிக்கையும் தலைமைச்செயலகத்தில் தீவிரமாக நடந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் பரபரப்புக்கிடையே, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகிறார். அவரது வருகையும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.  

 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “குறுக்குவழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற முடியாது. தகுதிநீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/102590-dont-get-afraid-says-dinakaran-to-his-support-mlas.html

Link to comment
Share on other sites

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

yediyurrappa%20002

எடியூரப்பா | கோப்புப் படம்

அதிமுக அணியில் தனி அணியாக செயல்படும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொறடா பரிந்துரையை ஏற்று சட்டப்பேரவை தலைவர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆனால் இந்தத் தகுதி நீக்கம் உயர், உச்ச நீதிமன்றங்களுக்குச் சென்றால் செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியே. காரணம் 2010-ம் ஆண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது இதே நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சினை எழுப்பப்பட்ட போது கர்நாடக சட்டப்பேரவைக் கொறடாவும் இதே போல் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார், ஆனால் இந்தத் தகுதி நீக்கம் செல்லுபடியானதா என்றால் ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும்.

2010-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி வகித்தபோது 11 பாஜக எம்.எல்.ஏ.க்களும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினர்.

இதையடுத்து கர்நாடக சபாநாயகரால் இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிறகு 16 எம்.எல்.ஏ.க்களும் தகுதியிழப்புச் செய்யப்பட்டனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது உயர் நீதிமன்றம் தகுதி நீக்கத்தை உறுதி செய்து அக்டோபர் 29, 2010-ல் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து 16 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு 2011-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி அளிக்கப்பட்டது.

அதில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றிய சபாநாயகரின் முடிவுக்கு சந்தேகமின்றி தடை விதிக்க வேண்டியதுதான். இந்த வழக்கின் பலதரப்பட்ட விவகாரங்களையும், பல்வேறு கேள்விகளையும் ஆய்ந்தும் பரிசீலித்தும் பார்க்கும் போது அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்பீடுகள், இயற்கை நீதி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சபாநாயகர் எடுத்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள இந்த நீதிமன்றம் மறுக்கிறது என்று கூறி அவர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்ப்பளித்தது.

அதாவது சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஆளுநர் விதித்த இறுதிக்கெடுவை சந்திக்க வேண்டும் என்பது போல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார், இந்த நடைமுறையில் அரசியல் சாசன அடிப்படைகள், 1986-ம் ஆண்டு தகுதிநீக்க விதிகள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன.

அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்வருக்கு விரோதமாகப் போய்விடக்கூடாது என்பதற்காகவே சபாநாயகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்பதைத் தவிர புரிந்து கொள்ளக் கூடிய தர்க்கபூர்வ காரணங்கள் இந்த தகுதி நீக்கத்துக்குப் பின்னால் இல்லை, என்று உச்ச நீதிமன்றம் கண்டித்து தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/article19708809.ece?homepage=true

Link to comment
Share on other sites

'18 தொகுதிகள் காலி' - தேர்தல் ஆணையத்துக்கு பேரவைச் செயலாளர் கடிதம்

 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி கடிதம் எழுதியுள்ளார்.

எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி கடந்த மாதம் இணைந்தது. இதையடுத்து, தினகரன் அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது. இதுதொடர்பாக, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தமிழக சட்டசபை


இதனால் அ.தி.மு.க அணிகளுக்கிடையேயான மோதல் நாளுக்குநாள் வலுத்துவந்தது. இதனிடையே, கொறடாவின் அனுமதியின்றி ஆளுநரைச் சந்தித்ததற்காக அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று, சபாநாயகர் தனபாலுக்கு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, தினரகன் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஜக்கையன், எடப்பாடி அணிக்கு மாறினார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து இன்று காலை உத்தரவிட்டார் தனபால்.

 

இதையடுத்து, தற்போது தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக, தேர்தல் ஆணையத்துக்குப் பேரவைச் செயலாளர் பூபதி கடிதம் எழுதியுள்ளார். மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பெயர்களை தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பூபதி கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/102636-assembly-secretary-notifies-vacancies-in-18-constituencies-following-disqualification-of-dissident-mlas.html

Link to comment
Share on other sites

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் இழப்பு என்னென்ன?

 
 

தகுதி நீக்கம் பற்றி தினகரன் பேட்டி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராகக் கடிதம் கொடுத்ததற்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

எனினும், சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு கட்சியின் எம்.எல்.ஏக்கள், ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்ததற்காக தகுதிநீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வியும், கட்சிக் கொறடா உத்தரவு இல்லாமல் அவர்கள் ஆளுநரைச் சந்திக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதுதொடர்பாக முன்னுதாரணம் ஏதும் உண்டா என்றும் நாம் சில மூத்த பத்திரிகையாளர்களிடம் விசாரித்தோம்.

"முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்தார். அந்த நேரத்தில் சட்டசபை சபாநாயகராக மதியழகன் இருந்தார். அவர் எம்.ஜி.ஆர் ஆதரவாளராக இருந்ததால், சபாநாயகருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது.

முதலில் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, எம்.ஜி.ஆர். தரப்பில் கோரிக்கை விடுத்தபோதிலும், சபாநாயகர் இருக்கைக்கு அருகிலேயே துணை சபாநாயகர் சீனிவாசனுக்கு மற்றொரு இருக்கையைப் போட்டு, மதியழகன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நெடுஞ்செழியன் கொண்டுவந்தார். இதையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை என்று துணை சபாநாயகர் தெரிவித்ததும், எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எட்டுபேரும் சபையிலிருந்து வெளியேறினர். 'சட்டசபை செத்துவிட்டது. இனி முதல்வராகக்தான் இந்த சபைக்குள் வருவேன்' என்று கூறிவிட்டு வெளியேறினார் எம்.ஜி.ஆர். மதியழகனும் சபாநாயகர் பதவியை விட்டு விலகினார். அப்போதைய தி.மு.க. அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. 'இந்த நிகழ்வு முன்னுதாரணமாக ஆகி விடாதா?' என்று கருணாநிதியிடம் கேட்டபோது, 'ஆம். முன்னுதாரணமாகட்டும்' என்றார். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறுவிதமாக உள்ளது. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை" என்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளம், இதர படிகள் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடையாது. அவர்கள், எம்.எல்.ஏ. என்பதற்கான தகுதியை இழக்கிறார்கள். அவர்களின் தொகுதிகள் காலியானதாகவே கருதப்படும்.  எம்.எல்.ஏ-க்களுக்கான ரயில் பயணச் சலுகை, தொலைபேசிக் கட்டணம், தொகுதி வளர்ச்சி நிதி, எம்.எல்.ஏ-க்கான தொகுதி அலுவலகத்திற்கான செலவுத்தொகை உள்ளிட்ட எந்தக் கட்டணத்தையும் தமிழக அரசிடம் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு எம்.எல்.ஏ-வும் பெற முடியாது. சட்டமன்றக் கூட்டதொடரில் அவர்கள் பங்கேற்க முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டு, தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் கணக்கிடப்படுவர். எனவே, நீதிமன்ற உத்தரவு வரும்வரை அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு இணையானவர்களாகவே கருதப்படுவர்.

 

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை கூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தவுள்ளனர். 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்திருப்பதற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், தங்களின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு பற்றி முடிவுசெய்யப்படும் என்றார் அவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/102620-what-is-the-loss-faced-by-disqualified-mlas.html

Link to comment
Share on other sites

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? சபாநாயகர் தனபால் விளக்கம்

 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தது குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.

 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? சபாநாயகர் தனபால் விளக்கம்
 
சென்னை:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தது குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று உத்தரவிட்டார். இதற்கு தினகரன் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகுதிநீக்கம் தொடர்பாக விளக்கம் அளித்து சபாநாயகர் தனபால் கூறியதாவது:-

201709182154464966_1_mla-18._L_styvpf.jp

சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதை வெளிக்காட்டுவதற்காக, தேர்ந்தெடுத்த முதலமைச்சருக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தனர். விளக்க அறிக்கையில் பொய்யான தகவலை கூறினர். புதுச்சேரியில் தங்கிவிட்டு நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறியிருந்தனர். கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், கட்சியில் இருந்து விலகியதாக கருதப்படுவதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜக்கையன் அளித்த விளக்கத்தை ஏற்று அவரை தகுதி நீக்கம் செய்யவில்லை. ஆட்சியை கவிழ்க்க தான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாக ஜக்கையன் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர ஆதரவு அளிப்பதாகவும் கூறியதால் அவரது விளக்கம் ஏற்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/18215443/1108671/Speaker-explained-about-18-MLAs-disqualified.vpf

 

Link to comment
Share on other sites

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, சசியால் ஏவி விடப்பட்ட தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று அதிரடி உத்தரவிட்டார். அனைவரையும் இணைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என, பகல் கனவு கண்டு கொண்டிருந்த, தினகரனின் திட்டம், தவிடுபொடியானது.
அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வர் பதவியில் அமர, ஆளாளுக்கு முயற்சி செய்தனர். தோழி சசிகலா; அவரை அடுத்து, அவர் குடும்பத்தைச் சேர்ந்த, கணவர் நடராஜன்; பின், தம்பி திவாகரன்; தற்போது, அக்கா மகன் தினகரன் என, 'மியூசிக்கல் சேர்' விளையாட்டு நடந்து வந்தது.
சசிகலா சிறை செல்வதற்கு முன், முதல்வராக பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார்; அவரைத் துாக்கி எறிந்தார் சசிகலா. பின், தனக்கென, ஆதரவுக் கூட்டத்தைப் பெருக்கினார்.
 

தனபாலுக்கு பரிந்துரை



ஆனால், முதல்வர் பதவியில் அமர்வதற்குள், அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்; பழனிசாமி முதல்வர் ஆனார்.அதன் பின், அவர் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர், முதல்வர் நாற்காலியைப் பிடிக்க, சில நாட்கள், திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அவர்களை விஞ்சும் வகையில், சசியின் அக்கா மகன் தினகரன், தனக்கு ஆதரவான, எம்.எல்.ஏ.,க்களை திரட்டினார்.இது பிடிக்காத பழனிசாமி, பன்னீரை தன்னுடன் இணைத்து, தனக்கு ஆதரவாகச் செயல்படும், எம்.எல்.ஏ.,க்களை அணி திரட்டினார்.
அ.தி.மு.க.,வின், 135 எம்.எல்.ஏ.,க்களில், 19 பேர், தினகரனுடன் ஐக்கியமாகினர்; ஆக., 22ல், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, அரசு கொறடா ராஜேந்திரன், ஆக., 24ல், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பினார்.
 

அவகாசம் கோரி, மனு


அதற்கு, அவர்கள் இடைக்கால பதிலளித்தனர்.இதற்கிடையில், 'பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட

வேண்டும்' என, எதிர்க்கட்சிகள், கவர்னரை சந்தித்து வலியுறுத்தின. ஆனால், 'இது, உட்கட்சி விவகாரம்' என, கவர்னர் கைவிரித்தார்.
இந்த சூழ்நிலையில், 'தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். செப்., 7ல், நேரில் ஆஜராக வேண்டும்' என, சபாநாயகர், மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.அதையடுத்து, தினகரன் அணியைச் சேர்ந்த ஜக்கையன், திடீரென்று சபாநாயகர் முன் ஆஜராகி, முதல்வர் பழனிசாமியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, செப்., 5ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, முதல்வர் பழனிசாமி கூட்டினார். சென்னையில் நடந்த கூட்டத்தில், 109 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்; தினகரன்ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.மேலும், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரிடம் அவகாசம் கோரி, மனு கொடுத்தனர். அதை ஏற்று, செப்., 14ல், தனித்தனியே நேரில் ஆஜராக, சபாநாயகர் உத்தரவிட்டார்.

தகுதி நீக்கம்



அதன்படி அன்று, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., வெற்றிவேல் மட்டும் ஆஜரானார்; மற்ற யாரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில், வழக்கறிஞர் ஆஜராகி, சில ஆவணங்கள் கேட்டு, கடிதம் கொடுத்தார்.இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கோரி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; அந்த வழக்கில், தினகரன் தரப்பும் இணைந்து கொண்டது.
இவ்வழக்கு, விசாரணையில் உள்ள நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று உத்தரவிட்டார்.இது தொடர்பாக, சட்டசபை செயலர், பூபதி வெளியிட்ட அறிக்கையில், '1986ம் ஆண்டு, தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின், கட்சி மாறுதல் காரணமாக, தகுதியின்மையாக்குதல் விதியின் கீழ், சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.,க்களை, செப்., 18 முதல், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதனால், 18 எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பதவியை இழந்துள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம் அரசிதழிலும் நேற்று வெளியிடப்பட்டது.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, தற்போது பெரும்பான்மை கிடைத்துள்ளது.

 

இதையடுத்து, 'பழனிசாமியுடன் இணக்கமாகச் செயல்பட்டு, ஆட்சியைப் பிடிக்கலாம் அல்லது, தி.மு.க., கூட்டணி, எம்.எல்.ஏ.,க்களுடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்கலாம்' என்ற, தினகரனின் எண்ணம் தவிடுபொடியாகி விட்டது.
 

துணிச்சல் பின்னணி


உத்தரகண்ட்மாநிலத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேர், 2016 மார்ச் மாதம், அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர்; அவர்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.இதை எதிர்த்து, அந்த எம்.எல்.ஏ.,க்கள், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 'எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும்' என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில், சபாநாயகர் தனபால், தற்போது, 18 பேரை நீக்கியுள்ளார்.
 

19 தொகுதிகள் காலி


தமிழகத்தில், ஜெ., மறைவு காரணமாக, 2016 டிச., 5 முதல், சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியாக உள்ளது. தற்போது, நேற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதனால், அவர்கள் வெற்றி பெற்ற, 18 சட்டசபை தொகுதிகளும் காலியானது.
இது குறித்து, சட்டசபை செயலகம் சார்பில், முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, தமிழகத்தில், காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, 19 ஆக உயர்ந்துள்ளது
 

இது நாலாவது முறை!



அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டாவது முறையாக, தகுதி நீக்கம் செய்யப்பட்டு
உள்ளனர்.
* தமிழக சட்டசபையில், தகுதி நீக்கம் சம்பவம், நான்கு முறை நடந்துள்ளது. 1986ல், தி.மு.க., சார்பில், அரசியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட, 10 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்து, அப்போது சபாநாயராக இருந்த, பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார்
*எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், ஜானகி முதல்வராக பதவி ஏற்றார். 1988ல், அவர் பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது, அரசு கொறடா உத்தரவை மீறியதாக, ஜெ., அணியைச் சேர்ந்த, 33 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயராக இருந்த, பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார்
* கடந்த, 2013ல், சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரை, ஓராண்டு தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்
* தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று உத்தரவிட்டார். தமிழக சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, இது இரண்டாவது முறை.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1857974

Link to comment
Share on other sites

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது: முன்னாள் தேர்தல் அதிகாரி கே.ஜே.ராவ்

KJRaojpg

கே.ஜே.ராவ்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என மத்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் அதிகாரி கே.ஜே.ராவ் கருத்து கூறியுள்ளார். இதற்கு நீதிமன்ற உத்தரவு அமலில் இருக்கும் போது எதையும் செய்ய முடியாது என சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து 'தி இந்து'விடம் பேசிய ராவ் கூறியதாவது: ''நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த திமுகவின் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதில், வரும் செப்டம்பர் 20 வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி சட்டப்பேரவையும் செப்டம்பர் 20 வரை கூட்டவே முடியாது.

இதுபோல், சட்டமன்றம் குறித்த வழக்கு நடைபெற்று வரும் போது, அதன் மீது நீதிமன்ற இட்ட உத்தரவு அமலில் இருக்கும் சபாநாயகர் புதிதாக எதையும் செய்ய முடியாது. இதில் அவர் போடும் புதிய உத்தரவுகள் எதுவாக இருந்தாலும் அது செல்லாது என்றாகி விடும். இந்த நிலையில், திமுக உயர் நீதிமன்றம் அணுகினால் 18 எம்எல்ஏக்களின் நீக்க உத்தரவு செல்லாது என அறிவிக்க வாய்ப்புகள் அதிகம். இதற்காக பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் கூட நீதிமன்றம் அனுகலாம்.

எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்திற்குப் பின் அவர்கள் தொகுதிகள் காலியானதாக தமிழக அரசின் அறிவிக்கை இயற்றப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இதை, வழக்கமாக ஒரு வாரத்திற்குள் இயற்றப்படும். ஆனால், அரசு அவர்கள் கைகளில் உள்ளது என்பதற்காக அதை உடனடியாக இயற்றியுள்ளனர். இதை கூட உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளது.

தமிழக அரசின் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில், தமிழக அரசியல் நிகழ்வுகளை தேர்தல் ஆணையம் கண்காணித்திருக்கும். இதனால், தனக்கு அனுப்பப்பட்டிருக்கும் அரசு ஆணை முறையாக இயற்றப்பட்டுள்ளதா என பரிசீலிக்கும். இதில், சபாநாயகர் உத்தரவிற்கு பல பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2002-ல் நடைபெற்ற சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிரடியாக பணியாற்றிவர் கே.ஜே.ராவ். இவர், தனது ஓய்விற்குப் பிறகும் 4 வருடங்கள் தேர்தல் ஆணையத்தில் ஆலோசகராக 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர். அப்போது, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்களின் பார்வையாளராக சென்றிருந்தார்.

தற்போது இவர் உச்ச நீதிமன்றம் டெல்லியின் கட்டிடங்கள் விதிமீறலின் மீது அமைத்த கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக உள்ளார். ஜே.எம்.லிங்டோ, என்.கோபால்சாமி, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய முன்னாள் தேர்தல் அதிகாரிகளுடன் நானும் இணந்து 'மேம்பட்ட தேர்தல் நிர்வாக அமைப்பு' என ஒன்றை துவங்கி சமூகபணியாற்றி வருகிறார்.

http://tamil.thehindu.com/india/article19714026.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.