Jump to content

கண்டிப் பெரஹரா: நன்றிசெலுத்தி நலம்நாடும் ஊர்விழா


Recommended Posts

main.jpg

புனித சின்னம், தலதா மாளிகை நிலமேயிடம் கையளிப்பதற்காக மகிமையுடன் எடுத்து வரப்படுகின்றது

கண்டிப் பெரஹரா முன்னாயத்தங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமாய் அமைந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும்


எழுத்து: சுகந்தி சங்கர்


அன்று தொட்டு இன்றுவரை, கண்டி மண்ணினுடைய அனைத்து இன மக்களும் அன்னியோன்னியமாக வாழ்ந்துவந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேகர்கள் என இன அடையாளங்களுடன் வாழும் இவர்கள், தாம் ஒருதாய் மக்கள் என்பதை மறப்பதில்லை. சகோதர இனத்தவர்களின் மதம், கலாசாரம், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள், பண்டிகைகள் போன்றவற்றினை பரஸ்பரம் மதித்தும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தாது கௌரவித்தும் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தார்கள்; இப்பொழுதும் வாழ்ந்து வந்துகொண்டிருக்கின்றார்கள்.


இவர்கள், பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைப் பின்பற்றுகின்றார்கள். இலங்கை வரலாற்றின்படி, கிறிஸ்தவம் கி.பி. 1500 களின் முற்பகுதியில் நிகழ்ந்த மேற்கத்தேய நாட்டவரின், ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்னர் மக்களினால் பின்பற்றப்பட்டுவந்த, பௌத்;தம், இந்து சமயங்களின் பண்டிகைகள், வழிபாட்டு முறைமைகள் ஒன்றையொன்று பரஸ்பரம் சிறப்பித்தும் மேன்மைப்படுத்தியும் மகிமைப்படுத்தியும் வந்துள்ளன.


இவற்றினை வலியுறுத்தும் வகையில், கண்டி மண்ணில் பின்பற்றப்பட்டு ஒரு சிறப்பான பாரம்பரியமாகக் காணப்படுவதே, கண்டிப் பெரஹரா ஆகும். தலதா மாளிகையினுடைய பௌத்த பாரம்பரியச் சிறப்புகளை மகிமைப்படுத்தும் வகையிலும் சூழவுள்ள இந்து மத ஆலயங்களின் மதஅனுட்டானங்களை உள்வாங்கிச் சிறப்பித்தும் காணப்படுவதே கண்டிப் பெரஹரா ஆகும்.


கண்டிப் பெரஹராவுடன் தொடர்புபட்டதாக நான்கு இந்துமத கோவில்கள் காணப்படுகின்றன. அவையாவன: தலதா மாளிகையின் அயல்களில், அமையப் பெற்றிருக்கும் கதரகம தெய்யோ தேவாலய (முருகன் கோவில்), விஷ்னு கோவில், நாக கோவில், பத்தினி தேவாலய (கண்ணகி கோவில்) ஆகிய கோவில்களில் இடம்பெறும், கண்டிப்பெரஹரா நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் கூட, கண்டிப்பெரஹராவை உலக அளவில் பேசவைக்கின்றது. அந்த நிகழ்வுகளை நேரில் கண்டுகளிப்பதற்கு உல்லாசப் பயணிகள் பெருமளவில் திரள்வதும் இதனுடைய தனித்துவத்துக்கான சான்றுகளாகும்.


இந்தக் கண்டிப் பெரஹரா, ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோவினால் உலகில் பாதுகாக்கப்படவேண்டிய, மரபுரிமை, பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட நிகழ்வுகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிறப்பிக்கப்படுகின்றது.


மிகவும் ஆசாரபூவர்வமாகவும் நெறிமுறை தவறாமலும் வருடம்தோறும் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் வரும் நிகினி பௌர்ணமி தினத்தில் கண்டிப்பெரஹரா நடந்தேறுகின்றது. ஆனால், அதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே, பெரஹரா நிகழ்வுகளுக்குத் வேண்டிய ஆயத்தங்களை ஆரம்பித்து விடுவார்கள்.


இந்தக் கண்டிப்பெரஹரா நிகழ்வுகளுக்கு உலக அளவில் தனித்துவத்தைக் கொடுக்கும் ஓர் அணிவகுப்பாக யானைகளின் அலங்காரமான ஊர்வலத்தைக் குறிப்பிடமுடியும். அந்த யானைகளை பெரஹராவில் பங்குபற்ற வைப்பதற்கு என்றொரு விதிமுறையும் சம்பிரதாயமும் உண்டு. அதன்படியே, நெறிமுறை தவறாது, பரம்பரை பரம்பரையாகவும் பாரம்பரியமாகவும் கைக்கொள்ளப்பட்டுத் தொடர்கின்றது.


அதிகளவான யானைகள் இந்தப் பெரஹராவில் பங்குபற்றுவதனால் ஒவ்வொரு யானைப்பாகனையும் தேடிச்சென்று வெற்றிலை கொடுத்து கௌரவத்துடன் முறைப்படி அழைப்பது மரபு.


இவ்வாறே, பெரஹரா ஊர்வலத்தில் அணிவகுக்கும் சவுக்குவெடி வெடிப்போர், பதாதைகள் - கொடிகள் மற்றும் அதனை ஏந்திச் செல்வோர், நடனமாடுவோர், இசைக்கருவிகள் இசைப்போர், நெருப்புப் பந்தம் சுழற்றுவோர், விளக்கு ஏந்துவோர் என இவர்கள் யாவரையும் கௌரவப்படுத்தியே அழைத்து, வரவழைக்கப்படுகின்றார்கள்.


நடனமாடுவோர், இசைக்கருவிகள் இசைப்போர், சவுக்குவெடி வெடிப்போர் போன்ற சேவைகளை, கண்டிப் பெரஹராவின்போது வழங்குபவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலமாக, பாரம்பரியத்துடன் தலதா மாளிகையுடன் தொடர்புகளைப் பேணிவருகின்றார்கள். பெரஹரா சிறப்பாக நடைபெற, பரம்பரை பரம்பரையாக அர்ப்பணித்து வருவது இக்குலத்தினரின் சிறப்பாகும்.


மே மாதத்தில் வெசாக்தினம் நிறைவுபெற்றதன் பின்னர், நிறைவான நாளில் நிலமே, கப்புராளைகள், சுபநேரம் கணிப்பவர்கள், அதிகாரிகள் ஒன்றுகூடும் ~முதற்கூட்டம்| நடைபெறும். இக்கூட்டத்தில், பெரஹரா ஆரம்பிக்கும் முகூர்த்த நேரம் கணிக்கப்பட்டு, நடைமுறைகளில் மாற்றமில்லாமல் நிகழ்வுகள் திட்டமிடப்படும்.


அரசாங்கத்துக்கு குறித்த தினத்தில் பெரஹரா நடைபெறும் என்பது தெரியப்படுத்தப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். சுபமுகூர்த்தத்துக்கு ஏற்ப, பெரஹராவில் அணிவகுத்துச் செல்லப்படும், ஆலவட்டங்கள், கொடிகள், பதாதைகள் யாவும் ஒதுக்கவேண்டியவை ஒதுக்கப்பட்டு, திருத்தவேண்டியவைகள் திருத்தப்பட்டு, புதிதாகச் செய்யவேண்டியவை களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். மின்சாரம், நீர், சுகாதார வைத்திய, போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற நிறுவனங்களின் சேவையை பெரஹராவின் போது வழங்குமாறு ஓலை அனுப்பப்பட்டு வேண்டுகோள் விடப்படும்.


அதன் பின்னர், பெரஹரா நிகழ்வு குறித்த விபரங்கள் அடங்கிய ~பத்திரம்| அச்;சடித்து விநியோகிக்கப்படும். தொடர்ந்து, சுபமுகூர்த்த நேரத்தில் வெள்ளையடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, துப்பரவு செய்யப்படும். மஞ்சள் நீரினால் தலதா மாளிகை முழுவதும் கழுவப்பட்டு, சுபமுகூர்த்த நேரத்தில் மலர்களினால் அலங்கரித்தல் ஆரம்பமாகும். சிறியபெரிய பௌத்த கொடிகளினாலும் மின்குமிழ்களினாலும் அலங்காரங்கள் அமைந்திருக்கும்.


பெரஹரா செல்லும் வீதிகளும் மஞ்சள் நீரினால் சுத்தம் செய்யப்படும். சதுர தேவாலய கொண்டாட்டம், அளுத்நுவர தேவாலயத்தில் ஆரம்பமாகும். இங்கு ஆண் பலாமரக் கன்றொன்றைத் தெரிவுசெய்து, அதனையும் சூழலையும் துப்பரவு செய்த பின்னர், மலர்களால் அலங்கரித்து, ஸ்தோத்திரம் பாடி, நல்ல முகூர்த்த நேரத்தில் நான்காக வெட்டி, வெள்ளைத்துணியினால் சுற்றி, நாக, முருகன், பத்தினி, விஷ்னு கோவில்களின் கப்புறாளைகளுக்கு நிலமே யானைகளின் மேல்சென்று கையளிப்பார்.


கண்டிப் பெரஹராவில் பங்குகொள்ளும் எவரொருவரின் குடும்பத்தில், இரத்த உறவில் மூன்று மாதத்துக்குட்பட்ட காலப்பகுதியில் மரணம் நிகழ்ந்திருப்பின், அவர் பெரஹராவில் பங்குபற்ற முடியாது.


இத்தகைய ஒழுங்கு, விதிமுறைகளுடன் கூடிய, சரித்திரமும் சம்பிரதாயமும் வாய்க்கப்பெற்ற கண்டிப்பெரஹரா நிகழ்வு, 1,707 வருடகாலமாக, புதிய சம்பிரதாயங்கள் என்று எதையும் உள்வாங்கிக் கொள்ளாமல் விதிமுறைப்படி நடாத்தப்பட்டு வருகிறது.

Dalada Perahera or Kandy Esala Perahera is an ancient and grand cultural tradition. Held from July to August it is organised by the Dalada Maligawa (Temple). Before the Sacred Tooth Relic of the Supreme Buddha is taken in grand procession across Kandy many rituals are observed. Preparations such as cleansing the Temple and perahera route begin five months ahead. Festivities dedicated to deities Natha, Vishnu, Kataragama and Pattini are performed at the Temple.

image01

சடங்காசார முறைப்படி தேவாலயத்துக்கான அபிஷேகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

 

image01

கதரகம| தேவாலயத்தில் இடம்பெறும் பெரஹரா ஆரம்பச்சடங்குகள்

 

image01

ஆண்பலாமரக் கன்றின் பாகம், கப்புறாளையிடம் கையளிக்கும் வண்ணம் நிலமேயினால் பவனியாக எடுத்துவரப்படுகிறது.

 

image01

தேவாலயத்தில் சம்பிரதாயங்கள் மாறாமல் நடைபெறும் பூஜைகள்.

 

image01

பெரஹராவில் பங்குபற்றும் யானைகள், முத்து, மணிகள் இழைக்கப்பட்ட பட்டுத்துணிகளினால் அலங்காரம் செய்யப்படுகிறது.

 

http://www.serendib.btoptions.lk/tamilshow.php?issue=93&id=2104#page

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.