Jump to content

ஒரு தமிழ்க் குடும்பத்தின் பயணக் கனவுகளை துன்பத்துக்குள்ளாக்கிய எயர் கனடா நிறுவனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர்.

   தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா  விமான சேவையிடம் ரொறொன்ரோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர்.
யூன் மாதம் 27ந்திகதி திவா மகேஸ்வரன், அவரது மனைவி சாந்தி திவாகரன் இவர்களது இரண்டு இளம் பையன்கள் மகேஸ்வரனின் தாயார் அனைவரும் ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு சென்றனர். ரொறொன்ரோவிலிருந்து லண்டன் செல்லும் எயர் கனடா விமானம் புறப்படுவதற்கு 2.5மணித்தியாலங்களிற்கு முன்னராகவே விமான நிலையம் சென்று விட்டதாக தெரிவித்தனர். லண்டனிலிருந்து எயர் இந்தியா விமானம் மூலம் சிறி லங்கா செல்வது இவர்களது பயணத்திட்டம். இது ஒரு குடும்ப விடுமுறை. 17-வருடங்களின் பின்னர் மகேஸ்வரன் முதல் தடவையாக தனது தாய்நாடு செல்லும் பயணம்.

ஆனால் இவர்களது பயண திட்டம் எயர் கனடாவின் செய்கையால் சிதைக்கப்பட்டது. எயர் கனடா ஏஜன்ட் இவர்களை தவறான செக்-இன் லைனிற்கு அனுப்பியதிலிருந்து ஆரம்பித்தது அனைத்தும் எனலாம். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணித்தியாலம் 40-நிமிடங்கள் இருக்கையில் சரியான வரிசைக்கு திருப்பி அனுப்பபட்டனர். அவர்களிற்கு முன்னால் லண்டன் செல்லும் மூவர் நின்றதாக தெரிவித்தனர். ஏஜன்ட் ஒருவர் இவர்களை சரிபார்த்த சமயம் ஐந்து பேர்கள் கொண்ட குடும்பம் செல்ல முடியாதென மனேஜர் அறிவித்ததாக திவாகரன் தெரிவித்தார். இவர்களிற்கு கவலை ஏற்பட்டதுடன் அழும் நிலைமைக்கு வந்து விட்டனர்.

விமானத்தில் இடம் இல்லாததால் தாங்கள் செல்ல முடியவில்லை என இவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் அப்படி அல்ல. இது குறித்து சிபிசியிடம் எயர் கனடா தெரிவித்ததாவது விமானம் புறப்படும் போது எட்டு இருக்கைகள் வெறுமையாக இருந்ததென தெரிவித்துள்ளது. ஆனால் திவாகரன் குடும்பத்தினர் எவருக்கேனும் இருக்கை வழங்கப்படாததற்கான காரணத்தை நிறுவனம் தெரிவிக்கவில்லை. பதிலாக குடும்பத்தினர் வேறொரு ரிக்கெட்டிங் லைனிற்கு அனுப்பப்பட்டு அவர்களது விமானத்திற்கு மீள புக் செய்யுமாறு கூறப்பட்டனர். ஒரு மணித்தியாலம் காத்து நின்ற பின்னர் இரவு 11மணியளவில் இவர்களை கைவிட்ட நிலையில் புக் செய்யும் இடம் மூடப்பட்டது.

மற்றுமொரு ஏஜன்டிடம் இவர்கள் திருப்பி அனுப்ப பட்டனர் ஆனால் அவர் தனக்கு ரிக்கெட் வழங்க பயிற்சி அளிக்கப்படவில்லை தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களுடன் தொடர்பு கொண்ட அதே மனேஜர் இவர்களை அணுகி வீடு செல்லுமாறும் அடுத்த நாள் பயணத்திற்கு மற்றொரு விமானத்திற்கு எயர் கனடா பதிவு செய்யுமென மிக சாதாரணமாக தெரிவித்துள்ளார். அதிகாலை 12.45மணிக்கு குடும்பம் விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளது. அடுத்த நாள் பயணத்திற்காக மீண்டும் விமான நிலையம் சென்றுள்ளனர்.

விமான நிறுவன ஏஜன்ட் ஒருவர் முதல் நாள் இவர்கள் பயணத்திற்காக விமான நிலையம் வரவில்லை என "no-show," காட்டுகின்றதென கூறப்பட்டுள்ளது. பயண நிறுவம் மூலம் இவர்கள் ரிக்கெட் வாங்கியிருப்பதால்"private fare," பதிவாகி இருக்கின்றதென தெரிவித்த ஏஜன்ட் இவர்கள் பயண நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் பயண நிறுவனத்தினர் அனைவரும் குழப்பத்திற்காளானார்கள். எயர் கனடாவின் இத்தகைய நடவடிக்கைகளிற்கு காரணம் புரியவில்லை. குடும்பத்தினர் புதிதாக பயண சீட்டுக்களை பெற்று தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இவர்களது பயணத்திற்கு டொலர்கள் 12,326.38 செலவழித்துள்ளனர்.

விடுமுறை கழித்து நாடு திரும்பிய இவர்கள் தங்களிற்கு ஏற்பட்ட இன்னல்களையும் அசம்பாவிதங்களையும் எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். பயணத்தில் தங்களிற்கு ஏற்பட்ட இன்னல்கள் சங்கடங்களிற்கு எய கனடா மன்னிப்பு கோர வேண்டும் எனவும் விரிவான விளக்கம் தர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். "இனி ஒரு போதும் எய கனடாவில் பயணம் செய்ய மாட்டேன்" என கூறிய திவாகரன், ''நான் எனது மரண படுக்கையில் இருந்து வைத்தியத்திற்காக யு.எஸ் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் இறப்பனே தவிர எய கனடாவில் பயணிக்க மாட்டேன" என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக விளக்கமொன்றை சிபிசி செய்தி எயர் கனடாவிடம் கேட்ட போது நிறுவனத்தின் பேச்சாளர் பீற்றர் விற்ஸ்பற்றிக் "குறிப்பிட்ட பிரச்சனைக்குள் என்னால் வரமுடியாது" என மின் அஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார். இப்பதில் அவர்கள் தங்கள் தவறை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை என்பதை தெரிவிக்கின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=189993&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு மேலதிக நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று கூறலாமே  இது பற்றி  தெரிந்தவர்கள் அனுபவபட்டவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு மேலதிக நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று கூறலாமே  இது பற்றி  தெரிந்தவர்கள் அனுபவபட்டவர்கள் 

முனிவர், தனி ஒருவராய் நாலைஞ்சு சிட்டுகளோட,  செட்டில் பண்ணி தனிக்காட்டு ராஜா என்று வந்து நிக்கிறார். இனி கொஞ்ச நாளில, காட்டுக்குள்ள ஓடி, முனிவர் என்று பழைய படி வந்து நிக்காமல் இருந்தால் சரி. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

முனிவர், தனி ஒருவராய் நாலைஞ்சு சிட்டுகளோட,  செட்டில் பண்ணி தனிக்காட்டு ராஜா என்று வந்து நிக்கிறார். இனி கொஞ்ச நாளில, காட்டுக்குள்ள ஓடி, முனிவர் என்று பழைய படி வந்து நிக்காமல் இருந்தால் சரி. :grin: 

யான் அறியேன் வரலாம் வராமல் போகலாம்  நாதா :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு மேலதிக நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று கூறலாமே  இது பற்றி  தெரிந்தவர்கள் அனுபவபட்டவர்கள் 

எல்லாம் ஒரெ குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் ஒரெ குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

அப்போ தங்களின் அனுபவத்தையும் கூறலாமே தல :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ தங்களின் அனுபவத்தையும் கூறலாமே தல :10_wink:

தனி நான் சொல்ல வந்தது விமான சேவைகளின் வண்டவாளத்தை.இதே ஆசிய நாட்டில் நடந்து இருந்தால் இந்த திரி பத்தி எரிந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எயார் கனடாவை கடிக்கிற நேரம் ரிக்கற் வித்தவனை பிடிச்சு இரண்டு சாத்து சாத்த எல்லாம் சரிவரும்.:cool:

ரிக்கற் வித்தவர் எப்பிடியும் எங்கடை கோட்டுசூட்டு போட்டவராய்த்தான் இருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

தனி நான் சொல்ல வந்தது விமான சேவைகளின் வண்டவாளத்தை.இதே ஆசிய நாட்டில் நடந்து இருந்தால் இந்த திரி பத்தி எரிந்து இருக்கும்.

ம்ம் இலங்கை என்றால் இந்நேரம் தீமிதித்து சாட்டை அடித்திருப்பார்கள் tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.