Jump to content

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது சுதந்திரக் கோப்பைத் தொடர்


Recommended Posts

உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு

 

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.

 
உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு
 
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் தொடங்குவதற்கான காலம் கனிந்துள்ளது. ஐ.சி.சி. உலக லெவன் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டது.

201709111553060195_1_1wolrdXI002-s._L_st

அதன்படி முதல் போட்டி நாளை தொடங்குகிறது. 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 15-ந்தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் லாகூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அணி கடந்த சில தினங்களாக துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 13 வீரர்கள் பாகிஸ்தான் சென்றடைந்தனர். பாகிஸ்தான் சென்றடைந்த அவர்கள் வரலாறு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

201709111553060195_2_1wolrdXI003-s._L_st

போட்டி நடைபெறும் மைதானத்திற்கும் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் உள்பட 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

201709111553060195_3_1wolrdXI004-s._L_st

இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/11155303/1107483/Pakistan-Braces-For-a-Revival-as-World-XI-Arrive.vpf

Link to comment
Share on other sites

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது சுதந்திரக் கோப்பைத் தொடர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில், ஐ.சி.சி ஆதரவுடன் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று  நடைபெறுகிறது. 

world11_07377.jpg


பாகிஸ்தான் நாடும், இந்தியா போன்றே கிரிக்கெட் விளையாட்டை அதிகம் நேசிக்கும் மக்களைக் கொண்ட நாடு. ஆனால், கடந்த 2009 -ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்துவந்தன. 

2015 -ல், ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடியபோதும், அது ஐ.சி.சி-யின் ஆதரவு இல்லாமல்தான் நடைபெற்றது. அந்தத் தொடருக்கு ஐ.சி.சி தனது நடுவர்களை அனுப்ப மறுத்துவிட்டது. 
இந்நிலையில், பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களைத் தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. இனிமேலாவது எங்கள் மண்ணில் விளையாட வாருங்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், தற்போது ஐ.சி.சி அனுமதியுடன் பாகிஸ்தான்  மண்ணில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, டுபிளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி பாகிஸ்தான் வந்துள்ளது. லாகூர் வந்துள்ள உலக அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

worls11_08050.jpg

போட்டி நடைபெறும் கடாஃபி மைதானமும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. உலக லெவன் அணியில், இந்தியர்கள் யாரும் இல்லை என்றபோதும் ஆசிய வீரர்கள் இருப்பதால், பாகிஸ்தான் அணிக்கு உலக லெவன் சவால் அளிக்கும். இந்திய துணைக் கண்டத்தில் அதிக போட்டிகள் விளையாடிய அனுபவம்கொண்ட வீரர்கள், உலக லெவன் அணியில் இருக்கிறார்கள். டுபிளெசிஸ், ஆம்லா, மில்லர், இம்ரான் தாஹிர், மோர்னி மோர்கெல் போன்ற ஐ.பி.எல் நட்சத்திரங்களுடன் ஆசிய வீரர்களான தமீம் இக்பால், திசெரா ஃபெரெரா ஆகியோரும் உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

 

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அதே அணிதான் களமிறங்குகிறது. அந்த அணியின் நம்பிக்கைக்குரிய பந்து  வீச்சாளரான ஆமிர், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் இருப்பதால், இந்தத் தொடரில் அவர் மட்டும் பங்கேற்கவில்லை. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தொடரால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மகிழ்சியில் உள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/101974-pakistan-host-international-cricket-tournament-after-long-time.html

Link to comment
Share on other sites

உலக லெவன் அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

 

உலக லெவன் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
உலக லெவன் அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
 
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிசிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய பகர் சமான் 4-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 33 பந்தில் அரைசதம் அடித்தார். 11.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.

அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். பாபர் ஆசம் 86 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

201709130000438615_1_cricket11._L_styvpf

சோயிப் மாலிக் 20 பந்தில் 38 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, இமாத் வாசிம் கடைசி 3 பந்தில் 14 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. பெரேரா கடைசி ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். பாகிஸ்தான் கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 18 ரன்களில் ராயீஸ் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 26 ரன்களில் ராயீஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து டிம் பெயின் மற்றும் கேப்டன் டூபிலஸிஸ் ஜோடி சேர்ந்தனர். டூபிலஸிஸ் 29 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து டிம் பெயினும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் உலக லெவன் அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 9 ரன்களில் ஆட்டமிளந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின்னர் கிரண்ட் ஏலியாட் 14 ரன்களிலும், திசாரா பெரேரா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி ஏழு விக்கெட்களை இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டேரன் சம்மி 16 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 86 ரன்கள் எடுத்த பாபர் ஆசம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அடுத்த போட்டி நாளையும், கடைசி போட்டி 15-ம் தேதியும் நடைபெற உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/13000040/1107705/pakistan-won-first-t20-against-iccworld11-team.vpf

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெவன் அணி திரில் வெற்றி

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் உலக லெவன் அணி, ஒரு பந்து மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெவன் அணி திரில் வெற்றி
 
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ( 13-ம் தேதி ) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.

அணியின் ஸ்கோர் 130 ரன்களை எட்டியபோது ஷேசாத் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார்.  பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

201709140055488839_1_crickettt._L_styvpf

சோயிப் மாலிக் 23 பந்தில் 39 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணி பந்துவீச்சில் சாமுவேல் பத்ரி, திசாரா பெரேரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 23 ரன்களில் சோஹைல் கான் பந்தில் சோயிப் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் பெய்ன் 10 ரன்னில் இமாத் வாசிம் வேகத்தில் போல்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லா 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கேப்டன் டூபிலஸிஸ் டூபிலஸிஸ் 20 ரன்களில் அவுட்டானார். இதன்மூலம் உலக லெவன் அணி 14 ஓவர்களில் 106 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அடுத்து களமிறங்கிய திசாரா பெரேரா - ஹாசிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். உலக லெவன் அணி 19.5 ஓவரின் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஹாசிம் அம்லா 72 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 19 பந்துகளில் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திசாரா பெரேரா ஐந்து சிக்ஸர்கள் அடித்தார்.

உலக லெவன் அணியின் திசாரா பெரேரா ஆட்டநாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, 15ம் தேதி நடைபெறுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/14005543/1107889/world11-team-won-t20-cricket-match-against-pakistan.vpf

Link to comment
Share on other sites

உலக லெவன் கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

உலக லெவன் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்று சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது.

 
உலக லெவன் கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்
 
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பகர் சமான் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேசாத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 163 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஷேசாத் - ஆசம் ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. சோயிப் மாலிக் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உலக லெவன் அணியின் திசாரா பெரேரா இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.

தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 14 ரன்களில் உஸ்மான் கான் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 21 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

201709152349220534_1_pak2._L_styvpf.jpg

அடுத்து களமிறங்கிய பென் கட்டிங் 5 ரன்களிலும், ஜார்ஜ் பெய்லி 3 ரன்களிலும், கேப்டன் டு பிளிஸ்சிஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் அந்த அணி 10 ஓவர்களுக்குள் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதைத்தொடர்ந்து டேவிட் மில்லரும், திசாரா பெரேராவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரன் சமி களமிறங்கினார். மில்லரும் 32 ரன்களில் கேட்சாகி வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி எட்டு விக்கெட்கள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டேரன் சமி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 89 ரன்கள் எடுத்த அகமது ஷேசாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசம் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/15234915/1108237/Pakistan-seal-independence-day-series-as-successful.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.