Jump to content

பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகி சென்னையில் கைது


Recommended Posts

பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகி சென்னையில் கைது

 

 Share  Tweet   அ-அ+

சென்னையில் திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகி சென்னையில் கைது
 
சில இணையதளங்களில் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக திரைப்பட சங்க நிர்வாகிகள் போலீசாரிடம் புகார்கள் அளித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சில கடைகளில் நடத்தப்படும் சோதனைகளில் திருட்டு வி.சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்து அந்த கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் திரைப்படங்களை வெளியிடுபவர்கள் யார் என்பது தெரியாததால் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதை தடுக்க முடியாத ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்சனையில் பெரிய திருப்பமாக பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின்பேரில் சென்னையை சேர்ந்த கவுரி ஷங்கர் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் எந்த இணையதள நிர்வாகி என்னும் தகவல்களை விசாரணைக்கு பின்னர் தெரிவிக்க உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாடு நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டித்தெரிந்து கொண்டார். 

இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது:

201709122305273380_1_visal._L_styvpf.jpg

திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக பிரபல இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. போலீஸ் விசாரணைக்கு பின்னர் மற்ற தகவல்கள் வெளியிடப்படும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/12230523/1107703/popular-pirated-movie-web-admin-arrested-in-triplicane.vpf

 

இணையத்தில் திரைப்படங்களை பதிவேற்றும் 'தமிழ்கன்' நிர்வாகி கைது!

 

இந்திய அளவில் வெளியாகும் திரைப்படங்களை சட்டத்துக்குப் புறம்பாக இணையதளத்தில் பதிவேற்றும் 'தமிழ்கன்' நிர்வாகியைப் பிடித்த திரைத்துறையினர், அவரைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 

1_20241.jpg

அவர், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 100 ஐ.பி முகவரிகள் மூலம் சட்டவிரோதமாக 'தமிழ்கன்' இணையதளத்தில் திரைப்படங்களில் பதிவேற்றி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக கௌரி சங்கரை சென்னைக்கு வரவழைக்க திட்டமிட்டு, திரைத்துறையினர் அவரை வசமாக பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், காவல்நிலையத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட திரைப்பட சங்க நிர்வாகிகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

செய்தியாளர்களை சந்தித்த விஷால்

இந்த கைது நடவடிக்கையை அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க பொதுச்செலயலாளருமான விஷால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'இந்த கைது தொடர்பாக நாங்கள் காவல்துறையிடம் உரிய முறையில் புகார் கொடுத்துள்ளோம். எனவே, இதுகுறித்து தற்போது என்னால் எதுவும் கூற முடியாது. இதைப் பற்றி அதிகாரபூர்வமாக நான் பேச எனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் தேவைப்படுகிறது' என்று கூறிவிட்டு காவல் நிலையத்துக்குள் சென்றுவிட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/102055-tamilgun-admin-arrested-in-chennai.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவாக திரைப்படங்களை வெளியிடுதல் சம்பந்தமாக ஈழத்தமிழன் மீது காறித்துப்பியவர்கள்.....துப்பியதை மீண்டும் உமிழ்ந்து கொள்வார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழ்ப்படம் பார்க்க ஆசைப்பட்டு...ஒரு அஞ்சு டிவிடிகளைத் தமிழ்க் கடையில ...காசைக் குடுத்து வாங்கிக் கொண்டு வந்து வீட்டை வந்து படத்தைப் போட்டால்....அந்தக்காலத்து தேவதாஸ் படம் மாதிரி இருந்தது!

அவ்வளவு கிளியர் எண்டதைத் தான் சொல்ல வாறன்!

அண்டையிலை இருந்து தமிழ்ப்படம் பார்க்கிறதையே விட்டாச்சுது!:mellow:

Link to comment
Share on other sites

நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு

tamilrockerstamilgunjpg

தாங்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்கு தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு தெரிவித்திருப்பது தமிழ்த்திரையுலகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. அந்தக் குழுவினர் tamilgun.com என்ற இணையதள உரிமையாளர் கவுரி சங்கரை தொடர்ந்து 6 மாதங்களாக கண்காணித்து வந்ததோடு, திருட்டு விசிடி தயாரிக்க மாஸ்டர் காப்பியை தருவதற்காக சென்னைக்கு அழைத்திருக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்று கவுரிசங்கர் சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்தார். அப்போது, கவுரி சங்கரை திருவல்லிக்கேணி போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இவர் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தின் அட்மின் எனத் தகவல் வெளியானதால் சமூக வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது 'தமிழ் ராக்கர்ஸ்' ட்விட்டர் பக்கத்தில் 'தவறான செய்தி' என்று பதிவிட்டார்கள்.

மேலும், கைது செய்யப்பட்ட கவுரி சங்கர் 'Tamil Gun' என்ற இணையத்தின் அட்மின் என செய்திகளை வெளியிட்டார்கள். ஆனால் 'Tamil Gun' ஃபேஸ்புக் பக்கத்தில் "அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்துங்கள். எங்களுடைய அட்மின் கைது செய்யப்படவில்லை. 'துப்பறிவாளன்' படத்தை முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரண்டு இணையதளங்களுமே "தாங்கள் கைது செய்யப்படவில்லை" என்று தெரிவித்திருப்பதால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19675013.ece?homepage=true

Link to comment
Share on other sites

புது திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டது எப்படி?-திருப்பத்தூர் பட்டதாரி இளைஞர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

 

 
theatre

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது எப்படி என்பது குறித்த பரபரப்பான தகவல்களை, கைதான திருப்பத்தூர் இளைஞர் வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக புதிய திரைப்படங்கள், வெளியான சில மணி நேரங்களிலேயே அவை இணைய தளங்களில் வெளியாகி வருகிறது. இதனால், தொழில் ரீதியில் நஷ்டம் ஏற்படுவதாக திரைத்துறையினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினரிடமும் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், புதிய படங்களை இணைய தளங்களில் பரவ விடுபவர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளார். அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். திருப்பத்தூரில் உள்ள நெட்சென்டர் ஒன்றில் புதுப்படங்கள் சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக விஷாலின் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 மாதங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் சென்றுள்ளனர். அங்கு கவுரி சங்கர் (24) என்பவர் நடத்தி வந்த நெட் சென்டருக்கு ரகசிய கேமராக்களுடன் சென்றுள்ளனர். பின்னர் வாடிக்கையாளரைப் போல் புதுப்படங்களை டவுன் லோடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். முதலில் முடியாது என்று கூறிய கவுரி சங்கர், பின்னர் ரூ.200 கொடுத்தால் புதுப்படங்களை சிடியிலும், பென் டிரைவிலும் பதிவேற்றி தருவதாக கூறியுள்ளார். மேலும் தான் ‘தமிழ்கன்.இன்’ என்ற இணைய தளத்தில் புதுப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கவுரி சங்கரை சென்னைக்கு வரவழைத்து போலீஸாரிடம் ஒப்படைக்க அவர்கள் திட்டமிட்டனர். அவரிடம் பேச்சுக்கொடுத்த விஷால் குழுவினர், “உங்களைப்போல் நாங்களும் புதுப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறோம். நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம். இதற்கு பங்கு தொகையாக ரூ.1 லட்சம் தருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கவுரி சங்கர் நேற்று முன்தினம் இரவு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விஷால் குழுவினரின் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவர்கள் கவுரி சங்கரைப் பிடித்து திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்துவதற்காக திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மல்லிகா தலைமையில் உதவி ஆணையர் துரை, இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கவுரி சங்கர் திருப்பத்தூர் அருகே உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை மேஸ்திரி தொழிலாளி. ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினர், கவுரி சங்கரை பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைத்துள்ளனர். அதன் பிறகு நெட் சென்டர் வைத்துக் கொடுத்துள்ளனர்.

கவுரி சங்கர் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என தேடியுள்ளார். அப்போது, தனியாக இணைய தள முகவரியுடன் தொழில் தொடங்கி அதில் விளம்பரம் மூலம் வருமானம் சம்பாதிக்கலாம் என தெரிந்து கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் ‘தமிழ்கன்.இன்’ என்ற முகவரியுடன் இணையதள பக்கம் தொடங்கி, அதில் புதுப்படங்களை உடனுக்குடன் பதிவிட்டு விளம்பரம் பெற்று பணம் சம்பாதித்துள்ளார். இவருக்கும் புதுப்படங்களை திருட்டுத் தனமாக விற்பனை செய்யும் வேறு கும்பலுக்கும் தொடர்பு இல்லை. இதையே கவரி சங்கர் தங்களிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

கவுரி சங்கரை பிடித்து போலீஸார் விசாரிப்பதை கேள்விப்பட்டு அவரது பெற்றோர் சென்னை வந்தனர். அவர்கள் கவுரி சங்கரை கட்டிப்பிடித்து அழுதனர். இதனால் மனம் கலங்கிய கவுரி சங்கர், “இனி இதுபோல் செய்யமாட்டேன். தெரியாமல் செய்து விட்டேன் என்னை விட்டு விடுங்கள்” என்று போலீஸாரிடம் கதறி அழுதார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19681352.ece?homepage=true

Link to comment
Share on other sites

'தமிழ் ராக்கர்ஸ் - தமிழ் கன்' நெறியாளர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு: தயாரிப்பாளர் சங்கம்

 

 
111jpg

'தமிழ் ராக்கர்ஸ் - தமிழ் கன்' நெறியாளர்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசளிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

திருட்டு விசிடியை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இணையம் வழியே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரண்டு இணையங்கள்தான், வெளியான அன்றே முழுப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்களை கண்டுபிடிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். தற்போது அந்த இணையங்களின் நெறியாளர்கள் புகைப்படத்தை வெளியிட்டு, இவர்களை பற்றிய தகவல்கள் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனால் இரண்டு நெறியாளர்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பல்வேறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19697944.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போன்ற நாட்டில் பெரிய பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லாம் வெளியே, இவ்வாறு சிறு சிறு குற்றங்களை செய்வோர் பற்றி பெரிய விளம்பரம் காட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.