Jump to content

Recommended Posts

நாயகி - சிறுகதை

 
 

ஜான் சுந்தர் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

டிப்பியை ஸ்டீபன் அண்ணன்  ஊட்டியிலிருந்து எடுத்து வந்திருந்தார். யாரோ ‘`நல்ல குட்டி, ஜெர்மன் ஷெப்பெர்டு க்ராஸ்’’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

``சாதி  நாயும் நாட்டு நாயும் சேர்ந்து போட்ட குட்டிடா’’ ஸ்டீபண்ணன் விளக்கினார். ``ஊட்டில  பூன, நாயி, மாடு அல்லாத்துக்குமே முடி அதிகமாத்தான் இருக்கும் இல்ல டீபண்ணா’’ என்றான் இளங்கோ. அவனுக்கு `ஸ்’ வரவில்லை. வேறு சிலவும் வராது.

64p1.jpg

`பைஜாமா ஜிப்பா’வை `பைமாமா மிப்பா’ என்பான் `இங்க’ என்பதற்கு `இஞ்ச’ என்பான். `ம்ம்... சொட்டரோடவே பொறந்துட்டா குளுராதில்ல’’ டிப்பியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அது என் விரல்களை நக்கியது. அதன் மீசையரும்பு விரலில்படக் கூச்சமாக இருந்தது. ``புருபுரு  பண்ணுதுடா’’ என்றதும்  இளங்கோவும் டவுசரின் பின்புறம் கைகளைத் துடைத்துவிட்டு  ``இஞ்ச வா இஞ்ச வா’’ என்றவாறு கையை நீட்டினான். கறுத்த கோலிக்கண்கள் மின்ன அவனையும் நக்கியது டிப்பி. தேநீர்க்கடையில் புதுரொட்டி வந்து இறங்கும்போது வாங்கி, அதைப் பிட்டு உள்ளே பார்த்திருக்கிறீர்களா? அதுதான் டிப்பியின் நிறம். ஈரச்சந்தனம் காய்ந்து வெளுத்தாலும் அப்படித்தான் இருக்கும். ரொட்டியின் மேற்புறக்காவி சற்றே வளைந்து வெளுக்குமில்லையா? அதுதான் டிப்பியின் வயிற்றோரத்து நிறம். ஓடிவரும்போது வாழைப்பழத்தோல் காதுகள் இரண்டும் எழுந்தெழுந்து விழும். உயிரை விரித்து அணைத்துக் கொள்ளத் தூண்டும் அழகு.

வீட்டில் என்னை `டிக்கா’ என்று கூப்பிடுவார்கள். `கிருஷ்ணமூர்த்தி’ எனப்படும் நபர் `கிட்டு’வாகி `கிட்டான்’ ஆவதுபோல என் தாய்மாமன் அவரோடு `லிப்டன் டீ’ கம்பெனியில் பணிபுரிந்த வெள்ளைக்கார தோஸ்த்தின் நினைவாக வைத்த `டிக்ரூஸ்’ என்ற பெயர் `டிக்கு’வாகி `டிக்கான்’ என்றானது. `டிக்கானும்  டிப்பியும்’ என்றால் பொருந்திப்போகிறதா இல்லையா? எனவே, நான் அதை  டிப்பி  என்று நினைத்துக் கொண்டிருக்க ஸ்டீபண்ணனோ `ட்டிப்பி’ என்றே விளித்தார். அதிலென்ன? நான் என் இஷ்டப்படி அழைத்தேன். மற்றவர்களையும் அப்படியே சொல்ல வைத்தேன்.
ஸ்டீபண்ணனின் அம்மா, அக்காஆஞ்சி, தங்கைகளான, லல்லி, பெமிலா, சுகுணா, அப்புறம் சின்னவள் சிட்டு வரையிலுமான எல்லோரும் `ட்டிப்பி’ என்று `T’ போட்டு அழைக்க   நான் எனது வலுவான முயற்சியில் இளங்கோ, ரமேஷ், குணான், வீதிக்காரர்கள், அதைத்தாண்டி  பள்ளித் தோழர்கள், மளிகைக்கடை அண்ணாச்சி, டீக்கடை ஆறுமுகண்ணன், உப்புக்காரத் தாத்தா, கடலைக்கார பாய் , இஸ்திரிக்காரக்கா, இட்லி, ஆப்பம் விற்று வரும் அண்டாக்காரக்கா எல்லோரையும் `D’ போட்டு டிப்பி என்றழைக்க வைத்தேன்.

அண்டாக்காரக்காவின் இட்லியை டிப்பிக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அந்தக்காவுக்கு டிப்பியைப் பிடித்திருந்தது குறித்து ஆச்சர்யமாக இருந்தது. டிப்பியை ஸ்டீபண்ணன்தான் வளர்க்கிறார் என்றாலும், அது எங்களுடையதும்தான். ஒட்டுச்சுவர்கொண்ட நடுத்தர வர்க்கத்தினரிடம் மிகுந்து கிடக்கும் ‘ஒண்ணுக்கொண்ணு ஆதரவு’,  `நேந்து கலந்து போறது’, `உன்னவிட்டா ஆரிருக்கா?’  போன்ற வாக்கியங்கள், தடித்த காம்பவுண்டு சுவர்களுக்குக் கிட்டாது.

ஞாயிற்றுக்கிழமையானால் ஸ்டீபண்ணன் டிப்பியைக் குளிக்க வைப்பார். உதவிக்கு நானும் சுகுணாவும். துவைப்பதற்கான சோப்பை   நனைத்து நுரையைக் கிளப்பி அவர் தேய்க்க, நாங்கள் இருவரும் கீழே விழுகிற நுரையை அள்ளியள்ளி டிப்பியின் நெற்றி, முதுகு, தாடை, முன்னங்கால் மேலெல்லாம் ஒட்டவைத்து ரமணிக்கா வீட்டு வெள்ளை `புஸுபுஸு’ நாய் `ஷீலா’வின் தோற்றத்துக்கு மாற்றப் பார்ப்போம். அவ்வப்போது நாக்கை வெளியே தொங்கவிட்டு வாயைத் திறக்கும்  கணத்தில் டிப்பி பற்களைக்காட்டிச் சிரிப்பது போலிருக்கும். அசட்டுச் சிரிப்பு. அற்பருக்கும் ஞானிகள் வழங்கும் அதே சிரிப்பு. திறந்தே வைத்திருக்கும் வாயைத் திடுமென மூடும்போது கோபித்துக்கொள்வதுபோலவும் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் டிப்பி தனது மொத்த உடலையும் உதறும்.  நீரும் நுரையும் மூவர் மேலும் சிதறும். எளிய வாழ்வின் மகோன்னத அழகு பொங்கும் அந்தத் தருணத்தைப் பிடித்துவைத்துப் பார்த்தால் அரக்கு நிறத்தில் அரைக்கால் சட்டையணிந்த சிறுவன், கருநீலத்தில் வெள்ளை பூத்த பாவாடைச் சிறுமி, அவளது மடித்த சடை, அதை வெயில் கொஞ்சுவதால் கறுப்பிலிருந்து கசியும் ஓரச்செம்பட்டை, செம்மலர்ந்த ரிப்பன் பூக்கள், மௌனசாட்சியான துவைக்கிற கல், கல்லையே பிரதியெடுத்து நெஞ்சில் வைத்தாற்போல உழைப்பின் திரட்சியோடான வெற்றுமாரிளைஞன், பஞ்சும் பொன்னுமாயொரு கண்மின்னும் நாய்க்குட்டி, வெளி முழுக்கத் தெறிக்கும் நிறமிழந்த நீர்த்திசுக்கள், சோப்பு நுரை பூமியுருண்டைகள், அதிலோடும் ஏழு வண்ண நதி, இரண்டாய் பிளந்த தக்காளி தனது விதைகள் தெரியத் திறந்து மூடி திறந்து மூடி பறப்பதுபோல பறக்கும் பட்டாம்பூச்சி, இத்தனையும்  காட்சிப்படும்.

டிப்பியின் மேலுள்ள எனதன்பை அதற்குப் புரியவைக்க நான் திட்டம் வகுத்துச் செயல்புரிந்தேன். தன்னுடைய பழைய பெல்ட்டை அறுத்து டிப்பியின் கழுத்துப் பட்டையாக்கியிருந்தார் ஸ்டீபண்ணன். நான் என் தலைமுடியிலிருந்த தேங்காயெண்ணைப் பிசுக்கை உள்ளங்கையில் தேய்த்தெடுத்துக் காய்ந்த விரிசல்களுடன் இருந்த பட்டையின் மேற்பரப்பு பளபளத்து மின்னும்வரை தேய்த்தேன். பக்கிளைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்த பெல்ட் நுனிக்கு சுகுணாவின் ஜடையிலிருந்த `லப்பர் பேண்டை’ கழற்றிப் போட்டுக் கம்பீரத்தை கனகம்பீரமாக்கினேன். கறிக்குழம்பு நாள்களில் எலும்புகளைச் சேகரித்தேன். பந்தை வீசி, அதைக் கவ்விவரப் பழக்கினேன். பத்துப் பைசாக்களை டிப்பியின் வாலைப் பிடித்து ஆட்டும் வருக்கிகளாக மாற்றினேன். கையை டிப்பியின் வாய்க்குள் மணிக்கட்டுவரை விட்டு எடுத்தேன். இளங்கோ கண்களை விரிப்பான். `‘எஞ்செ நெஜமா கடிக்கலையா?’’

ஆள்காட்டி விரல்கொக்கியால் என் வாயோரத்தைக் காதுவரை இழுத்துக் கண்ணாடியில் பார்க்க முயன்றபோது தலையில் கொட்டு விழுந்தது. அம்மா! ``டிப்பிக்கு கடவாப்பல்லு மூணும் ஒண்ணா சேந்திருக்கும்மா! நமக்கெல்லாம் தனித்தனியா தான இருக்கு?’’ மல்லாந்தபடி டிப்பி என்னோடு விளையாடிக்கொண்டிருந்தபோது அதன் வாயின் மேலண்ணம் ஸ்டீபண்ணனின் வயிறு கணக்காக கட்டுக்கட்டாய் வரியோடித் தெரிந்தது. மைதானத்தில், மரமேறுவதில், மல்லுக்கட்டுவதில் ஆகும் என் காயங்களை நக்கி நக்கியே ஆற்றிவிடும் டிப்பி.

 ஸ்டீபண்ணன் மீது எனக்குப் பொறாமையாக இருந்தது. இன்றுவரை எனக்கு நாக்கை மடித்து சீழ்க்கையடிக்கத் தெரியவில்லை. ரமேஷ்கூட அடிக்கிறான்.  ஸ்டீபண்ணன் தனது சீழ்க்கை சப்தத்தில் டிப்பியை மயக்கி வைத்திருந்தார். பக்கத்தில் இருப்பவர் காது கிழிய `ஃபீல்ல்க்க்க்க்’கென ஸ்டீபண்ணன் சீழ்க்கையடித்தால், எங்கிருந்தாலும் புழுதியெழப் பறந்துவரும் டிப்பி. அர்ச்சுனனைப் பிடித்தபோதுதான் டிப்பி வீதியின் செல்ல நாயானது. பித்தளைப் பாத்திரங்களைத் திருடிக்கொண்டு ஓடிய அவனைக் கவ்விய அது ஸ்டீபண்ணன் வந்து ``விடுடீ பாப்பா’’ என்று சொல்லும்வரை விடவில்லை. ``ச்சே! அவன் சொல்றவரைக்கும் விடல பாருங்க, என்னா அறிவு’’ என்றார்கள். தவிர அர்ச்சுனின் கையைக் கவ்வியிருந்தபோது அவளது உறுமல் பயங்கரமாயிருந்தது. எனக்கு அவளருகில் போகவே பயமாயிருந்தது. மேலும் என்னைப் பார்த்தாளா என்பதிலும் குழப்பம். ``பட்டேல் ரோட்லருந்து இங்க வந்து திருடுற அளவுக்குப் பெரியாளாயிட்ட... ஏண்டா?’’ என்று மிரட்டிய கையோடு ஓங்கி அவனை அறைந்தார் போலீஸ்காரர்; பின்பு டிப்பியின் கழுத்தைத் தடவி ஒரு பாராட்டும். பட்டறைக்கார ராமண்ணன் ``டேஷனுக்கு வேணா கூட்டுப் போங் சார். கொலகாரனையெல்லாம் புடிச்சுக் கொதறி வெச்சுரும். பயங்கர அறிவு அதுக்கு’’ என்றார். டிப்பியின் படம் செய்தித்தாளில் வந்தது.

 வ.உ.சி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி. டிப்பியைக் கூட்டிக்கொண்டு அங்கே போகலாம் என்று ஸ்டீபண்ணன் சொல்ல, கிளம்பிவிட்டோம். ஹையோ! அங்கே எத்தனை வகை நாய்கள். ரமணியக்கா வீட்டிலிருந்ததுபோல வெள்ளை புஸுபுஸு நாய்கள் நிறைய இருந்தன. ரமணியக்கா வீட்டின் உள்ளேயே அந்த புஸுபுஸூ நாயைச் சங்கிலி போட்டுக் கட்டிவைத்து வளர்ப்பதால் கிட்டே போய்ப் பார்க்க முடிந்ததில்லை. அதற்கென்று தனியாக சோப்பு, பவுடரெல்லாம் உண்டாம். ஷீலா அவ்வப்போது சங்கிலியுரச ரோட்டுக்கு ஓடி வந்துவிடும். பின்னாலேயே ரமணியக்கா புருசனோ, மகனோ ஓடி வருவார்கள். ஷீலா, `பொமரேனியன்’ சாதி என்பதை  நாய்கள் கண்காட்சியில்தான் தெரிந்துகொண்டேன். அப்புறம் `லேப்ரடார்’ சாதி அழகுக்குட்டிகளையும் பார்த்தோம். சீமாட்டிகளின் கைப்பைகளைப் போலிருந்த பொடிக்குட்டி நாய்கள், சீமாட்டிகளைப் போலவே மிதப்பான பாவனையுடனான நாய்கள்,  உடலெங்கும் மை சிந்திவிட்டதுபோலிருந்த நாய்கள், சப்பை மூக்கன்கள், கிழட்டுத்தோலன்கள், மனிதத் தொடையிலிருந்து அரை கிலோ கறியைப் பிரித்தெடுக்கும் `காவல்வீரன் டாபர்மேன்’கள். `கொரவளச் சங்கயே கவ்விப்போடும்’ என்றார் `வெள்ளை வேட்டி’ தாத்தா. சில நாய்களுக்கு அவற்றின் எஜமானர்கள்போலவே முகமும் இருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சீனர் போலிருந்த ஒருவரது இரண்டு நாய்களுக்கும் கண்கள் இடுங்கி இருந்தது மட்டுமல்லாது, அவரைப் போலவே பின்புறத்தை ஆட்டி ஆட்டி நடந்தன.

64p2.jpg

``நெஜமாவே அவன் சைனாக்காரன்தான்டா... பல் டாக்டரு’’ என்றார் ஸ்டீபண்ணன்.  கறுத்துப் பெருத்த போலீஸ்காரரின் `புல்டாக்’ ஒன்று தனது ஒற்றைப் புருவத்தை மேலே உயர்த்தி முறைத்ததாகச் சுகுணா சொன்னாள். இருக்கும் என்றுதான் நானும் நினைத்தேன். கறுத்த முகத்தின்  இரண்டு புருவங்களின் மேலும் ஒவ்வொரு ஆரஞ்சு வண்ணப்புள்ளிகளைக்கொண்ட நாயைப் பார்த்தபோது ஏனோ பயமாயிருந்தது. முகம் முழுக்க முடியோடிருந்த  சடைநாய்க்குட்டிகளைப் பார்க்கப் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சுகுணாவுக்கு ஒரே சிரிப்பு. குள்ளமான நாய்க்குட்டிகளையும் பார்த்தோம். தரையோடு ஒட்டிய நீளக்குள்ளம். உருண்டுவிடாமலிருக்க தடுப்புவைத்த மாதிரி குட்டிக் கால்கள், நீளக் காது. ``ச்சே... காசிருந்தா வாங்கலாம்... இல்ல பையா’’ என்றாள் சுகுணா. அந்தக் குட்டியின் சாதிப் பெயர் மட்டும் விளங்கவில்லை. இங்கிலீஷ் டீச்சர் ராஜேஸ்வரி `Does not’  என்று எழுதிவிட்டு அதை `டஷின்ட்’ என்று படிப்பார்கள். எனக்கு ஒரே குழப்பம். அந்த மாதிரிதான் ஏதோ சொன்னார்கள். நண்பர்களிடம் குறிப்பிட்டுச் சொல்ல `குள்ள நாய்’ என்பது போதாதா?

ஒலிப்பெருக்கியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளப்போகும்  நாய்களின் பெயர்களை உரிமையாளர்கள் பெயரோடு அறிவித்தார்கள். நான்கைந்து ஜோடிகளுக்குப் பிறகு ‘ஸ்டீபன் – ட்டிப்பி’  என்று அறிவித்தார்கள். `ட்டிப்பி’ என்று  சொன்னதும் காதுகளை விடைத்துப் பின்பு இயல்பானது டிப்பி. ஸ்டீபண்ணன் டிப்பிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஓடுபாதையின் எண்ணைக் கேட்டுவந்தார். நான்காம் நம்பர். போட்டிக்கு நின்றிருந்த நாய்களையும் உடனிருந்த பயிற்றுநர்களையும் பார்த்தாலே நெஞ்சு நடுங்கியது. டிப்பியைத் தவிர, எல்லாமே உயர் ரக சாதிநாய்கள் என்பது மட்டுமல்ல; டிப்பி மட்டும்தான் `பொம்பளப் புள்ள’. மற்ற எல்லோருமே `தடிப்பசங்க’ளாயிருந்தான்கள்.   கொடும் வெயில். சில நாய்களின் வாயிலிருந்து நீரொழுகியது. பயிற்றுநர்கள் அனைவரும்  பந்தயத்தில் கலந்துகொள்ளும் நாய்களுக்கு எதிர்த்திசையிலிருந்து அவற்றை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஸ்டீபண்ணன் என்னிடம் டிப்பியைப் பிடித்துக் கொள்ளச்சொல்லிவிட்டு எதிர்த்திசைக்குப் போய் நின்றார். எங்களுக்குப் பின்னால்  வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்கள் எங்களை ``சொறி நாயையெல்லாம் எதுக்குடா தம்பி கூட்டிட்டு வர்றீங்க? போலீஸ் நாயிங்ககூட ரேஸ் விட்டு ஜெயிக்கவா?’’ என்று கிண்டல் செய்து சிரித்தார்கள். கொடியசைத்ததும் பயிற்றுநர்கள் தங்கள் நாய்களை அழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். நான் அரைமண்டியில் அமர்ந்து டிப்பியின் பின் பகுதியைப் பிடித்துக் கொண்டேன். அதன் காதருகில் சுகுணா ரகசியக் குரலில் ``எப்படியாச்சும் ஜெயிச்சுரு டிப்பி’’ என்றாள். மற்ற நாய்கள் எதிரிலிருந்த தங்களது எஜமானர்களையே பார்த்தபடி துள்ளலோடிருக்க, டிப்பியோ ஸ்டீபண்ணனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பக்கத்து நாய்களையும் சுற்றியிருந்தவர்களையும் மிரள மிரள வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அதன் வாலை பின்னங்கால்களுக்கிடையே தழைத்து வைத்திருந்ததைப் பார்த்த எனக்குக் கவலையாக இருந்தது. மைதானத்தைச் சுற்றியிருந்தவர்கள் எழுப்பிய சப்தத்தில் மிரண்டிருக்கிறதோ என்னவோ?

`ரெடி ரெடி’ என்றார்கள். `ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ரென்ற விசிலோடு சிவப்புத்துண்டை ஆட்டி சமிக்ஞையும் கொடுத்தாயிற்று. நாய்கள் திமுதிமுவென ஓட எழுந்த புழுதியிலும் மைதானத்து ஜனங்களின் `கமான்...கமான்... ரோஸி’ போன்ற கூச்சல்களிலும் ஒன்றுமே புரியவில்லை. சுகுணாதான் எகிறியெகிறிக் குதித்தவாறு ``ஏய்... ட்டிப்பி ஓடு...அட... ஓடு சனியனே’’ என்று அலறினாள். மறு முனையிலிருந்த ஸ்டீபண்ணன். ``ட்டிப்பி...ட்டிப்பி’’ என்று கத்தவும் செய்தார். கடைத்தெரு பைத்தியம்போல சாவகாசமாய் நடந்த  டிப்பி, ஓடுபாதையைவிட்டு விலகப்போன நொடியில் ஸ்டீபண்ணன் தயக்கத்தைத் துறந்து நடுவிரலையும் கட்டைவிரலையும் ஒன்றுசேர்த்து நாக்குக்கடியில் நுழைத்து மடக்கி `ஃபீல்ல்க்க்க்க்’கென சீழ்க்கையை அடித்தவுடன் டிப்பி அனிச்சையாக துள்ளித் தெறித்ததைப் பார்க்க வேண்டுமே... அது ஸ்டீபண்ணனை எப்போது அடைந்திருந்தது என்பதே தெரியவில்லை. நொடிகளில் இவையெல்லாம் நடந்து முடிந்திருக்க மைதானமே ஆர்ப்பரித்துக் கரங்களைத் தட்டியது. பலத்த கூச்சல்களுகிடையில் ‘ஸ்டீபன் – ட்டிப்பி... முதல் பரிசு ஸ்டீபன் – ட்டிப்பி’  என்ற அறிவிப்பைக் கேட்டதும் மாரியாத்தா வந்திறங்கியதுபோல் ``ஏய்....ஏய்...’’ எனத் தன்னை மறந்து வீறிட்டாள் சுகுணா. எனக்குச் சந்தோஷமும் அழுகையும் கலந்துவர என்ன செய்வதென்று புரியாமல் விழித்தேன். `டிக்கா- டிப்பி... முதல் பரிசு டிக்கா- டிப்பி’ என்று அறிவித்திருந்தால் ஆகாதா?  ஸ்டீபண்ணனின் ஒரு கை வெற்றிக்கோப்பையை ஏந்திப் பிடித்தபடியும் மறு கை டிப்பியின் தலையைத் தடவியபடியுமிருக்க நானும் சுகுணாவும் அருகில் அமர்ந்திருந்த டிப்பியின் படம் இன்னொரு முறையும் செய்தித்தாளில் வெளியானது. 

குரங்கு பெடல்போட்டு சைக்கிளோட்டிக் கீழே விழுந்தால், முழங்கையில் நமக்கு ஆகும் சிராய்ப்பின் மேல்த்தோல் இரண்டு மூன்று நாள் கழிந்தவுடன் கறுத்துத் தடித்து எழும்பும்தானே? அதை இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்கு அப்புறம் அரிப்புத் தாங்காமல் பிய்த்து எடுத்தால் இளஞ்சிவப்பில் இருக்குமே, அப்படி  ஒன்றிரண்டு காயங்கள் டிப்பியின் முதுகில்  கொத்துக்கொத்தாய் முடியில்லாமல் செந்தோலாய்த் தெரிந்தன.  எல்லாம் ஈரக்காயங்கள். டிப்பி சைக்கிளா ஓட்டுகிறது? அப்படியே போனாலும் முதுகில் எப்படி? இளங்கோதான் மல்லாக்க விழுவான். டிப்பிக்கெல்லாம் ஆனாலும், வயிற்றில்தானே ஆகும்? ஆஞ்சிக்காவிடம் டிப்பியின் புண் பற்றிச் சொன்னபோது ``ஆங் அது வண்டுக்கடிதான் வேப்பெண்ண வாங்கி ஊத்தி விடுங்கடா சரியாயிடும்’’ என்றாள். அதே மாதிரி வாங்கி `நல்லா சொதம்ப’ ஊற்றிவிட்ட நான்கைந்து நாள்களில் காய்ந்து, வழித்தடத்தில் புல் முளைத்த மாதிரியிருந்தது. அப்புறம் புண்ணிருந்த இடத்தையே காணோம்.  எப்போதாவது டிப்பி தன் வாலைத் தானே கடித்தபடி வெறிகொண்டு சுற்றினாலோ, எட்டாத முதுகுக்குத் தனது கோரைப்பல்லைக் காட்டி உறுமினாலோ ஆஞ்சிக்கா வேப்பமரத்தடி நிழலில் சணல் சாக்குப்பையை விரித்துப்போட்டு உட்கார்ந்து ``வாடி ட்டிப்பி.. வந்து படு’’ என்பாள். அவள் கையில் ஹார்லிக்ஸ் பாட்டிலின் தகர மூடியில் கொஞ்சம் மண்ணெண்ணை இருக்கும். டிப்பியும் நல்லபிள்ளையாக வந்து அவளது தொடையில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும். பெண்கள் நம் தலைமுடிக்குள் கையை  நுழைத்து நகத்தால் நிரவி, விரலால் தேடி ஈரையோ, பேனையோ, ஒட்டுக்குஞ்சையோ நசுக்கியபடியே பேச்சுக் கொடுக்கும்போது, கண்கள் நிலைகுத்திக் கொள்ளுமே... அது என்னவகை போதை? போதைக்கு அடிமையாகிவிட்ட டிப்பியும் ஆஞ்சிக்காவின் மடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கண்களை `டோரி’யாக்கிப் பல்லிளித்தபடி தியான நிலைக்குத் தயாராகும். ஆஞ்சிக்கா அதன் காது மடல்களைப் பிடித்து உட்பக்கம் வெளிவரும்படி விரிப்பாள். உள்ளே கும்பலாய், குடும்பமாய், தனித்தீனியில் தடித்துப்பெருத்ததாய்,  விதவிதமான அளவுகளில் ஒட்டுப் பொட்டுகளைப்போல மொய்த்துக் கிடக்கும் உண்ணிப்பூச்சிகள். அழுக்குப்பழுப்பும் அழுக்குப் பச்சையும் கலந்த நிறத்தில் தடிமனான தோலைக்கொண்ட உண்ணிகள், டிப்பியின் கால்விரல்களுக்கிடையில், காதுகளில், பிடறி முடியில், முதுகில், தாடையில், வயிற்றில் அங்கிங்கெனாதபடி உடலெங்கும் நிறைந்திருக்கும்.  அவைகளைப் பிய்த்தெடுத்து  தகர மூடி மண்ணெண்ணையில் ஊறவைத்துச் சேகரித்தால் மம்மானியமாய்ச் சேரும். உண்ணி கடித்த காயத்துக்கும் ஒரு பொட்டு மண்ணெண்ணையே மருந்து.  நாயுண்ணிகளை, இளங்கோ விதவிதமாய்க் கொல்வான். அடியாட்கள் மாதிரியான `ஆள்காட்டி’, ’கட்டை’ ஆகிய இரண்டு விரல்களால் அழுத்தி `புளிச்’சென்று ரத்தம் தெறிக்க நசுக்கிக்கொல்வது, கல்லில் வைத்து சுத்தியலால் நச்சுவது, காகிதக்கப்பல் செய்து நாயுண்ணிகளை அதிலேற்றி சாக்கடையில் மிதக்கவிட்டு  மூழ்கடிப்பது, எறும்பூறும் இடங்களில் அவைகளை மல்லாக்கப்போட்டு அவற்றை இழுத்துக்கொண்டு எறும்புகள் `ஊர்வலம்’ போவதைப் பார்ப்பது போன்ற கொடூரங்களில் அவன் நிபுணன்.  நான் நல்லவன். தகரமூடியை அப்படியே பற்றவைத்து எரிப்பதோடு சரி. வேறு நுட்பங்கள் தெரியாது.64p3.jpg

இந்த ஒரு `வாரமாவே’ நான் ’வெளாட’ போகவில்லை. காரணம், நான் இளங்கோவிடம் `பேசறதில்ல’ காரணம், அவன்மீது பயங்கர `கடுப்புல’ இருந்தேன். அவனுடைய `கோலிகுண்டுக’, `சிகுரேட்டு அட்ட’, `டீப்ட்டி அட்ட’, `டீச்சுக்கல்லு’, ’பெத்தவாட்ஸ் பொம்பரம்’, `மசே மசே லப்பர் பந்து’ போன்ற சேகரிப்புகள் எல்லாவற்றையும் எங்கு ஒளித்து வைத்திருப்பான் என்று எனக்குத் தெரியும். `அவங்க அவ்வா’ படுத்துக்கொள்கிற கட்டிலின் கீழே மண்பானையில் கொஞ்சமும் பிரிட்டானியா பிஸ்கெட் அட்டைப்பெட்டியில் கொஞ்சமுமாக ஒளித்து வைத்திருக்கிறான். `அத்தனக்கிம் சீமண்ணய ஊத்தி பத்த வெச்சறலாமா’ என்கிற அளவுக்குக் கோபம். இத்தனைக்கும் அவன் பார்த்ததைத்தான் சொன்னான் என்றாலும், நாகரிகமில்லாமல் இப்படியா பொட்டப்புள்ள முன்னாடி பேசுவாங்க? ச்சே! கருமம்... கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அவளிடமே `ஏ சுகு.. ரோட்டுக்கு ஓடிப்போயி பாருப்பா, அண்ணாச்சியோட கருப்பு நாயி உங்க டிப்பிய புடிச்சு டொக்குப் போட்டுட்டுருக்கு’ என்று சொல்லிவிட்டான். `அய்யே... ச்சீ கருமம் போ பையா’ என்றவள் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். நான் இவனைப் பயங்கரமாக முறைத்துப் பார்க்கத் திரும்பினேன். அவன் அங்கு இல்லை. ஓடிவிட்டான். நானும் ஓடினேன் ரோட்டுக்கு.

குணானும்,ரமேஷும் என் பம்பரத்துக்குக் குத்து வைத்துக்கொண்டிருக்கும்போது, எங்களைத் தாண்டி இளங்கோ ‘`டேய் குணா இஞ்ச வா... இஞ்ச வா, அஞ்ச வந்து பாரு’’ என்று சொல்லியவாறே வெகு வேகமாக ஓடினான். அவனது இடக்கையில் பெத்தவாட்ஸும், வலக்கையில் சாட்டை நுனியுமிருக்க மறு நுனியில் மாட்டியிருந்த சோடாமூடித் தரையில் உரசும்போது ஒரு குரலிலும் தார்ரோட்டில் உரசும்போது இன்னொரு குரலிலும் அலறிக்கொண்டே போனது. சன்ன அலறல்.  என் பம்பரத்துக்கு இன்னும் நாலைந்து குத்துவைக்க வேண்டிய குணான் அப்படியே போட்டுவிட்டு ஓட, பின்னாலேயே ரமேஷும் ஓடினான். எனது பம்பரத்தை `தப்பிச்சடா ராஜா’ என்றபடி எடுத்துச் சாட்டையை ஓடியபடியே சுற்றி, ஓடியபடியே டவுசர் பாக்கெட்டில் வைத்தேன். அது `ச்சுஞ்சு’ மணியில் இடிக்கவும் ஓடியபடியே கையைவிட்டு இடம் மாற்றி வைத்தேன். ரோட்டோரம் கூட்டமாக இருந்தது. `அப்பிடியே நசுக்கிட்டுப் போயிட்டான் லாரிக்காரன்’ யார் யாரோ பேசிக் கொண்டார்கள். `ச்சேய்... கண்கொண்டு பாக்க முடியல, இதான் நான் எதையிம் வலத்தறது கெடயாது’ என்றார்கள். நான் கூட்டத்துக்குள் புகுந்தேன். `இப்பத்தான் குட்டி போட்டுச்சாம்’. கூட்டத்தின் கால்களுக்கிடையில் ரத்தச்சகதி தெரிய எனக்குத் தொண்டையெல்லாம் வறண்டு இருதயம் தொப்பு தொப்பென்று அடித்துக்கொள்கிற சப்தம் தலைக்குள்  கேட்கிறது.

`எப்பூமே இந்தப் பக்கம் வராதாம்’ பூத்துவாலையை உதிரக்குழம்பில் நனைத்துப்போட்டதுபோல் ஏதோ கிடக்க நான் வேகமாக வெளியே வந்துவிட்டேன்.

``அப்படி ஓரமா இழுத்துப் போட்டுரு ஸ்டீபா, ஏன்னா, வர்ற வண்டியெல்லாம் திரும்ப ஏறும்’’ கடலைக்கார பாய்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஸ்டீபண்ணன் இங்குதான் இருக்கிறாரா? இதை எப்படித் தாங்குவார்? எனக்கு அழுகை வந்தது. மெல்ல விசும்பினேன். ஏதோ பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. சுகுணாவா? வேறு மாதிரி இருக்கிறது. சுகுணா அழுது நான் கேட்டதில்லையே... இல்லை இல்லை கேட்டிருக்கிறேன். அவளுடைய அம்மா எதற்காகவோ வாசலில் வைத்து கருநொச்சிக்குச்சியால்  அடித்தபோது அழுதாளே... ``ஷீலூ... அய்யோ ஷீலுக்குட்டீ’’ அலறல் கூடுதலாகி வீறிட்டபோது ``விடுக்கா  என்ன பண்றது. அதோட நேரம் முடிஞ்சது, போயிருச்சு’’ என்றது ஸ்டீபண்ணன்தான். பரவாயில்லை, ஸ்டீபண்ணன் கவலைப்படாமல் இருக்கிறார்.

``அய்யோ இன்னும் கண்ணே தொறக்கலியே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சு கடவுளே’’

 யாரது? ``யார்ரா அழுகுறாங்க’’  ரமேஷிடம் கேட்டேன். ``ம்ம்... டீ.விக்காரக்கா’’ என்றான் அவன். என்னது ரமணியக்கா அழுகிறதா? ஓஹோ, அடக்கடவுளே! அப்போ அது டிப்பியில்லையா? நான் கூட்டத்துக்குள் மறுபடி நுழைந்து நின்று கவனித்தேன். ரத்தத்துவாலைதான் கிடந்தது. சந்தனமில்லை.வெள்ளை. உண்ணிப்பாகப் பார்க்கவும் புரிந்தது. அது ரமணியக்காவின் வெள்ளை புஸுபுஸு நாய் `பொமரேனியன்’ ஷீலா. ஸ்டீபண்ணன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து விலகி நின்று சீழ்க்கையடித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து ஓட்டமும் நடையுமாக டிப்பி வந்தது. மெல்லிய தளர்வோடான நடை. ஸ்டீபண்ணன் மண்டியிட்டமர்ந்தார். ``வாடா பாப்பா’’ டிப்பியை முத்தமிட்டார். குழந்தையைக் கொஞ்சுவதுபோல் கொஞ்சிக்கொண்டே இருந்தவர் அழத்துவங்கினார். ``பாவம்டா பாப்பா’’ என்பது கேட்டது. ``விடுங்க விடுங்க அவன் பேசட்டும் விடுங்க’’ கடலைக்கார பாய் யாரும் அவர்களுக்கிடையில் போக வேண்டாம் என்பதைத்தான் அப்படிச் சொன்னார் போலிருக்கிறது. எல்லோரும் தள்ளியிருந்தே பார்த்தார்கள். டிப்பியை ஷீலாவின் உடலருகே கூட்டிப்போனார். டிப்பி முகர்ந்துவிட்டு இவரைப் பார்த்து ஊதாங்குழல் அனத்தியது போல வினோதமாகக் காற்றை வெளியே விட்டது. ஸ்டீபண்ணன் கேவிய சப்தம் கேட்டு ரமணியக்கா திரும்பவும் அழ ஆரம்பித்தது. ரமணியக்கா வீட்டுக்குள் கொஞ்சம் பேர் போனார்கள். `சின்னப்பசங்கள்ளாம் வெளிய நில்லுங்களேண்டா’ என்றார் அண்ணாச்சி.  நால்வரும் நின்றோம்.

குணானும், ரமேஷும் `வெளாட்லாம் வாடா’ என்றதும் போனேன். எப்போது இளங்கோவை மன்னித்தேன்? எப்போது அவனும் விளையாட வந்தான்? நானும் கவனிக்கவில்லை. அவனும் மன்னிப்பைக் கேட்கவில்லை. ப்ச் பரவாயில்லை. என் பம்பரத்துக்கு இன்னும் ஐந்து குத்துகள் பாக்கி என்பதை குணான் மறக்கவில்லையா? அது மாதிரிதான் இதுவும். அரைக்கால் சட்டையின் இடது பையிலிருந்த கடலை உருண்டைகளை வெளியே எடுத்தேன்.  நான்கு. ஒன்றை வாய்க்குள் போட்டு உடனே வெளியே எடுத்து அதில் ஒட்டிக்கொண்டிருந்த காக்கி நூலைப் பிரித்து எடுத்துவிட்டு திரும்பவும் உள்ளே போட்டேன். கையிலிருந்ததில் ஒன்றை டவுசர் பைக்குள் அனுப்பி வேறு ஏதாவது நூல் இருந்தால் பிடித்துவரப் பணித்தேன். இன்னொன்று ரமேஷுக்கு. மீதமொன்றை குணானிடம் கொடுத்து இளங்கோவைக் காட்டி `அவனுக்குப் பாதி குடுத்துருடா’ என்றேன் பெரிய மனதோடு. ஆனாலும், இந்த இளங்கோ `அபீட்’ டை மெதுவாக எடுக்கிறானா? நான் அவசர அவசரமாக ‘தில்லான்’ எடுக்கும்போது என் பம்பரம் `தக்கடத்தை’யென குப்புறப்படுத்துக் கொண்டது. இந்த முறையும்  நான்தான் `மாட்டி’, என் பம்பரம்தான் `சக்கை’. அய்யோ! இந்த `கர’த்திலிருந்து அந்தக் `கரம்’வரை சாத்தி சாத்தி கட்டையையே சொறிக்கட்டையாக்கி விடுவான்கள். இளங்கோவின் `பெத்தவாட்ஸ்’ தேர் மாதிரி. அது சுற்றிக்கொண்டிருக்கிறதா? நின்று கொண்டிருக்கிறதா? என்று சந்தேகப்படும் வகையில் `ச்சும்மா’ நின்று `ரொங்’கும். பெத்தவாட்ஸும் அப்படித்தான். `பெத்தவாட்ஸ்’ என்றால் என்ன அர்த்தம்? யாருக்குத் தெரியும்? ரமேஷ்தான் அப்படிச் சொன்னான். சராசரியைவிட பெருத்த அதைப் பார்க்கும்போது தோன்றிய பெயர் `பெத்தவாட்ஸ்’! அவ்வளவுதான். மும்முரமாய் விளையாடிக்கொண்டிருந்த நாங்கள்,  சுகுணாவின் `ஹை’ என்ற கூச்சலுக்குத் திரும்பினோம். ஸ்டீபண்ணன் கைகளில்  நெளியும் பால்ப்பைகள்போல  இரண்டு மூன்று குட்டிகள். சுகுணா அவற்றைத் துள்ளிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் குதிக்கும்போதெல்லாம் அனிச்சையாகக் கைகளை உயர்த்திய ஸ்டீபண்ணனின் கவனமெல்லாம் டிப்பியின் மீதிருந்தது. `பொதுபொது’ வெள்ளைக் குட்டிகளைப் பார்த்தவுடன் இளங்கோ, `ணா ணா  எனக்கொண்ணு தாண்ணா’ என்று  இறைஞ்சினான். குட்டிகளைப் பார்த்தால் அப்படிக் கத்தியாவது வாங்கிவிடுவதுதான் நியாயம் என்று எனக்கும் தோன்றியது.

64p4.jpg

இடுப்பிலிருந்து இறங்கும் டவுசரை மேலே இழுத்துவிட்ட ரமேஷ் ``கண்ணு தொற ஹேய் கண்ணு தொற குட்டீ’’ என்றபடியே நடந்தான். அவைகளின் கண்களை மூடி ஊசி நூலால் தைத்து விட்ட மாதிரி பாவமாய் இருக்கிறது. அந்த இடத்தில் விரலால் நிரவி முடிச்சைத் தேடிப் பிடித்து உருவிவிட்டால், கண் முழித்துவிடும் போல் தோன்ற நான் எட்டித் தொடப் பார்த்தேன். இந்த  முறையும் அனிச்சை உயர்த்தல். ஸ்டீபண்ணன் வீட்டை நெருங்கியதும் டிப்பி கொஞ்சம் வேகமாக உள்ளே போனது. நான் இன்னும் டிப்பியின் குட்டிகளைப் பார்க்க வில்லை. ஐந்து குட்டிகளைப் போட்ட  டிப்பி அதிலொரு குட்டியைக் கடித்துத் தின்றுவிட்டது என்று சுகுணா சொன்னதிலிருந்து பயமாய் இருந்தது. அம்மாவிடம் கேட்டதற்கு ``அதுதான் அதுக்குப் பிரசவ மருந்து’’ என்றது எனக்கு சரியாகப் புரியவில்லை. பயம்தான் கூடுதலானது. அம்மா என்னைக் கடித்துத் தின்றிருந்தால்? அய்யோ... கடவுளே! டிப்பியைப் போலில்லாமல் நல்ல அம்மாவைக் கொடுத்தாயே! டிப்பியின் குட்டிகள், கறுப்பு கலந்த சாம்பல், செம்பழுப்பு, சந்தனம், கறுப்பும் சந்தனமும்  என்பதாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தன. டிப்பி  அவைகளுக்கு நடுவில் போய்ப் படுத்துக் கொண்டது. ஸ்டீபண்ணன் தயங்கியபடியே ஷீலாவின் மூன்று குட்டிகளையும் அதன் அருகே விட்டார். டிப்பியின் குட்டிகள் அதன் மார்க்காம்புகளைத்  தேடி முண்டின. ஷீலாவின் குட்டிகள் சாக்குப்பையிலிருந்து திசைக்கொன்றாய் தரைக்குத் தவழ்ந்தன. ஸ்டீபண்ணன் அவைகளை எடுத்துத் திரும்பவும் டிப்பியின் வயிற்றுக்கருகே கொண்டு போனார். டிப்பி அரை வினாடிக்கும் குறைவாய் கோரைப்பல்லைக் காட்டி `ட்ட்ர்ர்ர்ர்’ என்றது. ரமேஷ் பயந்துவிட்டான். ``பாவம்டா பாப்பா’’ கெஞ்சினார் ஸ்டீபண்ணன். பின்னாலிருந்து ``ஏய்... என்னடி திமிரா? கொழுப்புதான உனக்கு? எங்க தள்ளு ஸ்டீபா’’ என்றபடி வந்த ஆஞ்சிக்கா ஷீலாவின் குட்டிகளை எடுத்து டிப்பியின் இரண்டு குட்டிகளுக்கிடையே நுழைக்கப் பார்த்தாள். ஆஞ்சிக்காவைப் பார்த்த டிப்பி இப்போதும் ஊதாங்குழல் அனத்துவது போல வினோத சப்தமெழுப்பி புருவங்களைச்  சேர்த்து நெற்றிக்குக் கூப்பியெழுப்பி, இமைகளைத் தாழ்த்தி, கண்களை இடுக்கி மின்ன வைத்து, பின்பு விரித்து விசித்திரமாக ஏதேதோ காட்டியது. ஆஞ்சிக்கா தன் தோரணையை விடாமல் ``ஆங்ங்ங்......ஊர்ல இவ மட்டுந்தான் புள்ள பெத்துருக்கா பாவம், அவங்கம்மா செத்துப்போல? நீ பாத்ததானே, அப்புறம் அறிவு வேண்டாம். எரும. தள்ளிப்படு, கொஞ்சம் குடிச்சுக்கட்டும்’’  என்றவாறு டிப்பியின் மார்புகளுக்கடியிலிருந்த மார்புகளையும் எடுத்து வெளியே விட்டாள். டிப்பியின் எட்டு மார்களும் தெரிந்தன. டிப்பி தலையை வளைத்து ஷீலாவின் குட்டிகளை மெல்ல முகர்ந்தது. திரும்பவும் ஆஞ்சிக்காவைப் பார்த்தது. அவள் மிரட்டும் பாவனையில் `ம்ம்ம்...’ என்று உறுமினாள். வெள்ளைக்குட்டியை முகர்ந்து மெல்ல நக்கிக் கொடுத்தது. சிட்டுவும் நானும் ஒரு சேர `ஹை’ என்றோம். வெள்ளைக்குட்டிகள் ஒவ்வொன்றாய் டிப்பியின் மாரை நோக்கி முண்டின. மெல்லக்கவ்வி உறிஞ்சின. டிப்பி உடலை லேசாகத் திருப்பிக் கொடுத்த மாதிரி இருந்தது. சுருங்கியிருந்த புருவங்களை விரித்த ஆஞ்சிக்கா, இத்துணூண்டு புன்னகைத்தவளாகக் குரலைத் தாழ்த்திக் கனிந்து, `‘நம்ம பாப்பா மாரிதானே இந்தப் பாப்பாவும்.... ஏண்டித் தங்கம், நல்ல புள்ளதான நீயி? அம்மா செல்லமில்ல’’ என்றபடி டிப்பியின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டாள். ஆஞ்சிக்காவின் முந்தி விலகி ஒரு பக்க முழு மார்பும் தெரிந்தது. நான் அவளது மார்புக்குக் கீழே அள்ளையில், வயிற்றில் வேறு மார்புகள் ஏதும் தெரிகின்றனவா என்று பார்க்கச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கும் ஆறாவது ஜன்னல் திறக்குது. ஆஞ்சிபோல ஒரு அக்கா இருந்தால் ஏழாம் அறிவும் எட்டும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.