Jump to content

பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு


Recommended Posts

பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு

 

சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Stalin_13543.jpg


சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தி.மு.க. சார்பில் 2 முறை மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 22 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றுவிட்டதால், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒருவாரத்தில் உத்தரவிடாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறியிருந்தார். 

 

இந்தநிலையில், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘பெரும்பான்மை விவகாரத்தில் ஜனநாயக முறையில் ஆளுநர் செயல்படக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று கூறி வருகிறார். அப்படியென்றால் அவரே பரிந்துரை செய்து சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும். பேரவை கூட்டப்பட்டால் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவரும். தமிழகத்தில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க என்றுமே தி.மு.க. முயற்சி செய்யாது. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை. தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என்று கூறி தினகரன் விளம்பரம் தேடப் பார்க்கிறார்’ என்று தெரிவித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/101998-dmk-moves-mhc-for-a-direction-to-the-governor-to-conduct-floor-test.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.