Jump to content

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு


Recommended Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு

mahela-jayawardenaதிலங்க சுமதி­பால தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் தங்­க­ளுக்கு தொடர்பு இருப்­ப­தாக வெளி­யான தக­வலை மஹேல ஜய­வர்­தன, ப்ரெண்டன் குருப்பு, ரொஷான் மஹ­நாம ஆகியோர் நிரா­க­ரித்­துள்­ளனர்.


இந்த மூவ­ருடன் அர­விந்த டி சில்வா, க்ரேம் லெப்ரோய் ஆகி­யோரை தெரிவுக் குழுவில் இணைப்­ப­தற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் கடும் பிர­யத்­தனம் எடுத்­து­வ­ரு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தது.


வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்­டி­ருக்கும் இலங்கை கிரிக்கெட் விளை­யாட்டை மீள் எழுச்சி அடையச் செய்யும் முயற்­சி­யா­கவே இந்த முயற்­சியில் ஹலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஈடு­பட்டு வரு­வ­தாக கடந்த சில தினங்­க­ளாக தக­வல்கள் வெளி­யாகி வரு­கின்­றன.


brendon-kuruppu-(1)இதனை அடுத்து மஹேல, ப்ரெண்டன், மஹ­நாம  ஆகியோர் தங்­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் தொடர்பு இல்லை எனத் தெரி­வித்­துள்­ளனர்.


இது தொடர்­பாக ஊட­க­மொன்­றுக்கு இலங்­கையின் முன்னாள் விக்கெட் காப்­பா­ளரும் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரு­மான ப்ரெண்டன் கருத்து வெளி­யி­டு­கையில், ‘‘ஏதேனும் ஒரு பொறுப்பை ஏற்க நான் எண்­ணிய போதிலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் பிரே­ரிக்­கப்­பட்ட தெரி­வாளர் பத­வியை ஏற்­ப­தற்கு விரும்­ப­வில்லை’’ என்றார்.


இது இவ்­வா­றி­ருக்க, இண்­டியன் ப்ரீமியர் லீக் அணி­களில் ஒன்­றான மும்பை இண்­டியன்ஸ் அணியின் பயிற்­று­ந­ராக 3 வரு­டங்­க­ளுக்கு மஹேல ஜய­வர்­தன ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார்.


‘‘நான் இன்­னு­மொரு பயிற்­றுநர் பத­வியை ஏற்றால் அது நலன்­களில் முரண்­பா­டாக அமைந்­து­விடும்’’ என மஹேல ஜய­வர்­தன தெரி­வித்தார்.


roshan-mahanamaஎந்­த­வொரு விட­யத்­திற்­கா­கவும் மஹே­லவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அணு­க­வில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.


தேசிய அணியின் பயிற்­று­ந­ரா­வ­தற்கு மஹேல இன்னும் முதிர்ச்சி அடை­ய­வில்லை என ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் சில வாரங்­க­ளுக்கு முன்னர் திலங்க சும­தி­பால தெரி­வித்­தி­ருந்தார். இது இவ்­வா­றி­ருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தன்னை அணு­கி­ய­தாக ரொஷான் மஹ­நாம கூறினார்.

 

எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் இணைந்து செயற்­படும் எண்ணம் இல்லை என அவரும் குறிப்­பிட்டார்.


எந்­த­வொரு விளை­யாட்­டிலும் அர­சியல் தலை­யீடு, விளை­யாட்டு வீரர்­க­ளது பெற்­றோரின் தலை­யீடு, பயிற்­று­நர்கள், பொறுப்­பா­சி­ரி­யர்கள் பக்க சார்­பாக செயற்­ப­டு­வது அனைத்­தையும் விரும்­பா­தவர் ரொஷான் மஹ­நாம ஆவார். இதனை அவர் எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­களில் மேடை­களில் தெரி­வித்­தமை குறிப்பிடத்தக்கது..

http://metronews.lk/?p=13465

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.