Jump to content

கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க!


Recommended Posts

கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க!

 

- சூர்யபுத்திரன்

அவள் பார்த்தால் சிரித்தால் அசந்தால் எல்லாமே அழகுதான்!  காலை நேரத்து வெயிலின் வெப்பம் கொஞ்சங்கூட உள்ளே நுழையாமல் குளிரூட்டப்பட்ட அந்த அறையே சொர்க்கம் போல இருந்தது சுந்தருக்கு. மங்கலான ஒளியில் மெத்தையில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறிப்பதுபோல் அவள் கைகளை உயரத் தூக்கி நெளிய... அவளை விழுங்குவது போல் பார்த்த அவன் சப்த நாடியிலும் இன்ப ஊற்று! இருக்காதா பின்னே? மெத்தையில் ஒரு மோகினி... மெழுகு பொம்மை போல... அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட குட்டியாம். கூட்டிக் கொடுப்பவள் சொன்ன கூடுதல் தகவல் இது.

அந்தக் குட்டியின் கிளுகிளுப்பில் சொக்கி, உருகி அவன் தன் ‘பேன்ட்டை’க் கழற்றி முட்டிவரை கீழே இறக்க... கைப்பேசி அபாயகரமாய் அலறியது. டிஸ்பிளேயில் வீட்டு எண். மனைவி பத்மாதான். பதற்றத்தோடு எடுத்தான். ‘‘ஏங்க... கழட்டின ‘பேன்ட்’டை அப்படியே மாட்டிட்டு... உடனே  புறப்பட்டு வாங்க...’’  தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏதோ சிசிடிவியில் பார்த்ததுபோல் சொல்கிறாளே! ‘பேன்ட்’டை அவிழ்த்ததை எங்கிருந்து பார்த்திருப்பாள்? ‘பிரைவேட் டிடெக்டிவ்’ வைத்திருப்பாளோ! ச்சே... ச்சே... அப்படிப்பட்டவள் இல்லை.
9.jpg
சாதாரண கிராமத்துப் பெண்! வெறும் ‘ஹவுஸ் வைஃப்’. மீண்டும் மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு வருவதற்குள் வெளியேறிவிட வேண்டும். பலவாறாகக் குழம்பியவனை மெத்தையில் புரண்டபடி ஆராய்ந்தாள் அந்த அப்சரஸ். அவளுக்குள் எரிச்சல். ‘‘என்ன சார்... செல்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு வரக்கூடாதா... யார் சார் அது? வெண்ணெய் திரண்டு வரும்போது வெடிகுண்டு வச்சாப் போல...’’ எழுந்து அமர்ந்து சிடுசிடுத்தாலும் அந்தத் தொழிலுக்கே உரிய சிரிப்பையும் சிந்தினாள்.

சுந்தர் பதிலேதும் சொல்லவில்லை. ‘பேன்ட்’டை மேலே உயர்த்தி சரக்கென்று ‘ஸிப்’பை இழுத்து வேகவேகமாய் இடுப்பு பட்டனைப் போட்டான். அவன் இப்போது புறப்பட்டுவிடுவான் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண், ‘‘சார்... எங்களுக்குனு ஒரு தொழில் தர்மம் இருக்கு. கை நீட்டி காசு வாங்கிட்டா... மேட்டர் முடியாம அனுப்பமாட்டோம்...’’ செல்லமாகக் குழைந்தாள்.  ‘‘உன் தொழில் தர்மத்தைத் தூக்கி உடைப்புல போடு... அவசரம் புரியாம பேசிக்கிட்டு....’’ கத்தவேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

ஆனால், அடக்கிக்கொண்டு மெல்ல வார்த்தைகளை உதிர்த்தான். ‘‘உங்க தொழில் தர்மத்துக்கு ஒண்ணும் ஆகிடாது. நான் கொடுத்ததெல்லாம் கடனா வச்சுக்கறேன். நாளைக்கு வந்து தீர்த்துக்கறேன். போதுமா?’’ அதற்குமேல் அவன் அங்கு நிற்கவில்லை. நின்றால் ஆபத்து. மீண்டும் அலைபேசி அலறினால்?! வெளியே நின்றிருந்த பைக் காத்திருந்தது. பாய்ந்து சென்று அதை உசுப்பினான். மண்டைக்குள் பல கேள்விகள். என்னவாக இருக்கும்? பத்மாவின் குரலில் ஒரு பதற்றம் இருந்ததே... அது ஏன்? தொடர்பு ஏன் துண்டிக்கப்பட்டது?

அது தற்செயலாய் நடந்ததா? வேண்டுமென்றே வெறுப்பில் துண்டித்தாளா? அதெல்லாம் இருக்கட்டும். ‘ஏங்க... கழட்டின ‘பேன்ட்’டை அப்படியே மாட்டிக்கிட்டு...’ எப்படி? வண்டியை ஓரங்கட்டி அலைபேசியை அவசர அவசரமாய் உயிர்ப்பித்தான். ‘தற்போது எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன. சிறிது நேரம் காத்...’ பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல். அப்படியென்றால் ‘நெட்வொர்க்’ பிரச்னைதான். வண்டியை முடுக்கி விரட்டினான். சுந்தரின் முதுகில் இப்போது ஆறுதலாய் உரசிக் கொண்டிருந்தது அவனுடைய முதுகுப் பை மட்டுமே.

அதில் இரண்டு டென்னிஸ் மட்டைகள், நீச்சல் உடுப்புகள், ஒரு துவாலை, கைக்குட்டை... இத்யாதி. கம்பெனி விடுமுறை நாட்களில் இந்தப் பையை முதுகில் சுமந்து தவழ்ந்து வரும் குழந்தைக்கு ‘டா... டா’ காட்டிவிட்டு உலா போய்விடுவான். அவனைப் ெபாறுத்தவரை இந்த டென்னிஸ், நீச்சல் இதிலெல்லாம் கொஞ்சம்கூட ஆர்வம் இல்லை. விருப்பம் உள்ளது போல் நடிப்பான்! விடுமுறை நாட்களில் வெளியே சென்றுவர ஒரு சாக்கு தேவை. அதற்கு இந்த விளையாட்டும் ஹாபியும் போர்வைகள். அப்படி அரங்கேற்றி வந்தவன்தான் இப்போது தன்னைத்தானே எடை போட்டுப் பார்க்கிறான்.

தங்க விக்ரகம் மாதிரி மனைவி! அழகான குழந்தை! ஐடி கம்பெனியில் டீம் மேனேஜர்! கை நிறைய சம்பளம்! சமூக அந்தஸ்தோடு வாழும் தனக்குள் எப்படி இந்த சபலம்? இப்போதே பத்மாவின் முன்னே போய் நிற்க வேண்டும் என படபடத்தது அவன் மனம். பத்மா தன் புடவையை மெல்ல அவிழ்க்கிறாள். விரக்தியில் அவள் முகம் வெள்றிப்போய் இருக்கிறது. மின்விசிறியை நிறுத்துகிறாள். நாற்காலியின் மீதேறி சேலைத் தலைப்பை மின்விசிறியின் மண்டையில் கட்டி... அடுத்து கழுத்தில் ஒரு சுருக்கு...! ‘ஐயோ’வென அலறியபடி அவள் கால்கள் இரண்டையும் தூக்கிப் பிடிக்கிறான் சுந்தர்.

இறுகத் துடித்துக் கொண்டிருந்த சுருக்கில் சட்டென நெகிழ்வு. ‘‘வேண்டாம் பத்மா... நான் திருந்திட்டேன். என்னை மன்னிச்சுடு...’’ கதறியபடி மன்றாடுகிறான். ச்சே... என்ன கன்னாபின்னா கற்பனை... மனதில் விரிந்த காட்சியால் வீடு போய்ச் சேரும் வரை அவன் உடலெங்கும் நடுங்கியது. கூனிக் குறுகி வீட்டிற்குள் நுழைந்தவனிடம் பதற்றத்தோடு ஓடி வந்தாள் பத்மா. ‘‘என்னான்னே தெரியலீங்க... நம்ம பையனுக்கு திடீர்னு ஃபிட்ஸ் மாதிரி வந்திடுச்சு... பயந்துபோய் உங்களுக்கு போன் பண்ணேன். பாதியில கட் ஆயிடுச்சு... அதுக்கப்புறம் லைனே கெடைக்கல...’’ ‘‘சரி... அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இப்ப உடனே ஆஸ்பிடல் போகலாம்...’’ பறந்தார்கள்.

குழந்தைக்கு பரிசோதனை... ஊசி... மருந்து... சிகிச்சை... எல்லாம் முடிந்து மருத்துவமனை நெடியிலிருந்து அவர்கள் வெளியே வந்து... இரவு சாப்பாட்டை ஹோட்டலில் முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேர வெகு நேரம் ஆகிவிட்டது. அதுவரை அவர்கள் வேறு எந்த தனிப்பட்ட விஷயத்தையும் பேசிக் கொள்ளவில்லை. இவள் நாடகமாடுகிறாளோ? புலி பதுங்குகிறதோ? குழம்பினான். படுக்கையில் களைப்பாய்ப் படுத்திருந்த பத்மாவை பயத்தோடு பார்த்தான் சுந்தர். மூச்சை இழுத்துப் பிடித்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டான்.

‘‘பத்மா... என் செல்லமே... உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். அது என்ன... ‘கழட்டின ‘பேன்ட்’டை அப்படியே மாட்டிக்கிட்டு’னு...’’ ‘‘அதுவா...’’ என்றவள் எழுந்து உட்கார்ந்தாள். ‘‘சொல்லு பத்மா...’’ எச்சிலை விழுங்கினான். ‘‘சனிக்கிழமைன்னா டென்னிஸ் போவீங்க... ஆனா இன்னிக்கு என்ன கிழமை? ஞாயிற்றுக்கிழமை. கண்டிப்பா நீச்சல்தான். நீங்க வீட்டை விட்டுக் கிளம்பும்போது சரியா மணி பத்து. அங்க போய்ச் சேர இருபது நிமிஷம் ஆகும். உடனே நீங்க உங்க ‘பேன்ட்’டை கழட்டிட்டு நீச்சல் உடைக்கு மாறுவீங்கன்னு எனக்குள்ளே ஒரு பட்சி சொல்லுச்சு..! என் கணக்கு... கணிப்பு.. கரெக்டா இருந்ததா?’’

ஏதும் அறியா குழந்தையைப் போல் கண்களை விரித்து அவனைப் பார்க்க... அது சுந்தரை என்னவோ செய்தது! எவ்வளவு வெள்ளந்தியாக... வெகுளியாக இருக்கிறாள்! என்ன ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை! இந்த நம்பிக்கைக்கா துரோகம் செய்கிேறன்!  கேவலம் ஒரு விலை மாது கூட தொழில் தர்மம் பேசுகிறாளே! நான் இல்லற தர்மத்தைக் காற்றில் பறக்கவிடலாமா? சட்டென்று பத்மாவை இழுத்து தன் மார்பில் கிடத்தி அந்தக் குறுகுறு கண்கள் கொண்ட கலங்கமற்ற முகத்தில் முத்தமிட்டு இறுகக் கட்டிக் கொண்டான் சுந்தர்.

www.kungumam.co

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.... தொழில் தர்மம் பார்க்கும் ஒரு விபச்சாரியை  கடன்காரி ஆக்கிப் போட்டாரே இந்த சுந்தர்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.