Jump to content

“பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்”


Recommended Posts

“பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்”

 

 

பெண்­கள் இன்று சகல துறை­க­ளி­லும் சாதித்து வந்­தா­லும், அவர்­கள் இன்­னும் தங்­கள் அறிவை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும். அவர்­கள் நினைத்­தால், எதை­யும் சாதிக்­க­லாம்’ என்று கூறு­கி­றார் ஈழத்­தின் மூத்த எழுத்­தா­ள­ரும் பெண்­ணி­ய­வா­தி­யு­மான திரு­மதி பத்மா சோம­காந்­தன்.
உத­யன் பத்­தி­ரி­கைக்கு அளித்த செவ்­வி­யின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

பத்மா எனும் ஆளுமை

யாழ்ப்­பா­ணம்- வண்­ணார்­பண்ணை என்ற இடத்­தில் பிரம்­மஸ்ரீ ஏ.பஞ்­சா­தீஸ்­வ­ரக்­கு­ருக்­கள்- அமிர்­தம்­மாள் தம்­ப­தி­க­ளின் நான்­கா­வது மக­ளா­கப் பிறந்­த­வர் பத்மா. யாழ். இந்­துத் தமிழ் வித்­தி­யா­ல­யத்­தில் ஆரம்­பக் கல்­வி­யை­யும், இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யில் இடை­நிலை மற்­றும் உயர் கல்­வி­யை­யும் கற்ற இவர், பயிற்­றப்­பட்ட ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி, அதி­ப­ரா­கப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்­ற­வர்.

பாட­சா­லை­யில் கற்­கும் காலத்­தி­லேயே எழுத்­து­ல­கில் காலடி பதித்­த­வர். பல படைப்­புக்­களை உல­குக்கு அளித்­த­வர். ஓவி­யம், தையற் கலை­க­ளி­லும் பாண்­டித்­தி­யம் பெற்­ற­வர்.

எழு­து­வ­து­டன் மட்­டும் தன்னை நிறுத்­திக்­கொள்­ளா­மல் பல்­வே­று­பட்ட அமைப்­புக்­க­ளி­லும் இணைந்து இயங்­கு­வ­தி­லும் பேரார்­வம் கொண்­ட­வர். ஊட­கத்­து­றை­யி­லும் முன்­னின்று செயற்­பட்­ட­வர்.

தென்­கி­ழக்கு, கிழக்கு, பேரா­தனை மற்­றும் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தமது பட்­டப்­ப­டிப்­புக்­காக இவ­ரைப் பற்றி ஆய்­வுக் கட்­டு­ரை­கள் எழு­தி­யுள்­ள­னர்.
கல்­வித் துறை­யி­லும் முற்போக்­குப் பெண்­ணி­யச் சிந்­த­னையி­லும் தன் காலத்தை அதி­க­ளவு செல­விட்­டி­ருக்­கும் பத்மா சோம­காந்­தன், தற்­போ­தும் எழுத்து, மேடைப்­பேச்சு, இலக்­கி­யத் தளங்­க­ளில் தொடர் செயற்­பாடு என இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் அயர்ச்­சி­யற்ற பெண் ஆளுமை.

இவ­ரது எழுத்­துப் பணி­யைப் பாராட்டி- லில்லி தேவ­சி­கா­மணி பரிசு, சார்க் மக­ளிர் சங்­கப் பரிசு, வடக்கு- கிழக்கு மாகாண அமைச்­சின் சாகித்­திய பரிசு என்­ப­ன­வும், இவரது ஆளு­மை­யைக் கௌர­வித்து- இலக்­கி­யக் கலா­வித்­தகி, செஞ்­சொற்­செல்வி முத­லான பட்­டங்­க­ளும், தங்­கம்மா அப்­பாக்­குட்­டி­யின் சிவத்­த­மிழ் விருது என்­ப­ன­வும் வழங்­கப்­பட்­டுள்­ளன.
இனி அவ­ரது நேர்­கா­ண­லி­லி­ருந்து….

எழுத்­துப் பய­ண­மும்
அதன் ஆரம்­ப­மும்

கேள்வி: – தங்­கள் எழுத்­து­ல­கப் பிர­வே­சம் எப்­படி ஆரம்­ப­மா­னது?

ப:- நான் சிறு­மி­யாய் இருக்­கும் போதே கல்கி, பாலர் மலர் வாசிப்­ப­தி­லும் வீட்­டில் வாங்­கும் ஆனந்­த­வி­க­டன் போன்ற சஞ்­சி­கை­களை வாசிப்­ப­தி­லும் பேரார்­வம் கொண்­டி­ருந்­தேன். அத்­து­டன், துணுக்­கு­கள் மற்­றும் கேலிச்­சித்­தி­ரங்­க­ளில் கண்­ணோட்­டம் செலுத்­து­வ­தி­லும் ஆர்­வம் ஏற்­பட்­டது.

சில விட­யங்­களை வாசிக்­கும் போது எமது மன­தி­லும் சில எண்­ணங்­கள் தோன்­றும். அப்­ப­டியே நாமும் அவற்றை எழுத்­தாக்­கி­னால் எப்­ப­டி­யி­ருக்­கும் என்ற சிந்­தனை மன­தில் இழை­யோ­டும். அந்­தச் சிந்­த­னைக்­குச் செயல் வடி­வம் கொடுத்து, ஈழத்­தில் வெளி­வந்த பத்­தி­ரி­கை­க­ளின் சிறு­வர் பக்­கத்­துக்கு ஆக்­கங்­கள் எழு­தி­னேன்.

அவை பிர­சு­ர­மா­ன­தும், எனக்­குள் பேரா­னந்­தம் குடி­கொள்­ளும். இந்­நி­லை­யில், சுதந்­தி­ரன் பத்­தி­ரிகை நடத்­திய சிறு­க­தைப் போட்­டி­யில் பங்கு பற்றி- ‘இரத்­த­பா­சம்’ என்ற சிறு­கதை எழு­தி­னேன். அதற்கு எனக்கு முதற் பரி­சும் கிடைத்­தது. அந்­தப் பரிசு, என்னை எழு­தத் தூண்­டி­யது. எமது காலத்­தில் இருந்த சாதி­யப் பிரச்­சினை மற்­றும் பெண் முன்­னேற்­றம் குறித்து அதி­கம் எழு­தி­யுள்­ளேன். இன்­று­வரை என் எழுத்­துப் பய­ணம் தொடர்­கி­றது.

கே:- ஆசார இறுக்­கம் மிகுந்த காலத்­தில் தடை­களை மீறி, எழுத்­து­ல­கில் எப்­படி உங்­க­ளால் நிலைக்க முடிந்­தது?

ப:- நான் சிறு­மி­யாக இருந்த காலத்­தில் பெண்­கள் ஓர­ளவு படித்­தாலே போதும் என்ற நிலை­தான் இருந்­தது. மேற்­ப­டிப்­புக்­கெல்­லாம் பெண்­களை அனுப்­ப­மாட்­டார்­கள். வீட்­டுக்­குள்ளேயே அவர்­க­ளைப் பூட்டி வைத்­த­னர். நான் ஒரு பிரா­ம­ணப் பெண் என்­ப­த­னால், நிறை­யச் சவால்­க­ளுக்கு முகங்கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால், என்­னை­யும் மீறிச் சாதிக்க வேண்­டும் என்ற ஒரு வீறு எனக்­குள் வந்­தது. அத­னைத் தன்­னம்­பிக்கை என்று கூடச் சொல்­ல­லாம். சிறு­வ­ய­தில் இருந்தே நான் யாருக்­கும் பயப்­ப­ட­மாட்­டேன். ஒரு அசாத்­தி­யத் துணிச்­ச­லைக் கொண்­டி­ருப்­பேன். அப்­போதே பெண்­ணி­யச் சிந்­த­னை­க­ளும் என்­னுள் முகிழ்க்­கத் தொடங்­கின. முற்­போக்­கா­கச் சிந்­திக்­கத் தொடங்­கி­னேன். வீட்­டுக்கு வெளியே பெண்­கள் போகத் தடை­வி­திக்­கப்­பட்ட அந்­தக் காலத்­திலே அர­சி­யல் மேடை­க­ளில் கூட துணிந்து முழங்­கி­னேன். இந்­தத் துணிச்­சல்­தான் என்னை எழுத்­து­ல­கில் நிலை­நி­றுத்­தி­யது.

பெண்­க­ளின் திற­மை­க­ளைக்
கட்­டிப்­போடக் கூடாது திரு­ம­ணங்­கள்

கே-: திரு­ம­ணத்­துக்­குப் பின்­னர் பெரும்­பா­லான பெண்­கள் எழுத்­து­ல­கி­லி­ருந்து காணா­மல் போய்­வி­டு­கின்­ற­னர் என்று ஒரு கருத்­து­நிலை உண்டு. இது­கு­றித்து நீங்­கள் என்ன கூறு­கி­றீர்­கள்?

ப: திரு­ம­ண­மான பின்­னர் எழுத்­துத்­து­றை­யில் மட்­டு­மல்ல நட­னம், இசை முத­லான துறை­க­ளி­லும் பெண்­கள் நிலைப்­பது குறைவு. இதற்­குப் புரிந்­து­ணர்­வுள்ள- தோழமை உணர்­வுள்ள- முற்­போக்­குச் சிந்­த­னை­யுள்ள கண­வன் வாய்க்­கா­மை­தான் கார­ணம். இத்­த­கைய பெண்­க­ளுக்கு ஒத்த சிந்­தனை, இர­சனை உணர்வு மிக்க ஆண்­கள் கண­வ­ராக வாய்ப்­பது குறைவு. உற­வி­னர் வீடு­க­ளுக்­குச் செல்­வது, சமை­யல், கொண்­டாட்­டம் என்ற மூன்­றுக்­குள்­ளும் பெண்­ணின் வாழ்க்­கையை முடக்­கப் பார்க்­கின்­ற­னர் ஆண்­கள்.

அந்­தக் காலத்­தில் பெண் வேலைக்­குச் செல்­வ­தையே ஆண்­கள் விரும்­பு­வ­தில்லை. பெண் உழைப்­பில் சாப்­பி­டு­வதா? என்ற தன்­மா­னப் பிரச்­சினை, அவள் எங்கே தன்னை மிஞ்சி விடு­வாளோ என்ற ஆணா­திக்க நிலை போன்­ற­ன­தான் அதற்­குக் கார­ணம். இன்று நிலைமை அவ்­வா­றில்லை. படித்த- வேலைக்­குச் செல்­லும் பெண்­க­ளையே மண­மு­டிக்க ஆண்­கள் விரும்­பு­கின்­ற­னர். எழுத்­து­ல­கில் தடம்­ப­திக்­கும் பெண்­கள் தம்மை விளங்­கிக்­கொள்­ளக்­கூ­டிய- புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய ஆண்­க­ளைத் திரு­ம­ணம் செய்­தால், அவர்­க­ளால் தொடர்ந்­தும் எழுத்­து­ல­கில் இயங்க முடி­யும்.

கே: தாங்­கள் பெண்­ணி­ய­வா­தி­யாக உரு­வாக என்ன கார­ணம்?

ப: -­ச­மு­தா­யத்­தில் நில­விய பெண் அடக்­கு­மு­றை­தான் கார­ணம். 14, 15 வய­து­க­ளி­லேயே பெண்­கள் குறித்த பார்வை- முற்­போக்­குச் சிந்­தனை என்­னுள் கருக்­கொண்­டது. வளர்ந்த பின்­னர்­தான் அத­னைப் பெண்­ணி­யம் என்று விளங்­கிக்­கொண்­டேன். பெண் கல்வி தேவையா? பெண் வீட்டை விட்டு வெளியே போய் வேலை பார்க்­க­லாமா? பெண்­ணைக் கொடு­மைக்­குள் ஆழ்த்­தும் சீத­னப் பேய், வறுமை, கண­வன் குடி­யால் சித­றும் குடும்­பங்­கள், ஒழுக்­க­யீ­னங்­கள் என்­ப­னவே சமு­தா­யத்­தைக் கௌவி கப­ளீ­க­ர­மி­டும் பிரதான பிரச்­சி­னை­க­ளாக என் மன­தில் உரு­வெ­டுத்­தன. அத­னால் இத்­த­கைய பின்­ன­ணி­யைக் கொண்டே எழுத்­துக்­க­ளும் கற்­ப­னை­க­ளும் முகிழ்த்­தன.

இவற்­றில் ஊறிய அனு­ப­வத்­தில் வளர வள­ரக் குடும்­பத்­தி­லும் சமூ­கத் தளத்­தி­லும் ஆண்-­பெண் என்ற வேற்­று­மை­கள் உண­ரப்­ப­டு­வதும் பெண்­கள் கட­வுள் நிலைக்கு உயர்த்­தப்­பட்­டா­லும் மானிட நிலை­யில் தாழ்­வாக, இரண்­டாம் பட்­ச­மாக மதிக்கப்படுவதும் மன­தில் சுரீர் எனத் தைத்­தது. இது­தான் என்­னைப் பெண்­ணி­ய­வா­தி­யாக உரு­வாக்­கி­யது.

பெண் விடு­தலை குறித்த தெளிவு
பெண்­க­ளி­டமே இருப்­ப­தில்லை

கே:- மேலை நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், தமிழ்ப் பெண்­க­ளின் விடு­தலை வீச்சு எவ்­வா­றுள்­ளது?

ப: -­மேலை நாடு­க­ளில் பெண்­ணுக்­கான சுதந்­தி­ரத்தை ஆண்­கள் விளங்­கிக்­கொண்­டுள்­ள­னர். ஆனால், எமது சமு­தா­யத்­தில் அவ்­வாறு இல்லை. சங்­க­கா­லத்­தில் இருந்தே எதி­லும் ஆண்­கள்­தான் முதல்­நிலை வகித்­த­னர். எமது சம­ய­மும் அதற்­குத் துணை­போ­கி­றது. ஆல­யங்­க­ளில் பூசை செய்­வது, திரு­ம­ணம் முத­லான நிகழ்­வைத் தலைமை தாங்கி நடத்­து­வது போன்­ற­ன­வற்­றைப் பரம்­பரை பரம்­ப­ரை­யாக ஆண்­களே மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில், எமது பெண்­கள் இல­கு­வா­கச் சுதந்­தி­ரத்தை எட்­டி­விட முடி­யாது. அதே­நே­ரம், மேலை­நாட்­டுப் பெண்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில்- 15 வீத­மான பெண்­கள்­தான் பெண் விடு­தலை பற்­றிய புரி­த­லு­டன் வாழ்­கின்­ற­னர். ஏனைய பெண்­கள் தமக்­கான விடு­த­லையை,- சுதந்­தி­ரத்தை விளங்­கிக்­கொள்­கி­றார்­கள் இல்லை. படிப்­பது, வேலைக்­குப் போவது, நாளாந்த வாழ்க்­கை­யில் பிரச்­சினை இல்­லா­மல் இருப்­ப­து­தான் பெண் விடு­தலை என்று இவர்­கள் நினைக்­கின்­ற­னர்.
எமது நாட்­டில் கலா­சா­ரம், பண்­பாடு, வாழ்­வி­யல் முறைமை என்­பன பெண் சுதந்­தி­ரத்­துக்­குப் பெரும் முட்­டுக்­கட்­டை­க­ளாக உள்­ளன.

ஆணு­டன் ஒப்­பி­டு­கை­யில் பெண் செய்­யும் எந்த ஒரு வேலைக்­கும் வரை­யறை உண்டு. அனைத்­துத் தொழில்­க­ளி­லும் ஆண்­க­ளையே தூக்­கி­வைத்­துள்­ள­னர். ஊட­கத் து­றை­யில் கூட ஆண்­களே முக்­கிய பத­வி­க­ளில் உள்­ள­னர். ஆக, ஆசி­ரி­யத் தொழில் ஒன்­றில்­தான் பெண்­கள் 60 வீதம் உள்­ள­னர். இவர்­க­ளுள்­ளும் பெண்­ணி­யச் சிந்­த­னை­யு­டன் எத்­தனை பேர் உள்­ள­னர் என்­றால், அவர்­களை விரல் விட்டு எண்­ணி­வி­ட­லாம். ஆத­லால், எமது பெண்­கள் சுதந்­தி­ரத்தை வென்­றெ­டுப்­ப­தற்கு இன்­னும் அதி­கம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது;- உழைக்க வேண்­டி­யுள்­ளது.

கே:- இன்று சகல துறை­க­ளி­லும் பெண்­கள் முன்­னுக்கு வந்து, ஆணுக்­குச் சம­மா­கத் தங்­க­ளா­லும் இயங்க முடி­யும்- இருக்க முடி­யும் என்று சாதித்து வரு­கின்­ற­னர். அதே­நே­ரம், அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தற்­குப் பின்­னிற்­கின்­ற­னர். இதற்கு என்ன கார­ணம் என்று நினைக்­கி­றீர்­கள்?

ப: பெண்­கள் விடு­தலை உணர்வு பெற்­றுப் பல ஆண்­டு­கள் சென்ற பின்­பும், தங்­க­ளது குடும்­பப் பின்­பு­லங்­க­ளால் வெளிச்­சத்­துக்கு வந்த ஒரு­சில பெண் அர­சி­யல்­வா­தி­கள் தவிர அர­சி­யல் களத்­தில் பெண்­ணின் பங்­கேற்­புக்கு உரிய இடம் அளிக்­கப்­ப­ட­வில்லை என்றே கூற­வேண்­டி­யி­ருக்­கி­றது.

இதற்கு அவ­ளு­டைய வளர்ப்பு முறை, பொரு­ளா­தார வச­திக் குறைவு என்­ப­ன­வும் கார­ணம். ஒழுக்­கம் சார்ந்து அவ­ளைக் கேள்வி கேட்­பது இன்­னொரு கார­ணம். ஆட்­சி­யி­லுள்ள ஆண்­கள் ஊழல் செய்­கை­யில் தனி மனி­தர்­க­ளாக மட்­டுமே அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தும் சமூ­கம், பெண் அர­சி­யல்­வா­தி­கள் ஊழல் செய்­யும்­போது மட்­டும் பாலின அடை­யா­ளத்­தோடு கூடிய விமர்­ச­னங்­க­ளைக் கூசா­மல் முன்­வைக்­கத் தவ­று­வ­தில்லை. அத்­து­டன், அர­சி­யல் என்­பது வீட்­டுக்­குள் இருந்து கதைக்­கும் கதை­யல்ல. வெளி­யிற் சென்று பல­தை­யும் பேச­வேண்­டும்.

கூட்­டங்­க­ளில் பங்­கேற்க வேண்­டும். எண்­ணற்ற பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டும். வெளி­யி­டங்­க­ளுக்­குச் சென்­று­வர வேண்­டும். அதற்­குப் போக்­கு­வ­ரத்து வசதி வேண்­டும். இதி­லும், இரவு நேரங்­க­ளில் பெண் தனியே சார­தி­யு­டன் சென்று வரும் நிலை ஏற்­ப­டு­கை­யில், அவ­ளு­டைய ஒழுக்­கம் சார்ந்து சமூ­கம் கேள்வி கேட்­கும். இத்­த­கைய கார­ணங்­க­ளால், பெண்­கள் அர­சி­ய­லில் பங்­கேற்­ப­தற்­குப் பின்­ன­டிக்­கின்­ற­னர்.

பாலி­யல் கொடு­மை­க­ளுக்கு
எதி­ராகப் போராட வேண்­டும்

கே: பெண்­கள் மீது மேற்­கொள்­ளப்­ப­டும் பாலி­யல் தாக்­கு­தல்­கள் குறித்து என்ன கூறு­கி­றீர்­கள்?

ப:- பெண் முன்­னேற்­றத்­தைக் கண்டு பொறுக்க முடி­யாத ஆண்­கள், அவ­ளுக்கு எதில் அடித்­தால் வலிக்­கும் என்­ப­தனை இனங்­கண்டு அவ­ளைப் பாலி­யல் ரீதி­யில் தாக்­கு­கின்­ற­னர். அதற்­குப் பெண்­தான் கார­ணம்- அவள் அணி­யும் உடை­தான் கார­ணம் என்று வேறு அவள் மீது பழி­யைப் போடு­கின்­ற­னர். தம்­மைத் திருத்­திக்­கொள்­ளா­மல், தவ­றான கருத்தை முன்­வைக்­கின்­ற­னர்.

இது ஆணு­டைய ஒரு பல­வீ­னம் என்­று­தான் சொல்­ல­வேண்­டும். இதற்கு எதி­ரா­கப் பெண் அமைப்­புக்­கள் குரல் கொடுக்க வேண்­டும். ஆனால், பெண் தொகைக்­கேற்ப பெண் அமைப்­புக்­க­ளின் எண்­ணிக்கை குறைவு. இதற்கு எதி­ராக அதி­கம் போராட வேண்­டி­யுள்­ளது.

கே:- பெண்­களை மேம்­ப­டுத்­து­வ­தில் பத்­தி­ரி­கை­க­ளின் பங்­க­ளிப்பு எவ்­வா­றுள்­ளது?

ப: -­பத்­தி­ரி­கை­க­ளில் பெண்­ணுக்கு ஒதுக்­கப்­ப­டும் வெளி­யில், அழ­குக் குறிப்­புக்­க­ளை­யும் சமை­யல் குறிப்­புக்­க­ளை­யும்­தான் போடு­கின்­ற­னர். இவை இரண்­டுமே ஒரு பெண்­ணுக்­குச் சொல்­லிக் கொடுக்­கா­ம­லேயே தெரி­யக்­கூ­டிய விட­யங்­கள். இப்­ப­டி­யான விட­யங்­க­ளைப் போட்­டுப் பக்­கம் நிரப்­பும் வேலை­யைச் செய்­கின்­றன பத்­தி­ரி­கை­கள். இதை­வி­டுத்து, பெண்­ணிய அடை­யா­ளங்­க­ளைப் பெண்­கள் தேடும் ஆர்­வத்­தைத் தட்­டி­யெ­ழுப்­பும் கைங்­க­ரி­யத்­தைப் பத்­தி­ரி­கை­கள் செய்ய வேண்­டும்.

அவர்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை வெளிக்­கொண்டு வர­வேண்­டும். பெண் விடு­தலை, ஆண்- பெண் சமத்­து­வம் பற்­றிய விழிப்­பு­ணர்­வினை அவர்­க­ளுக்கு அளிக்க வேண்­டும். சாத­னைப் பெண்­களை அறி­மு­கப்­ப­டுத்தி, ஏனைய பெண்­களை ஊக்­கு­விக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் பெண் விடு­தலை கூர்­மை­ய­டை­யும்.

கே:- இந்த நேர்­கா­ண­லூ­டா­கப் பெண்­க­ளுக்­குத் தாங்­கள் கூற­நி­னைக்­கும் செய்தி என்ன?

ப:- பெண்­கள் இன்று சகல துறை­க­ளி­லும் சாதித்து வந்­தா­லும், அவர்­கள் இன்­னும் தங்­கள் அறிவை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும். அவர்­கள் நினைத்­தால், எதை­யும் சாதிக்­க­லாம். வன்­மு­றை­யற்று அமை­தி­யான- ஒற்­று­மை­மிக்க சமு­தா­யத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பப் பாடு­பட வேண்­டும். கிராம மட்­டங்­க­ளில் குழுக்­கள் குழுக்­க­ளாக இணைந்து பெண் விடு­தலை பற்­றிய விழிப்­பு­ணர்வை மேற்­கொள்ள வேண்டும்.

http://newuthayan.com/story/28358.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கால நேரங்கள் நெருங்க நெருங்க சந்திப்பை எப்படி வைக்கலாம் என என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதற்கான பொறுப்பை சிறித்தம்பியிடம் ஒப்படைக்கவும் விருப்பமில்லை. காரணம்  நான் செல்ல இருக்கும் கொண்டாட்ட நிகழ்வு என்ன நிலையில்,திட்டமிட்ட படி நேரகாலத்திற்கு நடந்தேறுமா என உத்தரவாதம் அறவே இல்லை. தமிழ் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவம் இங்கே கண்முன்னே வந்து பேயாட்டம் ஆடியது. 😂 இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன்.  என்னதான் இருந்தாலும் இந்த சுப நிகழ்வு சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் எப்போது வருமோ என்ற பயமும் ஏக்கமும் மனதை குடைந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️  
    • 15வ‌ருட‌த்தை வீன் அடித்து விட்டார்க‌ள் இவ‌ர்க‌ளை இனி ந‌ம்ப‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் உருத்திரகுமார் வாய் சொல் ந‌ப‌ர்   இவ‌ரின் மாவீர‌ நாள் உரைக்கு ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு இல்லை..........................நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றின‌து தான் மிச்ச‌ம்........................இவ‌ர்க‌ளை நானும் எட்டி பார்க்காம‌ விட்டு க‌ண‌ காலம்......................................................
    • இரண்ட‌ர‌ வ‌ருட‌ம் ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ப‌டிச்சேன் ஜேர்ம‌ன் பெரிய‌ நாடு   அதுவும் வ‌ய‌தான‌ உற‌வுக‌ளுக்கு வாக‌ன‌த்தில் நீண்ட‌ தூர‌ ப‌யண‌ம் பெரிசா ச‌ரி வ‌ராது..........................நீங்க‌ள் யாழில் இணைந்து 16வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து  இந்த 16வ‌ருட‌த்தில் முத‌ல் முறை தாத்தாவை ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்..............................................   நான் தாத்தா கூட‌ ப‌ழ‌கிய‌ ம‌ட்டில் அவ‌ருக்கு பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போடுவ‌து பிடிக்காது என‌க்கும் பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போட‌ சுத்த‌மாய் பிடிக்காது............................நான் ஊதிச்சு ஒரு மாதிரி பிடிச்சு போடுவேன் த‌மிழ்சிறி அண்ணா ஹா ஹா    ச‌ந்திப்பு ந‌ல்ல‌ மாதிரி அமைஞ்ச‌து ச‌ந்தோஷ‌ம் த‌மிழ் சிறி அண்ணா ம‌ற்றும் தாத்தா ம‌ற்றும் ப‌ஞ் ஜ‌யா.............................................
    • மூவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சியானதும் நெகிழ்ச்சியானதும் சந்திப்பு என்பதைப் பதிவு பகர்கின்றது.  எனக்கும் யாழ்கள உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காலம் ஒருநாள் கைகூடச்செய்யும் அதுவரை களமூடாக உறவாடுவோம்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • யாழ்கள உறவுகள் மூவர் சந்தித்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான சந்திப்புக்கள் இங்கிலாந்தில் நடப்பது மிகவும் அரிதாக இருக்கும். கேட்டால் நாங்க ரொம்ப பிசி என்று சொல்லுவார்கள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.