Jump to content

UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட்


Recommended Posts

UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட்

Untitled-collage-231-696x464.jpg Getty
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.   

ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டிகளுமாக மொத்தம் 14 போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் நாளன்று நடைபெற்ற போட்டிகளில் மாத்திரம் மொத்தமாக 24 கோல்கள் பெறப்பட்டன.

13ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளில் செல்சி கால்பந்து கழகம், கிரபாக் கால்பந்து கழகத்துடன் (Qarabag FC) மோதிய போட்டியிலேயே அன்றைய தினத்திற்கான அதிக எண்ணிக்கையிலான கோல்கள் பெறப்பட்டன. இப்போட்டியிலே செல்சி கழகம் 6-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியீட்டியது.

அன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த போட்டியாக, பார்சிலோனா கழகம் ஜுவன்டஸ் கழகத்துடன் மோதிய போட்டியை குறிப்பிடலாம். இப்போட்டியிலே பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவான வெற்றியை பெற்றது. மேலும் லயனல் மெஸ்சி ஜுவன்டஸ் அணியின் கோல் காப்பாளர் பவுனிற்கு எதிராக தனது முதல் கோலை இப்போட்டியில் பெற்றார். போட்டியின் ஆரம்பம் முதலே பார்சிலோனா அணி ஜுவன்டஸ் அணிக்கு சவால் கொடுத்தது. அதன் விளைவாக போட்டியின் முதல் பாதியின் இறுதி தருணமான 45ஆவது நிமிடத்தில் மெஸ்சி  தனது அணிக்கான முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து ஜுவன்டஸ் அணியின் பின்களத்திலிருந்த பலவீனத்தை பயன்படுத்தி அய்வன் ரெகடிச் (Ivan Rakitic) 56ஆவது நிமிடத்திலும் மீண்டும் மெஸ்சி 69ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றனர். ஜுவன்டஸ் அணியின் முன்கள வீரர்கள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடத் தவறியதால் அவ்வணி இப்போட்டியில் தோல்வியுற்றது.

பீ.எஸ்.ஜீ (PSG) கால்பந்து கழகம் மற்றும் செல்டிக் (Celtic) கால்பந்து கழகம் மோதிய போட்டியில் பீ.எஸ்.ஜீ அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கெய்லன் எம்பாப்பே (Kylian Mbappe) பீ.எஸ்.ஜீ அணியுடனான தனது முதல் கோலை பெற்றார். மேலும் இப்போட்டியில் நெய்மர் மற்றும் கவானி (Cavani) ஆகியோரும் தமது அணி வெற்றிபெற வழிவகுத்தனர்.

அத்துடன் மென்சஸ்டர் யுனைடட் மற்றும் பாசல் (Basel) கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் யுனைடட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதேவேளை அட்லடிகோ மட்றிட் மற்றும் ரோமா (Roma) கழகங்கள் மோதிய போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

பலம் மிக்க ப்ரில்லியன்டை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது சனிமவுண்ட்

 

அத்துடன் லெவன்டோஸ்கீ (Lewandoski) தியாகோ(Thiago) மற்றும் கீமிச்(Kimmich) ஆகியோர் பெற்ற கோல்களின் மூலம் பயர்ண் மூனிச (Bayern Munich) அணி அன்டர்ல்சட் (Anderlecht) அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசதததில் வெற்றி பெற்றது. அதேவேளை பென்பிசியா (Benficia) மற்றும் மொஸ்கோ (Moscow) அணிகள் மோதிய போட்டியில் மொஸ்கோ அணி 2-1 என்ற கோல்கள் கணக்கிலும், ஸ்போர்டிங் (Sporting) மற்றும் ஒலிம்பியாஸஸ் (Olympiacos) அணிகள் மோதிய போட்டியில் ஸ்போர்டிங் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றி பெற்றன.

14ஆம் திகதி நடைபெற்ற ஆறு போட்டிகளில் டொட்டென்ஹம் (Tottenham) கால்பந்து கழகம் மற்றும் டோர்ட்மன்ட் (Dortmund) கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் டொட்டென்ஹம் கழகம் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது. போட்டியின் இறுதிவரை ஆட்டத்தில் கூடுதலாக ஆதிக்கம் செலுத்திய டோர்ட்மன்ட் அணியால் டொட்டென்ஹம் கழகத்திற்கு எதிராக ஒரு கோல் மாத்திரமே பெறமுடிந்தது. அதேவேளை டோர்ட்மன்ட் கழகத்திற்கு இப்போட்டியில் தனது பந்துப் பரிமாற்றம் மூலம் டொட்டென்ஹம் கழகம் சவால் கொடுக்கத் தவறினாலும் அவ்வணிக்கு கிடைத்த வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி மூன்று கோல்களை பெற்றது. டொட்டென்ஹம் கழகத்திற்காக கேன் (Kane) இரண்டு கோல்களையும் ஹியுங் மின் சன் (Heung Min Son) ஒரு கோலையும் பெற்றார். அதேவேளை டோர்ட்மன்ட் கழகத்திற்காக அன்ட்ரே யார்மலேன்கோ (Andre Yarmolenko) ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

மரீபோர் (Maribor) மற்றும் ஸ்பார்டக் மொஸ்க்வா (Spartak Moskva) அணிகள் மோதிய போட்டியானது 1-1 என்ற சமநிலையில் முடிவுற்றது. அத்துடன் றியல் மட்றிட் கால்பந்து கழகம் மற்றும் அபோயில் (Apoel) கால்பந்து கழகம் மோதிய போட்டியில் றியல் மட்றிட் கழகம் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. றியல் மட்றிட் அணிக்காக ஸர்ஜீயோ ராமோஸ் (Sergio Ramos)  ஒரு கோலையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும் பெற்றனர். மேலும் லிப்சிக் (Leipzig) கழகம் மற்றும் மோனோகோ (Monaco) கழகம் மோதிய போட்டியானது 1-1 கோல் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

14ஆம் திகதி நடைபெற்ற விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்றாக லிவர்பூல் அணி மற்றும் செவில்லா அணி மோதிய போட்டியைக் குறிப்பிடலாம். போட்டியின் 5ஆவது நிமிடத்திலே லிவர்பூல் கழகத்தின் பின்கள வீரர்களினால் விடப்பட்ட தவறைப் பயன்படுத்தி செவில்லா அணியின் விஸ்ஸாம் பென் யெட்டர் (Wissam Ben Yedder) முதல் கோலை பெற்றார். அதனை தொடர்ந்து விரைவாக செயற்பட்ட லிவர்பூல் அணிக்கு ரொபேடோ பெர்மீனோ (Roberto Firmino) 21ஆவது நிமிடத்திலும் மொஹமட் ஸலாஹ் (Mohammed Salah) 37ஆவது நிமிடத்திலும் இரு கோல்களைப் பெற்று தமது அணியை முதல் பாதியில் முன்னிலைப்படுத்தினர்.

அத்துடன் போட்டியின் 42ஆவது நிமிடத்தில் லிவர்பூல் கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை பெற்ற பெர்மீனோ அதனை கோலை நோக்கி உதைந்த போது பந்து கோல் கம்பத்தில்பட்டு வெளியே சென்றது. அதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியிலே லிவர்பூல் அணிக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டியபோதும் அதனை கோலாக்கும் முயற்சியில் தோல்வியடைந்தனர். எனினும் போட்டியின் 72ஆவது நிமிடத்தில் செவில்லா அணியின் ஜோகீன் கோரேயா (Joaquin Correa) தனக்கு கிடைத்த வாய்ப்யை சிறப்பாக பயன்படுத்தி கோலாக்கினார். இதன் மூலம் போட்டி 2-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

அன்றைய தினம் நடைபெற்ற மற்றுமொரு போட்டியான போர்டொ (Porto) அணி மற்றும் பெஸிக்டாஸ் (Besiktas) அணி மோதிய போட்டியில் பெஸிக்டாஸ் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வாரத்திற்கான 13 மற்றும் 14ஆம் திகதில்ளில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட 14 போட்டிகளின் அடுத்தகட்டப் போட்டிகள் இம்மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.