Jump to content

ஒரே ஊசியில் சாத்தியமாகும் குழந்தை பருவ தடுப்பூசிகள்


Recommended Posts

ஒரே ஊசியில் சாத்தியமாகும் குழந்தை பருவ தடுப்பூசிகள்

தடுப்பூசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய தடுப்பு மருந்துகளை படிப்படியாக ஒரே ஊசியில் வழங்குகின்ற தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஒரே ஊசியில் வழங்கக்கூடிய இந்த தடுப்பு மருந்து நுண்ணிய உறைகளில் சேமிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவுடன் தொடக்க மருந்து அளவை அது வெளிவிடும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதே நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் மருந்துகளை படிப்படியாக வெளிவிடும் வகையில் இந்த பொறிமுறை அமைந்திருக்கும்.

சோதனை எலிகளில் நடத்தப்பட்ட இதற்கான தொடக்க ஆய்வுகளில் இந்த தொழில்நுட்பம் செயல்பட்டுள்ளதாக 'சைன்ஸ்' சஞ்சிகை விவரிக்கிறது.

சாத்தியமாக இருக்கும் ஒரே ஊசியில் குழந்தை பருவ தடுப்பூசிகள்படத்தின் காப்புரிமைSEAN GALLUP/GETTY IMAGES

உலக நாடுகளிலுள்ள நோயாளிகளுக்கு இந்த தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைப் பருவத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகள் வழக்கமாக கண்ணீரோடும், அழுகையோடும்தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அந்தப் பருவத்தில்தான் அதிக தடுப்பூகள் போடப்படுகின்றன.

குழந்தைப் பருவ தடுப்பூசிகள் விபரம்

  • 8, 12 மற்றும் 16 வாரங்களில், தொண்டை அழற்சி (Diphtheria), தசைகளை கடினமாக இறுக செய்யும் நோய் (tetanus), கக்குவான் இருமல் (whooping cough), போலியோ (polio) ஹெச்ஐபி (), ஹெபடைடிஸ் பி
  • 8, 16 வாரங்கள் மற்றும் ஒரு வயதில் நியூமகோக்கல் (Pneumococcal) நோய் தடுப்பூசி
  • 8, 16 மற்றும் ஓரு வயதில் மென் பி (Men B) தடுப்பூசி
  • ஒரு வயதில் ஹெச்ஐபி/மென் சி (Hib/Men C) தடுப்பூசி
  • நான்கு மதங்களில் ருபெல்லா தடுப்பூசி, ஒரு வயதில் தட்டம்மை தடுப்பூசி, 3 வயதில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி.
சாத்தியமாக இருக்கும் ஒரே ஊசியில் குழந்தை பருவ தடுப்பூசிகள்படத்தின் காப்புரிமைJOE RAEDLE/GETTY IMAGES

எல்லா தடுப்பு மருந்துகளையும் ஒரே தடுப்பூசியில் சேர்த்து வழங்கும் வகையில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் குழுவினர் புதிய வகையான நுண்ணிய அணுக்கூறு ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இந்த அணுக்கூறு, நோய் தடுப்பு மருந்துகளால் நிரப்பப்பட்டு , மூடியால் இறுக்கமாக மூடப்பட்ட காஃபி கோப்பைகளின் சிறிய மாதிரியைபோல தோன்றுகின்றன.

இந்த சிறிய கோப்பைகள் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றப்படி மாற்றியமைக்கப்படலாம் என்பது இதில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதன் மூலம் சரியான நேரத்தில் அந்த சிறு கோப்பையிலுள்ள மருந்தை வெளிவிடும் வகையில் நாம் அமைத்துகொள்ள முடியும்.

சோதனை எலிகளில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட பிறகு, தடுப்பூசியாக செலுத்தப்பட்ட அணுக்கூற்றிலுள்ள சிறிய காஃபி கோப்பைகளின் மாதிரிகளில் இருந்து மருந்துகள் சரியாக 9, 20 மற்றும் 41 நாட்களில் வெளிவிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தியமாக இருக்கும் ஒரே ஊசியில் குழந்தை பருவ தடுப்பூசிகள்படத்தின் காப்புரிமைDIMAS ARDIAN/GETTY IMAGES

நூறு நாட்களுக்கு பிறகு மருந்துகளை வெளிவிடும் அணுக்கூறுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தடுப்பூசி வழங்கும் முறை இன்னும் மனிதர்களிடத்தில் சோதிக்கப்படவில்லை.

முக்கிய பங்களிப்பு

"இந்த கண்டுபிடிப்பில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பேராசிரியர் ராபர்ட் லான்கர் தெரிவித்திருக்கிறார்.

"முதல்முறையாக, தடுப்பு மருந்துகள் தனித்தனி அணுக்கூறுகளில் நிரப்பப்பட்டு வைத்திருக்கும் ஒரு மருந்து நிலையத்தையே நாம்மால் உருவாக்க முடிந்துள்ளது. இந்த அணுக்கூறுகள் ஒவ்வொன்றும் துல்லியமாக, கணிக்கக்கூடிய நேரத்தில் மருந்துகளை வெளிவிடும் வகையில் நம்மால் மாற்றி அமைத்துக்கொள்ள முடியம். இதனால், தடுப்பு மருந்துகள் பல ஏற்கெனவே நிரப்பப்பட்ருக்கு நுண்ணிய அணுக்கூறை ஒரே ஊசியில் உடலுக்குள் செலுத்தி பல்வேறு தடுப்பு மருந்துகளின் நோய் தடுப்பு திறனை குறிப்பிட்ட இடைவெளிகளில் பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறுகிறார்.

சாத்தியமாக இருக்கும் ஒரே ஊசியில் குழந்தை பருவ தடுப்பூசிகள்படத்தின் காப்புரிமைROBERT GIROUX/GETTY IMAGES

"இந்த முறை, எல்லா இடங்களிலுமுள்ள நோயாளிகளிடம், குறிப்பாக, வளர்முக நாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தும்" என்கிறார் பேராசிரியர் ராபர்ட் லான்கர்.

தற்போதைய இந்த ஆய்வு, மருந்துகளை மெதுவாக நீண்டநேர காலத்தில் வெளிவிடக்கூடிய முந்தைய முயற்சிகளில் இருந்து வேறுபடுகின்றனது.

இது தொடர்பான கருத்து சிறியதுதான். வழக்கமாக நோய் தடுப்பு திட்டங்களில் செய்யப்படுவதைபோல மருந்துகள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் துல்லியமாக வெடிக்க செய்து பயன் பெறுவதாகும்.

தடுப்பு மருந்து பெற்றுகொள்வதற்கும். எல்லா தப்பூசிகளையும் ஒரே ஊசியில் வழங்குவதற்கும் இடையில் வளர்முக நாடுகளில் வேறுபாடுகள் நிலவலாம்" என்று சக விஞ்ஞானி டாக்டர் கெவின் மிக்ஹக் தெரிவித்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/science-41292783

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.