Jump to content

கொலுவேறியவர்கள் தம் மக்களை கழுவேற்றல் ஆகாது!


Recommended Posts

கொலுவேறியவர்கள் தம் மக்களை கழுவேற்றல் ஆகாது!

 

இரண்­டாம் உல­கப் போர் நடை­பெற்­ற­போது பிரிட்டிஷ் படை­கள் பல பின்­ன­டை­வு­ க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருந்­தன. அவ்­வே­ளை­யில் பிரிட்­டிஷ் இரா­ணு­வத் தள­ப­தி­க­ளில் ஒரு­வர் பிரிட்டிஷ் தலைமை அமைச்­ச­ர் வின்­சன்ற் சேர்ச்­சி­லி­டம், ‘‘எமது படை­கள் தொடர்ந்து பின்­ன­டை­வு­க­ளையே சந்­தித்து வருகின்றன.

உண்­மை­யில் கட­வுள் எம்­மோ­டு­தான் இருக்­கி­றாரா என்ற சந்­தே­கம் எனக்கு எழு­கி­றது’’ எனத் தனது மனக் கிடக்­கையை வெளிப்­ப­டுத்­து­கி­றார். உடனே வின்­சன்ற் சேர்ச்­சில், ‘‘தள­ப­தியே, கட­வுள் எம்­மோடு இருக்­கி­றாரா இல்­லையா என்ற சந்­தே­கம் எனக்­கில்லை. எனது பயம் எல்­லாம், நாம் கட­வு­ளோடு இருக்­கி­றோமா என்­ப­து­தான்’’ என்­றா­ராம்.

தமது வாக்­கு­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­கள் தமக்கு நல்­ல­தைச் செய்­வார்­கள் என சாதா­ரண மக்­கள் காத்­துக் கிடக்­கி­றார்­கள். ஆனால், மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தெரி­வு­ செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­கள், மக்­க­ளுக்­கா­கத் தமது பத­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­களா? மக்­க­ளுக்­கான பணி­ ஆற்­று­கி­றார்­களா? என்­பது போன்ற கேள்­வி­களை இன்­றைய அர­சி­யல், சமூக, சமய சூழ­லைப் பார்க்­கி­ற­போது எழுப்­ப­வேண்­டிய தேவை எழு­கி­றது.

வீடு­வீ­டா­கச் சென்று பிச்சை எடுத்­த­வர்­கள் பணக்­கா­ரர்­க­ளா­கி­ய­தாக வர­லா­று­கள் கிடை­யாது. ஆனால், வீடு­வீ­டாக வந்து வாக்­குப் பிச்சை எடுத்­த­வர்­க­ளில் பலர் இன்று பெரும் அதி­கா­ரம் படைத்­த­வர்­க­ளாக, – தன­வான்­க­ளாக இருப்­பது புரி­யும். மக்­கள் நலன் புறந் தள்­ளப்­பட்டு சுய நலன் முதன்மை பெறும் போது மக்­கள் விளிம்­புக்கு வீசப்­ப­டு­கி­றார்­கள்!

மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தமது மக்­க­ளின் சார்­பாக நின்று செயற்­ப­டா­த­போது அவர்­கள் மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்­ப­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­வார்­கள். ஆக, மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தாம் எப்­போ­தும் மக்­க­ளோடு இருக்­கி­றார்­களா என்­பதை எண்­ணிப் பார்க்க வேண்­டும்.

எதற்­கெ­டுத்­தா­லும் பயமா ஐயா?

அண்­மை­யில் மின்­னஞ்­சல் ஒன்றை நண்­பர் ஒரு­வர் அனுப்­பி­யி­ருந்­தார். அதில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான சம்­பந்­தன் ஐயா­வின் பயங்­க­ளைப் பற்றி அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார். தென்­னா­லி­ரா­மன் படத்­தில் கம­ல­கா­ச­னின் பயம் பற்­றிய ஒரு நீண்ட உரை­யா­டலை அது நினை­வு­ப­டுத்­து­ வது போல் இருந்­தது.

அதில், ‘‘சொல்­லுங்க ஐயா, என்­னென்­ன­துக்கு உங்­க­ளுக்கு பயம்?’’ எனக் கேள்­வியை எழுப்­பி­விட்டு, சம்­பந்­தன் ஐயா பதில் கூறு­வ­து­போல அமைந்­தி­ருந்­தது: ‘‘எல்­லாம் சிவ­ம­யம் எண்டு எல்­லா­ரும் சொல்­லு­வி­னம், எனக்கோ எல்­லாம் பய­ம­யம்! தனிய நடக்­கப் பயம், நடக்­கேக்க விழுந்­து­டு­ வனோ எண்ட பயம்! ஆரே­னும் பிடிச்சு நடந்­தா­லும் பயம், அவை கையை விட்­டு­டு­வி­னம் எண்ட பயம்!

எதி­ரில எவ­ராச்­சும் வணக்­கம் சொன்­னாப் பயம், சொல்­லாட்­டி­லும் பயம்! எதிர்க்­கட்சி எண்டு சொன்னா பயம், தலை­வர் எண்டு சொன்­னா­லும் பயம்! வீடு பயம், வீட்­டுல உள்ள திறந்த கதவு பயம், மூடின கத­வும் பயம்! வெளியில போயிடு­வாங்­கள் எண்ட பயம், வீடு உடைஞ்­சு­டும் எண்ட பயம்! சம்­பூர் பயம், சனங்­கள் பயம்! எவ­ராச்­சும் கேள்வி கேட்­டா­லும் பயம்!

முன்­பக்க செய்தி பயம்! நந்­திக் க­டல் பயம். காணா­மல் போன­வர்கள் பயம், அவ­யின்ர உற­வு­கள் பயம் எனக்கு. காணி கேட்டாப் பயம், அர­சி­யல் கைதி­க­ளும் பயம். வெளி­நாடு பயம்! வெளி நாட்­டில தமி­ழர் பயம்!

சுமந்­தி­ரன் கதைச்சாப் பயம், சுமந்­தி­ரன் சும்மா இருந்­தா­லும் பயம். மோடி சேர் பயம், கேடி பயம்(உங்­களைச் சொல்­லல்ல சேர்), தாடி பயம், தாடி குத்­தி­டும் எண்ட பயம், ரணில் பயம், சந்­தி­ரிகா பயம், சிவாஜி பயம், கஜேந்­தி­ரன் பயம், டக்ளஸ் பயம்! ஆமி பயம், ஆளு­நர் பயம், ஆமத்­து­று­வும் பயம்; – இவள் அனந்­தி­யும் பயம் எனக்கு!

இப்­படி கதைச்சா நாவ­றண்டு போகுமெண்ட பயம்!… இப்ப புதுசா விக்கி பயம் எனக்கு! விக்கி இருந்தா பயம், விக்கி போனா­லும் பயம்! இருந்தா பதவி எப்ப போகும் எண்ட பயம், போனா வீடு போகி­டும் எண்ட பயம்! எல்­லாமே… பய­ம­யம்! எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கொலு­வில் ஏறி­ய­வர்­கள் கழு­வில் ஏற்­றப்­பார்க்­கி­றார்­களா?

ஆனித்­திங்­க­ளின் இறுதி வாரத்­தில் சந்­திப்பு ஒன்­றுக்­கா­கச் சென்­றி­ருந்­த­வேளை மன்­னார் வாச­க­ரான ஒரு­வர், ‘2013இல் வட­மா­காண சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்­கும்­படி சமூக – சம­யத் தலை­வர்­கள், புத்­தி­ஜீ­வி­கள் கூட்­டாக வேண்டி நின்­றார்­கள்.

கூட்­ட­மைப்­பி­ னரை ஆத­ரிக்க வேண்டி நீங்­க­ளும் எழு­தித் தள்­ளி­னீர்­கள்! மக்­க­ளும் தங்­கள் வாக்­கு­களை வழங்கி ஆத­ரித்­தார்­கள். ஆனால் நடக்­கி­ற­தைப் பாத்­தால் இவங்­களை என்ன செய்­யி­றது என்டே தெரி­யல்ல! பிலாப் பழத்­தைப் பாத்த பேயன் மாதிரி, சனம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் செயற்­பா­டு­க­ளால் அதிர்ச்சி அடைந்­து­போய் நிக்­கு­து­கள்!

முத­ல­மைச்­சர் விவ­கா­ரத்­தோடு கூட்­ட­ மைப்­பின் கூத்­துக்­கள் முடி­வ­டை­யுமா அல்­லது எம்­மு­டைய தமிழ்­நாட்டு நாடக ‘சீரி­யல்’­கள் போ­லத் தொட­ருமா?’ என்ற கேள்­வியை அங்­கி­ருந்த என்­னி­டம் எழுப்­பி­ய­போது பதி­லாக என்ன கூறு­வ­தென்று தெரி­யா­மல் மௌன­மாய் நின்­றேன்.

அகிம்சை வழி­யி­லும் ஆயுத முனை­யி­லும் இலங்­கைக்கு 1948இல் சுதந்­தி­ரம் கிடைக்­கப்­பெற்­றது என்று சொல்­லப்­பட்­டா­லும், அந்­தச் சுதந்­தி­ரத்­தி­னால் பெரும்­பான்­மை­யின மக்­களே நன்மை அடைந்­தார்­கள் சிறு­பான்­மை­ யின மக்­கள் பல்­வேறு வகை­க­ளில் ஓரம்­கட்­டப்­பட்­டார்­கள்.

குறிப்­பாக தமி­ழர்­க­ளின் சுய­நிர்­ணய உரிமை, தாய­கக் கோட்­பா­டு­கள் புறந்­தள்­ளப்­பட்­டன.எனவே, தமி­ழர் தமது அபி­லா­சை ­களை அடை­வ­தற்கு அகிம்சை வழி­யில் பல அற­வ­ழிப் போராட்­டங்­களை மேற்கொண்டனர்.

மாதக்­க­ணக்­காக மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு முன்­னால் பல வகைப்­பட்ட அற­வ­ழிப் போராட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஒப்­பந்­தங்­க­ளும் உடன்­பா­டு­க­ளும் செய்­யப்­பட்டு பின்­னர் ஒப்­பந்­தங்­க­ளை­யும் உடன்­பா­டு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தி­ய­வர்­களே அவற்றை கிழித் தெ­றிந்­த­னர். இதற்­கி­டை­யில் திட்­ட­மி­டப்­பட்ட இனப்­ப­டு­கொ­லை­கள் காலத்­திற்­குக் காலம் அரசின் அனு­ச­ர­ணை­யில் – கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

இதன் பின்­ன­ணி­யி­லேயே ஆயு­தப் போராட்­டம் உருப்­பெற்­றது. ஏறக்­கு­றைய மூன்று தசாப்த காலம் நீடித்த ஆயு­தப் போராட்­டம், போர் விதி­களை மீறி காட்­டு­மி­ராண்­டித் தன­மாக ஒடுக்­கப்­பட்டு, தமி­ழர் தரப்­பின் பலம், சிதைத்துச் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டது.

குறிப்­பாக, இறு­திப் போரில் நாற்­ப­தா­யி­ரம் அப்­பா­வித் தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­டனர் என்று ஐக்­கிய நாடு­கள் சபை­ தெரி வித்துள்ளது. மேலும், 2009 இல் முள்­ளி­வாய்க்­கால் போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட போது பொது­மக்­க­ளில் சுமார் ஒரு இலட்­சம் பேரும் , போரா­ளி­க­ளில் ஐம்­ப­தா­யி­ரம் பேரும் கொல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­கி­றது.

‘‘நிரந்­தர அர­சி­யல் தீர்­வைக் காண புலி­கள்­தான் தடை­யாக இருக்­கி­றார்­கள்!’’ எனக் கூறி­வந்­த­வர்­கள்.போர் முடிந்தும் இன்று வரை தமி­ழர்­க­ளின் இனப் பிரச்­சி­னைக்கான அர­சி­யல் தீர்வை எட்­டாக் கனி­யா­கவே வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

அரசமைப்புக்கான  13ஆவது திருத்தம்

இலங்கை அர­சி­ய­லில் 1978ஆம் ஆண்­டில் கொண்­டு­வ­ரப்­பட்ட அரசமைப்புக் கான 13ஆவது திருத்­தத்­தின் அடிப்­ப­டை­யில் மாகாண சபை முறைமை அறி­மு­கப் படுத்­தப்­ப­டு­கி­றது. தமிழ்­பே­சும் மக்­க­ளின் பாரம்­ப­ரிய பூர்­வீக வாழ்­வி­டங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு இலங்கை –- இந்­திய ஒப்­பந்­தத்­தின் கீழ் 1988இல் முதன் முத­லாக உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.

ஆயி­னும் 18 ஆண்­டு­க­ளின் பின்­னர் 2006இல் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் தனித்­தனி அல­கு­க­ளா­கப் பிரிக்­கப்­ப­டு­ கின்­றன.

மாகாண சபை முறைமை இனப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­கான வழி­யாக ஒரு­போ­தும் அமை­யாது என்­பது தமி­ழர்­க­ளின் – தமிழ்த் தலை­வர்­க­ளின் ஒட்­டு­மொத்த பட்­ட­றி­வா­கும்.

ஆயு­தப் போராட்­டம் வலுப்­பெற்­றி­ருந்த காலங்­க­ளில் கூட்­டாட்சி, 13க்கு மேல் (13பிளஸ்) என பன்னாட்டு அழுத்­தங்­க­ளின் பேரில் உறு­தி­மொ­ழி­களை சிங்கள அர­சுகள் வழங்கி வந்­தன. ஆனால், முள்­ளி ­வாய்க் கால் இறு­திப் போரின் பின்­னர் அர­சமைப்­புக்­கான 13ஆவது திருத்­தத் தையே இல்­லா­ம­லாக்க ஒரு கூட்­டம் கங்­க­ணம் கட்டி நிற்க, மற்­றய கூட்­டம் மாகாண சபையின் அரை­குறை அதி­கா­ரங்­க­ளையே நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­த­ வாறு தடை ஏற்படுத்துகின்றது.

‘தனி­நாடு’ அல்­லது ‘தமி­ழீ­ழம்’ எனத் தொடங் கிய நீண்ட அகிம்சை வழிப் போராட்­ட­மும் ஆயு­த­மு­னைப் போராட்­ட­மும் என மாறிப் பின்னர் இணைப்­பாட்சி, கூட்­டாட்சி, 13க்கு மேல்(13பிளஸ்) எனக் கொஞ்­சம் கொஞ்­ச­மாக கீழி­றங்கி, இப்­போது 13இல் (அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத் தில்) வந்து நிற்­கி­றது! 13ஆவது இனி எங்கு இறங்­குமோ என்­றும் எண்­ண­வேண்டி இருக்­கி­றது.

இது தமி­ழர்­கள் மீதும் தமிழ்த் தலை­வர்­கள் மீதும் திட்­ட­மி­டப்­பட்­டுச் செய்­யப்­பட்ட அர­சி­யல் சதி. காலத்தை இழுத்­த­டித்து இழுத்­த­டித்து கடை­சி­யில் கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பான கதை­யாக தமி­ழர்­க­ளதுநிலை மாறி இருப்­பதை இன்­றைய எமது தலை­வர்­கள் எப்­போ­து­தான் உண­ரப் போகி­றார்­களோ?

இந்­திய அர­சும் பன்னாட்டுச் சமூ­க­மும் நேர்­மை­யு­ட­னும் நீதி­யு­ட­னும் நடந்­து­கொள்­ளத் தவ­றி­ய­தால் ஏற்­பட்­ட­தன் விளைவே இது. இப்­போது, வலு­வி­ழந்த மாகாண சபை அதி­கா­ரங்­க­ளை­யா­வது தக்­க­வைத்­துக் கொள்ள வேண்­டிய சூழ­லுக்­குள் தமிழ் மக்­கள் தள்­ளப்­பட்­டுள்­ளார்­கள் . இது கவ­லைக்­கி­ட­மா­னது என்­ப­தைத் தவிர வேறெ­த­னைச் சொல்­ல­மு­டி­யும்!

2013 மாகாண சபைத் தேர்­தல்

இத்­த­கைய சூழ­லில்­தான் வட­மா­காண சபைத் தேர்­தல் 2013இல் இடம்­பெற்ற பொழுது மாகாண சபை இருக்­கை­க­ளைப் பிடிப்­ப­தற்கு தனி நபர்­க­ளா­க­வும் கட்சி சார்ந்­த­வர்­க­ளா­க­வும் என 36 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்கு 906பேர் போட்­டி­யிட்­டார்­கள்.

இங்­கு­தான் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரும் ஏனைய பல­ரு­டன் தேர்­த­லில் இணைந்து கொண்­டார்­கள். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இணைந்­து­கொள்ள வேண்டிய நிலை. ஏனெ­னில் இருப்­ப­தை­யா­வது தக்­க­வைக்க வேண்­டிய நிலமை என்­று­மில்­லாத அள­வுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் தேர்­த­லில் நின்­ற­தும் சரி, தேர்­த­லில் வெற்­றி­பெறப் பயன்­ப­டுத்­திய சுலோ­கங்­க­ளும் சரி, தேர்­த­லில் அமோக வெற்­றி­யைப் பெற்­ற­தும் சரி, ஆனால், வெற்றி பெற்­ற­வர்­கள் ஆரம்­பத்­தி­லேயே அமைச்­சுக்­க­ளுக்கு அடி­பட்­டார்­கள்! அது ஒரு­வா­றாக முடி­வுக்கு வந்து அமைச்­சர்­கள் நிய­மிக்­கப்­பட்டு பல குழப்­பங்­க­ளுக்கு மத்­தி­யில் நான்கு ஆண்­டு­க­ளாக இயங்கி வந்­தது.

அமைச்­சர்­க­ளின் ஊழல் குற்­றச்­சாட்டு விசா­ரணை அறிக்­கை­யோ­டும் அத­னைத் தொடர்ந்து முத­ல­மைச்­சர் எடுத்த முடி­வு­க­ளோ­டும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக ஒரு குழு, முத­ல­மைச்­சரை ஆத­ரித்து ஒரு குழு என மாகாண சபை இரண்டு பட்­டுக் கிடந்­தது.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் நிறை­வேற்­று­கிற அள­வுக்கு நிலமை உரு­வாகி ஒரு­வாறு இப்­போது அடங்­கிப்­போய்க் கிடக்­கி­றது. மீண்­டும் எப்­போது இது உருக்­கொள்­ளுமோ என எமது மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளை­யும் (நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும்) பரி­தா­பத்­தோடு பார்த்­துக்­கொண்டு இருக்­க­வேண்டி இருக்­கி­றது.

முத­ல­மைச்­சர்  சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரன் ஐயா­வுக்கு!

இந்­தச் சூழ­லில், முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஐயா அதி­வி­வே­கத்­தோடு செயற்­பட வேண்­டும். ஏனெ­னில் தெற்­கில் அவரை வீழ்த்­து­வ­தற்கு ஏற்­க­னவே திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு விட்­டன. இந்த நிலை­யில் வடக்­கி­லும் இவ்­வா­றா­ன­தொரு நிலை உரு­வாக அவர் வழி­வ­குக்­கக் கூடாது. தமிழ் மக்­கள் முத­ல­மைச்­சர் மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மாக அவர் இது­வரை நடந்து வந்­தி­ருக்­கி­றார் என்­று­தான் மக்­கள் நம்­பு­கி­றார்­கள்.

எனவே, மக்­க­ளின் அர­சி­யல் பிர­தி­நி­தி களை மட்­டு­மல்ல மக்­க­ளின் நன்­ம­திப்­பைப் பெற்று நல் ஆலோ­ச­னை­க­ளைத் தரக்­கூ­டி­ய­வர்­களை, ஆக்­க­பூர்­வ­மான செயற் திட்­டங்­களை வகுக்­கக்­கூ­டி­ய­வர்­களை உள்­வாங்­கிச் செல்­ல­வேண்­டிய தேவை எழுந்­தி­ருக்­கி­றது!

முத­ல­மைச்­சர் இது­வரை கால­மும் நீதி­மன்ற அமைப்பு முறை­மைக்­குப் பழக்­கப்­பட்­ட­வர் என்ற படி­யி­னால் கொஞ்­சம் நீதி­மன்ற விவ­கா­ரங்­க­ளைக் கவ­னிப்­பது போன்று வட­மா­காண சபை அர­சி­யல் விட­யங்­க­ளை­யும் பார்ப்­ப­த­னால் வந்த விளை­வு­களே முத­ல­மைச்­ச­ ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா தீர்­மான விவ­கா­ரமோ என எண்ண வேண்டி இருக்­கி­றது.

‘கொசு­வைப் பிடிச்சி கோவ­ணம் கட்டி அனுப்­பி­ய­து­போல விவ­கா­ரங்­களை ஊதிப் பெருப்­பிக்­கா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டி­யது அவ­ரது கட­மை­யும்­கூட’. அதே­வேளை, முழுப் பூச­ணிக் காயைச் சோற்­றில் மறைப்­ப­தா­க­வும் தீர்­வு­கள் அமை­யக்­கூ­டாது. எனவே, முத­ல­மைச்­சர் கொஞ்­சம் கவ­ன­மாக – விவே­க­மாக – பொறு­மை­யாக – நிதா­ன­மாக விட­யங்­களை கையாள்­வது மிக நல்­லது. இனிச் செய்­வார் என எதிர்­பார்க்­க­லாம்!

தமிழ்க் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு!

எல்லா விதத்­தி­லும் கூட்­ட­மைப்பே சிறந்­தது என்­றெல்­லாம் ஓதிக்­கொண்டு இருக்­கா­மல், எவ்­வாறு எல்­லா­ரும் ஒரு­ம­னப்­பட்டு சேர்ந்து செயற்­பட முடி­யும் எனச் சிந்­திக்­க­வேண்­டும். எந்­த­ அளவுக்கு அனைத் துத் தமிழ்க் கட்­சி­க­ளும் இணைந்து செயற்­ப­டு­கி­ன்றனவோ, அந்­த அள வுக்குத்தான் எமது பல­மும், எமது எதிர்­கால விமோ­ச­ன­மும் தங்­கி­யி­ருக்­கி­றது என்­ப­தைச் சரி­யா­கப் புரிந்­து ­கொண்டாக வேண்டும்.

இளைப்­பா­றும் மன்­னார் ஆயர் இ.யோசேப்பு இருந்­தி­ருந்­தால்!…

இன்­றைய வட­பு­லத்து அர­சி­யல் நில­மை­யில், – வட­மா­காண சபை இருக்­கும் நில­மை­யில், இளைப்­பா­றும் மன்­னார் ஆயர் இரா­யப்பு யோசேப்பு கொஞ்­சம் சுக­தே­கி­யாக இன்று இருந்­தி­ருந்­தால் நிலமை எப்­படி இருந்­தி­ருக்­கும் என ஒரு தடவை எண்­ணிப் பார்ப்­பது தவிர்க்க முடி­யா­த­தா­கி­றது! ஒரு உரு­வ­கம் தோன்­றி­யது: நாய், தன் வாலை பின் கால்­க­ளுக்கு இடை­யில்(நறுக்­கென்று வேறு வார்த்­தை­யில் சொல்­ல­மு­டி­யும்! எனி­னும் கொஞ்­சம் பண்­பார்ந்த வகை­யில் சொல்­வது நல்­லது என்­ப­தால் இப்­ப­டி­யா­கச் சொல்­கி­றேன்!)

வைத்­துக்­கொண்டு பவ்­வி­ய­மாக மெலிந்து நெளிந்து வளைந்து நிற்­ப­து­போல விக்கி ஐயா தொடக்­கம் அக்கி(அனந்தி அக்கா) வரை­யும், சம்­மந்­தன் ஐயா தொடக்­கம் சாந்தி அக்கா வரை­யும் எல்­லா­ரும் அணி­வ­குத்து நின்றி­ருப்­பார்­கள். வட­மா­காண சபை இரண்­டு­பட இட­மி­ருந்­தி­ருக்­காது.

என்ன செய்­வது? பூனை­யில்லா வீட்­டில் எலி­க­ளுக்­குக் கொண்­டாட்­டம் என்ற நிலை­யா­கி­விட்­டது! சரி­யான ஒரு தலை­வன் இருந்­தான்! அவன் இன்று இல்­லா­த­தால் நாமும் எமது அர­சி­யல் தலை­வர்­க­ளும் சித­றிப்­போக எத்­த­னிக்­கி­றோம்!

இளைப்­பா­றும் மன்­னார் ஆயர் இரா­யப்பு யோசேப்பு சமூக நல­னில் அக்­க­றை­கொண்டு ஆண்­ட­வன் கொடுத்த அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு செயற்­பட்­டது போன்று, அவ்­வப்­போது பிரிந்து – பிள­வு­பட்டு நிற்­கும் நம்­மு­டைய தமிழ் அர­சி­யல்­வா­தி­களை – ஒன்­று­பட்டு நிற்க – மக்­கள் நலன்­க­ளுக்­காக உழைக்க ஊக்­கப்­ப­டுத்த வேண்­டிய பெரும் பொறுப்பு சமூக நலன் சார்ந்து சிந்­திக்­கிற சமூக – சம­யத் தலை­வர்­க­ளுக்கு உண்டு.

ஏற்­க­னவே, எமது அர­சி­யல் தலை­வர்­களை ஒன்­று­ப­டுத்­தும் – முயற்­சி­யில் வெற்­றி­கண்ட யாழ்.ஆயர் யஸ்­ரின் ஞானப்­பி­ர­கா­சம் ஆண்­டகை, நல்­லைக் குரு­மணி ஸ்ரீலஸ்ரீ பர­மாச்­சா­ரிய தேசிக சம்­பந்த சுவா­மி­கள் போன்ற மதத் தலை­வர்­கள் தொடர்ந்­தும் இவர்­களை இணைக்­கும் பால­மாக மாற­வேண்­டும் என ஆண்­ட­வனை நம்­பும் – ஆய­னின் வழி­காட்­டல்­களை எதிர்­பார்த்­தி­ருக்­கும் ஆடு­கள் எதிர்­பார்க்­கின்­றன. ‘நல்­லா­யன் தன் ஆடு­க­ளுக்­காக உயி­ரை­யும் கொடுப்­பான்’ என்­பது வேதம் கூறும் விண்­ணக வாக்கு!

http://newuthayan.com/story/27959.html

Link to comment
Share on other sites

10 hours ago, நவீனன் said:

கொலுவேறியவர்கள் தம் மக்களை கழுவேற்றல் ஆகாது!

 

இரண்­டாம் உல­கப் போர் நடை­பெற்­ற­போது பிரிட்டிஷ் படை­கள் பல பின்­ன­டை­வு­ க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருந்­தன. அவ்­வே­ளை­யில் பிரிட்­டிஷ் இரா­ணு­வத் தள­ப­தி­க­ளில் ஒரு­வர் பிரிட்டிஷ் தலைமை அமைச்­ச­ர் வின்­சன்ற் சேர்ச்­சி­லி­டம், ‘‘எமது படை­கள் தொடர்ந்து பின்­ன­டை­வு­க­ளையே சந்­தித்து வருகின்றன.

உண்­மை­யில் கட­வுள் எம்­மோ­டு­தான் இருக்­கி­றாரா என்ற சந்­தே­கம் எனக்கு எழு­கி­றது’’ எனத் தனது மனக் கிடக்­கையை வெளிப்­ப­டுத்­து­கி­றார். உடனே வின்­சன்ற் சேர்ச்­சில், ‘‘தள­ப­தியே, கட­வுள் எம்­மோடு இருக்­கி­றாரா இல்­லையா என்ற சந்­தே­கம் எனக்­கில்லை. எனது பயம் எல்­லாம், நாம் கட­வு­ளோடு இருக்­கி­றோமா என்­ப­து­தான்’’ என்­றா­ராம்.

தமது வாக்­கு­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­கள் தமக்கு நல்­ல­தைச் செய்­வார்­கள் என சாதா­ரண மக்­கள் காத்­துக் கிடக்­கி­றார்­கள். ஆனால், மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தெரி­வு­ செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­கள், மக்­க­ளுக்­கா­கத் தமது பத­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­களா? மக்­க­ளுக்­கான பணி­ ஆற்­று­கி­றார்­களா? என்­பது போன்ற கேள்­வி­களை இன்­றைய அர­சி­யல், சமூக, சமய சூழ­லைப் பார்க்­கி­ற­போது எழுப்­ப­வேண்­டிய தேவை எழு­கி­றது.

வீடு­வீ­டா­கச் சென்று பிச்சை எடுத்­த­வர்­கள் பணக்­கா­ரர்­க­ளா­கி­ய­தாக வர­லா­று­கள் கிடை­யாது. ஆனால், வீடு­வீ­டாக வந்து வாக்­குப் பிச்சை எடுத்­த­வர்­க­ளில் பலர் இன்று பெரும் அதி­கா­ரம் படைத்­த­வர்­க­ளாக, – தன­வான்­க­ளாக இருப்­பது புரி­யும். மக்­கள் நலன் புறந் தள்­ளப்­பட்டு சுய நலன் முதன்மை பெறும் போது மக்­கள் விளிம்­புக்கு வீசப்­ப­டு­கி­றார்­கள்!

மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தமது மக்­க­ளின் சார்­பாக நின்று செயற்­ப­டா­த­போது அவர்­கள் மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்­ப­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­வார்­கள். ஆக, மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தாம் எப்­போ­தும் மக்­க­ளோடு இருக்­கி­றார்­களா என்­பதை எண்­ணிப் பார்க்க வேண்­டும்.

எதற்­கெ­டுத்­தா­லும் பயமா ஐயா?

அண்­மை­யில் மின்­னஞ்­சல் ஒன்றை நண்­பர் ஒரு­வர் அனுப்­பி­யி­ருந்­தார். அதில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான சம்­பந்­தன் ஐயா­வின் பயங்­க­ளைப் பற்றி அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார். தென்­னா­லி­ரா­மன் படத்­தில் கம­ல­கா­ச­னின் பயம் பற்­றிய ஒரு நீண்ட உரை­யா­டலை அது நினை­வு­ப­டுத்­து­ வது போல் இருந்­தது.

அதில், ‘‘சொல்­லுங்க ஐயா, என்­னென்­ன­துக்கு உங்­க­ளுக்கு பயம்?’’ எனக் கேள்­வியை எழுப்­பி­விட்டு, சம்­பந்­தன் ஐயா பதில் கூறு­வ­து­போல அமைந்­தி­ருந்­தது: ‘‘எல்­லாம் சிவ­ம­யம் எண்டு எல்­லா­ரும் சொல்­லு­வி­னம், எனக்கோ எல்­லாம் பய­ம­யம்! தனிய நடக்­கப் பயம், நடக்­கேக்க விழுந்­து­டு­ வனோ எண்ட பயம்! ஆரே­னும் பிடிச்சு நடந்­தா­லும் பயம், அவை கையை விட்­டு­டு­வி­னம் எண்ட பயம்!

எதி­ரில எவ­ராச்­சும் வணக்­கம் சொன்­னாப் பயம், சொல்­லாட்­டி­லும் பயம்! எதிர்க்­கட்சி எண்டு சொன்னா பயம், தலை­வர் எண்டு சொன்­னா­லும் பயம்! வீடு பயம், வீட்­டுல உள்ள திறந்த கதவு பயம், மூடின கத­வும் பயம்! வெளியில போயிடு­வாங்­கள் எண்ட பயம், வீடு உடைஞ்­சு­டும் எண்ட பயம்! சம்­பூர் பயம், சனங்­கள் பயம்! எவ­ராச்­சும் கேள்வி கேட்­டா­லும் பயம்!

முன்­பக்க செய்தி பயம்! நந்­திக் க­டல் பயம். காணா­மல் போன­வர்கள் பயம், அவ­யின்ர உற­வு­கள் பயம் எனக்கு. காணி கேட்டாப் பயம், அர­சி­யல் கைதி­க­ளும் பயம். வெளி­நாடு பயம்! வெளி நாட்­டில தமி­ழர் பயம்!

சுமந்­தி­ரன் கதைச்சாப் பயம், சுமந்­தி­ரன் சும்மா இருந்­தா­லும் பயம். மோடி சேர் பயம், கேடி பயம்(உங்­களைச் சொல்­லல்ல சேர்), தாடி பயம், தாடி குத்­தி­டும் எண்ட பயம், ரணில் பயம், சந்­தி­ரிகா பயம், சிவாஜி பயம், கஜேந்­தி­ரன் பயம், டக்ளஸ் பயம்! ஆமி பயம், ஆளு­நர் பயம், ஆமத்­து­று­வும் பயம்; – இவள் அனந்­தி­யும் பயம் எனக்கு!

இப்­படி கதைச்சா நாவ­றண்டு போகுமெண்ட பயம்!… இப்ப புதுசா விக்கி பயம் எனக்கு! விக்கி இருந்தா பயம், விக்கி போனா­லும் பயம்! இருந்தா பதவி எப்ப போகும் எண்ட பயம், போனா வீடு போகி­டும் எண்ட பயம்! எல்­லாமே… பய­ம­யம்! எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கொலு­வில் ஏறி­ய­வர்­கள் கழு­வில் ஏற்­றப்­பார்க்­கி­றார்­களா?

ஆனித்­திங்­க­ளின் இறுதி வாரத்­தில் சந்­திப்பு ஒன்­றுக்­கா­கச் சென்­றி­ருந்­த­வேளை மன்­னார் வாச­க­ரான ஒரு­வர், ‘2013இல் வட­மா­காண சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்­கும்­படி சமூக – சம­யத் தலை­வர்­கள், புத்­தி­ஜீ­வி­கள் கூட்­டாக வேண்டி நின்­றார்­கள்.

கூட்­ட­மைப்­பி­ னரை ஆத­ரிக்க வேண்டி நீங்­க­ளும் எழு­தித் தள்­ளி­னீர்­கள்! மக்­க­ளும் தங்­கள் வாக்­கு­களை வழங்கி ஆத­ரித்­தார்­கள். ஆனால் நடக்­கி­ற­தைப் பாத்­தால் இவங்­களை என்ன செய்­யி­றது என்டே தெரி­யல்ல! பிலாப் பழத்­தைப் பாத்த பேயன் மாதிரி, சனம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் செயற்­பா­டு­க­ளால் அதிர்ச்சி அடைந்­து­போய் நிக்­கு­து­கள்!

முத­ல­மைச்­சர் விவ­கா­ரத்­தோடு கூட்­ட­ மைப்­பின் கூத்­துக்­கள் முடி­வ­டை­யுமா அல்­லது எம்­மு­டைய தமிழ்­நாட்டு நாடக ‘சீரி­யல்’­கள் போ­லத் தொட­ருமா?’ என்ற கேள்­வியை அங்­கி­ருந்த என்­னி­டம் எழுப்­பி­ய­போது பதி­லாக என்ன கூறு­வ­தென்று தெரி­யா­மல் மௌன­மாய் நின்­றேன்.

அகிம்சை வழி­யி­லும் ஆயுத முனை­யி­லும் இலங்­கைக்கு 1948இல் சுதந்­தி­ரம் கிடைக்­கப்­பெற்­றது என்று சொல்­லப்­பட்­டா­லும், அந்­தச் சுதந்­தி­ரத்­தி­னால் பெரும்­பான்­மை­யின மக்­களே நன்மை அடைந்­தார்­கள் சிறு­பான்­மை­ யின மக்­கள் பல்­வேறு வகை­க­ளில் ஓரம்­கட்­டப்­பட்­டார்­கள்.

குறிப்­பாக தமி­ழர்­க­ளின் சுய­நிர்­ணய உரிமை, தாய­கக் கோட்­பா­டு­கள் புறந்­தள்­ளப்­பட்­டன.எனவே, தமி­ழர் தமது அபி­லா­சை ­களை அடை­வ­தற்கு அகிம்சை வழி­யில் பல அற­வ­ழிப் போராட்­டங்­களை மேற்கொண்டனர்.

மாதக்­க­ணக்­காக மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு முன்­னால் பல வகைப்­பட்ட அற­வ­ழிப் போராட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஒப்­பந்­தங்­க­ளும் உடன்­பா­டு­க­ளும் செய்­யப்­பட்டு பின்­னர் ஒப்­பந்­தங்­க­ளை­யும் உடன்­பா­டு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தி­ய­வர்­களே அவற்றை கிழித் தெ­றிந்­த­னர். இதற்­கி­டை­யில் திட்­ட­மி­டப்­பட்ட இனப்­ப­டு­கொ­லை­கள் காலத்­திற்­குக் காலம் அரசின் அனு­ச­ர­ணை­யில் – கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.

இதன் பின்­ன­ணி­யி­லேயே ஆயு­தப் போராட்­டம் உருப்­பெற்­றது. ஏறக்­கு­றைய மூன்று தசாப்த காலம் நீடித்த ஆயு­தப் போராட்­டம், போர் விதி­களை மீறி காட்­டு­மி­ராண்­டித் தன­மாக ஒடுக்­கப்­பட்டு, தமி­ழர் தரப்­பின் பலம், சிதைத்துச் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டது.

குறிப்­பாக, இறு­திப் போரில் நாற்­ப­தா­யி­ரம் அப்­பா­வித் தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­டனர் என்று ஐக்­கிய நாடு­கள் சபை­ தெரி வித்துள்ளது. மேலும், 2009 இல் முள்­ளி­வாய்க்­கால் போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட போது பொது­மக்­க­ளில் சுமார் ஒரு இலட்­சம் பேரும் , போரா­ளி­க­ளில் ஐம்­ப­தா­யி­ரம் பேரும் கொல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­கி­றது.

‘‘நிரந்­தர அர­சி­யல் தீர்­வைக் காண புலி­கள்­தான் தடை­யாக இருக்­கி­றார்­கள்!’’ எனக் கூறி­வந்­த­வர்­கள்.போர் முடிந்தும் இன்று வரை தமி­ழர்­க­ளின் இனப் பிரச்­சி­னைக்கான அர­சி­யல் தீர்வை எட்­டாக் கனி­யா­கவே வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

அரசமைப்புக்கான  13ஆவது திருத்தம்

இலங்கை அர­சி­ய­லில் 1978ஆம் ஆண்­டில் கொண்­டு­வ­ரப்­பட்ட அரசமைப்புக் கான 13ஆவது திருத்­தத்­தின் அடிப்­ப­டை­யில் மாகாண சபை முறைமை அறி­மு­கப் படுத்­தப்­ப­டு­கி­றது. தமிழ்­பே­சும் மக்­க­ளின் பாரம்­ப­ரிய பூர்­வீக வாழ்­வி­டங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு இலங்கை –- இந்­திய ஒப்­பந்­தத்­தின் கீழ் 1988இல் முதன் முத­லாக உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.

ஆயி­னும் 18 ஆண்­டு­க­ளின் பின்­னர் 2006இல் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் தனித்­தனி அல­கு­க­ளா­கப் பிரிக்­கப்­ப­டு­ கின்­றன.

மாகாண சபை முறைமை இனப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­கான வழி­யாக ஒரு­போ­தும் அமை­யாது என்­பது தமி­ழர்­க­ளின் – தமிழ்த் தலை­வர்­க­ளின் ஒட்­டு­மொத்த பட்­ட­றி­வா­கும்.

ஆயு­தப் போராட்­டம் வலுப்­பெற்­றி­ருந்த காலங்­க­ளில் கூட்­டாட்சி, 13க்கு மேல் (13பிளஸ்) என பன்னாட்டு அழுத்­தங்­க­ளின் பேரில் உறு­தி­மொ­ழி­களை சிங்கள அர­சுகள் வழங்கி வந்­தன. ஆனால், முள்­ளி ­வாய்க் கால் இறு­திப் போரின் பின்­னர் அர­சமைப்­புக்­கான 13ஆவது திருத்­தத் தையே இல்­லா­ம­லாக்க ஒரு கூட்­டம் கங்­க­ணம் கட்டி நிற்க, மற்­றய கூட்­டம் மாகாண சபையின் அரை­குறை அதி­கா­ரங்­க­ளையே நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­த­ வாறு தடை ஏற்படுத்துகின்றது.

‘தனி­நாடு’ அல்­லது ‘தமி­ழீ­ழம்’ எனத் தொடங் கிய நீண்ட அகிம்சை வழிப் போராட்­ட­மும் ஆயு­த­மு­னைப் போராட்­ட­மும் என மாறிப் பின்னர் இணைப்­பாட்சி, கூட்­டாட்சி, 13க்கு மேல்(13பிளஸ்) எனக் கொஞ்­சம் கொஞ்­ச­மாக கீழி­றங்கி, இப்­போது 13இல் (அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத் தில்) வந்து நிற்­கி­றது! 13ஆவது இனி எங்கு இறங்­குமோ என்­றும் எண்­ண­வேண்டி இருக்­கி­றது.

இது தமி­ழர்­கள் மீதும் தமிழ்த் தலை­வர்­கள் மீதும் திட்­ட­மி­டப்­பட்­டுச் செய்­யப்­பட்ட அர­சி­யல் சதி. காலத்தை இழுத்­த­டித்து இழுத்­த­டித்து கடை­சி­யில் கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பான கதை­யாக தமி­ழர்­க­ளதுநிலை மாறி இருப்­பதை இன்­றைய எமது தலை­வர்­கள் எப்­போ­து­தான் உண­ரப் போகி­றார்­களோ?

இந்­திய அர­சும் பன்னாட்டுச் சமூ­க­மும் நேர்­மை­யு­ட­னும் நீதி­யு­ட­னும் நடந்­து­கொள்­ளத் தவ­றி­ய­தால் ஏற்­பட்­ட­தன் விளைவே இது. இப்­போது, வலு­வி­ழந்த மாகாண சபை அதி­கா­ரங்­க­ளை­யா­வது தக்­க­வைத்­துக் கொள்ள வேண்­டிய சூழ­லுக்­குள் தமிழ் மக்­கள் தள்­ளப்­பட்­டுள்­ளார்­கள் . இது கவ­லைக்­கி­ட­மா­னது என்­ப­தைத் தவிர வேறெ­த­னைச் சொல்­ல­மு­டி­யும்!

2013 மாகாண சபைத் தேர்­தல்

இத்­த­கைய சூழ­லில்­தான் வட­மா­காண சபைத் தேர்­தல் 2013இல் இடம்­பெற்ற பொழுது மாகாண சபை இருக்­கை­க­ளைப் பிடிப்­ப­தற்கு தனி நபர்­க­ளா­க­வும் கட்சி சார்ந்­த­வர்­க­ளா­க­வும் என 36 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்கு 906பேர் போட்­டி­யிட்­டார்­கள்.

இங்­கு­தான் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரும் ஏனைய பல­ரு­டன் தேர்­த­லில் இணைந்து கொண்­டார்­கள். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இணைந்­து­கொள்ள வேண்டிய நிலை. ஏனெ­னில் இருப்­ப­தை­யா­வது தக்­க­வைக்க வேண்­டிய நிலமை என்­று­மில்­லாத அள­வுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் தேர்­த­லில் நின்­ற­தும் சரி, தேர்­த­லில் வெற்­றி­பெறப் பயன்­ப­டுத்­திய சுலோ­கங்­க­ளும் சரி, தேர்­த­லில் அமோக வெற்­றி­யைப் பெற்­ற­தும் சரி, ஆனால், வெற்றி பெற்­ற­வர்­கள் ஆரம்­பத்­தி­லேயே அமைச்­சுக்­க­ளுக்கு அடி­பட்­டார்­கள்! அது ஒரு­வா­றாக முடி­வுக்கு வந்து அமைச்­சர்­கள் நிய­மிக்­கப்­பட்டு பல குழப்­பங்­க­ளுக்கு மத்­தி­யில் நான்கு ஆண்­டு­க­ளாக இயங்கி வந்­தது.

அமைச்­சர்­க­ளின் ஊழல் குற்­றச்­சாட்டு விசா­ரணை அறிக்­கை­யோ­டும் அத­னைத் தொடர்ந்து முத­ல­மைச்­சர் எடுத்த முடி­வு­க­ளோ­டும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக ஒரு குழு, முத­ல­மைச்­சரை ஆத­ரித்து ஒரு குழு என மாகாண சபை இரண்டு பட்­டுக் கிடந்­தது.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் நிறை­வேற்­று­கிற அள­வுக்கு நிலமை உரு­வாகி ஒரு­வாறு இப்­போது அடங்­கிப்­போய்க் கிடக்­கி­றது. மீண்­டும் எப்­போது இது உருக்­கொள்­ளுமோ என எமது மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளை­யும் (நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும்) பரி­தா­பத்­தோடு பார்த்­துக்­கொண்டு இருக்­க­வேண்டி இருக்­கி­றது.

முத­ல­மைச்­சர்  சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரன் ஐயா­வுக்கு!

இந்­தச் சூழ­லில், முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஐயா அதி­வி­வே­கத்­தோடு செயற்­பட வேண்­டும். ஏனெ­னில் தெற்­கில் அவரை வீழ்த்­து­வ­தற்கு ஏற்­க­னவே திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு விட்­டன. இந்த நிலை­யில் வடக்­கி­லும் இவ்­வா­றா­ன­தொரு நிலை உரு­வாக அவர் வழி­வ­குக்­கக் கூடாது. தமிழ் மக்­கள் முத­ல­மைச்­சர் மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மாக அவர் இது­வரை நடந்து வந்­தி­ருக்­கி­றார் என்­று­தான் மக்­கள் நம்­பு­கி­றார்­கள்.

எனவே, மக்­க­ளின் அர­சி­யல் பிர­தி­நி­தி களை மட்­டு­மல்ல மக்­க­ளின் நன்­ம­திப்­பைப் பெற்று நல் ஆலோ­ச­னை­க­ளைத் தரக்­கூ­டி­ய­வர்­களை, ஆக்­க­பூர்­வ­மான செயற் திட்­டங்­களை வகுக்­கக்­கூ­டி­ய­வர்­களை உள்­வாங்­கிச் செல்­ல­வேண்­டிய தேவை எழுந்­தி­ருக்­கி­றது!

முத­ல­மைச்­சர் இது­வரை கால­மும் நீதி­மன்ற அமைப்பு முறை­மைக்­குப் பழக்­கப்­பட்­ட­வர் என்ற படி­யி­னால் கொஞ்­சம் நீதி­மன்ற விவ­கா­ரங்­க­ளைக் கவ­னிப்­பது போன்று வட­மா­காண சபை அர­சி­யல் விட­யங்­க­ளை­யும் பார்ப்­ப­த­னால் வந்த விளை­வு­களே முத­ல­மைச்­ச­ ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா தீர்­மான விவ­கா­ரமோ என எண்ண வேண்டி இருக்­கி­றது.

‘கொசு­வைப் பிடிச்சி கோவ­ணம் கட்டி அனுப்­பி­ய­து­போல விவ­கா­ரங்­களை ஊதிப் பெருப்­பிக்­கா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டி­யது அவ­ரது கட­மை­யும்­கூட’. அதே­வேளை, முழுப் பூச­ணிக் காயைச் சோற்­றில் மறைப்­ப­தா­க­வும் தீர்­வு­கள் அமை­யக்­கூ­டாது. எனவே, முத­ல­மைச்­சர் கொஞ்­சம் கவ­ன­மாக – விவே­க­மாக – பொறு­மை­யாக – நிதா­ன­மாக விட­யங்­களை கையாள்­வது மிக நல்­லது. இனிச் செய்­வார் என எதிர்­பார்க்­க­லாம்!

தமிழ்க் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு!

எல்லா விதத்­தி­லும் கூட்­ட­மைப்பே சிறந்­தது என்­றெல்­லாம் ஓதிக்­கொண்டு இருக்­கா­மல், எவ்­வாறு எல்­லா­ரும் ஒரு­ம­னப்­பட்டு சேர்ந்து செயற்­பட முடி­யும் எனச் சிந்­திக்­க­வேண்­டும். எந்­த­ அளவுக்கு அனைத் துத் தமிழ்க் கட்­சி­க­ளும் இணைந்து செயற்­ப­டு­கி­ன்றனவோ, அந்­த அள வுக்குத்தான் எமது பல­மும், எமது எதிர்­கால விமோ­ச­ன­மும் தங்­கி­யி­ருக்­கி­றது என்­ப­தைச் சரி­யா­கப் புரிந்­து ­கொண்டாக வேண்டும்.

இளைப்­பா­றும் மன்­னார் ஆயர் இ.யோசேப்பு இருந்­தி­ருந்­தால்!…

இன்­றைய வட­பு­லத்து அர­சி­யல் நில­மை­யில், – வட­மா­காண சபை இருக்­கும் நில­மை­யில், இளைப்­பா­றும் மன்­னார் ஆயர் இரா­யப்பு யோசேப்பு கொஞ்­சம் சுக­தே­கி­யாக இன்று இருந்­தி­ருந்­தால் நிலமை எப்­படி இருந்­தி­ருக்­கும் என ஒரு தடவை எண்­ணிப் பார்ப்­பது தவிர்க்க முடி­யா­த­தா­கி­றது! ஒரு உரு­வ­கம் தோன்­றி­யது: நாய், தன் வாலை பின் கால்­க­ளுக்கு இடை­யில்(நறுக்­கென்று வேறு வார்த்­தை­யில் சொல்­ல­மு­டி­யும்! எனி­னும் கொஞ்­சம் பண்­பார்ந்த வகை­யில் சொல்­வது நல்­லது என்­ப­தால் இப்­ப­டி­யா­கச் சொல்­கி­றேன்!)

வைத்­துக்­கொண்டு பவ்­வி­ய­மாக மெலிந்து நெளிந்து வளைந்து நிற்­ப­து­போல விக்கி ஐயா தொடக்­கம் அக்கி(அனந்தி அக்கா) வரை­யும், சம்­மந்­தன் ஐயா தொடக்­கம் சாந்தி அக்கா வரை­யும் எல்­லா­ரும் அணி­வ­குத்து நின்றி­ருப்­பார்­கள். வட­மா­காண சபை இரண்­டு­பட இட­மி­ருந்­தி­ருக்­காது.

என்ன செய்­வது? பூனை­யில்லா வீட்­டில் எலி­க­ளுக்­குக் கொண்­டாட்­டம் என்ற நிலை­யா­கி­விட்­டது! சரி­யான ஒரு தலை­வன் இருந்­தான்! அவன் இன்று இல்­லா­த­தால் நாமும் எமது அர­சி­யல் தலை­வர்­க­ளும் சித­றிப்­போக எத்­த­னிக்­கி­றோம்!

இளைப்­பா­றும் மன்­னார் ஆயர் இரா­யப்பு யோசேப்பு சமூக நல­னில் அக்­க­றை­கொண்டு ஆண்­ட­வன் கொடுத்த அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு செயற்­பட்­டது போன்று, அவ்­வப்­போது பிரிந்து – பிள­வு­பட்டு நிற்­கும் நம்­மு­டைய தமிழ் அர­சி­யல்­வா­தி­களை – ஒன்­று­பட்டு நிற்க – மக்­கள் நலன்­க­ளுக்­காக உழைக்க ஊக்­கப்­ப­டுத்த வேண்­டிய பெரும் பொறுப்பு சமூக நலன் சார்ந்து சிந்­திக்­கிற சமூக – சம­யத் தலை­வர்­க­ளுக்கு உண்டு.

ஏற்­க­னவே, எமது அர­சி­யல் தலை­வர்­களை ஒன்­று­ப­டுத்­தும் – முயற்­சி­யில் வெற்­றி­கண்ட யாழ்.ஆயர் யஸ்­ரின் ஞானப்­பி­ர­கா­சம் ஆண்­டகை, நல்­லைக் குரு­மணி ஸ்ரீலஸ்ரீ பர­மாச்­சா­ரிய தேசிக சம்­பந்த சுவா­மி­கள் போன்ற மதத் தலை­வர்­கள் தொடர்ந்­தும் இவர்­களை இணைக்­கும் பால­மாக மாற­வேண்­டும் என ஆண்­ட­வனை நம்­பும் – ஆய­னின் வழி­காட்­டல்­களை எதிர்­பார்த்­தி­ருக்­கும் ஆடு­கள் எதிர்­பார்க்­கின்­றன. ‘நல்­லா­யன் தன் ஆடு­க­ளுக்­காக உயி­ரை­யும் கொடுப்­பான்’ என்­பது வேதம் கூறும் விண்­ணக வாக்கு!

http://newuthayan.com/story/27959.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கொலுவேறியவர்கள் தம் மக்களை கழுவேற்றல் ஆகாது!

இந்த ஆய்வை யாரப்பா எழுதுனது? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த ஆய்வை யாரப்பா எழுதுனது? :rolleyes:

சத்தியமாய் நான் இல்லை...!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

சத்தியமாய் நான் இல்லை...!:rolleyes:

உதயன்லை சாந்தியக்கா எண்டு வேறை வந்திட்டுது...:rolleyes:

Link to comment
Share on other sites

சம்பந்தர் சரியானவரே!

 

கடந்த 12 ஆம் திக­திய உத­ய­னில் ‘கொலு­வேற்­றி­ய­வர்­கள் தம் மக்­க­ளைக் கழு­வேற்­றல் ஆகாது’ என்ற தலைப்­பில் வெளி­யான கட்­டு­ரை­யில் கட்­டு­ரை­யா­ளர் செ.அன்­பு­ராசா அடி­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் ஐயா பற்றி விமர்­சித்­தி­ ருந்­தார்.

யாரா­வது ஒரு­வர் மின்­னஞ்­சல் அனுப்­பி­னால் உடனே அதைப் பிர­சு­ரிப்­பீர்­களா? அது எவ்­வளவு கேவ­ல­மாக, ஒரு மக்­கள் தலை­வ­னைப் பற்றி எழு­தி­னா­லும் பர­வா­யில்­லையா? மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தம் மக்­க­ளின் பக்­கம் நின்று செயற்­ப­டா­த­போது அவர்­கள் துரோ­கி­க­ளா­கவே கரு­தப்­ப­டு­வர்.

யாரால்? உத­யன் ஆசி­ரி­யரால் கரு­தப்­ப­டு­வார்­களா? சம்­பந்­தன் ஐயா பற்றி ஆயி­ரம் குறை­கள் சொல்­ல­லாம். ஆனால் அவர் ஒரு பயந்­தாங்­கொள்ளி என்று எவ­ரும் சொல்ல மாட்­டார்­கள்.

இன்று நாடா­ளு­மன்­றத்­தின் உள்­ளும் வெளி­யி­லும், இரா­ச­தந்­தி­ரி­கள் மட்­டத்­தி­லும், வெளி­நாட்டு தூது­வர்­கள் மத்­தி­யி­லும் தமி­ழர் தரப்பு நியா­யத்தை ஆணித்­த­ர­மாக முன்­வைப்­ப­வர் சம்­பந்­தன் ஐயா மட்­டுமே! தலை பழு­தா­ன­வர்­களே அவ­ருக்கு எதைக் கண்­டா­லும் பயம் என்று நையாண்டி பண்­ணு­வார்­கள்.

ஒரு சன­நா­யக எல்­லைக்­குள் என்ன செய்ய வேண்­டுமோ? எதைப் பேச வேண்­டுமோ, அதனை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் செய்­கி­றார்­கள், பேசு­கி­றார்­கள்.சம்­பந்­த­னின் அர­சி­யல் சாணக்­கி­யம்­தான் ஆட்­சி­மாற்­றத்­தைக் கொண்­டு­வந்­தது. ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட கார­ணத்­தி­னால்­தான் புதிய அர­ச­மைப்பு ஒன்று எழு­தப்­பட்டு வரு­கி­றது.

சம்­பந்­தன் ஐயா அமெ­ரிக்க இரா­சாங்க அதி­கா­ரி­க­ளைக் கண்டு பேச்­சு நடத்­தி­ய­தன் கார­ண­மா­கவே (2011) அமெ­ரிக்கா ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யில் 2012 இல் தீர்­மா­னம் கொண்டு வந்­தது.

இது சாதனை இல்­லையா? தமிழ்­மக்­கள் விவகாரம் இன்று ஐநா சபை­யில் பேசு பொரு­ளாக இருக்­கி­றது. சிறி­லங்கா அரசை ஐ.நா. மனித உரி­மை­கள் பேரவை ஆணை­யா­ளர் சரி, ஐநா சபை செய­லா­ளர் நாய­கம் சரி தட்­டிக் கேட்­கி­றார்­கள்.

கலப்பு விசா­ரணை இல்­லா­விட்­டால் பன்னாட்டு விசா­ர­ணைக்கு முகம் கொடுக்க வேண்­டி­வ­ரும் என எச்­ச­ரிக்­கி­றார்­கள். தமிழ்­மக்­களது பிரச்சினைகளுக்கான தீர்­வுக்கு வலி­யு­றுத்­து­கின்­ற­னர், கைதி­கள் சிறை­ க­ளில் பயங்­க­ர­வா­தச் சட்­டத்­தின் கீழ் விசா­ரணை இல்­லா­மல் ஆண்­டுக் கணக்­கில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்­கள்.

ஆனால் கடந்த இரண்­டரை ஆண்­டு­க­ளில் இவை தொடர்­பாக சில முன்­னேற்­றங்­கள் காணப்­பட்­டுள்­ளன. காணா­மல் போனோர் பற்­றிய சட்­டம் வர்த்­த­மா­னி­யிர் பிர­சு­ரிக்­கப்­பட்டு அலு­வ­ல­கங்­கள் திறக்­கப்­பட உள்­ளன. வலி வடக்­குக் காணி­க­ளில் 30 விழுக்­காடு விடு­விக்­கப்­பட் டுள் ளன.இவைகள் எல்லாவற்றுக்கும் சம்பந்தன் ஐயாவின் துணிச்சல் காரண மில்லையா?

http://newuthayan.com/story/29424.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

சம்­பந்­த­னின் அர­சி­யல் சாணக்­கி­யம்­தான் ஆட்­சி­மாற்­றத்­தைக் கொண்­டு­வந்­தது. ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட கார­ணத்­தி­னால்­தான் புதிய அர­ச­மைப்பு ஒன்று எழு­தப்­பட்டு வரு­கி­றது.

நாள்கணக்கு சொன்ன சம்பந்தனின் அரசியல் சாணக்கியம் இதுவரைக்கும் என்னத்தை கிழிச்சு தள்ளியிருக்கு????
புலிகள் ஆட்சிகாலத்தில் சந்திரிக்காவின் அருவருடிகளும் சாசனம் எழுதினார்கள் அவையெல்லாம் என்னவாயிற்று??????
சிங்களம் ஒரு சாசனத்தை எழுத 3வருசம். அதை வாசிக்க 3வருசம்.அதை சரிபிழை பார்க்க3வருசம்.அதை எங்கடையள் வாசிக்க 4வருசம்....அதிலை குற்றம் கண்டுபிடிக்க 4வருசம்....குறை கண்டு பிடிச்சதை திருப்பியனுப்ப பிறகு 4வருசம்.....இப்பிடியே ஒரு சகாப்தம் அழியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.