Jump to content

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா... விலங்குகளின் கொழுப்பா? - எப்படி கண்டுபிடிப்பது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

பசு நெய்

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பசு மாடுகள் இருக்கும். வீட்டிலேயே வெண்ணெய் எடுத்து உருக்கிப் பயன்படுத்துவார்கள். வாசனையும் சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். மாடு இல்லாதவர்கள் இந்தத் தூய ஹோம் மேட் தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்போது மாடுகளே அற்றுப்போய் விட்டன. இபோதெல்லாம் நெய் விதவிதமாக பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. 

எல்லா உணவுப் பொருட்களைப் போலவே, நெய்யிலும் ஏகப்பட்ட கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பொதுவாக கடைகளில் விற்பனை செய்யப்படும் நெய்யில் சேர்க்கப்படும் பொருட்களின் பட்டியலைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. எலும்புத் துகள்கள், ரசாயனங்கள், குரங்குக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு... போன்றவை சேர்க்கப்பட்டிருப்பது பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளன.

பெரும்பாலும் டப்பாக்களில்  'இது சுத்தமான பாலின் கொழுப்பு' (Milk fat) என்று குறிப்பிட்டிருப்பார்கள்.  ஆயுர்வேத மருத்துவப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் கூட Milk fat என்று போட்டே விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நெய்க்கும், பாலின் கொழுப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பு ஒருபோதும் நெய்யாகாது.

நெய்

முதலில் நெய் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

இதற்கு மிக முக்கிய மூலக்கூறு பால். அந்த பாலினை நன்றாகக் காய்ச்சி, பிறகு அதை ஆற வைத்து, அதில் ஒரு துளி தயிரைக் கலந்து ஆறு மணி நேரம் உறைய வைக்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அதை எடுத்துப் பார்த்தால் முழுவதுமாக அந்த பால் தயிராக மாறியிருக்கும். அந்தத் தயிரில் சிறிது நீர்விட்டு நன்றாகக் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து வந்துவிடும். அந்த வெண்ணெயை வாணலியில் இட்டுக் காய்ச்சினால் தனியாகப் பிரிந்து வரும். இதுவே உண்மையான முறை. இதற்குப் பதிலாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பை நெய்யாக்குவது சரியான முறை அல்ல. 

பாலைத் தயிராக்கி தயிரை வெண்ணெயாக்கி அதை நெய்யாக்குவதுதான் சுத்தமானது. இதற்குத்தான் நோய் தீர்க்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. மாறாக நேரடியாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பு நெய்யை உண்டால்  உடலால் அதனை ஜீரணிக்க முடியாது. கொழுப்பாகவே உடலில் சேர்த்து வைக்கும். அது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். 

சராசரியாக 40 லிட்டர் பாலைத் தயிராக்கி பிறகு அதிலிருந்து வெண்ணெயை எடுத்து நெய்யாக்கினால்  ஒருகிலோதான் கிடைக்கும். ஆனால், வணிகம் என்று வந்து விட்டால் இதில் பெரிய லாபம் இல்லை. அதனால், இயற்கையான எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக பாலில் இருந்து கொழுப்பை எடுத்து அதோடு  பல ரசாயனங்கள் மற்றும் விலங்கு கொழுப்புகளைச் சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். 

கொழுப்பெடுத்தது போக, மிஞ்சும் பாலையும் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்து கிடைக்கும் வழிகளில் எல்லாம் லாபம் பார்க்கிறார்கள். 

நெய்

ஆட்டுப்பால்,  எருமைப்பாலில் இருந்தும் இதைத் தயாரிக்கலாம். ஆனால் அதற்கு பெரிய மகத்துவம் இல்லை. நாட்டு மாடுகளின் நெய்யே நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும். இதுமாதிரியான உண்மையான பொருள் வேண்டுமென்றால்,  நாமே வீட்டில் பசும்பால் வாங்கி காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் பெற்று நெய்யாக்கிப் பயன்படுத்தலாம். 

நாட்டு மாடுகள் குறைந்த அளவு பாலையே கொடுக்கும். திமில்கள், மாடலான கழுத்து, கொம்புகள் உள்ள நமது நாட்டுக்குச் சொந்தமான ரகங்களில் இருந்து பெறப்படும் நெய்க்கே அனைத்து மருத்துவக் குணங்களும் உண்டு. இதுதான் உடலின் செல்களுக்குள் எளிதாக ஊடுருவி தேவையான அனைத்துச் சத்துகளையும் வழங்கும். தேவையற்றக் கழிவுகளையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றும்.

இந்த நெய்யை நாள்தோறும் உட்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். நரம்புகள், எலும்புகள் பலப்படும், மூளை வளர்ச்சிக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீராகும், உடல் பருமன் சீராகும், இதய நோய், மூட்டு வலி சீராகும். அனைவரும் எதிர்பார்க்கும் ஒமேகா சத்துகள் இதில் உள்ளது அதுமட்டுமல்லாமல் பல வைட்டமின்களும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் இதில் அடங்கியுள்ளன.

http://www.vikatan.com/news/health/101906-how-to-identify-pure-ghee.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழரசு said:

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா... விலங்குகளின் கொழுப்பா? - எப்படி கண்டுபிடிப்பது?

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது....

....

....

http://www.vikatan.com/news/health/101906-how-to-identify-pure-ghee.html

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

அதைத்தான் நானும் தேடினன் விகடனும் பீலா விடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

தண்ணீரில் மிதந்தால் நெய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெய் இட்டு நம்ம தமிழர்கள் பெரிதாக சமைப்பதில்லை குறிப்பா கிழக்கில்  வெளிநாடுகளில் கூட இந்தியர்கள் வெறும் சோற்றில் நெய்யை ஊற்றி சப்பிடுவார்கள் அதைக்கண்டிருக்கிறேன்  எனக்கு அந்த மணம் பிடிக்காது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நெய் இட்டு நம்ம தமிழர்கள் பெரிதாக சமைப்பதில்லை குறிப்பா கிழக்கில்  வெளிநாடுகளில் கூட இந்தியர்கள் வெறும் சோற்றில் நெய்யை ஊற்றி சப்பிடுவார்கள் அதைக்கண்டிருக்கிறேன்  எனக்கு அந்த மணம் பிடிக்காது 

மதுரை பகுதி கிராமங்களில் பசு வெண்ணையை அடுப்பில் உருக்கி நெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலைகளைப் போட்டு காய்ச்சுவார்கள்.. அதில் வெண்ணை உருகி நெய்யானதும், நெய்யை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யில் வறுத்த முருங்கை இலைகளோடு சூடான சாதத்தை பிசைந்து சாப்பிட்டல் அதன் ருசியே தனி.. நான் சிறுவயதில் பலமு|றை சாப்பிட்டுள்ளேன்..!

அதே போல் புதிதாக கன்று ஈன்றவுடன் சுரக்கும் பசும்பாலை சுண்டக் காய்ச்சினால் பால் திரண்டு பதமாக வரும்..திரட்டுப்பாலை 'கடம்பு' என சொல்வார்கள்..அதுவும் சுவையாக இருக்கும். அண்டை வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுத்தனுப்புவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

மதுரை பகுதி கிராமங்களில் பசு வெண்ணையை அடுப்பில் உருக்கி நெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலைகளைப் போட்டு காய்ச்சுவார்கள்.. அதில் வெண்ணை உருகி நெய்யானதும், நெய்யை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யில் வறுத்த முருங்கை இலைகளோடு சூடான சாதத்தை பிசைந்து சாப்பிட்டல் அதன் ருசியே தனி.. நான் சிறுவயதில் பலமு|றை சாப்பிட்டுள்ளேன்..!

அதே போல் புதிதாக கன்று ஈன்றவுடன் சுரக்கும் பசும்பாலை சுண்டக் காய்ச்சினால் பால் திரண்டு பதமாக வரும்..திரட்டுப்பாலை 'கடம்பு' என சொல்வார்கள்..அதுவும் சுவையாக இருக்கும். அண்டை வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுத்தனுப்புவார்கள்.

இங்கு கிடைக்கும் எந்த பட்டர் என்றாலும் பரவாயில்லை அதனை உருக்கும்போது முருங்கை இலையையும் சேர்த்து உருக்கினால் நல்ல வாசனை வரும் சுவையும் நன்றாக இருக்கும். 

அப்பு (அம்மையா) வீட்டில் பல பசுமாடுகள் இருந்ததினால் அடிக்கடி கடும்பு பால் கிடைக்கும் சிறு வயதில் நானும் சாப்பிட்டிருக்கின்றேன் எனக்கும் அதன் சுவை நன்கு தெரியும் ராசவன்னியன். 

Link to comment
Share on other sites

அப்படியானால் அனேகமாக எல்லா கடவுள் சிலைகளுக்கும் பண்டிக்கொழுப்பும் எலும்பும் கலந்துதான் நெய் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நெய் வாங்கிறதெண்டால் ஒரு மாட்டுப்பண்ணை வைச்சிருக்கிறவரிட்டைதான் போகோணும் கண்டியளோ!
மற்றும் படி இப்ப எல்லாத்திலையும் கலப்படம். சின்ன வயதிலை முருகனுக்கு நெய்விளக்கு ஏற்றின ஞாபகம் இப்பவும் இருக்கு....விரத நாட்களிலை சோற்றோடை பருப்பு கீரை நெய்யும் விட்டு சாப்பிட்டால் ........ ஒரு சந்தோசம் இனிமை குளிர்ச்சி உடம்பில் தெரியும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஜிடபிள் நெய்யும் கடைகளில் கிடைக்கிறது , அது கூட வாங்கிப் பயன்படுத்தலாம்.....!

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, suvy said:

வெஜிடபிள் நெய்யும் கடைகளில் கிடைக்கிறது , அது கூட வாங்கிப் பயன்படுத்தலாம்.....!

Image associée

உது பூந்திலட்டுக்கு சரிவராது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உண்மையான நெய் வாங்கிறதெண்டால் ஒரு மாட்டுப்பண்ணை வைச்சிருக்கிறவரிட்டைதான் போகோணும் கண்டியளோ!
மற்றும் படி இப்ப எல்லாத்திலையும் கலப்படம். சின்ன வயதிலை முருகனுக்கு நெய்விளக்கு ஏற்றின ஞாபகம் இப்பவும் இருக்கு....விரத நாட்களிலை சோற்றோடை பருப்பு கீரை நெய்யும் விட்டு சாப்பிட்டால் ........ ஒரு சந்தோசம் இனிமை குளிர்ச்சி உடம்பில் தெரியும்.

குமாரசாமி அண்ணை  சொல்வதுதான் சரி.
இப்போது.... எதிலும் கலப்படம் என்னும் போது...
"சூப்பர் மார்க்கெட்டில்... சுத்தமான நெய்"   தேடுவது, வீண் வேலை.:D:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.