Jump to content

தமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும் – நிக்ஸன்


Recommended Posts

தமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும் – நிக்ஸன்

TPC-2.jpg
வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் மாத்திரமே வெற்றி பெறலாம் என ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கருதுகின்றன. ஆனால் தேர்தல் அல்ல மக்களை ஒன்று திரட்டி அரசியல் கோரிக்கையை உறுதிப்படுத்துவதே பிரதானமாகும்.
அ.நிக்ஸன்.

தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தயக்கம் காண்ப்பிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டாமல் வேறு சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்ற மன நிலை அந்தக் கட்சிகளிடம் ஆழ பதிந்துள்ளது.

மக்களின் உறுதியான நிலை
வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரை பாரம்பரிய கட்சிகளுக்கு வாக்களித்து பழகியவர்கள் என்பது உண்மை ஆனாலும் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அவ்வாறான பாரம்பரிய கட்சி அரசியலை விடுத்து அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகள் அவசியம் என்பதை மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற 30ஆண்டுகால வரலாறுகள் என்பது வேறு.

அதற்கு பின்னரான சூழலிலும் அதன் தொடர்ச்சியாக அரசியல் உரிமையை ஜனநாயக வழியில் உறுதிப்படுத்துவதற்கான அமைப்பாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மக்கள் கருதினர். அதனால்தான் அத்தனை அழிவுக்குப் பின்னரும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலலில் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அரசாங்க நிகழ்ச்சி நிரல்
மக்கள் அவ்வாறான உறுதியான மன நிலையுடன் வாக்களித்து நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி சபை போன்றவற்றிக்கு தங்கள் சார்பான பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பினர். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்றுகொண்டும், அரச சலுகைகளை பெற்றுக் கொண்டும் வேறு திசைக்குச் செல்கின்றனர். அதாவது அரசியல் உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டு இயங்குகின்றனர்.

இதன்காரணமாகவே மாற்று அரசியல் அணி குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த மாற்று அணியை உருவாக்குவது யார் என்பதுதான் பிரச்சினை. இந்த இடத்திலேதான் தமிழ் மக்கள் பேரவை கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் ஆகியோரை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒருவருடம் சென்ற நிலையிலும் கூட அந்த பேரவையினால் வேறு அணுகுமுறைகளை கையாள முடியவில்லை.

அரசியல் வரைபு மாத்திரமே
புதிய அரசியல் யாப்புக்கான வரைபு ஒன்றை எழுத்து மூலம் அரசாங்கத்திடம் கையளித்ததைத் தவிர, மக்களை அரசியல் மயப்படுத்திய வேலைத் திட்டங்கள் மிகவும் குறைவு எனலாம். இந்த நிலையில் தற்போது கூட்டமைப்பில் உள்ள ஈபிஆர்எல்எப் புதிய அணியை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து பேசுகின்றது. ஆனால் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளை தவிர்த்து ஏனயை கட்சிகளுடன் இணைந்து ஈபிஆர்எல்எப் புதிய அரசியல் அணி குறித்து சிந்தித்தால் என்ன?

புதிய அணியை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்காத அல்லது விரும்பாத அந்த கட்சிகளையும் இணைத்துக் கொண்டுதான் செயற்பட வேண்டும் என ஏன் ஈபிஆர்எல்எப் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றது? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை முரண்பாடாக இருந்தாலும் வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமைதான் தீர்வு என்ற அடிப்படையில் ஒரே குரலாக இணைந்து செயற்படுவதற்கான சூழலை ஏன் உருவாக்க முடியாது?

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எப் அவ்வாறு செயற்பட முற்படும்போது ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் விரும்பியோ விரும்பாமலே புதிய அணியில் இணைய வேண்டிய தேவை ஏற்படும். ஆகவே அதற்கான அரசியல் சூழலை ஈபிஆர்எல்எப் தற்போதைக்கு தனித்து நின்றுதான் செய்ய வேண்டும். தற்போதைய தமிழ் அரசியல் சூழலில் இதை விட வேறு மார்க்கம் இருப்பதாக கூற முடியாது.

கற்றலோனியா போராட்டம்
ஸ்பெயின் நாட்டின் ஒரு அங்கமான கற்றலோனியா அரசியல் உரிமைப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றது. 2012ஆம் ஆண்டு கற்றலன் என்ற தேசிய பேரவை ஒன்றை ஆறுபேருடன் உருவாக்கி ஆறு மாதங்களில் ஒன்றரை மல்லியன் மக்களை திரட்டி அஹிம்சை வழியிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. நாடாளுமன்றம் செல்வது அதன் நோக்கம் அல்ல. மாறாக கற்றலோனியன் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஸ்பெயின் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.

தேசிய சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய கற்றலோனியன் பேரவை இன்று ஸ்பெயின் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துகின்றது. ஆகவே மக்கள் சக்தியை எப்படி பயன்படுத்த முடியும் என்பதற்கு கற்றலோனியன் சுதந்திரப் போராட்டம் சிறந்த உதாரணமாகும். 1974 ஆம் ஆண்டு 11 கற்றலோனியா ஸ்பெயின் இராஜ்ஜியத்தின் அங்கமாக இணைக்கப்பட்டது. அன்று தமது தோல்வியை உணர்ந்த மக்கள் இன்று எவ்வாறு ஒன்றுசேர்ந்து சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துகின்றனர் என்பதை தமிழ் மக்கள் அறியவேண்டிய காலமிது.

சலுகை அரசியல் அணுகுமுறை
பட்டம் பதவி, தேர்தலில் மாத்திரம் வெற்றிபெறும் நோக்கம், அரசாங்க நிகழ்ச்சி நிiலுக்குள் நின்றுகொண்டு சுயநிர்ணய உரிமை பற்றி பேசுவது போன்ற அரசியல் அணுகுமுறை 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னரான பலவீனமாகும்.  தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த பலவீனத்தை உணர்ந்து கொள்ள மறுக்கின்றது என்பதை விட தெரிந்து செய்கின்றார்கள் என்பதுதான் உண்மை. வேறு மாற்றுவழி இல்லை அரசாங்கத்துடன் சோந்து செயற்படுவதன் மூலம் எதையாவது பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களின் கருத்தாகும்.

ஆனால் அரசாங்கத்துடன் சேர்ந்து இருக்கின்றதையும் இழக்கின்ற அரசியலைத்தான் மக்கள் கண்டுள்ளனர். குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் கூட உரிய முறையில் செயற்படுத்தப்படவிலிலை. இந்த நிலையில் இணக்க அரசியல் அல்லது சேர்ந்துபோகின்ற அரசியல் என்பது வடக்கு கிழக்கு மாகாணத்தை கலப்பு சமூதாயம் வாழும் பிரதேசமாக மாற்றியமைத்துவிடக் கூடிய ஆபத்துக்கள் உண்டு.

தமிழ் மக்கள் பேரவையின் கடமை
ஆகவே தமிழ் மக்கள் பேரவைக்கு கடமை ஒன்று உள்ளது. அதாவது பேரவையின் உறுப்பினர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை புதிய அரசியல் அணிக்கான பலத்தை அல்லது வழிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். இளைய சமூகத்துக்கான அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு அவர்களின் கருத்தை பெற வேண்டும். கற்றலோனிய மக்களின் சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான விளக்கங்களை கொடுக்க வேண்டும். வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால்தான் வெற்றிபெற முடியும் என்ற சிந்தனையை உடைத்து, தேர்தல் அல்ல சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கோரிக்கையை நியாப்படுத்த வேண்டியதே இன்றை தேவை என்ற கருத்தையும் தமிழ்மக்கள் பேரவை உருவாக்க வேண்டும்?

http://globaltamilnews.net/archives/41490

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.