Jump to content

வித்தியா வழக்கில் கைதான லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதி!!


Recommended Posts

வித்தியா வழக்கில் கைதான லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதி!!

 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

http://newuthayan.com/story/28250.html

Link to comment
Share on other sites

லலித் ஜயசிங்கவுக்குப் பிணை
 

- எஸ். நிதர்ஷன்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/லலித்-ஜயசிங்கவுக்குப்-பிணை/150-203724

Link to comment
Share on other sites

  சுவிஸ் குமார் தப்பி சென்ற வழக்கு – சந்தேக நபருக்கு பிணை – ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

7-1.png
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி செல்ல உதவினார் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடமாகாண பிரதி  காவல்துறை மா அதிபர் லலித் எ ஜெயசிங்க கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

 
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது  விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் வடமாகாண பிரதி  காவல்துறை மா   அதிபர் லலித் எ ஜெயசிங்க மன்றில் முற்படுத்தப்பட்டார்.
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , முன்னாள் வடமாகாண பிரதி  காவல்துறை மா அதிபர் லலித் எ ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
 
அதனை அடுத்து மூன்று லட்சம் ரூபாய் காசு பிணை, மற்றும் தலா 4லட்சம் பெறுமதியான நான்கு சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அத்துடன்  கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்படவேண்டும், வெளிநாடு செல்வதற்கு தடை, மாதத்தின் முதல் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையப்பம் இடவேண்டும். என நிபந்தனைகள் மன்றினால் விதிக்கப்பட்டது.
 
அதேவேளை இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேக நபரான  யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உப  காவல்துறை பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் தலைமறைவாகியுள்ளார். அவருக்கு எதிராக மன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 
7-2.png

http://globaltamilnews.net/archives/40940

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.