Jump to content

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள்


Recommended Posts

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள்

8 Candidates to become next Sri Lanka Cricket Head Coach
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7 வருடங்களில் (அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டிய பயிற்சியாளர்கள் 10 பேர்கள் வரையில் மாற்றப்பட்டுள்ளனர்.

பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏன் மாற்றப்படுகின்றனர் என்கிற கேள்வியோடு இலங்கை அணியின் போராடும் தன்மையும் இப்போதைய நாட்களில் குறைந்து வருவதை பார்க்கலாம். இவ்வாறான நிலைமைகளை மாற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்சியாளராக செயற்பட கூடிய சிறந்த அனுபவம் கொண்ட எட்டு திறமைமிக்க கிரிக்கெட் ஆளுமைகளை ThePapare.com இன் இக்கட்டுரையின் மூலம் பார்க்கப் போகின்றது.

நிக் போத்தஸ்

Nic Pothas

இலங்கையின் பிரதான பயிற்றுவிப்பாளராக இருந்த கிரஹம் போர்ட், 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளோடு இலங்கை  அணி வெளியேறிய பின்னர் தனது பதவியினை இராஜினாமா செய்த பின்னர், அவரிற்குப் பதிலாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பு தற்காலிகமாக போத்தஸிற்கு வழங்கப்பட்டது.

போத்தஸின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட இலங்கை, ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரினை 3-2 எனப் பறிகொடுத்ததுடன், அவ்வணியுடனான டெஸ்ட் போட்டியை கைப்பற்றி அதற்கு அடுத்து  இந்தியாவுடன் இடம்பெற்ற மூன்று வகைப் போட்டிகள் ஒன்பதிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால, நிக் போத்தாஸே தற்போது தாம் அணிக்காக தெரிவு செய்யவுள்ள பயிற்றுவிப்பாளர் பதவிக்கு  ‘முதன்மையாக பார்க்கப்படுபவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்காக கடமைகளை செய்வதற்கு முன்னதாக தென்னாபிரிக்க அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக காணப்பட்ட போத்தஸ் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மாறுவதற்கு முன்னர் இலங்கையின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவே காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹேல ஜயவர்தன

Mumbai Indians - IPL

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன பணம் செழிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக கடமையேற்று கடந்த ஐ.பி.எல் பருவகாலத்தில் அவ்வணியினை சம்பியனாகவும் மாற்றியிருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஆலோசர்களில் ஒருவராகவும் வேலை செய்திருக்கும் ஜயவர்தன, அடுத்த இரண்டு பருவகாலங்களிலும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் குல்னா டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்படுவதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தினை கண்டு கவலையடைந்திருக்கும் கிரிக்கெட் இரசிகர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியினை மஹேல பொறுப்பெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

டீன் ஜோன்ஸ்

Dean-Jones Coach

தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவராக காணப்படும் டீன் ஜோன்ஸ், 2016ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் வெற்றியாளரான இஸ்லாமாபாத் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடர் தோல்வியின் பின்னர் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஜோன்ஸ் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள்  துடுப்பாட்ட வீரர்களில் (முன்வரிசை) ஒருவரான இவர், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கும் கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்வன் அத்தபத்து

Marvan Atapattu Coach

இலங்கை அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பலர் மில்லியன் கணக்கில் ஊதியம் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டிருந்த போதும், அவர்களால் இலங்கை அணிக்கு போதியளவான நல்ல விடயங்களை கடந்த காலங்களில் வழங்க முடியாமல் போயிருந்தது.

இவ்வாறான நிலைமையில் அணி பற்றி அதிக விடயங்களை அறிந்து வைத்திருக்கும் உள்நாட்டினை சேர்ந்த மர்வான் அத்தபத்து இலங்கையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மீண்டும் வரவேண்டும் என அனைவராலும் கூறப்பட்டு வருகின்றது.

இதற்கு முன்னர், இலங்கை அணியினை பயிற்றுவித்திருந்த அத்தபத்து 2014ஆம் ஆண்டில் 16 வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியொன்றினை (1-0 என) இங்கிலாந்து மண்ணில் பெறுவதற்கு உறுதுணையாக காணப்பட்டிருந்தார்.

இவ்வாறாக சிறப்பாக இலங்கை அணியினை கொண்டு சென்ற அத்தபத்து 2015ஆம் ஆண்டில் யாருக்கும் தெரியப்படுத்த விரும்பாத சில காரணங்களிற்காக தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை துறந்துவிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

போல் நிக்ஷன்

Paul Nixon

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சங்காவின் தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளர் போல் நிக்ஷன் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிற்கு விண்ணப்பத்திருப்பதாக ThePapare.com இற்கு தெரியவந்திருக்கின்றது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான நிக்ஷன் இதுவரையில் 19 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு T-20 போட்டியிலும் ஆடியுள்ளார். அதோடு, இவர் 2011ஆம் ஆண்டிற்கு முன்பு இங்கிலாந்தின் கவுண்டி அணியான லெய்கெஸ்டர்சைர் அணியினையும் பயிற்றுவித்த அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டொம் மூடி

Tom moody

இலங்கை அணியினை 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதில் பயிற்றுவித்த மூடி, இலங்கையை 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேற்றுவதற்கு உதவி புரிந்திருந்தார். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.

ஐ.பி.எல் தொடரில் ஆடிவரும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்றுவிப்பாளராக 2012ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கப்பட்டிருந்த மூடி, அவரது அணியினை 2016ஆம் ஆண்டின் ஐ.பி.எல் தொடரில் சம்பியனாக மாற்ற காரணமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பியெர்ரே டி ப்ரய்ன்

Pierre De Bruyn

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான பியெர்ரே, அண்மையில் லெய்கெஸ்டர்சைர் அணியின் தலைமைப் பொறுப்பினை இராஜினாமாச்  செய்திருந்தார்.

40 வயதாகும் இவரின் ஆளுமையின் கீழிருந்த லெய்கெஸ்டர்சைர் அணி இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளான T-20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிக்கும், ஒரு நாள் கிண்ணத்தில் (வடக்குப் பிராந்திய குழு) ஆறாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டிற்கான பருவகாலத்தில் லெய்கெஸ்டர்சைர் கழகத்திற்கு உதவி பயிற்சியாளராகவே சென்றிருந்த பியெர்ரே டி ப்ரய்ன் தனது திறமையின் கரணமாக அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறியிருந்தார்.

ஸ்டீபன் பிளமிங்

Stephan Fleming Coach

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக முன்னதாக செயற்பட்டிருந்தார்.

இவரது வழிகாட்டலுடன் காணப்பட்ட சென்னை அணி, 2010 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் சம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்ததுடன் 2010 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக்கிலும் வெற்றியாளராக மகுடம் சூடியிருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக ரைஸிங் புனே சுபர்ஜயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வரும் பிளமிங், நியூசிலாந்து அணிக்காக இதுவரையில் 111 டெஸ்ட் போட்டிகளிலும், 280 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி 15,000 இற்கு மேலான ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.