Jump to content

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம்


Recommended Posts

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம்

 

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4, 5 மற்றும் 6 ஆம் தரத்திலான பயிற்சி கற்கைநெறிகளை கற்று வருகின்றனர்.

இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்ற நிலையில், தற்பொழுது 144 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையம் 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இவ்வருடத்தில் மேலும் 400 மாணவர்கள் இங்கு கற்கை நெறிக்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தவேண்டியுள்ளது.

மேலதிகமாக 400 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்தப் பயிற்சி நிறுவனத்தில் புதிய தங்குமிட கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/new-building-for-the-German-Training-Center

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்டத்தை 20 வருடத்திற்கு ஜேர்மனிக்கு குத்தகைக்கு கொடுத்தாலே போதும். ஒரு குட்டி ஜேர்மனி ஆக்கிவிடுவார்கள். போரின் உண்மையான வலி தெரிந்தவர்கள். பெரிதாக வியாபாரம் பண்ணமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

யாழ்மாவட்டத்தை 20 வருடத்திற்கு ஜேர்மனிக்கு குத்தகைக்கு கொடுத்தாலே போதும். ஒரு குட்டி ஜேர்மனி ஆக்கிவிடுவார்கள். போரின் உண்மையான வலி தெரிந்தவர்கள். பெரிதாக வியாபாரம் பண்ணமாட்டார்கள்.

நீங்கள் சொல்வது சரி.ஆனாலும் ஒரு சின்ன திருத்தம் வடகிழக்கு மாகாணத்தை யேர்மனியிடம் கொடுத்தால் என்டு வர வேணும்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.ஆனாலும் ஒரு சின்ன திருத்தம் வடகிழக்கு மாகாணத்தை யேர்மனியிடம் கொடுத்தால் என்டு வர வேணும்.:)

நீங்கள் சொல்வது சரிதான்.

விருப்பமும் அதுதான்.

நாங்கள் வடகிழக்கு என்கிறோம்.....தம்பி...சகோதரம் என்கிறோம்...ஆனால் தம்பியோ யாழ்ப்பாணி என்னு புறந்தள்ளுறானுங்க....இதை எப்பிடி கணிக்கிறீங்க?

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

யாழ்மாவட்டத்தை 20 வருடத்திற்கு ஜேர்மனிக்கு குத்தகைக்கு கொடுத்தாலே போதும். ஒரு குட்டி ஜேர்மனி ஆக்கிவிடுவார்கள். போரின் உண்மையான வலி தெரிந்தவர்கள். பெரிதாக வியாபாரம் பண்ணமாட்டார்கள்.

ஒரு வேளை மேர்க்கல் அம்மையார் யாழ் விஜயம் செய்தால் வட மாகாண சபை உறுப்பினர்கள் அம்மையார் காலில் விழ வேண்டி வருமா ????????

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரிதான்.

விருப்பமும் அதுதான்.

நாங்கள் வடகிழக்கு என்கிறோம்.....தம்பி...சகோதரம் என்கிறோம்...ஆனால் தம்பியோ யாழ்ப்பாணி என்னு புறந்தள்ளுறானுங்க....இதை எப்பிடி கணிக்கிறீங்க?

கிழக்கில் முந்திவந்து குந்திவிட்ட யாழ்ப்பாணிகள்தான் பிந்தி வரும் யாழ்ப்பாணிகளை புறந்தள்ளுறானுங்க... சாமி அவர்களே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.