Jump to content

2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்


Recommended Posts

2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்
6res.jpg

2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தமட்டில் போட்டியின் அரைவாசி பகுதி முழுவதும் தலைவரின் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் படிதான் அணி வழிநடாத்தப்படுவதுடன், போட்டி நிறைவடையும் வரை அனைத்து அழுத்தங்களையும் தனது தோள்களில் சுமந்துகொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் மும்முரமாக இருப்பார்.

வானம் உயர்ந்த அளவிற்கு தலைவர்களுக்கு அழுத்தங்கள் இருந்தாலும், அதனையும் வெற்றி கொள்கின்ற தலைவர்கள் பொதுவாக எல்லா விளையாட்டுகளிலும் இருப்பது அரிது என்று சொல்லலாம். இதில் கிரிக்கெட் உலகில் நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு சில முக்கிய வீரர்கள் அழுத்தங்கள், தொடர் தோல்விகள் மற்றும் உபாதைகள் உள்ளிட்ட காரணங்களால் இவ்வருட ஆரம்பத்திலிருந்து தமது தலைமைப் பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். அவ்வாறு பதவி விலகிய 6 முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் தொடர்பான விபரமொன்றைப் பார்க்கலாம்.

  1. அசார் அலி

ALar Ali

பாகிஸ்தான் அணிக்காக உள்ளூர் மட்ட கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அசார் அலி, வழக்கம்போல பாகிஸ்தான் அணிக்காக வீரரொருவர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாவதற்கு முன் டெஸ்ட் அறிமுகம் பெற்ற வீரராகவும் இடம்பெற்றார். இதன்படி, 2010ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், பாகிஸ்தான் அணியின் ராகுல் ட்ராவிட் எனவும் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அசார் அலி, 2011ஆம் ஆண்டு அயர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

அதன் பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றம் மற்றும் பின்னடைவை சந்தித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி பெற்ற தோல்வி மற்றும் மிஸ்பா உல் ஹக்கின் ஓய்வின் பிறகு பாகிஸ்தான் அணியின் அனைத்துவிதமான போட்டிகளினதும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும் கடந்த 2 வருடங்களாக அசார் அலிக்கு முக்கியமான போட்டித் தொடர்களின் போது அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது. ஓட்டக்குவிப்பிலும் பின்னடைவை சந்தித்தார். அத்துடன் அசார் அலியின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி பங்குபற்றிய 10 போட்டித் தொடர்களில் 5 தொடர்களில் மாத்திரம்தான் அவ்வணி வெற்றி பெற்றதுடன், இதில் 12 போட்டிகளில் வெற்றியையும், 18 போட்டிகளில் தோல்வியையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதன்படி வெறும் 31 ஒருநாள் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியின் தலைவராகச் செயற்பட்ட அசார் அலி, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T-20 போட்டித் தொடர்களில் பெற்ற தோல்விக்குப் பிறகு, தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்.

இதனையடுத்து இவ்வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடான போட்டித் தொடரில் தனது இடத்தையும் இழந்தார். எனினும் ஜூன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மீண்டும் அணியில் இடம்பெற்ற அவர், இங்கிலாந்துடனான அரையிறுதி மற்றும் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் அரைச் சதங்களைக் குவித்து பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. மிஸ்பா உல் ஹக்

Misbah-ul-Haq

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென பிரத்தியேக இடம் பிடித்தவர் மிஸ்பா உல் ஹக். தன் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மிஸ்பா, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

43 வயதாகும் மிஸ்பா, 2001ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதுடன், 2010ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்திய மிஸ்பா, ஐசிசி தரவரிசையில் வரலாற்றில் முதற்தடவையாக பாகிஸ்தான் அணியை முதல் இடத்துக்கு கொண்டு சென்ற பெருமையையும் பெற்றார்.

முன்னதாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் இருந்து மிஸ்பா ஓய்வுபெற்றதுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2 வருடங்களாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்பா, அதில் 53 போட்டிகளின் தலைவராகச் செயற்பட்டு 24 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ள அதேநேரம், பாகிஸ்தான் அணியை அதிகளவு போட்டிகளில் வழிநடாத்திய முதலாவது தலைவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

  1. அஞ்செலோ மெதிவ்ஸ்

mathews

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மெதிவ்ஸ், மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரையும் 3-2 என இழந்த நிலையிலேயே மெதிவ்ஸ் இவ்வாறு இராஜினாமாச் செய்தார்.

2013 ஆம் ஆண்டு இலங்கை அணியின் இளம் டெஸ்ட் தலைவராக தனது 25ஆவது வயதில் தெரிவுசெய்யப்பட்ட மெதிவ்ஸ் 34 டெஸ்ட் போட்டிகளில் தலைவராக செயற்பட்டு 13 வெற்றி மற்றும் 15 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார். 2012 இல் தனது முதல் ஒருநாள் தலைமைப் பொறுப்பை வகித்தது தொடக்கம் 98 போட்டிகளில் தலைமை வகித்து 47 போட்டிகளிலேயே அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றுள்ளார். 45 சந்தர்ப்பங்களில் மெதிவ்ஸின் தலைமையில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

சர்வதேச T-20 போட்டிகளில் மெதிவ்ஸ் தலைமையில் இலங்கை அணி வெறும் 4 போட்டிகளிலேயே வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அடிக்கடி காயங்களால் பாதிக்கப்பட்ட மெதிவ்ஸின் தலைமைப் பதவியில் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 3-0 என வெள்ளையடிப்பு செய்தது முக்கிய தருணமாக கருதப்படுகிறது.

  1. அலெஸ்டயார் குக்

cook

இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அலெஸ்டெயார் குக் கடந்த பெப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார்.

2010ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியின் அனைத்து வகையான போட்டிகளினதும் தலைவராக நியமிக்கப்பட்ட அலெஸ்டயார் குக், ஒரு சில ஒருநாள் போட்டிகளின்போது சிறப்பாக செயற்படாத காரணத்தால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

எனினும், தொடர்ந்து டெஸ்ட் அணித் தலைவராக சிறப்பாகச் செயற்பட்ட அவர், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரையும், 2015ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றியிருந்தார்.

ஆனால் கடந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 4-0 என படுதோல்வியை சந்தித்ததும் அவர், அவ்வருடம் முழுவதும் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-2 சமப்படுத்தி வெற்றியை தவறவிட்ட குக்,  தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுகின்ற 32 வயதான குக், இதுவரை 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 59 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார்.

  1. ஏ.பி டிவில்லியர்ஸ்

www.hdnicewallpapers.com

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட்டில் நேர்த்தியான, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 360 பாகை வீரர் என்று கிரிக்கெட் ரசிகர்களினால் வர்ணிக்கப்பட்ட ஏ பிடி வில்லியர்ஸ், கடந்த மாதம் தென்னாபிரிக்க அணியின் ஒருநாள் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் T-20 மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் பதிவிகளிலிருந்து டி வில்லியர்ஸ் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர் உபாதை மற்றும் போதியளவு திறமைகளை அண்மைக்காலமாக வெளிக்காட்டாத டி வில்லியர்சை டெஸ்ட் குழாமிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அவருடைய டெஸ்ட் மற்றும் T-20 தலைமைப் பதவியையும் பாப் டூ பிளெஸிஸுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் 18 மாதங்களாக உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார். அதனையடுத்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியை டி வில்லியர்ஸ் வழிநடாத்திய போதிலும், அவ்வணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கு தகுதிபெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

33 வயதான டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்க அணியின் தலைவராக சுமார் 6 வருங்களாக(2012-2017) செயற்பட்டுள்ளதுடன், 103 போட்டிகளுக்கு தலைவராகச் செயற்பட்டு 59 போட்டிகளில் அmணிக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து உபாதை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  1. மஹேந்திர சிங் டோனி

India A captain Mahendra Singh Dhoni plays a shot during the first warm-up one day cricket match between India A and England XI at the Cricket Club of India (CCI) stadium in Mumbai on January 10, 2017. ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP PHOTO / PUNIT PARANJPE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் T-20 உலகக் கிண்ணங்களை வென்று கொடுத்து கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்த கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படுகின்ற மஹேந்திர சிங் டோனி, கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் T-20 அணிகளின் தலைவர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்தார்.

2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான டோனி, 2009ஆம் ஆண்டில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். டோனியின் தலைமையில் இந்திய அணி 2007ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணம், 2011ஆம் அண்டு உலகக் கிண்ணம் (ஒருநாள்) மற்றும் 2013ஆம் அண்டு சம்பியன்ஸ் கிண்ணம் என்பவற்றைக் கைப்பற்றியது.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் சபையின் முக்கிய கிண்ணங்கள் மூன்றையும் கைப்பற்றிய ஒரு அணிக்கு தலைவராக இருந்தவர் என்ற பெருமையை டோனி பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் என்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். அது போன்றே, அவர் ஏனைய இரண்டு வகையான போட்டிகளுக்கான அணியின் தலைவர் பதவியில் இருந்து திடீரென பதவி விலகியிருந்தார்.

இந்திய அணிக்காக துடுப்பாட்டத்திலும், விக்கெட் காப்பிலும் பல சாதனைகளைப் படைத்த 36 வயதான டோனி, 199 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடாத்தி 110 போட்டிகளில் வெற்றியையும், 74 போட்டிகளில் தோல்விகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அது போன்றே, 72 T-20 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டு 42 போட்டிகளில் வெற்றியையும், 28 போட்டிகளில் தோல்விகளை அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.