Jump to content

இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை


Recommended Posts

இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

 

சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர்.

இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இந்நிலையில் 500 இலங்கை தமிழ் அகதிகளையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு கனடாவிற்கு அழைத்து வந்தார் என அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு நடந்த ஏழு ஆண்டுகளாக, குணரொபின்சன் கிறிஸ்துராஜா சிறையில் இருந்தார்.

இந்த வழக்கில் குறித்த கப்பலில் வந்த அடைக்கலம் கோருபவராகவே குணரொபின்சன் கிறிஸ்துராஜா தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் கப்பலின் தலைவரோ அல்லது இந்தப் பயணத்துக்கு மூளையாகச் செயற்பட்டவரோ அல்ல. இவரது குடும்பத்தினரும், ஏனையவர்களைப் போலத் தான் பயணித்துள்ளனர் என்றும் நீதிபதி கதரின் வெட்ஜ் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு நடந்த ஏழு ஆண்டுகளாக, குணரொபின்சன் கிறிஸ்துராஜா சிறையில் இருந்தார் என்பதால், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை நீதிபதி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

https://news.ibctamil.com/ta/world-affairs/Lankan-sentenced-to-4-years-smuggling-migrants-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.