Jump to content

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா... விலங்குகளின் கொழுப்பா? - எப்படி கண்டுபிடிப்பது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

பசு நெய்

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பசு மாடுகள் இருக்கும். வீட்டிலேயே வெண்ணெய் எடுத்து உருக்கிப் பயன்படுத்துவார்கள். வாசனையும் சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். மாடு இல்லாதவர்கள் இந்தத் தூய ஹோம் மேட் தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்போது மாடுகளே அற்றுப்போய் விட்டன. இபோதெல்லாம் நெய் விதவிதமாக பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. 

எல்லா உணவுப் பொருட்களைப் போலவே, நெய்யிலும் ஏகப்பட்ட கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பொதுவாக கடைகளில் விற்பனை செய்யப்படும் நெய்யில் சேர்க்கப்படும் பொருட்களின் பட்டியலைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. எலும்புத் துகள்கள், ரசாயனங்கள், குரங்குக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு... போன்றவை சேர்க்கப்பட்டிருப்பது பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளன.

பெரும்பாலும் டப்பாக்களில்  'இது சுத்தமான பாலின் கொழுப்பு' (Milk fat) என்று குறிப்பிட்டிருப்பார்கள்.  ஆயுர்வேத மருத்துவப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் கூட Milk fat என்று போட்டே விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நெய்க்கும், பாலின் கொழுப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பு ஒருபோதும் நெய்யாகாது.

நெய்

முதலில் நெய் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

இதற்கு மிக முக்கிய மூலக்கூறு பால். அந்த பாலினை நன்றாகக் காய்ச்சி, பிறகு அதை ஆற வைத்து, அதில் ஒரு துளி தயிரைக் கலந்து ஆறு மணி நேரம் உறைய வைக்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அதை எடுத்துப் பார்த்தால் முழுவதுமாக அந்த பால் தயிராக மாறியிருக்கும். அந்தத் தயிரில் சிறிது நீர்விட்டு நன்றாகக் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து வந்துவிடும். அந்த வெண்ணெயை வாணலியில் இட்டுக் காய்ச்சினால் தனியாகப் பிரிந்து வரும். இதுவே உண்மையான முறை. இதற்குப் பதிலாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பை நெய்யாக்குவது சரியான முறை அல்ல. 

பாலைத் தயிராக்கி தயிரை வெண்ணெயாக்கி அதை நெய்யாக்குவதுதான் சுத்தமானது. இதற்குத்தான் நோய் தீர்க்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. மாறாக நேரடியாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பு நெய்யை உண்டால்  உடலால் அதனை ஜீரணிக்க முடியாது. கொழுப்பாகவே உடலில் சேர்த்து வைக்கும். அது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். 

சராசரியாக 40 லிட்டர் பாலைத் தயிராக்கி பிறகு அதிலிருந்து வெண்ணெயை எடுத்து நெய்யாக்கினால்  ஒருகிலோதான் கிடைக்கும். ஆனால், வணிகம் என்று வந்து விட்டால் இதில் பெரிய லாபம் இல்லை. அதனால், இயற்கையான எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக பாலில் இருந்து கொழுப்பை எடுத்து அதோடு  பல ரசாயனங்கள் மற்றும் விலங்கு கொழுப்புகளைச் சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். 

கொழுப்பெடுத்தது போக, மிஞ்சும் பாலையும் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்து கிடைக்கும் வழிகளில் எல்லாம் லாபம் பார்க்கிறார்கள். 

நெய்

ஆட்டுப்பால்,  எருமைப்பாலில் இருந்தும் இதைத் தயாரிக்கலாம். ஆனால் அதற்கு பெரிய மகத்துவம் இல்லை. நாட்டு மாடுகளின் நெய்யே நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும். இதுமாதிரியான உண்மையான பொருள் வேண்டுமென்றால்,  நாமே வீட்டில் பசும்பால் வாங்கி காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் பெற்று நெய்யாக்கிப் பயன்படுத்தலாம். 

நாட்டு மாடுகள் குறைந்த அளவு பாலையே கொடுக்கும். திமில்கள், மாடலான கழுத்து, கொம்புகள் உள்ள நமது நாட்டுக்குச் சொந்தமான ரகங்களில் இருந்து பெறப்படும் நெய்க்கே அனைத்து மருத்துவக் குணங்களும் உண்டு. இதுதான் உடலின் செல்களுக்குள் எளிதாக ஊடுருவி தேவையான அனைத்துச் சத்துகளையும் வழங்கும். தேவையற்றக் கழிவுகளையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றும்.

இந்த நெய்யை நாள்தோறும் உட்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். நரம்புகள், எலும்புகள் பலப்படும், மூளை வளர்ச்சிக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீராகும், உடல் பருமன் சீராகும், இதய நோய், மூட்டு வலி சீராகும். அனைவரும் எதிர்பார்க்கும் ஒமேகா சத்துகள் இதில் உள்ளது அதுமட்டுமல்லாமல் பல வைட்டமின்களும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் இதில் அடங்கியுள்ளன.

http://www.vikatan.com/news/health/101906-how-to-identify-pure-ghee.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழரசு said:

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா... விலங்குகளின் கொழுப்பா? - எப்படி கண்டுபிடிப்பது?

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது....

....

....

http://www.vikatan.com/news/health/101906-how-to-identify-pure-ghee.html

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

அதைத்தான் நானும் தேடினன் விகடனும் பீலா விடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

தண்ணீரில் மிதந்தால் நெய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெய் இட்டு நம்ம தமிழர்கள் பெரிதாக சமைப்பதில்லை குறிப்பா கிழக்கில்  வெளிநாடுகளில் கூட இந்தியர்கள் வெறும் சோற்றில் நெய்யை ஊற்றி சப்பிடுவார்கள் அதைக்கண்டிருக்கிறேன்  எனக்கு அந்த மணம் பிடிக்காது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நெய் இட்டு நம்ம தமிழர்கள் பெரிதாக சமைப்பதில்லை குறிப்பா கிழக்கில்  வெளிநாடுகளில் கூட இந்தியர்கள் வெறும் சோற்றில் நெய்யை ஊற்றி சப்பிடுவார்கள் அதைக்கண்டிருக்கிறேன்  எனக்கு அந்த மணம் பிடிக்காது 

மதுரை பகுதி கிராமங்களில் பசு வெண்ணையை அடுப்பில் உருக்கி நெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலைகளைப் போட்டு காய்ச்சுவார்கள்.. அதில் வெண்ணை உருகி நெய்யானதும், நெய்யை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யில் வறுத்த முருங்கை இலைகளோடு சூடான சாதத்தை பிசைந்து சாப்பிட்டல் அதன் ருசியே தனி.. நான் சிறுவயதில் பலமு|றை சாப்பிட்டுள்ளேன்..!

அதே போல் புதிதாக கன்று ஈன்றவுடன் சுரக்கும் பசும்பாலை சுண்டக் காய்ச்சினால் பால் திரண்டு பதமாக வரும்..திரட்டுப்பாலை 'கடம்பு' என சொல்வார்கள்..அதுவும் சுவையாக இருக்கும். அண்டை வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுத்தனுப்புவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

மதுரை பகுதி கிராமங்களில் பசு வெண்ணையை அடுப்பில் உருக்கி நெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலைகளைப் போட்டு காய்ச்சுவார்கள்.. அதில் வெண்ணை உருகி நெய்யானதும், நெய்யை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யில் வறுத்த முருங்கை இலைகளோடு சூடான சாதத்தை பிசைந்து சாப்பிட்டல் அதன் ருசியே தனி.. நான் சிறுவயதில் பலமு|றை சாப்பிட்டுள்ளேன்..!

அதே போல் புதிதாக கன்று ஈன்றவுடன் சுரக்கும் பசும்பாலை சுண்டக் காய்ச்சினால் பால் திரண்டு பதமாக வரும்..திரட்டுப்பாலை 'கடம்பு' என சொல்வார்கள்..அதுவும் சுவையாக இருக்கும். அண்டை வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுத்தனுப்புவார்கள்.

இங்கு கிடைக்கும் எந்த பட்டர் என்றாலும் பரவாயில்லை அதனை உருக்கும்போது முருங்கை இலையையும் சேர்த்து உருக்கினால் நல்ல வாசனை வரும் சுவையும் நன்றாக இருக்கும். 

அப்பு (அம்மையா) வீட்டில் பல பசுமாடுகள் இருந்ததினால் அடிக்கடி கடும்பு பால் கிடைக்கும் சிறு வயதில் நானும் சாப்பிட்டிருக்கின்றேன் எனக்கும் அதன் சுவை நன்கு தெரியும் ராசவன்னியன். 

Link to comment
Share on other sites

அப்படியானால் அனேகமாக எல்லா கடவுள் சிலைகளுக்கும் பண்டிக்கொழுப்பும் எலும்பும் கலந்துதான் நெய் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நெய் வாங்கிறதெண்டால் ஒரு மாட்டுப்பண்ணை வைச்சிருக்கிறவரிட்டைதான் போகோணும் கண்டியளோ!
மற்றும் படி இப்ப எல்லாத்திலையும் கலப்படம். சின்ன வயதிலை முருகனுக்கு நெய்விளக்கு ஏற்றின ஞாபகம் இப்பவும் இருக்கு....விரத நாட்களிலை சோற்றோடை பருப்பு கீரை நெய்யும் விட்டு சாப்பிட்டால் ........ ஒரு சந்தோசம் இனிமை குளிர்ச்சி உடம்பில் தெரியும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஜிடபிள் நெய்யும் கடைகளில் கிடைக்கிறது , அது கூட வாங்கிப் பயன்படுத்தலாம்.....!

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, suvy said:

வெஜிடபிள் நெய்யும் கடைகளில் கிடைக்கிறது , அது கூட வாங்கிப் பயன்படுத்தலாம்.....!

Image associée

உது பூந்திலட்டுக்கு சரிவராது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உண்மையான நெய் வாங்கிறதெண்டால் ஒரு மாட்டுப்பண்ணை வைச்சிருக்கிறவரிட்டைதான் போகோணும் கண்டியளோ!
மற்றும் படி இப்ப எல்லாத்திலையும் கலப்படம். சின்ன வயதிலை முருகனுக்கு நெய்விளக்கு ஏற்றின ஞாபகம் இப்பவும் இருக்கு....விரத நாட்களிலை சோற்றோடை பருப்பு கீரை நெய்யும் விட்டு சாப்பிட்டால் ........ ஒரு சந்தோசம் இனிமை குளிர்ச்சி உடம்பில் தெரியும்.

குமாரசாமி அண்ணை  சொல்வதுதான் சரி.
இப்போது.... எதிலும் கலப்படம் என்னும் போது...
"சூப்பர் மார்க்கெட்டில்... சுத்தமான நெய்"   தேடுவது, வீண் வேலை.:D:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.