Jump to content

அயர்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்


Recommended Posts

அயர்லாந்துடன் இன்று மோதல்:புத்துயிர் பெறுமா மே.இ.தீவுகள் அணி; மீண்டும் களமிறங்குகிறார் அதிரடி வீரர் கிறிஸ் கெயில்

 

 
13CHRELGAYLE

கிறிஸ் கெயில்   -  படம்: விவேக் பென்ரே

அயர்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களம் இறங்குகிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தபோதிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தியது. நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத நிலையிலும், வலுவான இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றதை கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு முன்னதாக, அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று விளையாடுகிறது. இப்போட்டியில் கிறிஸ் கெயில், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகிய நட்சத்திர வீரர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அந்த அணியைப் பொறுத்தவரை உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்கள் மட்டுமே, சர்வதேச போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் ஐபிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்கச் செல்வதால் உள்ளூர் தொடர்களை நட்சத்திர வீரர்கள் புறக்கணித்து வந்தனர். இதனால் அவர்கள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு வழங்கியதால், 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இன்றைய ஆட்டத்தில் கிறிஸ் கெயில் விளையாடுகிறார்.

கிறிஸ் கெயிலைப் போலவே சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோரும் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களின் வருகையும் அணிக்கு பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வுக்குழு தலைவர் கோர்ட்னி பிரவுனி கூறும்போது, “கிறிஸ் கெயில், சாமுவேல்ஸ் ஆகிய இருவரையும் மீண்டும் அணிக்கு வரவேற்கிறோம். அவர்களின் வருகை அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும். மற்ற வீரர்களுக்கும் அவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும்” என்றார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்றால்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கிறிஸ் கெயில் அணியில் இருப்பது, உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெற உதவியாக இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

மாறாக இந்தத் போட்டிகளில் தேவையான அளவுக்கு வெற்றிகளைக் குவிக்காவிட்டால், வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள தகுதிச் சுற்றுப் போட்டியில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்றுப் போட்டியில் அந்த அணி ஆட நேரிடும். இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் இந்தத் தொடரில் ஆடுவது பற்றி கிறிஸ் கெயில் கூறும்போது, “நான் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஆடுவதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஆட விரும்புகிறேன். கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்ந்து வருகின்றன. இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

இதற்கிடையே இன்றைய போட்டியின்போது மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. - ஏஎப்பி

http://tamil.thehindu.com/sports/article19675155.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

 

                                            இன்றைய போட்டி ஒரு பந்து கூட வீசபடாமல் கைவிடபட்டது

 

 

 

 

சீரற்ற காலநிலையால் மற்றொரு நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி
ghj.jpg

சீரற்ற காலநிலையால் மற்றொரு நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி

TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பம் முதல் உலகின் அதிரடி கிரிக்கெட் அணியாகவும், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தமான அணியாகவும் விளங்குகின்ற மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது.  இன்று இவ்வணி கத்துக்குட்டி அணிகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவி வருகின்றமை கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன் பட்டத்தை வென்ற பிறகு அவ்வணியின் சிரேஷ்ட வீரர்களான டெரன் சமி, டுவைன் பிராவோ, கிறிஸ் கெய்ல், கிரென் பொல்லார்ட், மார்லன் சாமுவேல்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கெமரூன் உள்ளிட்ட அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை படுமோசமாக விமர்சித்தனர்.

 

இதில் குறிப்பாக, அந்நாட்டு வீரர்களின் சம்பள நிலுவை தொடர்பிலும் இவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து அவர்களை அதிரடியாக நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நாட்டு கிரிக்கெட் சபை தன்னிச்சையாக செயற்பட்டதால் அவ்வணி 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கடந்த 2 வருடங்களில் பின்னடைவை சந்தித்து வந்தது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதிபெறுவதிலும் சந்தேகம் நிலவியது.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் அணிகள் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி தினம் செப்டம்பர் 30 ஆகும். குறிப்பிட்ட அந்தத் திகதியில் உலகக் கிண்ணத்தினை நடாத்தும் நாடான இங்கிலாந்தோடு சேர்த்து ஒருநாள் தரவரிசையில் முதல் 7 இடங்களிற்குள் உள்ள அணிகள் நேரடியாக உலகக் கிண்ணத்தில் விளையாட நேரடியாகத் தகுதி பெறும்.

ஆனால் 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தடுமாறி தரவரிசையில் முறையே 8ஆவது மற்றும் 9ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இறுதி அணியாக உலகக் கிண்ண வாய்ப்பினை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் அணி எது என்பது தொடர்பில் பலத்த போட்டி நிலவியது.

முன்னதாக கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை அணி, 2019 உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்யும் வாய்ப்பை அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 5 – 0 என்று பெற்றுக்கொண்ட தோல்வியின் மூலம் இழந்தது.

எனவே, மேற்கிந்திய தீவுகள் அணி தாம் விளையாடவுள்ள அடுத்த ஐந்து ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் நான்கில் வெற்றிபெற்றால் மாத்திரமே தரவரிசையில் இலங்கையை பின்தள்ளி உலகக் கிண்ணத்திற்கு தசம புள்ளிகள் கணக்கில் தகுதி பெறும்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தபோதிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தியது. நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத நிலையிலும், வலுவான இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றதை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.

டெஸ்ட் தொடரையடுத்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிகள் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டாலும் அல்லது அவ்வணி குறைந்த பட்சம் 4 போட்டிகளில் வெற்றிபெற தவறும் பட்சத்திலும் அது இலங்கை அணிக்கு சாதகமாக அமையவுள்ளதுடன், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிடும்.

 

அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும்.

இதில், கடந்த சில மாதங்களுக்கு முன் டெஸ்ட் வரம் பெற்ற வளர்ந்து வரும் அணியாக கருதப்படுகின்ற அயர்லாந்து அணிக்கும், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஒற்றை ஒருநாள் போட்டி இன்று பெல்பாஸ்ட்டில் நடைபெறவிருந்தது. எனினும், சீரற்ற காலநிலை காரணமாக குறித்த போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதால் மேற்கிந்திய தீவுகளின் உலகக் கிண்ண நேரடிக் கனவு இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றால் மாத்திரமே அவ்வணி உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றுக்கொள்ளும். அது போன்றே தற்பொழுதுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலேனும் தோல்வியடைய முடியாத நிலையில் உள்ளது.

கிரிக்கெட் உலகின் முன்னனி நாடுகளாக வலம் வந்து சாதனைகள் பல படைத்த இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு நாடுகளிலிருந்து 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணி நேரடியாக தகுதிபெறும் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், ஒருநாள் தரப்படுத்தலில் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு உலகக் கிண்ண நேரடிக் கனவை நனவாக்கிக்கொள்ளவுள்ள கடைசி அணியை இன்னும் 2 வாரங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்துகொள்ளலாம்.

ஒருநாள் அணியில் மீண்டும் 3 நட்சத்திர வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் போட்டியில் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகிய வீரர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளமை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அந்த அணியைப் பொறுத்தவரை உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்கள் மட்டுமே, சர்வதேச போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் ஐ.பி.எல் போன்ற வு-20 போட்டிகளில் பங்கேற்கச் செல்வதால் உள்ளூர் தொடர்களை நட்சத்திர வீரர்கள் புறக்கணித்து வந்தனர். இதனால் அவர்கள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இதற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மன்னிப்பு வழங்கியதால், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்குப் பிறகு முதற்தடவையாக கிறிஸ் கெய்ல் விளையாடவுள்ளார்.

 

கிறிஸ் கெய்லைப் போலவே மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோரும் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் வருகையும் அணிக்கு பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வுக்குழு தலைவர் கோர்ட்னி பிரவுனி கூறும்போது, ‘கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகிய இருவரையும் மீண்டும் அணிக்கு வரவேற்கிறோம். அவர்களின் வருகை அணியின் துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்தும். மற்ற வீரர்களுக்கும் அவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும்’ என்றார்.

இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில்,  இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் மாத்திரம் தான் மேற்கிந்திய தீவுகள் அணியால் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற முடியும். இந்த சூழ்நிலையில் கிறிஸ் கெய்ல் அணியில் இருப்பது, உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெற உதவியாக இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 37 வயதுடைய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 2 வருடங்களுக்குப் பிறகு களம் இறங்குகிறமை முக்கிய விடயமாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல், இறுதியாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அவ்வணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். 37 வயதான கிறிஸ் கெய்ல், இதுவரை 269 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,221 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோசமான துடுப்பாட்டம், உபாதைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இடையில் சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர், இவ்வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று கலக்கினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் தான் மிக ஆபத்தான துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபித்தார்.

ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்துவந்த அவர், கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வு-20 உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர், கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற இந்திய அணியுடனான T-20 போட்டியில் கிறிஸ் கெய்ல் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் 2 வருட இடைவெளியின் பிறகு மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடுவது பற்றி கிறிஸ் கெய்ல் கருத்து வெளியிடுகையில், ‘நான் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட விரும்புகிறேன். கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்ந்து வருகின்றன. இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்’ என்றார்.

இதேவேளை, அவ்வணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான மார்லன் சாமுவேல்ஸும் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் இறுதியாக 2016இல் இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கெதிரான முத்தரப்பு தொடரில் விளையாடியிருந்தார்.

கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் இருவரும் இங்கிலாந்துடன் நடைபெறவுள்ள 2ஆவது ஒருநாள் போட்டியின்போது முறையே தமது 38ஆவது மற்றும் 36ஆவது பிறந்த தினங்களைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உபாதையில் இருந்து குணமடைந்து அண்மையில் நிறைவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ, 100 சதவீதம் உடற்தகுதி பெறாத காரணத்தால் ஒருநாள் அணியில் இணைக்கப்படவில்லை. அதேபோல், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்ற சுனில் நரைனும் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. எனினும், கடந்த வருடம் ஜுலை மாதம் இறுதியாக மேற்கிந்திய அணிகளுக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான ஜெரம் டெய்லருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம்

சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷோ, மிகுயெல் கம்மின்ஸ், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர் (தலைவர்),  கைல் ஹோப்,  ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், எவின் லெவிஸ்,  ஜேசன் மொஹமட், அஷ்லே நர்ஸ்,  ரோவ்மன் பவேல்,  மார்லன் சாமுவேல்ஸ், ஜெரம் டெய்லர், கெஸ்ரிக் வில்லியம்ஸ்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

கெய்ல் ரிட்டர்ன்... உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்?

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான காலத்தில் அசைக்க முடியாத அணியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ். அன்றைய காலகட்டத்தில் உலகின் சிறந்த லெவனைத் தேர்வு செய்திருந்தால் அந்த அணியின் 11 பேருமே போட்டியில் இருப்பார்கள். அப்படிப்பட்ட அணி இன்று உலகக் கோப்பைக்குத் தகுதிபெற போராடுகிறது. 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதில் அந்த அணிக்குப் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் இருவரையும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சேர்த்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம். 

கெய்ல்

இங்கிலாந்தில் 2019-ல் நடக்கவுள்ள உலகக்கோப்பையானது 10 அணிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து தவிர்த்து, செப்டம்பர் 30, 2017 தேதி வரையில், ஒருநாள் தரவரிசையில் முதல் 7 இடங்களில் இருக்கும் பிற அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெறும். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகள் 'குவாலிஃபையர்' சுற்றில் விளையாடித் தகுதி பெற வேண்டும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் உலகக்கோப்பைக்கு ஏற்கனவே நேரடித் தகுதி பெற்றுவிட்டன. செப்டம்பர் 3 நிலவரப்படி இலங்கை 86 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், மேற்கிந்தியத்தீவுகள் 78 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் இருக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவில் இலங்கையைத் தரவரிசையில் முந்தினால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் நேரடித் தகுதி பெற முடியும். 

அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு ஒருநாள் போட்டியையும், இங்கிலாந்து தொடரின் கடைசி 4 ஒருநாள் போட்டிகளையும் வென்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையைப் பின்னுக்குத்தள்ளி, உலகக்கோப்பை ரிசர்வேஷனை கன்ஃபார்ம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அயர்லாந்து அணிக்கு எதிராக நடக்க இருந்த ஒருநாள் போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டதால், அந்த அணியின் வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இனி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 5-0 என்றோ அல்லது 4-0 என்றோ வெல்ல வேண்டும். தப்பித்தவறி இங்கிலாந்து ஒரு போட்டியில் வென்றாலும் கூட வெஸ்ட் இண்டீஸுக்குச் சிக்கல்தான்! ஆனால், இங்கிலாந்து சாதாரண அணி இல்லை என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். 

                                           வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக் கோப்பை வாய்ப்பு ஏற்கனவே மதில்மேல் பூனையாக இருந்ததால், இத்தனை நாட்கள் விடாகண்டனாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் முன்னணி வீரர்களான கெய்ல், சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோரை மீண்டும் அணிக்கு அழைத்துள்ளது. கெய்ல் கடைசியாக, 2015 மார்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் அவர் அரைசதம் அடித்திருந்தார். அதன்பின் டி-20 அணியில் அவ்வப்போது இடம்பெற்றிருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இப்போது அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதால் கெய்லின் தேவையை உணர்ந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

கெய்லுக்கு அடுத்த வாரம் 38 வயது நிறைவடையப்போகிறது. உலகக்கோப்பைக்குப் பின் அவர் விளையாடுவது கேள்விக்குறியே. பல முன்னணி வீரர்கள் அந்த அணியிலிருந்து தோன்றியிருந்தாலும் லாரா, சந்தர்பாலுக்குப் பிறகு நம்பிக்கையான ஒரு வீரரை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இப்போது கெய்லை அணியில் இணைந்திருப்பது அவர் மீது அணி கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது. அந்த நம்பிக்கையை கெய்ல் பூர்த்தி செய்வாரா? கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சாம்பியன் அணியை மீட்டெடுப்பாரா?

 

முடியும்.. இந்தக் கரீபியப் புயல் சுழன்றடித்தால் நிச்சயம் அது சாத்தியமே..!

http://www.vikatan.com/news/sports/102220-will-west-indies-gets-qualified-to-the-next-world-cup.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.