Jump to content

‘அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி


Recommended Posts

‘அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி

 
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைந்தது. அதன்பிறகு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தீர்மானங்களை நிறைவேற்றினர். சசிகலாவின் பதவி பறிப்பால் பிரச்னைகள் ஏற்படும் என்று எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தனர் பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள். சசிகலாவின் பதவியைப் பறிக்கும் தீர்மானத்தை அமைச்சர் உதயகுமார் வாசித்ததும், கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். இதனால், பொதுக்குழுவை சிறப்பாக முடித்த மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளனர்.

தினகரனின் ஆதரவாளர்களாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பக்கம் வந்துவிட்டால், ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்று கருதுகின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பு. இதற்காக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் கொங்கு மண்டல அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் முழுவிவரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சொல்லப்பட்டுள்ளது. அதில், சில எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக வந்த தகவல் முதல்வருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு விரித்த வலையில் அவர் சிக்கவில்லை என்பதால், போலீஸார் வருத்தத்தில் உள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொதுக்குழு முடிந்த பிறகு தினகரன் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில், சட்டரீதியாக தினகரன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தினகரன் தொடர்பான வழக்குகுறித்த விவரங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் விவரங்கள் உடனடியாக முதல்வர் டேபிளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, நம்முடைய இலக்கு தினகரன்தான் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். அதற்கான வேலைகளை ரகசியமாக உளவுத்துறையினர் செய்துவருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரிகள், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு, முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் விவரங்கள் உடனடியாகத் தேவை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த விவரங்களை உடனடியாக அனுப்பிவைத்துள்ளோம். அந்த பைல் தற்போது முதல்வரின் டேபிளில் இருக்கிறது. பைல் தொடர்பாக விரைவில் முதல்வர் எடுக்கும் முடிவு, தினகரனுக்கு அதிர்ச்சியாக இருக்கும்" என்றனர்.

தினகரன்

 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் கேட்டபோது, "பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. அதில், தற்காலிக பொதுச் செயலாளர் பதவி சசிகலாவிடமிருந்து பறிக்கப்படுவதுடன், அவரால் நீக்கப்பட்டவர்கள் பதவியும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் நியமிக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழுவின் தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்ற அறிவிப்பு வெளிவரும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். இரட்டை இலைச் சின்னம் எங்கள் கைக்கு வந்தவுடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். சசிகலா குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க-வுக்கும் இனி எந்தவித தொடர்பும் இருக்காது. ஜெயலலிதா விரும்பிய ஆட்சியை ஒற்றுமையாக நாங்கள் நடத்துவோம்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/102097-edappadi-palanisamy-team-waiting-for-signal-from-delhi.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கு வழியில வந்த பதவிகள் எல்லாம் குறுக்கால போகுது......!  tw_blush:

நேற்று நூலில் இழுபட்டு வந்த கப்பலும் நாளைக்கு சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிடும் போலக்கிடக்கு.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் வாக்கு போட்டது ஜெயலலிதாவுக்கு.......

அதை வைச்சி என்னன்னமோ எல்லாம் பண்ணுறாங்கப்பா. ரமில் நாட்டை தூக்கிக்கொண்டு போகாவிட்டால் சரி...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.9.2017 at 11:08 AM, குமாரசாமி said:

சனம் வாக்கு போட்டது ஜெயலலிதாவுக்கு.......

அதை வைச்சி என்னன்னமோ எல்லாம் பண்ணுறாங்கப்பா. ரமில் நாட்டை தூக்கிக்கொண்டு போகாவிட்டால் சரி...:grin:

தமிழ்நாடு வெறும்கோதுதான். கோதை உடைக்காம அப்படியே யானையைமாதிரி உறிஞ்சிவிட்டார்கள்.  அதனால்தான் பண பதவிப் பேரமென ஆட்சி போகிறது. அ.தி.மு. கவின் பெயரால் பா.ஜ.க ஆள்கிறது. தேர்தல்வந்தால் மட்டுமே இவர்களனைவரதும் வண்டவாளம் தெரியவரும். அல்லது இரட்டையிலைக்குக் கண்ணை மூடிக்குத்தித் தமிழகமக்கள்  கூவத்துள்விளாதிருந்தால் சரி. ஏனென்றால் இன்றும் எம்ஜிஆரரவர்கள் இருப்பதாக எண்ணும் கிராமமக்கள் உள்ள நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

தமிழ்நாடு வெறும்கோதுதான். கோதை உடைக்காம அப்படியே யானையைமாதிரி உறிஞ்சிவிட்டார்கள்.  அதனால்தான் பண பதவிப் பேரமென ஆட்சி போகிறது. அ.தி.மு. கவின் பெயரால் பா.ஜ.க ஆள்கிறது. தேர்தல்வந்தால் மட்டுமே இவர்களனைவரதும் வண்டவாளம் தெரியவரும். அல்லது இரட்டையிலைக்குக் கண்ணை மூடிக்குத்தித் தமிழகமக்கள்  கூவத்துள்விளாதிருந்தால் சரி. ஏனென்றால் இன்றும் எம்ஜிஆரரவர்கள் இருப்பதாக எண்ணும் கிராமமக்கள் உள்ள நிலை.

தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழரிடமும் இருப்பது இயக்க அரசியல். கட்சியும் அதில் இருக்கும் தலைவர்களும் சொல்வதெல்லாம் வேதவாக்கு. அதற்கு மக்கள் தலையாட்டுவார்கள். அவ்வளவுதான். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழரிடமும் இருப்பது இயக்க அரசியல். கட்சியும் அதில் இருக்கும் தலைவர்களும் சொல்வதெல்லாம் வேதவாக்கு. அதற்கு மக்கள் தலையாட்டுவார்கள். அவ்வளவுதான். :grin:

 உலகிலேயே அதிக மறதிநோய் கொண்ட இனம் தமிழினமாகத்தானிருக்மென்று நான் நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.