Jump to content

புதுக் கட்சி தொடங்குவது குறித்து கமல் அதிரடி அறிவிப்பு!


Recommended Posts

புதுக் கட்சி தொடங்குவது குறித்து கமல் அதிரடி அறிவிப்பு!

 

சமீப காலமாக தமிழக அரசியல் குறித்து தொடர் கருத்துகள் கூறி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவர் சில நாள்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். அப்போது, 'கேரள முதல்வரிடம் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன்' என்று வெளிப்படையாகவே அறிவித்தார். சீக்கிரமே கமல் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்று ஆருடம் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், 'தனிக்கட்சி தொடங்குவது குறித்து மிகவும் தீவிரமாக யோசித்து வருவதாக' கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

அந்தப் பேட்டியில் மேலும், 'நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவது உண்மைதான். விருப்பத்தினால் அல்ல கட்டாயத்தினால்தான் அந்த முடிவை நோக்கி தள்ளப்படுகிறேன். அரசியல் என்பது சித்தாந்தத்தையும் கொள்கைகளையும் அடிப்படையாக கொண்டது. எனது சித்தாந்தத்துக்கு ஏற்றாற் போல் எந்த அரசியல் கட்சியும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கு இருக்கும் அரசியல் சூழல் மாறக்கூடும்' என்று பேசியுள்ளார். 

அ.தி.மு.க-விலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டது குறித்து, 'சசிகலாவை அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றியது நல்ல  முன்னேற்றமாகவே பார்க்கிறேன். ஆனால், அது ஒரேயொரு படிதான். சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே பேசி வந்தேன். இப்போதுதான் அரசியலுக்கு வர ஏற்ற சமயம் என்று நினைக்கிறேன். ஒன்று, நான் இங்கு இருக்க வேண்டும். அல்லது, ஊழல் இங்கு இருக்க வேண்டும். இரண்டும் ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பில்லை' என்று தெரிவித்துள்ளார்.  

http://www.vikatan.com/news/tamilnadu/102268-kamal-haasan-talks-about-starting-new-political-party.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இதைப்பற்றி ஒருத்தரின்ரை  கருத்தையும் காணோம்.:unsure:

Link to comment
Share on other sites

ஊழலை ஒழிக்க தனிகட்சி தொடங்குவேன்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

 

எந்த கட்சியிலும் சேராமல் ஊழலை ஒழிக்க தனிகட்சி தொடங்குவேன் என்று இணையதளம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி கொடுத்துள்ளார்.

 
201709141416074125_I-will-begin-to-eradi
 

சென்னை:

நடிகர் கமல்ஹாசன் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. எனக்கும் அரசியல் பற்றிய எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சிந்தனைகள் பொருந்தவில்லை. ஒத்துப்போகவில்லை.

சமீபத்தில் கேரள முதல்- மந்திரியை சந்தித்தேன். உடனே கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக செய்திகள் வந்தன. நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை.

அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாற்றத்தை கொண்டு வர சிறிது தாமதம் ஆகலாம்.

அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்குவேன். மாற்றத்தை நான் முன்எடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள்.

இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும். ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம். 5 வருடம் தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல் படாவிட்டால் 5 வருடங்கள் காத்து இருந்து ஓட்டுப் போட்டு மாற்றும் நிலை இருக்க கூடாது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் உடனே அவர்களை மாற்றும் நிலை வரவேண்டும் புதிய மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும்.

ஏனென்றால் அடுத்த வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால் முதலில் என் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும். இதுதான் என் எண்ணம். சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/09/14134218/1107980/I-will-begin-to-eradicate-corruption-says-kamalhassan.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

 சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/09/14134218/1107980/I-will-begin-to-eradicate-corruption-says-kamalhassan.vpf

அப்ப அவரோடை கூட்டு வைக்கப்போவது நீங்கள் தானா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது கட்சி பற்றி விரைவில் அறிவிக்கிறார் கமல் : செய்தி

ஸ்டாலின் : ஏன்டா இவ்ளோ நாள் சும்மா தான இருந்தீங்க.. எனக்குனே வருவீங்களாடா..

 

DJsTQ7nVYAIjuZY.jpg

Link to comment
Share on other sites

ரஜினி விரும்பினால் கட்சியில் இணைத்துக் கொள்வேன் : கமல்

 

நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஜினி விரும்பினால் தனது கட்சியில் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஜினி விரும்பினால் கட்சியில் இணைத்துக் கொள்வேன் : கமல்
 
சமீபகாலமாக கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். டுவிட்டர் மூலம் அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் கமல் தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல், மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்றும் கமல் குறிப்பிட்டார்.
201709152203052222_1_kamalrajini._L_styv

அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்குவதாக கூறியிருந்தார். அக்டோபர் 2-ம் தேதி கமல், அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. கமல் தற்போது பேசியிருப்பதன்மூலம், அந்த செய்தி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/15220258/1108231/Kamal-says-Rajini-wishes-to-join-my-party.vpf

Link to comment
Share on other sites

ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன்: கமல் பதில்

 

 
yaadhumjpg

ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

'தி இந்து' தமிழ் நாளிதழ் நடத்தும் 'யாதும் தமிழே' விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஒரு நிகழ்வாக கலந்துரையாடலில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்துப் பேசினார்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்டிவா செயல்பட்டபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?

இதுக்கு கிட்டத்தட்ட பதில் சொல்லி விட்டேன். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொல்வதை விட நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அது தீர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல நடிகன் தான். இது நடிப்பாக இருக்கக் கூடும் என்று பல நடிகர்கள் நடித்ததால் இந்த எண்ணம் வந்திருக்கும். இதைப்பார்த்து தான் நானும் ஒதுங்கி இருந்தேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகி விட்டதால்தான் நானும் நடிக்கிறேன் என்று நினைக்கிறார்கள்

இந்த உலகத்தில் கடவுள் இருப்பதை நிரூபிக்க ஒரு விஷயம் கூட இல்லையா கமலுக்கு?

கடவுள் என்பதற்கான சொல் விளக்கம் நீ உனக்குள் கடந்து செல் என்பது தான். அனைத்து ஸ்லோகங்களும் என்னைக் குறிப்பிடுகிறது. இதை இல்லை என்று சொல்லும் பல பண்டிதர்கள் இருக்கின்றனர். மதம் ஒரு கார்ப்பரேட் ஸ்ட்ரக்சர் அது ஒரு பிசினஸ். ஆனால் கடவுளை நம்பும் மனிதர்களை நான் கும்பிடுகிறேன். உங்கள் பக்தியின் மேல் எனக்கு கோபம் இல்லை. இந்த பக்தியை பயன்படுத்தி விளையாடுகிறார்களே அவர்கள் மீதுதான் கோபம். எந்த மதத்தையும் நீங்கள் பகுத்தறிந்து உணரலாமே. மொழி போன்றது உங்கள் பக்தி. எனக்கு பேச வராது. ஆனால் வேறு மொழி இருக்கிறது அது அன்பெனும் மொழி. அன்பை சொல்லாதே, உடனே இணைவேன். வேறு வித்தை காட்டாதே.

எனக்கு இஸ்லாத்தில் வைணவத்தில் சைவத்தில் சமணத்தில் தென்படுகிறது, மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒரு பிரிவு அசகாய சக்தி என்று பிரிக்கிறார்கள், இதையெல்லாம் பார்க்கிறேன். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் உள்ளது.

பேஸ்புக்கால் உதவியா உபத்திரவமா?

நமது சொசைட்டிக்கு எல்லாம் உதவும் ஃபேஸ்புக்கும் உதவும் ட்விட்டரும் உதவும். அதை நாம் பயன்படுத்த வேண்டும்

பொது மேடைக்கு ஏன் வர மாட்டேங்கிறீங்க?

தங்கைக்கான பதிலிதோ இந்த மேடை இன்னும் பல உண்டு

அஹிம்சை முறையில் போராடி நம்மால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியுமா? ஒரு பிரச்சினைக்காக ஏன் எல்லோரும் ஒன்று கூட மாட்டேங்கிறாங்க?

இது என்னை கேட்கிற கேள்வி இல்லை உங்களை கேட்கும் கேள்வி. அஹிம்சை வீரத்தின் உச்சகட்டம். அதனால் தான் என்னவோ மாபெரும் முனிவர்களை மஹாவீரர் என்று அழைக்கிறார்கள். அஹிம்சையின் உச்சகட்டம் மஹாவீரம். மஹாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? துப்பாக்கி தோட்டாவில் இருந்து வந்தது போல் துடித்து வந்ததாக நினைக்கிறேன்

அடுத்த குல்லா என்னவாக இருக்கும்?

முடிதான் என் குல்லா. இதுவும் உதிர்ந்துவிடும். குல்லாவுக்கு வேலை எல்லாம் இல்லைங்க, குளிருக்கு வேண்டுமானால் போட்டுக்கலாம்.சென்னையில் எதுக்குங்க

கேரளாவிற்கு சென்றீர்களே. முதல்வரைப் போய் சந்தித்தீர்களே ஏன்?

இங்கேயும் சந்திக்க ஆசைதான் போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமாக இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிசம் சென்றார்கள், நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிசம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன் ஆனால் முடிவை நான் தான் எடுப்பேன். இதோ 'தி இந்து'வுக்கு தெரியுமே அந்த சிஸ்டம் எப்படி வெற்றி அடைகிறது என்று நீங்கள் சொன்னது தான் என்கிறார்களே. அதைத்தான் நானும் சொல்கிறேன் நீங்கள் சொல்லுங்கள்.

கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி,லேசா அழுத்தினால் போதும். ஊழலை எப்படி ஒழித்துக்கட்டுவது ஊழல் மட்டும்தான் இவரது தாரக மந்திரமா என்று நினைக்காதீர்கள். அது அவர்களின் தாரக மந்திரம். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். நீங்கள் நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை மூன்றே மாதத்தில் சம்பாதிக்கலாம். உங்களுக்கு அளிக்கும் ஐந்தாயிரம் உங்களுக்கு வர உள்ள மூன்று லட்சத்திற்கு சமம்.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தால் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு மக்களிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம். உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசவில்லை என்று நினைக்கிறீர்களா, அல்லது அவரிடம் பேசுவதை உங்களிடம் தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

சொந்த வாழ்க்கையை விமர்சிப்பதை எப்படி சந்திக்கப் போகிறீர்கள்?

இதற்கு பதில் என் வாழ்க்கை. என் சொந்த வாழ்க்கை என் முடிவு என்பேன். அதே தைரியம் இதற்கும் உண்டு. என் சொந்த வாழ்க்கை அதற்கு பதில்.

பணத்திற்கு ஏன் அப்படி பலம் வந்தது?

பெரிய கோடீஸ்வரர்கள் உருவானது ஏழைகளால்தான். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசியலுக்கு வந்தால் உங்கள் கொள்கை எவ்வழி?

பெரியார் எங்கிருந்து கற்றார் அரசியலை, அவர் கற்றது காந்திய வழி அங்கிருந்து அரசியலை கற்று பின்னர் தனக்கான பாதையை மார்க்சியம் வழியில் கற்றார். மார்க்சியம் என்பது லெனின் இவர்கள் வகுத்த பாதை, இவர்கள் தோளில் ஏறிப் பார்க்கும்போது எனக்கு தூரத்தில் ஒளி தெரிகிறது அதில் பாடுபடுகிறேன் 

லோக்கல் கவர்னன்ஸ் குறித்து உங்கள் கருத்து?

பர்சனல் கவர்னன்ஸ் நீங்கள் உங்கள் நிலை பற்றி யோசியுங்கள் சரி இல்லை சரி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 

பன்முகத்தன்மைக்கு எதிராக , மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிய பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் முக்கியம்.வன்முறை அதற்கு தனியாக அறிவு கிடையாது. அது எப்போது வேண்டுமானால் மதம் மாறும். இப்போது நான் உங்களுக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை என்று நினைக்காதீர்கள். வன்முறைக்கு எதிராக என்ன சொல்ல இன்று போய் நாளை வா தோல்வி நிச்சயம். நாளை நானில்லாவிட்டால் யாராவது இருப்பார்கள். மாறி மாறி நடந்ததால் தான் நாடு இரண்டாக ஆனது.

நீங்க அரசியலுக்கு வருவீர்களா வரமாட்டீர்களா என்று கேட்காதீர்கள். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம். பேசிக்கிட்டே இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். நாம் யாரை விட்டு வைத்தோம். 

அரசியல் பிரகடனம் முறையாக எப்போது அறிவிப்பீர்கள்?

அவசரமில்லாமல் பல மேடைகள் உள்ளது , நீங்களும் ஒத்துழைக்கணும். பல விஷயங்கள் உள்ளது. பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு. அது நான் வந்த நாள். நல்ல நாள் ஒன்று புரட்சி நடந்த நாளில் அதுவும் ரஷ்யப் புரட்சி தான் அவசியம்னு இல்ல ஏதாவது ஒரு நாளில் அறிவிப்பேன்.

செப்டம்பர் 17 அன்று அறிவியுங்கள் ?

கண்டிப்பாக எந்த வருடம் என்பது நான் முடிவு செய்வேன்.

இவ்வாறு கமல் பதிலளித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19694048.ece?homepage=true

Link to comment
Share on other sites

‘வாட்ஸ்அப்’பில் வலம்வரும் கமல்ஹாசன் அமைச்சரவை: ரசிகர்களின் ருசிகர தேர்வு

 

‘வாட்ஸ்அப்’பில் வலம்வரும் கமல்ஹாசன் அமைச்சரவை போன்ற புகைப்படத்தில் ரசிகர்களின் ருசிகர தேர்வு பலரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

 
201709161520154033_Kamalhaasan-ministry-
 
கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

சினிமாவில் நான் பிழைப்புக்காக - பணத்துக்காக நடிக்கிறேன் என்று உண்மையை ஒழிவுமறைவின்றி ஒத்துக் கொண்டார்.

அவர் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார்? அமைச்சரவை எப்படி இருக்கும்? என்பதை ரசிகர்கள் இப்போதே கற்பனை செய்து விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த அமைச்சரவை படம்.

முதல்-அமைச்சர் தவிர 13 அமைச்சர்கள். அதில் ஒருவர் பெண் அமைச்சர். முதல்-அமைச்சர் மட்டும் சபாரி உடையில் இருக்கிறார். அமைச்சர்கள் அனைவரும் வேட்டி-சட்டை அணிந்து இருக்கிறார்கள்.

201709161520154033_1_Kamalhaasan-Ministr

இதில் உள்ள ருசிகரம் என்னவென்றால் எல்லோரும் கமல்ஹாசன் தான். இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம், விஸ்வரூபம், மைக்கேல் மதன காமராசன், ஹேராம், தேவர்மகன், பாபநாசம், பம்மல் கே.சம்பந்தம், சத்யா, நம்மவர், நாயகன், தெனாலி ஆகிய படங்களில் பல்வேறு ‘கெட்-அப்’களில் நடித்ததை தேர்ந்தெடுத்து அமைச்சரவை சகாக்களாக வைத்து இருக்கிறார்கள்.

21 வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘இந்தியன்’ படம் இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கும் ஒத்துப் போகும். சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது மகன் சந்துரு ஆகிய இரட்டை வேடங்களில் கமல் நடித்து இருப்பார்.

நாட்டில் நடைபெறும் குற்றங்களை கண்டு மனம் வெதும்பி குற்றம் செய்பவர்களை தியாகி கமல் வர்மக்கலை மூலம் கொல்வார். போலீசார் மோப்பம் பிடித்து நெருங்கியதும் தப்பிச் செல்வார். பெற்ற மகள் இறந்தபோது எடுத்துச் செல்லவும் லஞ்சம் கொடுக்க வேண்டி வரும்.

இதை பார்த்து வெறுத்துப் போகும் சந்துரு பட்டணத்துக்கு சென்று விடுவார். அங்கு மற்றவர்களைப் போல் லஞ்சம் வாங்க ஆரம்பிப் பார். பழுதான பள்ளி வாகனத்துக்கு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுப்பார். அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் உயிர் இழப்பார்கள். ஆனால் போலீசுக்கு லஞ்சம் கொடுத்து சந்துரு தப்பி விடுவார்.

201709161520154033_2_Kamalhaasan-Ministr

இதனால் ஆத்திரம் அடையும் இந்தியன் தனது மகனையும் கொலை செய்வார்.

நாட்டில் நடைபெறும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்களை பார்த்து பொறுக்க முடியாமலும் தவறு செய்த மகனை கூட கொல்வது போலவும் அமைந்த இந்தியன் ‘கெட்-அப்பை’ முதல்வர் கெட்-அப்பில் வைத்து இருக்கிறார்கள்.

சிறந்த பெண் அமைச்சருக்கு அவ்வை சண்முகி, சாதி வெறியை அடக்குபவராக, பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களை அடக்குப வராக, கல்விக்கு பேராசிரியர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு இஸ்லாமியர் கெட்-அப் என்று ஒவ்வொரு துறைக்கும் கமலின் பல்வேறு பட கெட்-அப்களை தேடிப் பிடித்து சேர்த்து இருக்கிறார்கள்.

கமல் அரசியலுக்கு வரப் போகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். கமல் பட பாடல்கள், ‘பஞ்ச்‘ டயலாக்குகளை செல்போனில் ரிங் டோனாக வைத்துள்ளார்கள்.

201709161520154033_3_Kamalhaasan-Ministr

முக்கியமாக ‘புஞ்சை உண்டு. நஞ்சை உண்டு. பொங்கி வரும் கங்கை உண்டு. பஞ்சம் மட்டும் இன்னும் மாறவில்லை. எங்க பாரதத்தில் சொத்துச் சண்டை தீரவில்லை. வீதிக்கொரு கட்சி உண்டு. சாதிக்கொரு சங்கம் உண்டு. நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லை. சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை. இது நாடா இல்லை வெறும் காடா இதை கேட்க யாரும் இல்லை தோழா! ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்தராகம் பாடட்டும். நாளைய காலம் நம்மோடு போராடு”- என்ற பாடலைத்தான் ரிங்டோனாக வைத்திருக்கிறார்கள்.

கேட்கவும், பேசவும் நல்லாத்தான் இருக்கு. இப்படித்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்த காலத்துக்கு ஏற்ற வகையில் பாடியும், உசுப்பேற்றியும்தான் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியை பிடித்து வந்திருக்கிறது. ஆனால் காட்சி மட்டும் மாறவில்லை. மக்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அந்த வகையில் கமலின் வருகை மட்டும் மாற்றத்தை கொடுத்து விடுமா? என்ற சாமானியனின் முணுமுணுப்பையும் புறந்தள்ள முடியவில்லை.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/09/16152015/1108302/Kamalhaasan-ministry-creates-by-his-fans.vpf

Link to comment
Share on other sites

கட்சி பெயர்கூட முடிவு செய்துவிட்டார்களாம். :unsure: அகில இந்திய டிவிட்டர் பேரவை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் சினிமா வேசங்களை வைத்து அரசியல் செய்ய முடிந்த நாடு என்றால் அது இந்தியா மட்டுமாகத்தானிருக்கும்.

அதிலும் தமிழ்நாடு விசேடமானது.
ர்ச்சி அரசியல். 

Link to comment
Share on other sites

தனிக் கட்சி ஆரம்பித்து அதில் ரஜினி இணைந்தால்..? - பக்தி, ட்விட்டர், அகிம்சை, அரசியல், குல்லா, ரஜினி.. என களைகட்டிய ‘கேள்வியின் நாயகன்’நிகழ்வு

 

 
kamal1jpg

’தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, ‘யாதும் தமிழே’ 2 நாள் கொண்டாட்டம் சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் ‘கேள்வியின் நாயகன்’ என்ற பெயரில், நடிகர் கமல்ஹாசனுடன் சுவாரசியமான கேள்வி - பதில் நிகழ்வு நடந்தது. இதில் வாசகர்கள், பொதுமக்கள் கேட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கும் தனது வழக்கமான பாணியில் மிகவும் உற்சாகமாக, சுவாரசியமாக அவர் பதில் அளித்தார். இனி, வாசகர்களின் கேள்விகளும்.. ‘கேள்வியின் நாயகன்’ அளித்த பதில்களும்..

கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஆக்டிவாக செயல்பட்டபோது அமைதியாக இருந்த நீங்கள் தற்போது திடீரென பொங்கியது ஏன்? நீங்கள் அப்போது நடித்தீர்களா, இல்லை இப்போது நடிக்கிறீர்களா?

   

இதற்கு நான் பதில் சொல்வதைவிட நீங்கள் (கூட்டத்தைப் பார்த்து) சொன்ன பதில் நியாயமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இது பதிலல்ல; தீர்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் நல்ல நடிகன்தான். இது நடிப்பாக இருக்கக்கூடும் என்று அவர்களுக்கு வந்த சந்தேகத்துக்கு, பல நடிகர்கள் காரணம். நடிப்பைத் தொழிலாகப் பார்க்காமல், பதவிக்காக அதைச் செய்தவர்களை சொல்கிறேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகிவிட்டதால்தான் நானும் நடிப்பதாக நம்புகிறார்கள். இந்த முகம் எப்படிப்பட்ட முகம் என்பது போகப்போகத் தெரியும்.

kamal2jpg
 

படங்களில் வேதாந்தம், சித்தாந்தம் பேசுகிறீர்கள். உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. பகுத்தறிவோடு கடவுளை ஈர்க்கும் விஷயங்கள் ஒன்றுகூட இல்லையா? உங்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லை?

கடவுள் என்பதற்கான சொல் விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ‘உனக்குள்ளே கடந்து செல்’ என்பதுதான் அதன் பொருள். ஆதிசங்கரரின் ஸ்லோகங்கள் எல்லாம், என்னையே குறிக்கின்றன. வேறு எங்கேயும் பார்க்கவில்லை. அதை நான் இப்படி புரிந்து கொண்டிருக்கிறேன். இல்லை என்று சொல்ல பண்டிதர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் மதத்தையும், கடவுளையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் பிரிந்து பல்லாயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. மதம் ஒரு கார்ப்பரேட் ஸ்டிரக்சர். அது ஒரு பிசினஸ். அதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால், கடவுளை நம்பும் மனிதர்களைக் கும்பிடுகிறேன். ஒரு நல்லது கூட தெரியவில்லையா என்றால், எல்லா மதங்களிலும் உள்ளன. ஆனால், அது மரபாக மாறும்போது எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். ஞானம் அப்படி முந்தும். எனக்கு உங்கள் பக்தி மீது கோபமே கிடையாது. அந்த பக்தியைப் பயன்படுத்திக்கொண்டு விளையாடுபவர்கள் மீதுதான் கோபம். அவர்கள் இல்லாமல் பக்தியே இல்லை என்று நம்புகிறார்களே, அவர்கள் மீது கோபம். பக்திக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. எந்த மதத்தையும் நீங்கள் பகுத்தறிந்து உணரலாம். கோயில்களை இடித்து தள்ளு என்று சொல்வதற்கு பெயர் பகுத்தறிவு கிடையாது. மொழி போன்றது உங்கள் பக்தி. எனக்குப் பேசவராது. ஆனால், வேறொரு மொழி இருக்கிறது. அது அன்பெனும் மொழி. அன்பைச் சொல்லுங்கள், உடனே புரிந்துகொள்வேன்.

வேறு மதத்தில் நல்லது இல்லையா என்று கேட்டால், எனக்கு இஸ்லாத்தில், வைணவத்தில், சைவத்தில், சமணத்தில் தென்படுகிறது. தேவனில்லாத ஸ்பிரிசு்சுவாலிட்டியில் தென்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒரு பிரிவு, ‘தெய்வம் நம்முடன் இருக்கிறது. அது ஒன்றும் செய்யாது. அது அதன் வேலையைச் செய்கிறது. நாம் நம் வேலையைச் செய்வோம்’ என்கிறார்கள். அது ஒரு அசகாய சக்தி என்று பிரிக்கிறார்கள். அதன் பொருள் சகாயம் செய்யாது என்பதால்தான். இதையெல்லாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கிறது. அதில் கெட்டது என்றால் மதாச்சாரிகள்தான்.

வலைதளங்களில் வீரம் பொங்க வார்த்தைப் போராட்டம் நடத்தும் முகநூல் போராளிகளால் நமக்கு உபகாரமா, உபத்திரவமா?

kamal1jpg

எறும்பும் தன் கையால் எண் சாண். பாலம் கட்ட அணில் உதவும் என்றால், தேன்கூடு கட்ட தேனீ உதவும் என்றால், நம் சமூகத்துக்கு எல்லா ஊடகங்களும் உதவும், உதவ வேண்டும். முகநூல் உள்ளிட்டவற்றை உதவும்படி நாம்தான் செய்ய வேண்டும். ட்விட்டரும் உதவும், இதோ இந்த மேடையும் உதவும். நாம் அதை மாற்ற வேண்டும். அந்தக் கடமை, நேரம் நமக்கு வந்துவிட்டது.

அரசியலுக்கு வரப்போவதாக சொல்லும் நீங்க ஏன் பொதுமேடைக்கு வரமாட்டேங்கிறீங்க?

தங்கைக்கான பதில்தான் இதோ இந்த மேடை! இன்னும் பல உண்டு.

அகிம்சை முறையில் போராடி நம்மால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா? ஜல்லிக்கட்டுக்காக கூடியவர்கள் வேறொரு பிரச்சினைக்காக ஏன் ஒன்றுகூடவில்லை?

இது என்னைக் கேட்கிற கேள்வி இல்லை; உங்களைக் கேட்கும் கேள்வி. இது ஆரம்பக்கூட்டம். தம்பி, நினைத்தோமேயானால் இதுபோல் அறவழியில் போராட முடியும். அகிம்சை என்றால் இந்த காலத்தில் பலிக்குமா? கோழைகள் அதிகமாகிவிட்டதால் அகிம்சை பலிக்காது. காரணம் வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான். அதனால்தானே என்னவோ, மாபெரும் சமண முனியை மகாவீரர் என்கின்றனர். அகிம்சையின் உச்சகட்டம் மகாவீரம். மகாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? அது வந்துவிட்டாலே, அகிம்சை வந்துவிடும். அந்த வீரம் வந்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். துப்பாக்கி தோட்டாக்களை எதிர்கொள்ளும் அந்த வீரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

‘காந்தி குல்லா, காவிக்குல்லா, காஷ்மீர் குல்லா, கோமாளிக்குல்லா தமிழர் தலையில்’ என்றீர்கள். கமல் சார் குல்லா என்னவாக இருக்கும்?

முடிதான் என் குல்லா. இதுவும் உதிர்ந்துவிடும். குல்லாவுக்கு வேலை எல்லாம் இல்லைங்க. குளிருக்கு வேணா போட்டுக்கலாம். அதுவும் இங்க சென்னையில் எதுக்குங்க?

தமிழக முதல்வர்களைச் சந்திக்காமல் கேரள முதல்வரைச் சந்தித்ததன் நோக்கம் என்ன?

இங்கேயும் சந்திக்க ஆசைதான்.. போறதுக்குள்ள மாறிடுமோன்னுதான் பயம். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமா இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிஸம் வருகிறார்கள். நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிஸம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன். ஆனால் முடிவை யோசித்துதான் எடுப்பேன். அது எனக்கு மட்டுமானதல்ல; பல பேருக்காக எடுப்பது. நீங்கள் கொடுக்கும் பலமும், தைரியமும், அறிவுரையும்தான். அந்த சிஸ்டம் எப்படி வெற்றியடைகிறது என்று இதோ ‘தி இந்து’வுக்கு தெரியும். நீங்கள் சொன்னதுதான் என்கிறார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் சொல்லுங்கள். குரல் தெளிவாக இருக்க வேண்டும். கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி.. லேசா அழுத்தினா போதும். உங்களால் முடியும். ஊழலற்ற தலைமை வேண்டும் என்றால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். வேண்டாம் என்று நீங்கள் நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை ஐந்தே மாதத்தில் சம்பாதிக்கலாம். ஐந்தாயிரம் ரூபாய் தப்பான வியாபாரம்; ஏமாற்று வேலை.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்து, அதில் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கே போய்விட்டார். எனக்கு இங்கிருந்து (மக்களைப் பார்த்து) சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும், பேசலாம். உங்களோடு இணைபவன் அவரோடு இணையமாட்டேனா? அவருடன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை அவரிடம் பேசுவதை உங்களிடம்தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

பொது வாழ்க்கைக்கு வந்தால் சொந்த வாழ்க்கை விமர்சனம் செய்யப்படும். அதை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறதா?

என் வாழ்க்கையே இதற்கு பதில். எனக்கு ஏற்படாத விமர்சனங்கள் இல்லை. என் தவறுகளை தவறு என்றும், என் முடிவுகளை இதுதான் முடிவென்றும் நம்பிச் சொன்னவன், திறந்து சொன்னவன், மன்னிப்பு கேட்பதென்றால் கேட்பவன். கேட்க வேண்டாம் என்றால் ‘முடியாது. என் முடிவு’ என்று தைரியமாகச் சொன்னவன். அதே தைரியம் இங்கும் தொடரும் என்று நம்புகிறேன்.

இப்போதைய சூழலில் பண பலம் இருந்தால்தான் அரசியலில் பயணிக்க முடியும். உங்களால் ஜெயிக்க முடியுமா?

பணத்துக்கு ஏன் அப்படி பலம் வந்தது என்பதை யோசிக்கவேண்டும். அது நாம் கொடுத்ததல்ல. அரசு கொடுத்த பலம். பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் பணத்தை தேடும்போது, ஏழைகள் எல்லாம் அங்கேயேதான் இருக்கின்றனர். அவர்கள் மக்களின் கோயில் வாசலில் நின்று யாசகம் கேட்பவர்கள். அதைவிட பெரிய பணம் மக்களிடம் இருக்கிறது. மக்கள் கோயில் அது. அங்கு இருக்கிறது பணம். எத்தனை கஜானாக்கள் காலியாக இருக்கிறது. எத்தனை பெட்டகங்களை காலிசெய்திருக்கிறார்கள். அத்தனையையும் மீண்டும் நிரப்பியது யார்? எடுத்தவர்களா, இல்லை. கொடுத்தவர்கள். அங்கே இருக்கிறது பணம். எனக்கு அது வரும். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு கமல் சொல்லும் தீர்வு என்ன?

இங்கு பேசியது பற்றிதான் கேள்வி கேட்கிறார். இது நாம் அங்கேயோ அல்லது நான் இங்கேயோ இருந்து எடுக்கும் முடிவு அல்ல. அழுத்தமான அரசுகள் வேண்டும். ஆணித்தரமான கருத்துகள் நிலவ வேண்டும். அன்பான சக மாநிலங்கள் இருக்க வேண்டும். அதற்கு ஆவன செய்யும் தலைவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு வரும். இல்லையென்றால் தண்ணீர் வராது; தகறாறுதான் வரும்.

அரசியலுக்கு வருவதாகக் கூறும் நீங்கள் மார்க்சிய வழியா, காந்தி வழியா, பெரியார் வழியா, ஆர்எஸ்எஸ் வழியா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பெரியார் காந்திய வழி, அதில் இருந்து மாறுபட்டு, கருத்து வேறுபாடுடன் வேறு வழியில் சென்று, தனக்குத் தேவையான சுதந்திரத்தைப் பெறும் முயற்சியை அவர் எடுத்துக் கொண்டார் என்பது தெரிந்திருக்கும். மார்க்சிஸம் என்று கூறும்போது, லெனின், மார்க்ஸ் பேசியது இங்கு இருப்பவர்களுக்கு சம்பந்தம் இல்லாதது என்பார்கள். காந்திய மார்க்சிஸமும் இங்கு இருந்திருக்கிறது. இவர்களது தோளில் ஏறிப் பார்க்கும்போது எனக்கு தொலைவில் ஒளி தெரிகிறது. அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன நல்ல கருத்துகளை எடுத்துக்கொண்டு, தீமைகளை எல்லாம் நீக்க முற்படுவேன்.

லோக்கல் கவர்னன்ஸ் குறித்து உங்கள் கருத்து?

லோக்கல் கவர்னன்ஸ் தாண்டி பர்சனல் கவர்னன்ஸை பார்க்கிறேன். இண்டிவிஜுவல் சத்தியாகிரகா என்று உள்ளது. சரியில்லை, சரியில்லை என்றால் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்னால் முடிந்தவரை நான் வரியை சரியாகக் கட்டிக்கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தவரை தப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு செல்லுங்கள். என்னை வாத்தியாராகப் பார்க்காமல் மாணவனாகப் பாருங்கள். கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொள்கிறேன்.

 

பன்முகத்தன்மைக்கு எதிராக , மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வன்முறைக்கு தனி அறிவு கிடையாது. அது எப்போது வேண்டுமானாலும் மதம் மாறும். அதனால், ஒரு மதத்தைக் கூறினால், அடுத்து வேறு மதம் அதே பாதையில் ஈடுபடும். இப்போது உங்களுக்கு திருப்தியான பதிலை நான் சொல்லவில்லை என்று கவலைப்படாதீர்கள். கோபப்படாதீர்கள். தோல்வியுற்றவன் கையில் எடுக்கும் விஷயம் வன்முறை. கோபப்பட்டு ஆதங்கத்தில் செய்யும் விஷயம் அது. அது தோல்வியின் முதல் அடையாளம். அந்த வன்முறைக்கு எதிராக என்ன சொல்ல. இன்று போய் நாளை வா. நாளை பார்ப்போம் நான் இருந்தால். இல்லாவிட்டால் தோள்கொடுக்க வேறு தோழன் இருப்பான். வேறு பத்திரிகை இருக்கும். வேறு பத்திரிகையாளன் இருப்பான். மாறி மாறி நடப்பதுதானே. பெரிய தேசமாக இருந்தது இரண்டு தேசமானது.இதில் எந்த பக்கம் வன்முறை குறைவு. இதை யோசிக்க வேண்டும். நாம் மொத்தத்தில் கோபத்தைவிட, சடகோபம் பழக வேண்டும்.

அரசியல் குறித்து உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்குமா? முழுமையாக அரசியலில் எப்போது ஈடுபடப் போகிறீர்கள்? நேரடி அரசியல் களம் எப்போது?

‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா?’ என்று இனி கேட்காதீர்கள். இதுவரை என்ன பேசிக்கொண்டிருந்தோம். யாரையாவது விட்டுவைத்தோமா? முடிவு செய்ய வேண்டியது நீங்கள், நான் அல்ல. அவசரப்படாமல் நீங்கள் முடிவு செய்யவேண்டியது உள்ளது. இன்னும் பல மேடைகள் இருக்கின்றன. பிறந்தநாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு? அது நான் பிறந்த நாள். நமக்கு வேண்டியது தேதி. ஜோசியம் அல்ல. புரட்சி பிறந்தநாளில் தேடி வைப்போம். நல்ல நாளில் முடிவு செய்வோம்.

செப்டம்பர் 17 அன்று அறிவியுங்கள் !

கண்டிப்பாக! ஆனால், எந்த வருடம் என்பதை நான் முடிவு செய்வேன்.

http://tamil.thehindu.com/opinion/columns/article19702845.ece

Link to comment
Share on other sites

கமல்தான் ரஜினியோடு இணைய வேண்டும்' - தமிழருவி மணியன் பேட்டி

 

'மல்தான் ரஜினியோடு இணைய வேண்டும். ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை'  தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளை அகற்றுவதற்கு இருவரும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் " என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் புதுச்சேரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மூன்று மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசத் துவங்கியதும், அவரின் இல்லத்துக்கே சென்று சந்தித்தார் தமிழருவி மணியன். மேலும் கடந்த மாதம் 20 -ம் தேதி திருச்சியில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அவசியம் என்று வலியுறுத்தி அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு ஒன்றையும் நடத்தினார். ரஜினியும் தனது ரசிகர்கள் அனைவரும் இந்த மாநாட்டுக்குச் செல்லவேண்டும் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஏராளமான ரசிகர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

ரஜினி -  கமல்

 

அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது " தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இக்கட்சிகளைத் தமிழகத்திலிருந்து அகற்றவேண்டும் என காமராஜர் இறுதிமூச்சு உள்ளவரைக் கூறினார். அதை நிறைவேற்ற பல  முயற்சிகளை எடுத்தேன். ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. கடைசிக் கருவியாக ரஜினி கிடைத்துள்ளார். இதுதான் கடைசி வாய்ப்பு. இதை விட்டால் தமிழகம் எழவே வாய்ப்பில்லை. அழுகிக்கிடக்கிற அரசியலை ஒழித்து, வெளிப்படையான ஆட்சியைத் தருவதற்காக ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார். கவுன்ட் டவுன் ஆரம்பமாகிறது. ஊழலற்ற தூய்மையான ஆட்சியைக் கொடுப்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. அதை நான் முன்னெடுக்கிறேன். அவ்வளவுதான்! என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/102489-kamal-only-to-join-with-rajini---said-tamilaruvi-maniyan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.