Jump to content

"ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா


Recommended Posts

"ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா

 

‛புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், பாசிட்டிவ் சிந்தனையும் ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாத மனநிலையுமே, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம்’ என்றார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. 

ரோஹித்

சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் 'ஹோம் கோர்ட்' (home court) திறப்பு விழாவில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது:

‛‛சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவதைப் போன்றது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று சென்னையில் விளையாடுவதைப் பற்றி நெகிழ்வாகப் பேசினார்.                                                    

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றுவதற்கு என்ன மாதிரியான திட்டங்களை ஓர் அணியாக மேற்கொண்டுள்ளீர்கள்?
இப்போதுதான் சென்னை வந்துள்ளேன். சென்னை நகரம் தரும் அனுபவங்களை உணர வேண்டும். இந்திய அணியிலேயே நான்தான் முதல் ஆளாக இங்கு வந்தூள்ளேன். இன்னும் திட்டங்கள் ஏதும் தீட்டப்படவில்லை. ஓரிரு நாட்களில் போட்டி பற்றி திட்டமிடுவோம். ஸ்மித் சிறந்த வீரர். அவரை விரைவில் அவுட்டாக்க முயற்சிப்போம்.

2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் சிறப்பாக விளையாடினீர்கள். அதையே இம்முறையும் தொடர்வீர்களா?
நிச்சயமாக. அதுபோன்று சிறப்பாக விளையாடவே விரும்புகிறேன். அந்தத் தொடருக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அன்று விளையாடிய ஆஸி அணியிலிருந்து தற்போதைய அணி முற்றிலும் மாறுபட்டுள்ளது. அந்த அணியின் அணுகுமுறை மாறியுள்ளது. இந்திய அணியின் அணுகுமுறையிலும் மாற்றம் உள்ளது. ஒவ்வொரு புதிய தொடரிலும், வித்தியாசமான சூழல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இத்தொடரை புதிதாகத் தொடங்கவே விரும்புகிறேன். கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பது பலன் தராது. இந்த அணுகுமுறை எனக்கு எப்பொழுதும் கைகொடுத்துள்ளது.

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடிக்கொண்டே இருக்கும் நிலையில், உங்கள் உடலை சீராக வைத்துக்கொள்ள என்ன செய்கிறீர்கள்?
தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருப்பது என்பது இப்போது தொடங்கியதல்ல. சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடிப் பழகிவிட்டோம். உடல்நிலையை எப்படிக் காப்பது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பிசியோக்கள், டாக்டர்கள், டிரெய்னர்கள் எங்களுக்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். அதற்காகத்தான் தற்போது வீரர்களுக்கும் சுழற்சி முறையில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. எங்களால் 60-70 வயது வரை விளையாட முடியாது. அதனால் முடிந்த வரை சிறப்பாக விளையாட வேண்டும். அதற்கு ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம். 

ரோஹித்

ஷிகர் தவான் முதல் 3 போட்டிகளில் ஆடமாட்டார் என்று சற்று முன்னர்  அறிவிக்கப்பட்டுள்ளதே?
 (பலமாக சிரித்துக்கொண்டே) அப்படியா?... எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. நான் கேப்டனோ, அணியின் மருத்துவரோ, பயிற்சியாளரோ கிடையாது. 

அஷ்வின் - ஜடேஜா கூட்டணியிலிருந்து, இப்போது அக்சர் படேல் போன்ற இளம் வீரர்களுடன் இந்திய சுழல் கூட்டணி களமிறங்கப் போகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இது எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும்?
ஒவ்வொருவருடைய அணுகுமுறையும் வித்தியாசமானது. அக்சர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளப்போகிறார். இதுவரை மிகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். சஹால் மற்றும் குல்தீப் நம்பிக்கையான இளம் வீரர்கள். 'ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ்' (wrist spinners) அணிக்கு எப்போதுமே உதவிகரமாக இருப்பார்கள். அவர்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறார்கள்.

நீங்கள் மிகவும் நேசிக்கும் கிரிக்கெட் தவிர்த்து, ரிலாக்ஸ் ஆவதற்கு நீங்கள் விளையாடும் விளையாட்டு எது?
சிறுவயது முதல் கால்பந்து பார்ப்பேன். நிறைய போட்டிகளை நேரடியாக மைதானத்துக்கு சென்று ரசித்துள்ளேன். அவ்வப்போது நண்பர்களுடன் விளையாடுவேன். நண்பர்களுடன் வேடிக்கையாக பொழுதைக் கழிப்பது மிகவும் பிடிக்கும்.

பெர்சனலாக ஓய்வு வேண்டுமென்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நிச்சயமாக இல்லை. நான் இப்போதுதான் ஓய்விலிருந்து மீண்டு வந்துள்ளேன். என்னால் முடிந்தளவு நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டும். 

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ரோஹித் பதிலளித்துக்கொண்டிருக்கையில் ரசிகர் கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன் மைக்கை வாங்கி அவரிடம் ஒரு கேள்வி கேட்டான். சுமார் 12 வயது மதிக்கத்தக்க அச்சிறுவனின் கேள்வி ரோஹித் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அச்சிறுவனின் கேள்வி:-

ரோஹித்

ஐ.பி.எல் ஃபைனலில் மிகவும் குறைவான ஸ்கோர் தான் எடுத்தீர்கள். ஆனால் வெற்றி பெற்றீர்கள். இன்னிங்ஸ் இடைவெளியில் வீரர்கள் அறையில் என்ன பேசினீர்கள். அந்த அசாத்திய வெற்றியை சாத்தியமாக்கிய உரையாடல் என்ன?
மிகவும் அற்புதமான கேள்வி. முதலில் பேட் செய்யும்போது எந்த ஸ்கோருமே நல்ல ஸ்கோர் தான். இரண்டாவதாக பந்து வீசும்போது ஸ்கோர் போர்டை பார்க்காமலே இருக்க வேண்டும். நான் வீரர்களிடம் சொன்னது - ' இந்தத் தொடரின் மிகச்சிறந்த செயல்பாட்டை இப்போது நாம் கொடுக்க வேண்டும்' என்பதுதான். ஒரு கேப்டனாக, அணியின் வீரர்கள் அனைவரையும் நான் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பேன். குறைவான ஸ்கோர் தான். ஆனால் எங்களிடம் பூம்ரா, பாண்டியா சகோதரர்கள் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். கடைசி வரை பாசிடிவாக இருந்தோம். வெற்றி வசமானது என்றார். 

 

ரியல் மாட்ரிட் அணியின் தீவிர ரசிகரான ரோஹித்துக்கு அவரது செல்லப்பெயர் (Hitman) பொறிக்கப்பட்ட ஒரு ரியல் மாட்ரிட் ஜெர்ஸி பரிசளிக்கப்பட்டது. அதன்பின்னர் அடிடாஸ் ஹோம் கோர்ட் ஷோரூமில் அமைக்கப்பட்டிருந்த மினி கால்பந்து கோர்டில் ரசிகர்களுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு விடைபெற்றார் ரோஹித்.

http://www.vikatan.com/news/sports/102259-rohit-sharma-shares-about-ipl-final.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.