Jump to content

சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்


Recommended Posts

சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம்

 
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் சர்ரே (Surrey) அணி யோர்க்ஷையர் (Yorkshire) அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

டிவிஷன் – I அணிகளான சர்ரே மற்றும் யோர்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சர்ரே அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் மார்க் ஸ்டோன்மேன் ஆகியோர் உறுதியான அடித்தளம் ஒன்றை வழங்கினர். ஏனெனில் முதல் விக்கெட்டிற்காக 178 ஓட்டங்கள் இவர்களால் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது.

 

 

இதில் ரோரி பர்ன்ஸ் 75 ஓட்டங்களைக் குவித்து சர்ரே அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை திரும்பினார். அவருக்கு அடுத்தபடியாக மார்க் ஸ்டோன்மேனும் சதமொன்றை கடந்து 131 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி நடக்க, இன்னுமொரு விக்கெட்டையும் விரைவாக பறிகொடுத்த சர்ரே அணி நல்லதொரு ஆரம்பத்தை பெற்றிருப்பினும் சற்று தடுமாற்றத்தை வெளிக்காட்டியது.

இவ்வாறனதொரு தருணத்தில் களம் நுழைந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்ரே அணியின் விக்கெட் காப்பாளர் பென் போக்ஸ் உடன் இணைந்து தனது அழகிய துடுப்பாட்டத்தின் மூலம் சரிவுப்பாதை ஒன்றில் விழ இருந்த அணியை மீட்டெடுத்தார்.

இதனால் போட்டியின் முதல் நாள் நிறைவில், சங்காவின் அரைச் சதத்துடன் சர்ரே அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 398 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில், தமது முதல் இன்னிங்சை  மீண்டும் தொடங்கிய சர்ரே அணியில், குமார் சங்கக்கார தனது 63 ஆவது முதல்தர சதத்தை பூர்த்தி செய்தார். இதனால், மேலும் வலுவடைந்த சர்ரே அணி 500 ஓட்டங்களை எட்டியது.  

யோர்க்ஷையர் அணிக்கு மிகவும் நெருக்கடியாக காணப்பட்டிருந்த சங்கக்காரவின் விக்கெட்டை ஜேக் புருக்ஸ் கைப்பற்றியிருந்தார். அடுத்து வந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்களை ஓய்வறை அனுப்புவது யோர்க்ஷையர் கழக பந்து வீச்சாளர்களுக்கு இலகுவாக காணப்பட 137.2 ஓவர்களில் சர்ரே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 592 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்தது.

சர்ரே அணிக்காக அபார சதம் கடந்த குமார் சங்கக்கார 187 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகளை விளாசி மொத்தமாக 164 ஓட்டங்களைப் பெற்று தனது திறமையை மீண்டும் வெளிக்காட்டினார். அத்தோடு மறுமுனையில் பென் போக்ஸ் சதம் விளாசி 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டிருந்த சங்கக்கார இந்த போட்டியிலும் சதம் கடந்ததன் மூலம், இந்தப் பருவகாலத்திற்கான கவுண்டி கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த மூன்று வீரர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்காவின் விக்கெட்டைக் கைப்பற்றிய ஜேக் புருக்ஸ் 5 விக்கெட்டுகளை யோர்க்ஷையர் அணி சார்பாக கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

சர்ரே (முதல் இன்னிங்ஸ்) – 592 (137.2) – குமார் சங்கக்கார 164, மார்க் ஸ்டோன்மேன்  131, பென் போக்ஸ் 110, ஜேக் புருக்ஸ் 113/5, ஸ்டீவன் பெட்டர்சன் 120/3

யோர்க்ஷையர் (முதல் இன்னிங்ஸ்) – 171/1 (51) – ஷோன் மார்ஷ் 77*, டொம் கோஹ்லர் 78

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இங்கிலாந்து கவுன்டி சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக சாரே அணிக்காக   எட்டாவது சதத்தினை பதிவு செய்த சங்கக்கார!

sanga somerset 100

Published: 20th September, 2017

Kumar Sangakkara’s eighth Specsavers County Championship hundred of a remarkable final season for Surrey left Somerset in trouble after two days at the Kia Oval.

https://www.kiaoval.com/main-news/another-sanga-century-gives-surrey-day-2-lead/

http://www.espncricinfo.com/series/8052/report/1068577/day/2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/15/2017 at 1:33 AM, நவீனன் said:

William Shakespeare can't teach you how to write.

Michael Jackson can't teach you how to moonwalk.

But, Kumar Sangakkara can teach you how to play the cover drive.

பொதுவாக கவர் ட்ரைவ் அடிப்பவர்கள் முன்னங்காள்கலளில்தான் கவனம் செலுத்துவார்கள்  முன் கால் முன்னோக்கி வளைந்திருத்தல் வேண்டும் 90 பாகைக்கு குறைவாக ( உடம்பிலிருந்து) இருந்த்தால் பந்து கட்டுப்பாட்டை இழந்து மேலெலுந்து செல்லும் , சங்கக்காராவின் முன் கால்கள் இயல்பாக அந்தநிலைக்கு  (முன் கால்கள் முன்னோக்கி வளைந்த்திருத்தல்) கொண்டுவருவதற்கு அவர் பயன்படுத்தும் உத்தி புதிதுதான்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கு நன்றி vasee,

நீங்கள் நிறைய கிரிக்கெட் அறிவு, விபரம் தெரிந்தவர்.

முன்பும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது சில விடயங்கள் நீங்கள் எழுதியதாக நினைவு.

நேரம் கிடைக்கும்போது இங்கு எழுதவேண்டும் நீங்கள்.... செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

21 hours ago, vasee said:

பொதுவாக கவர் ட்ரைவ் அடிப்பவர்கள் முன்னங்காள்கலளில்தான் கவனம் செலுத்துவார்கள்  முன் கால் முன்னோக்கி வளைந்திருத்தல் வேண்டும் 90 பாகைக்கு குறைவாக ( உடம்பிலிருந்து) இருந்த்தால் பந்து கட்டுப்பாட்டை இழந்து மேலெலுந்து செல்லும் , சங்கக்காராவின் முன் கால்கள் இயல்பாக அந்தநிலைக்கு  (முன் கால்கள் முன்னோக்கி வளைந்த்திருத்தல்) கொண்டுவருவதற்கு அவர் பயன்படுத்தும் உத்தி புதிதுதான்.

 

 

Take every chance you can to watch Kumar Sangakkara beauties just like this one! 1f60d.png

நேற்றய போட்டியில்..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.