Jump to content

சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பில்லை: பொதுக் குழுவுக்கு தயாராகும் பழனிசாமி அணி - உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி


Recommended Posts

சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பில்லை: பொதுக் குழுவுக்கு தயாராகும் பழனிசாமி அணி - உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி

 

 
admkoffice

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு அழைப்பாளர்கள் இன்றி பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.

அதிமுகவில் தற்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 12-ம் தேதி கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி பொதுக்குழு கூடியது. அப்போது, சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்துதான் பல்வேறு சிக்கல்கள் அதிமுகவில் உருவாகின.

இந்நிலையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் வகையில், வரும் செப்.12-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுகிறது. இதை எதிர்த்து தினகரன் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், பொதுக்குழு கூட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை, அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 2,300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, 750-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வர வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவர். ஆனால், செப்.12-ம் தேதி நடக்கும் கூட்டத்தில், அவர்களுக்கு அழைப்பு இல்லை.

மற்றவர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அழைப்பிதழ் உள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதவிர, மாவட்ட அமைச்சர்களும், தங்கள் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசி வருகின்றனர்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைத் தாண்டி பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய அவசியம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான, சட்ட ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமியிடம் நிருபர்கள் வழக்கு குறித்து கேட்டபோது,‘நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து நான் எதுவும் பேச முடியாது’ என்று பதிலளித்துவிட்டார். ஆனால், விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘அதிமுகவில் 5-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவை கூட்டலாம். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த சட்ட திட்டப்படி, சட்டத்துக்குட்பட்டுதான் பொதுக்குழுவை கூட்டியுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எனவே திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும். அன்று 100 சதவீதம் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அந்த பட்டியலை நாங்கள் வெளியிடுவோம். மேலும், 9 எம்எல்ஏக்களில் ஜக்கையன் வந்துவிட்டார். மற்றவர்களும் விரைவில் வருவார்கள்’’ என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19654867.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.