Jump to content

புலத்திலிருந்து நிலத்தை நோக்கிச் செய்யக்கூடிய செயற்திட்டங்கள் (ஆலோசனைகள், அனுபவப் பகிர்வுகள், உதவிகள்....)


Recommended Posts

புலத்திலிருந்து நிலத்தை நோக்கிச் செய்யக்கூடிய செயற்திட்டங்கள் (ஆலோசனைகள், அனுபவப் பகிர்வுகள், உதவிகள்....)

handshake_1.jpg?itok=cyaQ2YMR

நாம் வாழும் புலம்பெயர் தேசங்களில் பல்வேறுவகையான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன , அவர்கள் பலவெற்றிகரமான செயற்திட்டங்களை தமது நாட்டுக்கு வெளியேயும் ஏன் தமது நாடுகளிலும் செய்கிறார்கள், இவை தொடர்பான பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம் ,  பார்க்கும் போது இப்படியான திட்டங்களை  எமது நாட்டில் நாமும் செய்யலாம் எனத் தோன்றியிருக்கும், எனக்கும் பல தடவைகள் அப்படித் தோன்றியிருக்கிறது ..... அவற்றை பகிர்வதன் மூலம்  நாம் செய்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கலாம் என நினைக்கின்றேன்.

இங்கு நாம் வாழும் நாடுகளில் கூட பல நடைமுறைகளை அவதானித்து இருப்போம் , அவை எமது தாயகத்துக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் , இவற்றை பகிர்வதன் மூலம்  தாயகத்திலுள்ளவர்களுக்கும் சில ஐடியாக்களை வழங்கலாம்.

நாம் தாயகத்தில் செய்த சில செயற்திட்டங்கள் மூலம் பல நல்ல அனுபவங்களைப் பெற்றிருப்போம் அவற்றின் மூலம் செய்யவேண்டியவை , செய்யக் கூடாதவை என சிலவற்றைக் கண்டறிந்திருப்போம் அவற்றையும் பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கும் நாம் உதவியாக இருக்கலாம்.

கள உறவுகளே உங்களுக்குக் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப , உங்கள் அனுபவங்ளை தயவு செய்து பகிருங்கள் ... இதன் மூலம் பல முன்னேற்றங்களைப் பெறலாம் என்பது என் நம்பிக்கை

கரம் கோர்ப்போம் .....

five-men-shaking-hands-vector-id58373081

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக மக்கியமாக உல்லாசப்பயணத்துக்கு வடக்கை தயார்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

ஊர்காவல்துறை கடற்கோட்டை, யாழ் கோட்டை போன்றவை பெரும் வருமானம் தரும் பொக்கிசங்கள்.

இவை இலங்கை உல்லாசத்துறை சஞ்சிகைகளில் இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மிக மக்கியமாக உல்லாசப்பயணத்துக்கு வடக்கை தயார்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

ஊர்காவல்துறை கடற்கோட்டை, யாழ் கோட்டை போன்றவை பெரும் வருமானம் தரும் பொக்கிசங்கள்.

இவை இலங்கை உல்லாசத்துறை சஞ்சிகைகளில் இப்போது இல்லை.

ம் இருந்தாலும் நல்ல  திட்டங்களை வரவேர்க்கலாம் தற்போது மக்களும் சரி உல்லாச பிரயாணிகளும் சரி எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க வெளியூர்களுக்கு வருகிறார்கள் போகிறார்கள் வடக்கு கிழக்கில்  பொழுது போக்க இடங்கள் இருக்கின்றன அந்த இடங்களில் நல்ல விடுதிகள்  அமைத்தும் அதை சுத்தமாக வைத்திருந்தால் நல்ல  வருமானம் பார்க்கலாம் அண்மையில் வெள்ளைக்காரனில் வசதி குறைந்தவன்  போல் தன்க்கு ஒரு ரூம் வேண்டும் ஆனால்  ஏசி தேவையில்லை ஆனால் சுத்தமாக இருந்தால் போதும் என்று கேட்டான் நானும் நல்ல ஒரு விடுதியை காட்டினேன்  தற்போது ஓலைகுடிசை ரீ சோட்டுக்கள் பிரபலமாகின்றன ஆனால் நன்றாக இருக்க வேண்டும்  உள் சூழலும் ஈர்பவையாக இருக்க வேண்டும் சுற்றுலா துறை சார்பாக  உணவு விடுதிகளை பற்றி சொல்ல முடியாது    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலைசெய்யும் பெண் இருவாரம் அங்கு வந்து இன்று திரும்பினார். அனுராதபுரம் வரை சென்றாராம்.

வடக்கே போகுமாறு நான் சொல்லியிருந்தேன். அங்கே எதுவுமே இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மாகாணசபை தமக்குள் அடிபடாமல் உல்லாசப்பயணத் துறையில் தகுதி வாய்ந்த ஒருவரை, சிங்களவராயினும், பதவியில் அமர்த்த வேண்டும்.

முனிவர், வருமானம் பெற ஒரு ஆலோசனை... வேண்டுமாயின் தனிமடலில் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

கடந்த வருடம் அங்கு இருமுறை சென்ற போது நின்ற சிறிய விடுதிகளில் தமிழர் அல்லாத ஐரோப்பியர் பலர் கூட்டாக வந்து தங்கி இருந்தார்கள். அவர்கள் கோட்டை, நல்லூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தார்கள். இந்த விடுதிகள் உல்லாச பயணங்களை ஊக்குவிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இந்த பயணிகளை அழைத்து வருகிறார்கள்.

உல்லாச பயணங்களை ஊக்குவிக்கும் வணிக நிறுவனங்களை பல  நாடுகளிலும்   அமைத்து விளம்பரம் செய்து இவ்வாறாக விடுதிகளுடன் ஏற்பாடுகளை செய்து உல்லாச பயணத்தை ஊக்குவிக்கலாம்.   அமெரிக்கர்கள் பெருமளவில் உல்லாச பயணம் போவார்கள். குளிர் காலத்தில் கரிபியன் தீவுகளுக்கும் சூடான அமெரிக்க மாநிலங்களுக்கும் போவார்கள். கடந்த புயல் சூறாவளியால் இந்த பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு  உள்ளன. ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களால் உல்லாச பயணம் ஆபத்தானதாக உள்ளது. இலங்கையின் உல்லாச பயணம் இன்று பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலை உல்லாச பயணங்களை ஊக்குவிக்கும் வணிக நிறுவனங்களை ஆரம்பிக்க நல்ல சூழ்நிலையாகும். இவ்வாறாக அமைக்கப்படும் நிறுவனம் நல்ல பெயரை பெறுவது முக்கியமானதாகும். சிறு குறைபாடுகளுக்கும் பெரும் நிவாரனகளை வழங்கி நல்ல பெயரை பெற்று விட்டால் நிறுவனம் நிலைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.