Jump to content

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு


Recommended Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு

mahela-jayawardenaதிலங்க சுமதி­பால தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் தங்­க­ளுக்கு தொடர்பு இருப்­ப­தாக வெளி­யான தக­வலை மஹேல ஜய­வர்­தன, ப்ரெண்டன் குருப்பு, ரொஷான் மஹ­நாம ஆகியோர் நிரா­க­ரித்­துள்­ளனர்.


இந்த மூவ­ருடன் அர­விந்த டி சில்வா, க்ரேம் லெப்ரோய் ஆகி­யோரை தெரிவுக் குழுவில் இணைப்­ப­தற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் கடும் பிர­யத்­தனம் எடுத்­து­வ­ரு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தது.


வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்­டி­ருக்கும் இலங்கை கிரிக்கெட் விளை­யாட்டை மீள் எழுச்சி அடையச் செய்யும் முயற்­சி­யா­கவே இந்த முயற்­சியில் ஹலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஈடு­பட்டு வரு­வ­தாக கடந்த சில தினங்­க­ளாக தக­வல்கள் வெளி­யாகி வரு­கின்­றன.


brendon-kuruppu-(1)இதனை அடுத்து மஹேல, ப்ரெண்டன், மஹ­நாம  ஆகியோர் தங்­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் தொடர்பு இல்லை எனத் தெரி­வித்­துள்­ளனர்.


இது தொடர்­பாக ஊட­க­மொன்­றுக்கு இலங்­கையின் முன்னாள் விக்கெட் காப்­பா­ளரும் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரு­மான ப்ரெண்டன் கருத்து வெளி­யி­டு­கையில், ‘‘ஏதேனும் ஒரு பொறுப்பை ஏற்க நான் எண்­ணிய போதிலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் பிரே­ரிக்­கப்­பட்ட தெரி­வாளர் பத­வியை ஏற்­ப­தற்கு விரும்­ப­வில்லை’’ என்றார்.


இது இவ்­வா­றி­ருக்க, இண்­டியன் ப்ரீமியர் லீக் அணி­களில் ஒன்­றான மும்பை இண்­டியன்ஸ் அணியின் பயிற்­று­ந­ராக 3 வரு­டங்­க­ளுக்கு மஹேல ஜய­வர்­தன ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார்.


‘‘நான் இன்­னு­மொரு பயிற்­றுநர் பத­வியை ஏற்றால் அது நலன்­களில் முரண்­பா­டாக அமைந்­து­விடும்’’ என மஹேல ஜய­வர்­தன தெரி­வித்தார்.


roshan-mahanamaஎந்­த­வொரு விட­யத்­திற்­கா­கவும் மஹே­லவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அணு­க­வில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.


தேசிய அணியின் பயிற்­று­ந­ரா­வ­தற்கு மஹேல இன்னும் முதிர்ச்சி அடை­ய­வில்லை என ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் சில வாரங்­க­ளுக்கு முன்னர் திலங்க சும­தி­பால தெரி­வித்­தி­ருந்தார். இது இவ்­வா­றி­ருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தன்னை அணு­கி­ய­தாக ரொஷான் மஹ­நாம கூறினார்.

 

எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் இணைந்து செயற்­படும் எண்ணம் இல்லை என அவரும் குறிப்­பிட்டார்.


எந்­த­வொரு விளை­யாட்­டிலும் அர­சியல் தலை­யீடு, விளை­யாட்டு வீரர்­க­ளது பெற்­றோரின் தலை­யீடு, பயிற்­று­நர்கள், பொறுப்­பா­சி­ரி­யர்கள் பக்க சார்­பாக செயற்­ப­டு­வது அனைத்­தையும் விரும்­பா­தவர் ரொஷான் மஹ­நாம ஆவார். இதனை அவர் எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­களில் மேடை­களில் தெரி­வித்­தமை குறிப்பிடத்தக்கது..

http://metronews.lk/?p=13465

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.