Jump to content

திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம்


Recommended Posts

திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம்
 

யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக  ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள்.  ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது.

பல்கலைக்கழக நடைமுறைகள் மாத்திரமல்ல, இலங்கையின் கல்விமுறையில் உள்ள இலவசத் தன்மைதான், இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று, பலரும் கருத்துகளை வெளியிட்டாலும், அது வெளிப்படையான காரணம் இல்லை.

நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானதாக, பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உபவிதிகள்  எனப் பல சட்ட திட்டங்கள் உள்ளன. 

இவற்றின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்களில் உள்ள மூதவை, பேரவை என்ற இரண்டு உயர் பீடங்களும் இவற்றின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கின்றன.  இந்த இரண்டு உயர் பீடங்களினாலும் எடுக்கப்படுகின்ற முடிவுகள், எந்த விதத்திலும் மாற்ற முடியாதவைகளாகளாகவும் மாணவர்கள், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவைகளாகவும் இருந்து வருகின்றன. ஆனால், நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாத்திரம், அதைக் கடைப்பிடிப்பதற்கு முடியாது என்கிறார்கள் மாணவர்கள்.

மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என்று வந்துவிட்டால் அவர்களுக்கிடையில் இன, மத, மொழி, ஜாதி வேறுபாடுகள் இல்லை என்பதுதான் யதார்த்தம்; அதுதான் உண்மை. ஆனால், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவகாரத்தில், இதுவேறு மாதிரியாக இருப்பதாகவே எல்லோராலும் ஊகிக்க முடிகிறது.

வெளிப்படையாகச் சொல்வதில் கூட, அச்சப்படத்தான் வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு, அவர்களுடைய பல்கலைக்கழக ஒழுக்க விரோதச் செயற்பாடுகளுக்காக, வழங்கப்பட்ட தண்டனையை விலக்கவேண்டும் என்பதற்காகவே, மிகப் பெரியளவான பிரச்சினை ஒன்று உருவாக்கப்பட்டிந்தது.  

இதற்கான முடிவை, எந்த விதமான பாரபட்சமும் இன்றி எடுப்பதாக இருந்தால், குறிப்பிட்ட மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி வாழ்க்கையையே இழக்க நேரிட்டிருக்கும்.  இருப்பினும், தொடர்ந்தும் வழங்கப்படுகின்ற மன்னிப்புகள், விட்டுக்கொடுப்புகள் காரணமாக, முழுப் பல்கலைக்கழகமும் அனைத்து மாணவர்களது கல்வியும் கேள்விக்குறியாகி இருந்தது.

ஒரு பல்கலைக்கழகத்தை, இழுத்து மூடுவதும், மீண்டும் திறப்பதும் சாதாரணமான நடவடிக்கையல்ல. பேரவை, மூதவைகளின் கூட்டங்கள், முடிவுகள், குறிப்பிட்ட வாரங்களுக்கு முந்தியதான கடித அறிவித்தல்கள், பத்திரிகை அறிவித்தல்கள் வழங்கப்பட்டுத்தான் மீண்டும் ஆம்பிக்க முடியும். 

கடந்த ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நிருவாகக் கட்டடத்தை, மாணவர்கள் முற்றுகையிட்டது முதல் இயக்கமற்று இருந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழகம், எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி, எல்லோரிடமும் இருந்தது. அதற்கான பதில், கடந்த வெள்ளிக்கிழமை (08)நண்பகலுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (08), மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருக்கும் மாணவர்களது பதாதைகள், சுவரொட்டிகள், கறுப்பு நிறக் கொடிகள், கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன்  நிர்வாகக் கட்டடத்திலிருந்தும் மாணவர்கள் வெளியேறினார்கள்.

2017ஆம் ஆண்டில், ‘செனற்’ எனப்படுகிற நிர்வாகக் கட்டத்தை, மாணவர்கள் முற்றுகையிட்டமை, இது, இரண்டாவது தடவையாகும். முதல் தடவை நடைபெற்ற முற்றுகையின்போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம், வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். நாடு திரும்பியதும், மாணவர் முற்றுகை நடைபெற்றிருப்பது தெரியாதது போன்று, உள்ளே சென்று திரும்பினார். 

அதன் பின்னர், சில நாட்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினர் வருகை தந்து, விடுதி வசதிகளை, அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாறு பணித்துச் சென்றிருந்தனர். அதற்கமைய மாணவர்களுக்கு விடுதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால், அதன் பின்னரும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில், மீண்டும் மாணவர்கள் முற்றுகையை ஆரம்பித்து, தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனால், மீண்டும் எழுந்த பிரச்சினை, நீதிமன்றம் வரை சென்றது. இரண்டு தடவைகள், உபவேந்தர் நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

 அதன்பின்னர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஆராய்வு கூட்டம் ஒன்று செப்டெம்பர், நான்காம் திகதி நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த வியாழக்கிழமை (07) மாணவர்களுடன், பேரவை உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தனர்.

அதன்போது, பல்கலைக்கழகத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக, 10ஆம் திகதி பகல் 12 மணிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுதல், முன்னுரிமை அடிப்படையில் முதல், இறுதி, மூன்றாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்குதல், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களது பிரச்சினைகளை ஆராயவென குழு ஒன்று நியமிக்கப்படுதல், மாஹாபொல மற்றும் பேசறி கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்துதல், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்காதிருத்தல், எதிர்வரும் 18ஆம் திகதி, இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல், ஏனையவர்களுக்கு ஒக்டோபர் இரண்டாம் திகதிக்குள் ஆரம்பித்தல், எதிர்காலத்தில் பல்கலைக்கழக நடைமுறைகள் குறித்து ஏற்படும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்த்தல், பல்கலைக்கழகம் மூடப்பட்ட நாட்களில் நடைபெறவிருந்த பரீட்சைகளை விசேடமாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களது பிரச்சினைகளை ஆராயவென கலாநிதி எச்.ஆர்.தம்போபிற்றவைத் தலைவராகக் கொண்டு, ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.மௌனகுரு மற்றும் அருட்தந்தை போல் றொபின்சன் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கும். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டட முற்றுகை தொடர்பில், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால், ஓகஸ்ட் மாத இறுதியில், வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ‘கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறுபகுதி மாணவர்களால் 08.08.2017 தொடக்கம், கிழக்குப் பல்கலைக்கழக மூதவை கட்டடத்தை, சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, நிர்வாக செயற்பாடுகளையும் கல்விநடவடிக்கைகளையும் சீர்குலைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சினையால், கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ஆசிரியர் சங்கம் தங்களது ஆழ்ந்த கவலையை இத்தால் வெளிப்படுத்துகிறது. இது, ஒரு சிறுதொகுதி, மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்கமற்ற நடவடிக்கையாகும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் அந்த அறிக்கைக்கு எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை. 

அதேபோன்று, கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தனது அறிக்கையில், ‘பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில், உங்களது உரிமைகள் தொடர்பாகப் போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள் என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள். ஆயினும், தற்போதைய நடவடிக்கைகள், மாணவர் உரிமைகளுக்கான சட்டதிட்டங்களை எல்லை மீறுவதாக அமைந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தது.  அந்த அறிக்கையினாலும் பயன் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்ததன் காரணமாக, இயக்கமற்றிருக்கும் கிழக்குப் பல்கலைக்கழத்தின் செயற்பாடுகளை, மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவையாவும் பயனற்றவையாகவே போயிருந்தன.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால், ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல், சீசீடிவி கமெராவை அகற்றவேண்டும், விடுதி வசதி வழங்கப்படவேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள், வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அக்கட்டடத் தொகுதியினுள்ளேயே இருந்து வந்த மாணவர்களை, நிர்வாகத்தினரின் முயற்சிகள் நீதிமன்ற ரீதியான நடவடிக்கைகள் கூட, ஒன்றும் செய்துவிடவில்லை.

இந்த நிலையில்தான், அரசியல் ரீதியான அழுதங்கள், பின்புலங்கள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களது விடயத்தில் காலூன்றியிருக்கிறதா என்ற கேள்வி எழத் தொடங்கியிருந்தது. எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், இவ்வளவு துணிச்சலாகவும் விட்டுக்கொடுப்புகள் எதுவுமின்றி மாணவர்கள் ஒரு போராட்டத்தை நடத்துவார்களா என்ற கேள்வியே அது.

முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு மாத்திரம் விடுதி வழங்குதல் என்ற, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள நடைமுறை, பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. 

இடவசதி, பராமரிப்பு, கற்றலில் ஏற்படுகின்ற இடையூறுகள், பகடிவதைகள் உள்ளிட்டவைகளும் இதிலடக்கம். இருப்பினும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம், அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி பல்கலைக்கழகத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. 

யுத்த காலத்தில் கூட, பல்கலைக்கழகத்துக்கு அயலிலுள்ள வீடுகளில், விடுதி வசதிகள் வழங்கப்படாத மாணவர்கள், தங்களது சொந்தப்பணத்தில் விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தங்கியிருந்தார்கள்; கற்றுப் பட்டம் பெற்றும் சென்றிருக்கிறார்கள். 

விடுதி வசதி வழங்கப்பட்டாலும் கற்றல் இடையூறுகள் காரணமாக வெளியிடங்களில் விடுதி வசதியை ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பொதுவாக கல்வி நடவடிக்கைகள் பல்வேறு காரணிகளால் தாமதமாவது வழமையாகி விட்டது. உண்மையில் மாணவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. 

பட்டப்படிப்பு கல்வியாண்டு 03 அல்லது 04 வருடங்களுக்குள் முடிவுற வேண்டும். இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து, பட்டப்படிப்பைப் பயில வந்திருக்கும் மாணவர்கள், உரிய காலத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து, தொழில்வாய்ப்பைப் பெற்று, பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது கடமையாகும். எமது நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீவிரமாகியுள்ள இன்றைய நிலையில், பட்டப்படிப்பும் தாமதமாவது மிகவும் கவலைக்குரியது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏறத்தாள 4,000 மாணவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘பொதுச் சொத்து எங்கள் சொத்து; நிதியெல்லாம் சிறுவர்களாக இருக்கையிலேயே சாத்தியம்’ ஆனால், இந்த வரைவிலக்கணத்துக்கு மாற்றாகவே, நடைமுறை  காணப்படுவது வழக்கம். அதாவது, எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதேயாகும். இதைத்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் செய்கிறார்கள்.

மாணவர்களுக்கு விடுதி வசதிகளை  வழங்கினால், விடுதி வசதி நியதியை மீறி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஏனைய மாணவர் நலன்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீர் வசதி, சுகாதாரப் பிரச்சினைகள், இட நெருக்கடிகளால் மாணவர்களிடையேயான முரண்பாடுகள், மன உளைச்சல்களும் ஏற்படுகின்றன. 

விடுதிகளில் இடநெருக்கடி காரணமாக, மாணவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மாணவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.
இருந்தாலும், மாணவர்கள் மேற்கொள்ளும் பகடிவதைகள், ஊழியர்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் என்பவற்றுக்கெதிரான தண்டனைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,  பல்கலைக்கழக விதிக்கோவை என்பவற்றுக்கமைவாக ஒழுக்கக் கோவை, உபவிதிகள் என்பவற்றினூடாக  அனைத்து மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள போதும் அதையும் மீறிச் செயற்படுகின்றமையானது, மாணவர்களின் தவறான செயற்படாகவே பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்துக்குள் வந்துவிட்ட மாணவர் ஒருவர், தவறான செயற்பாடுகளைக் கற்றுக்கொண்டவராக, வெளியே செல்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும். தவறான செயற்பாடுகளுடைய மாணவர், அந்தப்பழக்கத்தை ஏனைய மாணவர்களிடையேயும் பரப்ப முனைவது தவறானதொன்றாகும். அதே நேரத்தில், இவ்வாறானவர்கள் தங்களது பிரச்சினைகளையும் தவறுகளையும் மறைத்துக் கொள்வதற்காக இனம் சார்ந்த வியாக்கியானங்களையும் பயன்படுத்துகிறார்கள். இது தவறாகும்.
ஆனாலும், மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனையைக் குறைப்பதற்கான மேன்முறையீட்டை எழுத்து மூலமாக மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.  அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு இன்றுவரை குறைந்த தண்டனைகளையே வழங்கி வந்துள்ளதாகவும் அறிய முடிகிறது. மாணவர்களது நலன்சார்ந்து, பல்கலைக்கழகம் சிந்தித்தாலும் அதை மாணவர்கள் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொள்ளாத வரையில் அதனால் எந்தப்பயனுமில்லை என்பது இப்போது நடைபெற்று முடிந்த போராட்டத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உரிமைகள் தொடர்பாகப் போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உபவிதிகள் என்பன இடமளித்திருந்தாலும். மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருப்பதே தவறாகும்.
பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான மிகப் பாரிய பொறுப்புகளை உடைய பல்கலைக்கழக மாணவர்கள், தேவையானதும் பொருத்தப்பாடுடையதுமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, பெற்றோர்களின் கனவுகளைச் சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது. தவறாக வழிநடத்தும் பின்புலங்கள், தமது நலன்களை மாத்திரமே கருத்தில் கொள்ளும் என்ற சாதாரண யதார்த்தங்களைக்கூட அறிந்து கொள்ளாது செயற்படும் மாணவர்களை, எவ்வாறு சரி செய்வது என்பதே இப்போதைய பிரச்சினை.
இந்த நிலையில்தான் மாணவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து, கிழக்குப்பல்கலைக்கழகத்தை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்டம் திங்கட்கிழமை (05) காலை கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஓகஸ்ட், எட்டாம் திகதி முதல் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடமான ‘செனற்’றை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களது பிரச்சினைகள் குறித்தும், பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியே.
எது எவ்வாறாயினும், கிழக்குப் பல்கலைக்கழகம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளாலும் கணக்கெடுக்கப்படாமல் இருக்கின்றமைக்கு என்ன காரணம் என்ற கேள்வியும், நீண்ட வரலாற்றைக் கொண்ட நிருவாகத்தையுடைய கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிறுதொகை மாணவர்களது பிரச்சினையை எதிர்கொள்வதற்கு மூன்று மாத காலம் தேவைப்பட்டதா என்றும் கேள்வி எழுகிறது. 
கல்விப் புலமையாளர்கள் அனைவரும் இருக்கின்ற இடத்தில், ஏன் சிறு தொகை மாணவர்களின் பிரச்சினையைச் சீர் செய்ய முடியாது திண்டாடினார்கள் என்றும் கேட்டுக் கொள்ளலாம்.
பல்கலைக்கழகம் என்பது தேசிய நிறுவனம். அதற்கொரு இழுக்கென்றால் அது தேசிய ரீதியான இழுக்கு. இந்த இழுக்கை அரசும் கல்வியாளர்களும் எவ்வாறு தீர்த்து வைக்கப்போகிறார்கள்.  காணாமல் போகிற ஒழுக்கங்கள் எப்போது கண்டுபிடிக்கப்படும்?

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திறக்கப்படுகிறது-கிழக்குப்-பல்கலைக்கழகம்-உண்மையை-சொன்னால்-வெட்கம்/91-203621

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:
 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏறத்தாள 4,000 மாணவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘பொதுச் சொத்து எங்கள் சொத்து; நிதியெல்லாம் சிறுவர்களாக இருக்கையிலேயே சாத்தியம்’ ஆனால், இந்த வரைவிலக்கணத்துக்கு மாற்றாகவே, நடைமுறை  காணப்படுவது வழக்கம். அதாவது, எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதேயாகும். இதைத்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் செய்கிறார்கள்.

மாணவர்களுக்கு விடுதி வசதிகளை  வழங்கினால், விடுதி வசதி நியதியை மீறி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஏனைய மாணவர் நலன்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீர் வசதி, சுகாதாரப் பிரச்சினைகள், இட நெருக்கடிகளால் மாணவர்களிடையேயான முரண்பாடுகள், மன உளைச்சல்களும் ஏற்படுகின்றன. 

விடுதிகளில் இடநெருக்கடி காரணமாக, மாணவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மாணவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.
இருந்தாலும், மாணவர்கள் மேற்கொள்ளும் பகடிவதைகள், ஊழியர்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் என்பவற்றுக்கெதிரான தண்டனைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,  பல்கலைக்கழக விதிக்கோவை என்பவற்றுக்கமைவாக ஒழுக்கக் கோவை, உபவிதிகள் என்பவற்றினூடாக  அனைத்து மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள போதும் அதையும் மீறிச் செயற்படுகின்றமையானது, மாணவர்களின் தவறான செயற்படாகவே பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்துக்குள் வந்துவிட்ட மாணவர் ஒருவர், தவறான செயற்பாடுகளைக் கற்றுக்கொண்டவராக, வெளியே செல்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும். தவறான செயற்பாடுகளுடைய மாணவர், அந்தப்பழக்கத்தை ஏனைய மாணவர்களிடையேயும் பரப்ப முனைவது தவறானதொன்றாகும். அதே நேரத்தில், இவ்வாறானவர்கள் தங்களது பிரச்சினைகளையும் தவறுகளையும் மறைத்துக் கொள்வதற்காக இனம் சார்ந்த வியாக்கியானங்களையும் பயன்படுத்துகிறார்கள். இது தவறாகும்.
ஆனாலும்,

 

..இப்படியானவர்கள் நாளைக்கு பட்டப்படிப்பை முடித்து விட்டோம் வேலை தா என்று கேட்க்கும் போது  எந்த நம்பிக்கையில் இவர்களுக்கு வேலை கொடுப்பர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

..இப்படியானவர்கள் நாளைக்கு பட்டப்படிப்பை முடித்து விட்டோம் வேலை தா என்று கேட்க்கும் போது  எந்த நம்பிக்கையில் இவர்களுக்கு வேலை கொடுப்பர்?

ஆர்ப்பாட்டம் பண்ணியாவது வேலை எடுப்பார்கள்   என நினைக்கிறன்  

 

6 hours ago, நவீனன் said:

பல்கலைக்கழகத்துக்குள் வந்துவிட்ட மாணவர் ஒருவர், தவறான செயற்பாடுகளைக் கற்றுக்கொண்டவராக, வெளியே செல்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும். தவறான செயற்பாடுகளுடைய மாணவர், அந்தப்பழக்கத்தை ஏனைய மாணவர்களிடையேயும் பரப்ப முனைவது தவறானதொன்றாகும்.

இன்னும் சட்டங்களை இறுக்க வேண்டும் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் சில பேர் விட்டுட்டு வந்த சம்பவங்களும் இருக்கிறது மேலே சொன்னது போல ராக்கிங்கில் குடிக்க சொன்னது தான் கெட்டதும் இல்லாமல் போன புதியவர்களை கெடுக்க நினைப்பது கேட்டால் ரகிங்கில் சகஜம் என்பது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.