Jump to content

குத்துச்சண்டையில் வரலாற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி


Recommended Posts

குத்துச்சண்டையில் வரலாற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி

 

பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி  நான்கு தங்க பதக்கங்களை கைப்பற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.

Local_News.jpg

நாடு பூராகவும் 48 பாடசாலைகளை சேர்ந்த 267 வீரர்கள் பங்குபற்றிய 16 பிரிவுகளைக் கொண்ட இந்த தேசிய போட்டித்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் குத்துச்சண்டை திடலில் இடம்பெற்றுவந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த போட்டி இடம்பெற்றதோடு முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பாடசாலைகள் கலந்துகொண்டிருந்தன.

இதில் முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரியை சேர்ந்த வி.சாம்சன் 35 கிலோ - 37 கிலோ  எடைப்பிரிவில் தங்கம், 52கிலோ  -56கிலோ  எடைப்பிரிவில் எம்.தனுஜன் தங்கம், 56கிலோ - 60கிலோ  எடைப்பிரிவில் வை.ஜனனன் தங்கம், 60 கிலோ - 64 கிலோ  எடைப்பிரிவில் வை.கிரிதுரன் தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை சுவீகரித்து தேசிய சாதனையை நிலை நாட்டினர்.

IMG_1631.JPG

இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைசேர்ந்த  முத்தையன்கட்டு வலதுகரை (அ. த. க) பாடசாலை வீரர் ஏ .தமிழரசன் 43 கிலோ - 45 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தினையும்  முத்தையன்கட்டு இடதுகரை (அ. த.க) பாடசாலை வீரர் பி.ரூபன் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டனர். 

வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் குத்துச்சண்டைப் போட்டி கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், தேசிய மட்டத்தில் பல்வேறு வகையான சாதனைகளை நிலைநாட்டும் வீரர்கள் இந்த மாவட்டத்தில் அதிகமாகவுள்ளனர் என்பது தற்போது  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

IMG_1604.JPG

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக குத்துச்சண்டை பயிற்சியின் பிரதம ஆசிரியர் மதுசங்க மற்றும் வள்ளுவன் மாஸ்ரர் ஆகியோரின் பயிற்சியால் வளர்க்கப்படுகின்ற இம் மாணவர்கள் சிறந்த மாணவர்களாக மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேசிய மாவட்ட போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை பெற்று முன்னிலை வகித்தவர்கள். இந்த ஆண்டுக்கான தேசிய குத்துச்சண்டை போட்டி முதல்முதலாக வடமாகாணாத்தில் நடைபெறுவது என்பது பெருமைக்குரியது.

வடக்கில் உள்ள மாணவர்களின் திறமைகளை விளையாட்டில் வெளிக்கொணர இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24330

Link to comment
Share on other sites

சொந்த மண்ணில் நான்கு தங்கம் வென்ற முல்லை வித்தியானந்தாக் கல்லூரி!

 

தேசியரீதியிலான அனைத்து பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி வடமாகாணத்தில் முதல் முதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றுள்ளது.

சொந்த மண்ணில் நான்கு தங்கம் வென்ற முல்லை வித்தியானந்தாக் கல்லூரி!

இதன்படி இந்தக் குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

எம்.ஏ.எஸ் நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் நாட்டில் உள்ள 48 பாடசாலைகளை சேர்ந்த 240 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

சொந்த மண்ணில் நான்கு தங்கம் வென்ற முல்லை வித்தியானந்தாக் கல்லூரி!

16 பிரிவுகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதி போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் வித்தியானந்தா கல்லூரி 4 தங்க பதக்கங்கள் பெற்று முதல் இடத்தினைபெற்றுள்ளது.

சொந்த மண்ணில் நான்கு தங்கம் வென்ற முல்லை வித்தியானந்தாக் கல்லூரி!

சொந்த மண்ணில் நான்கு தங்கம் வென்ற முல்லை வித்தியானந்தாக் கல்லூரி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Mullai-Vithiyananda-College

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாள்வெட்டுக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல விடயம்.
பங்குபற்றியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.