Jump to content

கொழும்பில் சிங்களவருடன் வசித்த விக்கி வடக்கில் சிங்களவரை எதிர்ப்பது ஏன்?


Recommended Posts

கொழும்பில் சிங்களவருடன் வசித்த விக்கி வடக்கில் சிங்களவரை எதிர்ப்பது ஏன்?

கேள்வி எழுப்புகிறார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

 

கொழும்­பில் கற்று பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளு ­டன் வாழ்ந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், வடக்­கில் சிங்­க­ள­வர்­க ­ளுக்கு இட­மில்லை என்று கூறு­கின்­றார். அவ்­வாறு தெரி­விப்­ப­தற்கு அவர் யார் ? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார் ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர.

முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தலை­மை­யில் கடந்த புதன் கிழமை, வெளிச்­சம் அமைப்­பின் ஆரம்ப நிகழ்வு நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய சரத் வீர­சேக மேலும் தெரி­வித்­த­தா­வது:
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், நாக­தீ­பத்­தில் விகாரை அமைப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றார்.

வடக்­கில் புத்­தர் சிலை வைப்­ப­தற்கு கிளி­நொச்­சி­யில் ஊர்­வ­லம் செல்­கின்­றார்­கள். இந்த நாட்­டில் உள்ள அனை­வ­ருக்­கும் எந்த இடத்­திற்­கும் சென்று நிம்­ம­தி­யாக வாழ வேண்­டும் என்­பதே எமது முக்­கிய கட­மை­யாக இருந்­தது. தற்­போது வடக்­கில் சிங்­க­ள­ வர்­கள் வாழ்­வ­தற்கு எந்த உரி­மை­யும் இல்லை என்று விக்­னேஸ் ­வ­ரன் தெரி­விக்­கின்­றார்.

விக்­னேஸ்­வ­ரன் யார்? கொழும்­பில் ரோயல் கல்­லூ­ரி­யில் கல்வி கற்று, பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளு­டன் வாழ்ந்து விட்டு தற்­போது வடக்­கிற்­குச் சென்று சிங்­க­ள­வர்­க­ ளுக்கு இங்கு இட­மில்லை என்று கூறு­கின்­றார்.

சிங்­கள இளை­யோரை திரு­ம­ணம் செய்து கொள்ள வேண்­டாம் என்று வடக்­கில் உள்ள தமிழ் இளை­யோ­ருக்கு அறி­வுரை வழங்­கு­கின்­றார். ஆனால் இவ­ரது இரு புதல்­வர்­க­ளும் திரு­ம­ணம் முடித்­தி­ருப்­பது சிங்­கள இளை­யோ­ரைத்­தான் என்­பதை அவர் மறந்து விட்­டார் – – என்­றார்.

http://newuthayan.com/story/27108.html

Link to comment
Share on other sites

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேசு­வ­ரன் அவர்களைப் பேட்டிகண்டு, அட்மிரல் சரத் வீரசேகரவின் கேள்விக்கான விடையையும் அறிந்து, அதனையும் சேர்த்து உதயன் வெளியிடாத காரணம் என்ன...??      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரியல் அட்மிரலுக்கு புரியவில்லையா? புரியாமாதிரிக் கேட்கிறாரா? சிங்களவர்களைக் குடியேற்றி இனப்பரம்பலைக் கிழக்கைப்போல் மாற்றியமைக்கக்கூடாது என்பதோடு தமிழரது வாழ்விடங்களை அபகரிப்பதையும் அவர்எதிர்க்கிறார். 

இனவாதிகளும் இனப்படுகொலையாளரும் கூட்டிணைந்து வேறெதைப்பற்றித்ததான் பேசுவார்கள்.! 

வட-கிழக்கு என்பது தமிழரது பாரம்பரிய வாழ்விடமாகும் என்பதை ஏற்றுக்கொண்டு  சிங்கள இனவாதத்தைக்களைந்துவிட்டு உண்மையாகப் பேசுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் அபிவிருத்தியிலாகட்டும்  பொருளாதார, ராஜதந்திர எந்த முன்னேற்றத்திலாகட்டும் தமிழன் பாரிய  பங்குண்டு. அதை விட தமிழன் யாரின் காணியையோ, உரிமையையோ பறிக்கவுமில்லை. வடக்கில் சிங்களவன் நட்டானா, நீர் விட்டானா, காவல் இருந்தானா? அவனுக்கேன் விகாரைவடக்கில்? வழிபடுவதற்கா? ஆக்கிரமிப்பதற்கா? தமிழன் பிரதேசத்தில் அவனுக்கு சுதந்த்திரமாய் வாழ வழியில்லை உங்களுக்கு விகாரை கேக்குது. இது நல்ல பகிடி. எங்கள் முதல்வர் எங்கள் பிரச்சனை கதைக்காமல் நீங்கள் செய்வதை எல்லாம் கண்டு கொள்ளாமல் உங்களை பாராட்ட வேணும்  என்று எதிர் பார்ப்பது உங்கள் மடமை. எல்லாரையும் ஒன்றாக கணக்கிடாதீர்கள்.

அவர் எங்கே கற்றாலும், வாழ்ந்தாலும் தன் பணத்திலும்,சொந்த  முயற்சியிலும்தான் கற்று வாழ்ந்திருப்பார். அவர் சொல்வதை அரைகுறையாய் விளங்கி, எதை சொல்லி, எதை விளங்கி எதை சாதிக்கப் போகிறார் இவர்.

Link to comment
Share on other sites

கொழும்­பில் கற்று பல வரு­டங்­க­ளாக சிங்­க­ள­வர்­க­ளுடன் வாழ்ந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேசு­வரன் அவர்கள் சிங்­க­ள­வர்­களின் நிர்வாகத்தின்கீழ் சிங்கள மரபுவழிகளுக்கும், அவர்களின் பாரம்பரியங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும் இடையூறின்றி அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதுபோலச் சிங்களவர்களும் ­தமிழர்­களின் நிர்வாகத்தின்கீழ் தமிழ் மரபுவழிகளுக்கும், தமிழரின் பாரம்பரியங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும் இடையூறின்றி வாழ்வதற்கு எந்தத் தடையும் வரப்போவது இல்லை. இலங்கை சதந்திரம் அடைவதற்கு முன்பு தமிழ்ப் பகுதிகளிலும், குறிப்பாகப் பண்டாரநாயக்க யுகம்வரையில், சிங்களவர்கள் தமிழர் பகுதிகளில் தமிழரோடு சேர்ந்து வாழ்ந்த சரித்திரங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.