Jump to content

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாபெரும் வாகனப் பேரணி


Recommended Posts

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாபெரும் வாகனப் பேரணி

 

 

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து "சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண்" அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியாவை வந்தடைந்த நிலையில் இன்று வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி பயணமானது.

Local_News.jpg

வவுனியா ஏ - 9 விதியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த  குறித்த வாகனப் பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து வைரவபுளியங்குள் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அனுராதபுரம் நோக்கிச் சென்றது.

தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து!, இலவசக் கல்வியை சிதைக்காதே! போன்ற வாசங்களுடன் மோட்டர் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கர வண்டிகள் என இவ் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றின.

DSC_1880.JPG

இப் பேரணியில் வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

http://www.virakesari.lk/article/24386

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்

இவர்களுக்கு சைட்டத்தால் என்ன பிரச்சினை 
வைத்தியர் சங்கம் ,மருத்துவ பீட மாணவர்களுக்கு எதிர்க்கடை வந்துவிடும் என்று பயம் ,பிறகு தனியாரில் கொள்ளையடிக்க முடியாதே 
அரசு சைட்டத்தை மூடுவதுடன்   மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையோ ,மருந்தகமோ நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடவேண்டும் ,சேவை நோக்க கல்வியை கற்றுவிட்டு கண்மண் தெரியாமல் கொள்ளை அடிப்பது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.