Jump to content

கொழும்புக்கான எச்சரிக்கை


Recommended Posts

கொழும்புக்கான எச்சரிக்கை

 
 
  •  

கொழும்பு அரசு விழித்­துக்­கொள்ள வேண்­டிய தரு­ணம் வந்­து­விட்­டது என்­பதை ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சையிட் அல் -ஹுசைன் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். கொழும்பு இந்­தப் போக்­கி­லேயே சென்­றால் அது பன்­னாட்டு விசா­ரணை ஒன்று நடத்­தப்­ப­ட­வேண்­டிய அவ­சி­யத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தி ­ருக்­கி­றார்.

அத்­த­கைய அவ­சி­யத்­தில் இருந்து விடு­ப­டு­வ­தற்கு கொழும்பு உட­ன­டி­யா­கச் செய்­ய­வேண்­டி­ய­வற்­றை­யும் அவர் பட்­டி­ய­லிட்­டி­ருக்­கி­றார். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான அலு­வ­ல­கத்­தின் பணி­களை உட­ன­டி­யாக ஆரம்­பிப்­பது, நம்­பிக்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­குத் தேவை­யான மற்­றைய விட­யங்­களை விரை­வு­ப­டுத்­து­வது, அதா­வது படை­யி­ன­ரின் பிடி­யில் உள்ள மக்­க­ளின் காணி­களை விடு­விப்­பது, பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் நீண்ட கால­மா­கத் தீர்க்­கப்­ப­டா­மல் இருக்­கும் வழக்­கு­க­ளுக்கு முடிவு கட்­டு­வது போன்­ற­வற்­றைச் செய்­வ­தன் மூலம் தேங்­கிப் போயி­ருக்­கும் நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றை­யின் இயக்­கத்தை மீட்­டெ­டுக்க முடி­யும் என்று வழி­காட்­டி­யி­ருக்­கி­றார்.

தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கும் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக உலக மனித உரி­மை­கள் சட்­டத்­திற்கு மதிப்­ப­ளிக்­கக்­கூ­டிய உள்ளூர் சட்­டம் ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

கொழும்­பின் நகர்­வு­களை, நட­வ­டிக்­கை­களை முக்­கி­ய­மாக அதன் பித்­த­லாட்­டங்­க­ளை­யும், ஒப்­புக்­குச் சப்­பா­ணி­யான செயற்­பா­டு­க­ளை­யும், தெளி­வா­க­வும் உன்­னிப்­பா­க­வும் ஐக்­கிய நாடு­கள் சபை கண்­கா­ணித்து வரு­கின்­றது என்­ப­தை­யும் ஹுசை­னின் பேச்சு எடுத்­துக் காட்­டி­யி­ருக்­கி­றது.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கக் கொழும்பு ஏற்­றுக்­கொண்ட பின்­னர், அத­னைச் செயற்­ப­டுத்­து­வது வெறு­மனே கட­மைக்­கா­ன­தாக அல்­லது இதை முடித்­து­விட்­டோம், அதை முடித்­து­விட்­டோம் என்று அறிக்­கை­யி­டு­வ­தற்­கா­ன­தாக அர­சால் நோக்­கப்­ப­டக்­கூ­டாது என்­றும் ஹுசைன் தெளி­வா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். அனைத்து மக்­க­ளுக்­கும் அவ­சி­ய­மா­னது என்று எடுக்­கப்­பட்டு, அவை­ய­னைத்­தும் செயற்­ப­டுத்­த­வேண்­டும் என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்.

பன்­னாட்­டுச் சமூ­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக இங்கே நல்­லி­ணக்­க­மும் நிலை­மாறு கால நீதி முயற்­சி­க­ளும் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன என்று காட்­டு­வ­தற்கு கொழும்பு முயல்­கி­றதே அல்­லா­மல் உருப்­ப­டி­யான, உண்­மை­யான, நேர்­மை­யான நட­வ­டிக்­கை­கள் எவை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­கிற தமிழ் மக்­க­ளின் குற்­றச்­சாட்­டின் வெளிப்­பாடே ஹுசை­னின் குரல்.

நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­தி­லும் பொறுப்­புக்­கூ­று­வ­தி­லும் அரசு உண்­மை­யு­டன் செயற்­ப­ட­வேண்­டும் என்­ப­தையே அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார். கொழும்பு இப்­போது அப்­படி நடக்­க­வில்லை என்­பதை வடக்­கில் நடந்­து­வ­ரும் மக்­கள் போராட்­டங்­கள் வெளிப் ப­டுத்­து­கின்­றன என்­பதை அர­சுக்­குச் சுட்­டிக்­காட்­ட­வும் ஹுசைன் மறக்­க­வில்லை.

இவ்­வ­ள­விற்­கும் பின்­னரே அரசு இவ்­வாறு தொடர்ந்து செயற்­பட்­டால் பன்­னாட்டு விசா­ரணை ஒன்றை மேலும் கட்­டா­ய­மாக்­கி­வி­டும் என்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­ யி­ருக்­கி­றார். அதா­வது இப்­போதே அந்­தத் தேவை இருக்­கி­றது, கொழும்பு இப்­ப­டியே செயற்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தால் அது தவிர்க்க முடி­யா­த­தா­கி­வி­டும் என்­றும் அவர் கூறி­யி­ருக்­கி­றார்.

கொழும்பு அரசு அத­னைப் புரிந்­து­கொண்டு நடப்­பதே அதற்­கும் நல்­லது; நாட்­டுக்­கும் நல்­லது. ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக பிரே­சி­லில் போர்க்­குற்ற மனு தாக்­கல் செய்­யப்­பட்­ட­தற்கே பத­று­ப­வர்­கள், ஒட்­டு­மொத்த பன்­னாட்டு விசா­ர­ணையை எப்­படி ஏற்­பார்­கள்? எனவே அதி­லி­ருந்து தப்­பிக்­கொள்­ள­வா­வது ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்­தைத் தாம­திக்­காது அப்­ப­டியே நடை­மு­றைப்­ப­டுத்த கொழும்பு முன்­வ­ர­வேண்­டும்.

http://newuthayan.com/story/28349.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.