Jump to content

லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா


Recommended Posts

லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா

LaLiga Third Matches
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் பின்னரான லாலிகா சுற்றுப் போட்டிகளின் மூன்றாம் கட்டப்போட்டிகள் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. போட்டியின் முடிவில் பார்சிலோனா கழகம் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பல அணிகளின் எதிர்பாராத போட்டி முடிவுகள் ஆதரவாளர்களை மகிழ்ச்சியிலும் அதேபோல் அதிருப்தியிலும் ஆளாக்கியுள்ளது.

உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னரான ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப்போட்டிகள் 9ஆம் திகதி ஆரம்பமாகியது. ஓருவார கால இடைவெளியின் பின்னர் ஆதரவாளர்கள் தமது அணியின் வீரர்களை உற்சாகப்படுத்த திரள் திரளாக மைதானத்திற்கு சமூகமளித்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் போட்டிகளும் மிகவும் சூடுபிடித்தே காணப்பட்டன. எது எவ்வாறாயினும் கால்பந்து ரசிகர்களுக்கு இவ்வாரப் போட்டிகள் சிறந்த விருந்தாகவே அமைந்தன. அத்துடன் இவ்வாரம் அனைத்து அணிகளும் மோதும் மூன்றாவது போட்டியாகும்.

நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலுமே அனைத்து போட்டிகளையும் வெற்றி பெற்ற அணியாக பார்சிலோனா மற்றும் ரியல் சொசிடட் கழகங்கள் திகழ்கின்றன.

இவ்வாரம் முதற்கட்ட போட்டிகளாக 9ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளைக் குறிப்பிடலாம். கெடாபே கால்பந்து கழகம் (Getafe CF), இவ்வாரம் லெகனாஸ் கழகத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றின் முதல் வெற்றியை பதிவு செய்தது. கெடாபே அணிக்காக மோரோ அரம்பர்ரீ (Mauro Arambarri) 39ஆவது நிமிடத்திலும் மற்றும் அல்வாரோ (Álvaro Jiménez) 83ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றுக் கொடுத்தனர். அதேபோல் லெகனாஸ் அணிக்காக மீகுவெல் குரேரா (Miguel Ángel Guerrero) 65ஆவது நிமிடத்தில் ஓரு கோலை பெற்றார். இதில் முக்கிய விடயம் யாதெனில் லெகனாஸ் அணிக்கு போட்டியின் 72ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மீகுவெல் குரேரா கோலாக்க முயன்றபோது அதனை கெடாபே அணியின் கோல் காப்பாளர் சிறந்த முறையில் தடுத்து வெற்றிக்றகு வழி வகுத்தார்.

அதேதினம் நடைபெற்ற றியல் மட்றிட் மற்றும் லெவன்டே (Levante) கழகங்கள் மோதிய போட்டியின் முடிவால் றியல் மட்றிட் கழக ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். றியல் மட்றிட் கழகத்தின் மைதானமான பர்னாபீயூவில் (Santiago Bernabéu) நடைபெற்ற இப்போட்டியில் றியல் மட்றிட் கழகத்தால் வெற்றியீட்ட முடியவில்லை. அத்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையிலேயே நிறைவு செய்தனர். மேலும் தொடர்ந்து இரு போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்த றியல் மட்றிட் அணியின் முக்கிய வீரர்கள் போட்டியை ஆரம்பிக்காததும், றியல் மட்றிட் அணியின் இரண்டாவது தலைவர் மார்சலோவிற்கு போட்டியின் 89ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட சிவப்பு அட்டை மூலமும் ஆதரவாளர்கள் அதிருப்தியிலுள்ளனர். லெவான்டே கழகத்திற்காக லோபெஸ் (López Álvarez) 12ஆவது நிமிடத்திலும் றியல் மட்றிட் கழகத்திற்காக லுகாஸ் வாஸ்கஸ் (Lucas Vázquez) 36ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

 

 

மேலும் வெலன்ஸியா மற்றும் அட்லடிகோ மட்றிட் கழகங்கள் மோதிய போட்டியானது இரு அணிகளும் எவ்வித கோலையும் பெறாத நிலையில் சமநிலையில் முடிவுற்றது. அன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் செவில்லா அணி எய்பர் (Eibar) அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஜீரோனா கழகம் அத்லடிக் பில்பாகு (Ath. Bilbao) கழகத்திடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்றதன் மூலம் லாலிகா சுற்றுப் போட்டியில் தனது முதல் தோல்வியை சந்தித்தது. மேலும் அலவெஸ் (Alaves) மற்றுன் செல்டாவிகோ கழகங்களுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் செல்டாவிகோ கழகம் வெற்றி பெற்று இப்பருவகாலத்தின் முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது.

டிபோர்டிவோ மற்றும் றியல் சொசிடட் கழகங்கள் மோதிய போட்டி இறுதிவரை விறுவிறுப்பான போட்டியாகவே அமைந்தது. போட்டியின் முதல் 5 நிமிடங்களுக்குள் அசியர் இல்லரமன்டே (Asier Illarramendi) மற்றும் ஜீவான்மி ஆகியோரின் கோல்களினால் 2-0 என்ற கோல்கள் கணக்கில் றியல் சொசிடட் கழகம் முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து முதல் பாதி முடிவடைவதற்குள் டிபோர்டிவோ கழகம் சார்பாக போட்டியின் 27ஆவது நிமிடத்தில் அட்ரியன் லோபெஸ் ஓரு கோலைப் பெற்றார்.

போட்டியின் இரண்டாம் பாதியில் விரைவாக செயற்பட்ட டிபோர்டிவோ கழகம், 50ஆவது நிமிடத்தில் பொலோரின் அன்டோன் (Florin Andone) பெற்ற கோலினால் போட்டியை சமநிலைப்படுத்தியது. எனினும் போட்டியின் இறுதித்தருவாயில், 83ஆவது மற்றும் 86ஆவது நிமிடங்களின் முறையே டியோகே லோரன்டே (Diego Llorente) மற்றும் அசியர் இல்லரமன்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலை தமது அணிக்காக பெற்றதன் மூலம் றியல் சொசிடட் கழகம் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை தமதாக்கியது.

அடுத்ததாக பார்சிலோனா மற்றும் ஸ்பான்யோல் (Espanyol) கழகங்கள் மோதிய போட்டியில் பார்சிலோனா கழகத்தின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சியின் ஹட்ரீக் கோலினால் இப்போட்டியை 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியீட்டியது பார்சிலோனா அணி. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்காக லயனல் மெஸ்சி 26, 35 மற்றும் 67 ஆவது நிடங்களிலும் ஜெராட் பீகே 87ஆவது நிமிடத்திலும், லுயிஸ் ஸுவாரேஸ் 90ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றுக் கொடுத்தனர். பார்சிலோனா கழகத்துடன் இப்பருவகாலம் முதல் இணைந்த ஓஸ்மானே டேம்பல்லே (Ousmane Dembele) போட்டியின் 68ஆவது நிமிடத்தில் களமிறங்கினார். அத்துடன் பார்சிலோனா அணி ஒரு கோலை பெறவும் உதவி செய்தார். ஸ்பான்யோல் கழகத்திற்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டியும் அதனை சரிவர பயன்படுத்த தவறியமையால் பார்சிலோனா அணியிடம் இப்போட்டியில் தோல்வியுற்றது.

 

11ஆம் திகதியன்று நடைபெற்ற போட்டியில் றியல் பெடிஸ் (Real Betis) மற்றும் விலரல் கழகங்கள் மோதின. இப்போட்டியில் விலரல் கழகம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாம் கட்டப்போட்டியின் இறுதிப்போட்டியானது மலாகா மற்றும் லஸ் பல்மாஸ் (Las Palmas) கழகங்களுக்கிடயே நடைபெற்றது. இப்போட்டியில் லஸ் பல்மாஸ் கழகம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதியாக இன்றுவரை (12/09/2017) நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியல்            

நிலை அணி போட்டிகள் வெற்றி சமநிலை தோல்வி புள்ளிகள்
1 பார்சிலோனா 3 3 0 0 9
2 றியல் சொசிடட் 3 3 0 0 9
3 செவில்லா 3 2 1 0 7
4 அத். பில்பாகு 3 2 1 0 7
5 லெகனஸ் 3 2 0 1 6
6 அட். மட்றிட் 3 1 2 0 5
7 றியல் மட்றிட் 3 1 2 0 5
8 லெவன்டே 3 1 2 0 5
9 வெலன்சியா 3 1 2 0 5
10 கேடாவேய் 3 1 1 1 4
11 ஜீரோனா 3 1 1 1 4
12 செல்டாவிகோ 3 1 0 2 3
13 விலரல் 3 1 0 2 3
14 றியல் பெடிஸ் 3 1 0 2 3
15 ஏய்பர் 3 1 0 2 3
16 டிபோர்டிவோ 3 0 1 2 1
17 ஸ்பான்யல் 3 0 1 2 1
18 மலாகா 2 0 0 2 0
19 அலவஸ் 3 0 0 3 0
20 லஸ் பல்மாஸ் 2 0 0 2 0

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.